Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:46:17 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7821
#KOTW7821
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 6, 2012
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3726 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உள்ளாட்சித் தேர்வு முடிவுகளும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும், பால் விலை - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல், கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய - மாநில அரசுகளைக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 30.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், நகர துணைத்தலைவர் ஹாஜி எஸ்.டி.கமால், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட கவுரவத் தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் அப்துல் ஹக் ஃபைஸல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் உரையாற்றினார்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் நிர்வகிக்கட்டும் என்றும், புனிதர் வேடமணிந்து வெளியிலிருப்போர் தேவையின்றி கட்சி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடத் தேவையில்லை என்றும் பேசிய அவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் கட்சிகளுடன் சரியான முறையில் கலந்தாலோசனை செய்துகொள்ளாமல் செயல்பட்ட காரணத்தால்தான் தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முஸ்லிம் லீக் முயற்சியுடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேம்பாட்டுப் பணிகள், எவ்வித காரணமுமின்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்ததுடன், விரைவில் அப்பணிகள் தொடரப்படாவிட்டால், பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

பின்னர், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களான காயல் மகபூப் உரையாற்றினார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலையும், நடப்பு நகராட்சி நிர்வாகத்தையும் மையப்படுத்தி அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:-



காயல்பட்டினத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது... நமதூரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் உள்ளடக்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் மிஸ்ரிய்யா என்ற வேட்பாளர் பஸ் சின்னத்தில் நிறுத்தப்பட்டார்... அதே நேரத்தில், ஊர் ஒற்றுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு கூட்டத்தின் ஆதரவுடன் ஆபிதா களத்தில் நின்று வெற்றி பெற்று, இன்று நகராட்சித் தலைவியாக இருந்து வருகிறார்...

இதுவரை நம்முடைய ஜமாஅத்துகளால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாச்சித்தம்பியாகட்டும், வஹீதாவாகட்டும், செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியாகட்டும்... இவர்களெல்லாம் நமது ஜமாஅத்துகளை மதித்து செயல்பட்டார்கள்... அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமதூர் மக்களுக்குத் தெரியும்... ஜமாஅத்துகளுக்குத் தெரியும்... பொதுநல அமைப்புகளுக்குத் தெரியும்...

ஆனால் இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்
என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊருக்காக பல்லாண்டு காலமாக பாடுபட்டு வருவோரை ஏளனமாக விமர்சித்தும், இணையதளங்களில் எழுதியும் வருவோருக்கு, தம் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக எச்சரித்தார்.

நிறைவில், அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவரது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநில செயலாளர் நெல்லை மஜீத், மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். (மாநில பொதுச்செயலாளரின் உரை தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)





நிறைவாக, நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



செய்தி திருத்தப்பட்டது. (06.01.2012 - 17:51hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நாளை இதே இடத்தில் வேறாரு பொதுக்கூட்டத்தில் நகரமன்ற தலைவியை பாராட்டி கூட இவர் பேசலாம்..! இதலாம் அரசியலில் சகஜமப்பா....!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15665

இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... copy paste.

1) யாரும் அவரை (நகரமன்ற தலைவரை) இயக்கவில்லை.. அவர் படித்த பட்டம் பெற்ற பட்டதாரி தனது சுயபுத்தியில் நகரமன்ற நிர்வாகத்தை அவர் இயங்குகிறார்.. அதில் சந்தேகமில்லை...

2) அவரது நகரமன்ற செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகம் போன்றே உள்ளது... அதில் சிறு அளவும் மூடகம் என்பதே கிடையாது...

தான் ஆதரித்த வேட்பாளர் தோல்வியை தழுவியதால் அதன் ஆதங்கத்தில் பேசும் மேடை பேச்சு இது...! இதை நாம் பெரியதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை... காலம் கடந்த பின் நாளை இதே இடத்தில் வேறாரு பொதுக்கூட்டத்தில் நகரமன்ற தலைவியை பாராட்டி கூட இவர் பேசலாம்..! இதலாம் அரசியலில் சகஜமப்பா....!

அடுத்த முறை தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ முஸ்லீம் லீக் வேட்பாளர் காயல்பட்டிணம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட்டு நகரமன்ற தலைவராக வர முயற்சி செய்யுங்கள்.. நாங்கள் பாராட்டுவோம்...! வாழ்த்துவோம்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ரசிக்கவும் இல்லை, ருசிக்கவும் இல்லை.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [06 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15673

பாரம்பாரிய மிக்க, தாய் சபையான முஸ்லிம் லீக் உடைய செயல்பாடுகளில் தற்போது சிறிய நல்மாற்றங்கள் உண்டாகியுள்ளன, அதிலும் குறிப்பாக சகோ. அபூபக்கர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் வீரியமிக்க செயல்கள். இந்த கூட்டத்தில் கூட அவருடைய பேச்சுக்கள் அருமை (ஒரு சில விசயங்களைத் தவிர).

இப்படி மக்கள் மத்தியில் கொஞ்சம் நெருங்கி வரும் நேரத்தில், சகோ. காயல் மகபூப் அவர்களின் கருத்துக்கள் தடைகற்கள் போல உள்ளன.

எந்த காலமும் இல்லாமல், இந்த நகர்மன்ற நிகழ்வுகள் தான் ஒளிவு மறைவு இல்லாத, என்ன நிகழ்ச்சி நகர்மன்றத்தில் நடக்கின்றது, இந்த தினத்தில், இந்த நேரத்தில் மன்ற தலைவி முதல் உறுப்பினர்கள் வரை எங்கு இருந்தார்கள் என்ற செய்தி வரை மக்களுக்கு தெரிகின்றது.

ஆனால் சகோ. மகபூப் அவர்கள் " தலைவியை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது..ஒற்றுமை சீர்குலைந்து இருக்கின்றது.." என்று கூறியுள்ளார்.

கட்சியின் கொள்கைகளை பரப்பச்சொன்னால், சொந்த காசிலே சூனியம் வைக்கின்றீர்களே.

மற்ற அரசியல் கட்சிக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

உங்களின் கணீர் குரல், தங்கு தடையில்லா பேச்சு, அருமையான கருத்துக்கள் போன்றவைகளுக்கு ரசிகர்களான என்னைப்போன்றவர்களுக்கு, இந்த பேச்சு ரசிக்கவும் இல்லை, ருசிக்கவும் இல்லை.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இறைவன் துணை போதும்
posted by S.A.Muhammad Ali (VELLI) (Dubai) [06 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15674

இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது.

--------------------------------------

ஒரு சிலரால் இயக்குவதற்கு அவர் ஒன்றும் பேருந்து இல்லை. அவர் ஒரு திறந்த புத்தகம் மூடகமான நிர்வாகம் என்று நீங்கள் கூறுவது உங்களின் அனுமதி பெற்ற பின்பே அவர் பேனாவை கையில் எடுக்க வேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப்பாடு அல்லாது வேறொன்றும் இல்லை. தலை கூட தன்மையோடு இருக்கும் போது இந்த வால் ஆடிக்கொண்டு தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் யாரும் கவலை பட மாட்டார்கள். இத்தனை நாளாய் நல்ல திறமையுடன் நிர்வாகம் செய்து கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை பாராட்ட மனம் இல்லை என்றாலும் தூற்றாமல் இருப்பதே நல்லது.

இலைகள் இழந்த மரத்தின் கீழ் ஒதுங்க ஒருவரும் வர மாட்டார். இனியும் நீங்கள் திருந்தாவிடின் கிளைகள் கூட ஒடிந்து விடும்.

நகராட்சி தலைவியே,

காயப்படாத மூங்கில் புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில் வசந்தங்கள் நுழையாது.

நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15675

காயல் மகபூப் அவர்களின் உணர்வுகளும் ஆதங்கமும் நியாயமானதாக இருக்கலாம். அவர் இந்த ஊரின் நன்மைக்காக உழைத்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் அவர் மகான் அல்ல, மனிதன் என்ற முறையில் சில அணுகுமுறைகள் தவறாக போகலாம், அதனால் தோல்விகளும் ஏற்படலாம். தோல்விகளுக்கு பிறரை காரணியாக்கி கொண்டு, மனதில் வன்மம் வளர்த்துக்கொண்டிருந்தால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது என்பதை பாரம்பரியம் மிக்க முஸ்லிம் லீகில் மிக பொறுப்பு வாய்ந்த இடத்தில இருப்பவர் சிந்தித்து சகோதரர் அபூபக்கர் அவர்களின் உணர்வுகளையும் அவர் சூசகமாக கூட்டத்தில் பதிவு செய்த கருத்துக்களையும் மனதில் கொண்டு தொடர்ந்து செயலாற்றுங்கள்.

1967 முஸ்லிம் லீகின் வசந்த காலம்.பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட்டணி என்ற ஒரு அஸ்திரத்தை முதன்முறையாக மக்கள் முன் வீசி, எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து, சரித்திர புகழ் பெற்று இமாலய வெற்றி பெற்றார்.எத்தனை இடங்கள் தருவீர்கள் என்று காயிதே மில்லத் அவர்கள் அண்ணாவிடம் கேட்க, உங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என்று கேட்டு அவர்கள் கேட்ட இடங்களை கொடுத்து முஸ்லிம் களின் இதயத்தில் இடம் பிடித்தார் அண்ணா. ஆனால் அவர் மட்டும் நடேச முதலியாரிடம் தோற்றுப்போனார்.

பெருந்தலைவர் காமராஜர் THE KING MAKER என்று போற்றப்பட்டவர் அடையாளம் தெரியாத ஸ்ரீநிவாசன் என்பவரிடம் தோற்றுப்போனார். இதெல்லாம் எதை காட்டுகிறது இவர்களெல்லாம் இப்படி புலம்பிக்கொண்டிருக்கவில்லை. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என்று சொன்னார்கள்.அந்த உயர்ந்த உள்ளங்களுக்கு சொந்தக்காரராக நீங்களும் ஆகிவிடுங்கள், மனப்பாரம் குறைந்து விடும். நீங்கள் ஒன்றை பேச, இன்னொருவர் கூட்டம் போட்டு இதற்கு மறுப்பு தெரிவிக்க, தோல்விகள் தொடர்கதையாகி விடக்கூடாது.உங்களுக்கு யோசனை சொல்லும் அருகதை எனக்கு இல்லை, என்றாலும் எனது கருத்துக்களை சொல்லும் சுதந்திரம் எனக்கு இருப்பதால் இதை சமுதாய நலன்கருதி இந்த இணைய தளத்தில் பதிவு செய்கிறேன்.

மக்கி நூஹுத்தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எப்படிதான் உங்களால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுதோ?
posted by முஹம்மது அப்துல் காதர் (chennai) [07 January 2012]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 15680

பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய கொ.ப.செ அவர்களே....

யாரை யார் இயக்குகிறார்கள் உங்களை யார் இயக்குகிறார்கள் என்றெல்லாம் எல்லோருக்கும் தெரியும். மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்ற வேட்பாளரை இப்படி குறை கூற உங்களுக்கு தகுதி இல்லை.

தேர்தலுக்கு தேர்தல் ஆளுக்கு தகுந்தார் போல பேச உங்களுக்கு நல்லாதான் நாட்டாமை பயிற்ச்சி அளித்துள்ளார். ரெம்ம தேங்ஸ் உங்க ஸ்பீச்சுக்க்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by Mohmed Younus (Trivandram) [07 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15682

ஒரு அமைப்பின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அவர் ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரதிநிதி என்பது இல்லை. வோட்டு அளித்த மக்களின் பெருவாரியான வாக்கை பெற்று வெற்றி பெற்ற சகோதரி ஆபிதா அவர்கள் இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிதான். ஐக்கிய பேரவையின் முடிவை இந்த ஊர் மக்கள் "ஒற்றுமையாக இருந்து, ஓர் அணியில் கீழ் இருந்து எதிர்த்து தங்களின் முடிவை தெரிவித்து இருந்தார்கள். "ஐக்கிய பேரவைக்கு கட்டுப்படுவதுதான் ஊர் ஒற்றுமை என்று எந்த அகராதியிலும் இல்லை.

காயல் மகபூப் அவர்களே, சகோதரி ஆபிதா அவர்களை யார் இயக்குவது என்பது தீர்மானிக்கப்படுவதர்க்கு முன்னால், உங்களை இயக்குவது யார் என்று இந்த ஊர் மக்களுக்கு தெரியும். நீங்கள் மேடையில் உரைத்த உரை கூட தாயரிக்க்ப்பட்டது காயித மில்லத் மன்ஜிளிலா அல்லது வேறு எங்குமா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [07 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15689

இணைய தளத்தில் வரும் விமர்சனங்களையும் ,கருத்துகளையும் மட்டும் படித்தால் மட்டும் போதாது . அதில் வரும் வெளிப்படையான நகர்மன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து படிக்க வேண்டும் . உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் முன்பு இருந்த நகர் மன்றங்களில் இது போல் வெளிப்படையான நிகழ்வுகள் நடந்ததுண்டா...?? அப்படி எதாவது நடந்திருந்தால் எதாவது கருத்து எழுதி சுனாமி குடியிருப்பிற்கு கையெழுத்து போடாமல் தடுத்து இருப்போம் . அல்லது இதற்கு முன் இருந்தவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு தெரியும் ,உங்களிடம் ஆலோசனை கேட்டு தான் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே ... அப்படியென்றால் நீங்களாவது தடுத்து இருக்கலாமே ...???

நல்லது செய்வதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை ... தயவு செய்து உண்மைக்கு மாறாக கூறாதீர்கள் . நீங்கள் கண்ணை கட்டி கொண்டு விடியவில்லை என்று சொன்னால் ...முன்பு போல் நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு காயல் மக்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை ... ஏற்கனவே இதற்கு தேர்தலில் பாடம் புகட்டி விட்டார்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [07 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15690

====நமதூரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் உள்ளடக்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் மிஸ்ரிய்யா என்ற வேட்பாளர் பஸ் சின்னத்தில் நிறுத்தப்பட்டார்..========

அனைத்து ஜமாத்தும், பொதுநல அமைப்பும் சேர்ந்து நிறுத்தியே வேட்பாளர் என்றால், பேருந்து வேட்பாளர் அல்லவா வெற்றி பெற்றுருக்க வேண்டும்?

அதிகபடியான வாக்குகள் வித்யாசத்தில் மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிபெற்று நகருக்காக பாடுபட்டு வருகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய நகர்மன்ற தலைவி, ஆபிதா லாத்தா அவர்கள்.

ஒற்றுமையை சீர்குலைக்கும் இதுபோன்ற பேச்சுக்களை தவிர்க்கவேண்டும், முஸ்லீம் லீக்கின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இதுபோன்று பேசியிருப்பது அக்கட்சியின் மீது மக்களிடம் உள்ள சிறு நப்பிக்கையும் இழக்க செய்கின்றது.

கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அவர்களின் பேச்சு இவ்வாறு இருக்கையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அவர்களின் பேச்சு இதற்க்கு முற்றிலும் மாற்றமாக இருக்கின்றது.

Refer News ID # 7822


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தன்னிலை விளக்கம்
posted by kayalmahaboob (chennai) [07 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15693

காயல்பட்டனத்தில் 30,12,2011 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் ஒரு சிறு பகுதி திரித்தும் சிதைத்தும் தாங்கள் வெளியிட்டதால் விமர்சனங்களும் வேறுவிதமாக வந்து கொண்டிக்கின்றன.

அந்த கூட்டத்தில் நான் (காயல் மகபூப்) ஒருமணி நேரம் பேசினேன். நெல்லை மஜீத் 45 நிமிடங்களும், கே.ஏ.எம்.மஹம்மது அபூபக்கர் 30 நிமிடங்களும் பேசினர் தங்கள் இணைய தளத்தில் எங்கள் பேச்சு வெளியிடப்பட்டதிலிருந்தே விமர்சனங்கள் எப்படி வர வேண்டும் என்ற நோக்கம் செய்தி வெளியிட்டவர்களும் இருந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அந்த செய்தியில் நான் பேசாத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளனே. பேசியவை அனைத்துமே இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

நாற்பத வருடங்களாக ஊருக்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்து வரும் நான், என் எழுத்திலும் பேச்சிலும் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. காயல்பட்டினம் நகராட்சியின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு நாள் குறிப்பிட்ட உதாரணம் ஒரு வழிப்பாதைக்கு மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்ததையும், பேருந்து நிலைய வளாகம் வுருவாய் துறையினரால் அளிக்கப்பட்டபோது அதுபற்றி எந்த கவுன்சிலர்களுக்குமே தெரிவில்லையே என சொல்லத்தான் விமர்சித்தேன்.

மனசாட்சியை தொலைத்து விட்டு செய்தி வெளியிட்டவர்கள் இறையச்சம் இருக்குமேயானால் என் முழு பேச்சையும் வெளியிட்டுப் அப்போது விமர்சனங்களும் வேறுமாதிரியாக திரும்பும்.

இதையும் எடிட் செய்து வெளியிட்டு அதனால் வரும் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வேன். எந்த விமர்சனமும் என் உள்ளத்தை என்றைக்கும் காயப்படுத்தாது. அன்று நான் பேசிய என் பேச்சை கேட்ட பல நுற்றுக்கணக்கானோர் நன்கறிவர்.

காயல் மகபூப்.

Moderator:சகோ.காயல் மகபூப் அவர்களுக்கு,

இச்செய்தியில், தாங்கள் பேசாததை பேசியதாகவும, பேசியதை திரித்து எழுதியிருப்பதாகவும் இணையதளத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். அதனை நாங்கள் மறுக்கிறோம்.

தாங்கள் பேசியபோது செய்யப்பட்ட ஒலிப்பதிவு எம்மிடம் உள்ளது. அதனடிப்படையிலேயே இச்செய்தி அமைந்துள்ளது என்பதால், தங்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Kayal Mahboob Uncle
posted by Riyath (HongKong) [07 January 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 15695

I agreed with Mahboob uncle's comment here that either post full message spoken in the meeting or better avoid spreading part of speach that making negative impression for social service gentle men. I can not forget uncle's help on my career growth. that he did proactivelly with no advantage taken from me. Thanks Uncle and keep go on your service as always you do.

Good people never bother about any comments for their sociel service.. **Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [07 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15707

SK. Salih, suggest uploading the full speech. People can listen and decide for themselves.

//Hope proper backup mechanism is followed for critical data//


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by masood (Calicut) [07 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15709

சஹோத்ரர் அபூபக்கர் அவர்களுடைய பேச்சில் வருங்காலங்களில் முஸ்லிம் லீக் நல்ல மாற்றத்துடன் செயல்படும் என்ற நம்பிகை துளிர் விடுகிறது.

வீதிக்கு வந்து போராடினால் தான் சமுதாயம் உரிமைகளை பெற முடியும் என்ற உண்மையையும், தனி சின்னம் தான் ஒரு கட்சியின் வளர்சிக்கு பெருந்துணை என்பதையும் உணர்த்தியது மனித நேய மக்கள் கட்சி தான் என்பதில் யாருக்கும் ஒரு சந்தேகமும் இல்லை.

நீங்கள் என்ன தான் மூடி மறைத்தாலும் தமிழக முஸ்லிம்கள் மறக்கவும் மாட்டார்கள், மறுக்கவும் மாட்டார்கள். காயல் மகபூப் அவர்கள் தான் பேசியதை மறுப்பதால் பேச்சை டாட்.காமில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. காயல்பட்டிணம் முசுலிம் ஐக்கிய பேரவைக்கு எதிராக தேர்தலில் நின்ற ஓரே காரணத்தினால் சில பேரவை அனுதாபிகளுக்கு இந்த ஆபிதா அம்மையார் மீது ஆதங்கம் இருக்கலாம்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15716

காயல் மகபூப் அவர்கள் தான் பேசியதை மறுப்பதால் பேச்சை டாட்.காமில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.. என்று சகோதரர் மசூது அவர்கள் கூறி இருப்பது சரியானதே.. என்னை போன்றவர்களின் விருப்பமும் இது தான்..

அட்மின் அவர்கள் விரைவில் ஒளிப்பரப்பினால் நடுநிலை மக்களுக்கு உண்மை புரியவரும்..

யார் யாரை இயக்குகிறார்கள் என்ற உண்மை வெளிவரும் மக்கள் புரிந்து கொள்வார்கள்...

ஊர் ஜமாஅதுக்களின் (சொந்த ஜமாஅத் புது பள்ளி) ஆதரவு கூட இல்லாமல் மக்கள் (மட்டுமே) ஆதரவுடன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பட்டதாரி திருமதி ஆபிதா அவர்கள் தற்போது இன்று வரை இந்த நிமிடம் வரை நகரமன்ற தலைவரை மக்கள் தான் இயக்கி வருகிறார்கள்.. தனி ஜமாத்தோ, தனி பேரவையோ, அமைப்போ, மற்றும் தனி நபர்களோ அல்ல.. புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி..!

காயல்பட்டிணம் முசுலிம் ஐக்கிய பேரவைக்கு எதிராக அன்று தேர்தலில் நின்ற ஓரே காரணத்தினால் சில பேரவை அனுதாபிகளுக்கு இந்த ஆபிதா அம்மையார் மீது ஆதங்கம் இருக்கலாம்.. இருந்தாலும் அணைத்து ஊர் பெரியவர்களின், அனுபவசாலிகளின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று தான் நகரமன்ற தலைவி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.. திறம்பட தனது பணியை செய்து மக்கள் பணி ஆற்றி வருகிறார்கள்.. அதில் சிறுதளவும் சந்தேகம் கிடையாது...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by seyed mohamed (KSA) [08 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15720

காயல்பட்டினம் நகராட்சியின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு நாள் குறிப்பிட்ட உதாரணம் ஒரு வழிப்பாதைக்கு மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்ததையும், பேருந்து நிலைய வளாகம் வுருவாய் துறையினரால் அளிக்கப்பட்டபோது அதுபற்றி எந்த கவுன்சிலர்களுக்குமே தெரிவில்லையே என சொல்லத்தான் விமர்சித்தேன். -- காயல் மகபூப் அவர்கள்.

காயல் மகபூப் அவர்கள் உரையில் தெளிவாக சொல்லி இருப்பது அவர்களின் இங்கு பதித்த கருத்தில் தெரிகிறது. அட்மின், இந்த முக்கிய பேச்சை (தொடர்புள்ள காரணத்தை) போடவில்லையே? பழைய நகர்மற்றத்தை பொறுத்தவை, இதுபோல் ஊடக ஒத்துழைப்பு கிடையாது, அதனால் பழைய நிர்வாகத்தில் வெளிப்படை இல்லை என்று சொல்லமுடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [08 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15722

நமது நகரமன்ற செயல்பாடுகள் இப்போது தான் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாம் வெளிபடையாக நடைபெறுகிறது. யாரும் யாரையும் இயக்குவதாகவும் தெரியவில்லை.

இப்போது தான் நமது ஊரில் உள்ளாச்சி தேர்தல் எனும் புயல் அடித்து ஓய்ந்து அமைதியாக உள்ளது. தேவை இல்லாத புது குழப்பத்தை ஆரம்பித்து வைத்து. விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved