Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:30:58 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7830
#KOTW7830
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 9, 2012
ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4477 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜனவரி 5 அன்று - ஆத்தூரில் அமைந்துள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு விஜயம் செய்த செய்தி ஜனவரி 7 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தி குறித்தும், அது குறித்து பதிவாகியிருந்த வாசகர் கருத்துக்கள் குறித்தும் - நகர்மன்றத்தின் ஐந்தாவது வார்ட் உறுப்பினர் எம். ஜஹாங்கிர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-

காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செய்தியாளர் சகோதரர் S.K.சாலிஹ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தை நகராட்சித் தலைவர் தலைமையில் பார்வையிட்ட உறுப்பினர்களின் பட்டியலில் நான் இடம்பெறாதது குறித்து, விஷமத்தனமான முறையில், தங்கள் இணையதளத்தில் செய்தி இடம்பெறச் செய்து, தேவையற்ற சர்ச்சையை துவக்கி வைத்தீர்கள். நான் அந்த குழுவில் இடம்பெற முடியாமைக்கான காரணத்தை மிகத்தெளிவாக தெரிவித்து விட்டேன். இருப்பினும் உள்நோக்கத்தோடு நீங்கள் வெளியிட்ட தவறான செய்தியால் திசை திருப்பப்பட்ட சிலர் எழுதும் எனக்கெதிரான விமார்சனத்தை தொடர்ந்து வெளியிட்டு மகிழ்கிறீர்கள். தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும். தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது. மற்றவர்களை மட்டம் தட்டி மகிழும் இதுபோன்ற தங்களுடைய செயல்களை ஊர் நலன் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் இணையதளத்தில் தங்களைப் பற்றிய விமர்சனத்தை சிலர் அலட்சியம் செய்யலாம். மற்றும் சிலர் உங்கள் இணையதளத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருக்கலாம். ஆனால் இணையதளம் ஒன்றின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய என்போன்றோர் அவ்வாறு இருக்கமாட்டோம். எனவே என்போன்றோரை சீண்டவேண்டாம் என எச்சரிக்கிறேன். இது எச்சரிக்கை அல்ல. அன்பான வேண்டுகோள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்த இணையதளத்தின் விளக்கம் வருமாறு:-

1. இச்செய்தியைப் பொருத்த வரை - எமது இதர செய்திகளின் நடையிலேயே இதுவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆத்தூர் விஜயத்திற்கான பின்னணி, அங்கு சந்திக்கப்பட்டவர், பார்க்கப்பட்டவை, பெறப்பட்ட தகவல்கள், குழுவில் இடம்பெற்றவர் என்ற தகவல்களே அதில் வெளியிடப்பட்டிருந்தன. அச்செய்தியில் எந்த உள்நோக்கமும் இல்லை

2. கருத்துக்களை பொருத்த வரை - இச்செய்தி குறித்த அனைத்து கருத்துக்களும் - தங்களின் கருத்துக்கள் உட்பட - வெளியிடப்பட்டுள்ளன.

3. விவாதம் தங்களின் கருத்து மூலமே துவங்கியது (கருத்து எண் 5) என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனைத் (Comment reference no.15715) தொடர்ந்தே வார்ட் எண் 1 உறுப்பினர் ஏ. லுக்மான் அவர்களின் விளக்கம், அதற்கான தங்களின் பதில், பிறரின் கருத்து என நீடித்தது. இதில் இணையதளத்தைக் குறை கூறுவது நியாயமில்லை என்பதனைத் தெரிவித்து கொள்கிறோம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புரிகிறவர்களுக்கு புரியும்
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [09 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15756

பொதுவாக "விமர்சனம்" என்ற அடை மொழியுடன் தாங்கள் விரும்பாத எங்களின் நிறைய கருத்துக்களை மக்கள் பார்வைக்கு வராமலே முடக்கி வைக்கும் நீங்களே இப்போது புதியதாக ஒரு விமர்சனத்திற்கு வழி திறக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

செய்தியில் சொல்லபட்டது போல
"காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செய்தியாளர் சகோதரர் S.K.சாலிஹ் அவர்களுக்கு,"

ஜகாங்கீர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் உள்ள விஷயங்களை பொறுத்த வரை அவர் நேரடியாகவே S.K.சாலிஹ் இடம் ஆதங்கபடுகிறாரே அல்லாமல் அவர்களின் இணையதளத்தில் உங்களை (kayalpatnam.com) பற்றி இப்படியான ஒரு செய்தியாக போட்டிருந்தாலே அன்றி தாங்கள் இப்போது இப்படி ஒரு செய்தி வெளியிடுவதின் நோக்கம்? புரியுது...புரியுது...

இதெல்லாம் புரிகிறவர்களுக்கு புரியும்.

குறிப்பு:-அனேகமாக என்னுடைய இந்த செய்தியும் ஏதாவது காரணம் சொல்லி தடுக்கப்படலாம். அப்போது பார்ப்போம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.

Administrator: இவ்வறிக்கையை இணையதளத்தில் வெளியிடும்படி நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கிர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்செய்தியும், அதற்கான விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by sulaiman (manama) [09 January 2012]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 15758

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸாலிஹ் காக்கா உம் ஜகாங்கிர் பாய் யும் ஊருக்கு செய்யும் சேவைகள் அனைவரும் அறிந்தது, அல்லாஹ் இவர்களின் இருவர்களின் நல்ல செயல்களுக்கு நற்கூலி கொடுத்து பரகத் செய்வானாக, அமீன்,

தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்வது குறித்து அல் குரானின் பல வசனங்கள் உள்ளன,

உதாரணமாக

6:69 وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِم مِّن شَيْءٍ وَلَٰكِن ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ

6:69. (வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.

வஸ்ஸலாம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by PS ABDUL KADER (JEDDAH) [09 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15759

இது ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன், தம்பிக்குள்ள கேம்மர சண்டை. சரி விடுங்க பிரச்சினையை. எங்கேயோ தவறு நடந்துவிட்டது.

வரும் நாட்களில் இருவரும் ஒற்றுமையுடன் நகரில் நடதொரும் நிகழ்வுகளை உடனுக்குடன் தந்து உதவ வேண்டுகிறேன்.

ஆத்தூரில் 13 வது வார்டு உறுப்பினர் சம்சுதீன் மச்சான் குடித்து பார்த்த தண்ணீர் குடிப்பதற்கு நல்ல தண்ணியாம் . நமதூர் மக்களுக்கு தரம் கம்மியா வருத்தமே. இதை என்னான்னு கவனிக்க சொல்லுங்களே தண்ணீரில் சரியான chemical சேர்கிறதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by Zainul Abdeen (Dubai) [09 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15764

எந்த உள்நோக்கமும் இல்லை இதர செய்திகளின் நடையிலேயே இதுவும் வெளியிடப்பட்டுள்ளது என்று விவாதிக்கும் நிருபர் பல முறை இதே போன்றே சர்ச்சையை கிளப்பும் செய்திகளையும், தலையங்கங்களையும் தந்து இருகின்றார் என்பது மறுக்க முடியாத ஒன்றே......

உதாரணமாக நகராட்சி தேர்தல் முடிந்த சமயத்தில் "காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி" என்று நம் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியவரும் இவரே..

சில நாட்களுக்கு முன்னால் உப்பு சப்பு இல்லாத யானை சாணத்தை ( அப்படி என்றால் சுவைத்து பார்த்த அனுபவம் உண்டோ என்று சிந்திக்கவேண்டாம், நான் செய்தியை சொன்னேன்) வைத்துக்கொண்டு கந்தூரிகளில் நடப்பவைகளை மறை முகமாக எடுத்துரைத்தார். அதை எதிர்க்கும் விதமாக ஒருவர் கருத்து தெரிவிக்கவே அந்த செய்தியை திருத்தி வெளியிட்டார் .

இப்படி பல பல ... இப்போது ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தை நகராட்சித் தலைவர் தலைமையில் பார்வையிட்ட இச்செய்தியை வெளியிடும்போது அங்கு (ஆத்தூரில்) பார்வையிட சென்ற குழு என்று தலைவி மற்றும் 14 உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியாதவர்கள் என்று 3 உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. மீதம் உள்ள ஒரு உறுப்பினர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழும்புவதற்காகவே இந்த நிருபர் செய்திகளை வெளியிட்டார். ஏன் இந்த தேவை இல்லாத விஷமத்தனமான வார்த்தைகளோடு செய்தி வெளியிட்டு பிறர் மனம் புண்படும் வண்ணம் நடக்க வேண்டும்.

இன்னும் சகோதரர் ஜஹாங்கீர் சொல்லாத சில விசயங்களையும் உங்களுடைய இந்த செய்தியில் வெளி இட்டு அவருக்கு களங்கம் ஏற்படுத்துவதினால் உங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன???

உண்மை இவவாரிருக்க சகோதரர் ஜஹாங்கீர் அவர்களை பொது வேலைக்கு ஈகோ பார்கலாமா ? சிறு பிள்ளைத்தனம், சொந்த காரியத்திற்கா அழைத்தார்கள்? நியா? நானா? போட்டி வைக்கலாமா போன்ற கருத்துகளால் பலரும் வசை பாடும் வண்ணம் கருத்துகள் தெரிவிபதர்க்கு நீங்களே பொறுப்பெடுக்க வேண்டும் இனியும் இது போன்று உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகளுக்கு உறுதுணை புரிந்தால் உங்கள் இணையதளத்தின் நம்பகதன்மையயும் உங்களுடைய கொவ்ரவதையும் இழக்க நேரிடும்.

இது பற்றி முழு விவரம் அறிய
http://kayaltoday.in/show.aspx?tNewsId=2222


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இதை நான் எதிர்பார்க்கவில்லை...
posted by S.K.Salih (Kayalpatnam) [09 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15769

நண்பர் ஜஹாங்கீரிடமிருந்து இப்படியொரு நேரடி தாக்குதலை நான் எதிர்பார்க்கவேயில்லை.

அவருக்கும், எனக்குமிடையில் எந்த தொழில் போட்டியோ, கருத்து வேறுபாடோ, பகையோ இன்று வரை இல்லை.

ஒரு செய்தியாளனாக, நடந்த நிகழ்வுகளை - பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் - அதே நேரத்தில் இயன்றளவு மென்மையுடன் தந்தே பழக்கப்பட்டவன் நான். இதற்காக, பல காலகட்டங்களிலும், பலரது விமர்சனங்களையும், நேரடியாகவும் - மறைமுகமாகவும் பெற்றுக்கொண்டுள்ளேன்.

பொதுவாழ்வு - செய்தித்துறை என்றெல்லாம் வந்துவிட்டால், விமர்சனங்களை வாங்கிப் பழகியே ஆகவேண்டும்... அந்த வகையில் அனுதினமும் வாங்கி, என்னை நான் பட்டை தீட்டிக்கொள்ளவே முயற்சிக்கிறேன்.

அவர் வருத்தப்பட்டுள்ளது போல, அச்செய்தியை நான் உள்நோக்கத்துடன் வெளியி்ட்டிருந்தால், அச்செய்திக்கு வந்த வாசகர் கருத்துக்கள் அனைத்தும் அவரை சாடியே வந்திருக்கும். ஆனால் அப்படி வரவில்லை... நண்பர் ஜஹாங்கீர் தன்னிலை விளக்கம் என்று கருத்துப்பதிவு (எண்: 15715) செய்த பிறகே விவாதம் தொடங்கியது.

அந்த கருத்தில் கூட, (பின்னர் அவர் தெரிவித்தபடி) ரேஷன் கடை தொடர்பான பொதுப் பிரச்சினைக்காகத்தான் வர முடியாமற்போனது என்று அவர் விளக்கிச் சொல்லியிருந்தாலே விவாதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

நண்பர் முஜாஹித் அவர்களின் பெயரை “தகவல்” என்று போட்டுவிட்டு தனது பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளார் என்று தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வலைதளத்தில் தொடர்ச்சியாக செய்தியைத் தரும், படிக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும் நான் “தகவல்” என்று பயன்படுத்தும் விதம் குறித்து...

பொதுவாக எனக்கு ஒரு செய்தியைக் கொண்டு வருபவரை, அல்லது நான் செய்தி வெளியிடுகையில் அதுகுறித்த தகவல்களையும், படங்களையும் தந்துதவுவோரின் பெயரை, “தகவல்”, “படம்” என்று போட்டு வெளியிடுவது வழமை. எனது கேமரா பழுதானதால், கடந்த ஒருவார காலமாக நண்பர் ஜஹாங்கீர், நண்பர் முஜாஹித் ஆகியோரிடமிருந்துதான் நான் படங்களையும், தகவல்களையும் பெற்றுக்கொள்கிறேன். அதனடிப்படையில் அவர்களின் பெயரை வெளியிட்டேனே தவிர, “தகவல்” என்று பெயர் வெளியிட்டதாலேயே செய்தியின் அனைதது வாசகங்களும் அவருடையது என்று பொருளாகிவிடாது.

ஆத்தூருக்குச் செல்ல, கவுன்சிலர் பத்ருல் ஹக் அவர்களை நண்பர் ஜஹாங்கீர் தான் தடுக்கவேயில்லை என்றும், பத்ருல் ஹக் அவர்களும் தான் அவ்வாறு எஸ்.கே.ஸாலிஹ் இடம் சொல்லவேயில்லை என்று மறுப்பதாகவும் நண்பர் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.

கவுன்சிலர் பத்ருல் ஹக் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவில்லை. ஆத்தூருக்குச் செல்லும் அந்த வாகனத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கும் வகையிலேயே தெரிவித்தார். “நீ வராவிட்டால் பரவாயில்லை... நாங்க செல்கிறோம்...” என்று கவுன்சிலர் பத்ருல் ஹக் நண்பர் ஜஹாங்கீரிடம் சொன்னதாகவும், “இப்டி நீ செய்தால், நாளை உனக்கு ஒன்று என்று வரும்போது நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்” என்று தெரிவித்ததாகவும் கவுன்சிலர் பத்ருல் ஹக்தான் வேனில் வைத்து சொன்னார். அதற்கு வேனில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் சாட்சி.

தற்போது அவர் மறுக்கிறார் எனில், அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இனியும் இதுகுறித்து நாம் விவாதித்துக் கொண்டிருப்பதை விட, வெளியிட வேண்டிய செய்திகளில் கவனத்தை செலுத்துவோம்...

என்றும் யாவரின் அன்பையும், நட்பையும் பெரிதும் விரும்பும்,
எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by Cnash (Makkah ) [09 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15770

அஸ்ஸலாமு அலைக்கும்!

தவறுகள் மனித இயல்பு... இதில் யாருடைய தவறு இருந்தாலும் பெருந்தன்மையோடு விட்டு விட்டு இப்போது நீங்கள் இருவரும் செய்து கொண்டிருக்கும் நல்ல பணிகளை எந்த தொய்வும் இன்றி தொடரலாமே!!

வீணாக இரண்டு இணையதளங்களுக்கிடையில் கலகம் காணுவது ஆரோக்கியமானதாக இல்லை!! அது போல வாசகர் கருத்துகளும் இந்த இடத்தில் வேண்டாத விளைவை உண்டாக்கும் (என் கருத்து உட்பட).. வாசகர்களாகிய எங்களுக்கு உண்மை எது என்பது நீங்கள் இருவர் சொல்லும் கருத்து மற்றும் செய்தி மூலமே தெரியும்!!!

ஆகவே இத்துடன் இது சம்பந்தமான செய்தியை தொடராமல் நிறுத்தி கொள்வதே நமக்கு நல்லது!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மக்களை குழப்ப வேண்டாம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [09 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15777

இப்போதெல்லாம் வலை தளம் பிரச்சனைகள் விளை தளமாக ஆகிக்கொண்டிருப்பதை உணர முடிகின்றது. இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் இணைய தளத்திற்கு எந்தெந்த செய்திகளை கொடுக்கவேண்டும் என்ற ஒரு சமூக சிந்தனை இல்லாமல் போனதுதான். இதற்க்கு நாம் இணையதள நிர்வாத்தை அதிகம் குறை சொல்லவும் முடியாது, காரணம் மற்றவர்கள் செய்தியை வெளியிடும் நீங்கள் என் செய்தியை மட்டும் நீங்கள் வெளியிட வில்லை என்ற வழமையான குறை அவர்களை வந்துசேர்கின்றது.

நான் சொல்ல முற்படுவது சகோதரர்கள் லுக்மான் ஹாஜி மற்றும் ஜகாங்கீர் அவர்களின் குற்றசாட்டுக்கள் மட்டுமே.

முதலில் சகோதரர் லுக்மான் அவர்கள் விஷயத்திற்கு வருவோம்:

அவர்களின் ஆதங்கங்கள் மற்றும் கோரிக்கைகள் எல்லாம் நியாயமானதே. ஆனால், நிர்வாக தர்மங்களின் படி அவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் , தகவல்கள் அறியும் சட்டங்களின் மூலம் பெற முடியும் என்று இருக்கும் போது, அவர்கள் ஏன் இந்த விஷயங்களை இணைய தளத்தில் வெளியிட்டு ஏற்கனவே குழம்பியிருக்கும் மக்கள் மத்தியில் வீணான ஒரு பிரளியத்தை உண்டு பண்ண வேணடும்?

இதையெல்லாம் செய்யத்தானே உங்களை நாங்கள் நகராட்சி மன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம், மாறாக நீங்களே உங்களின் இயலாமையை பறைசாற்றும் விதமாக உங்களுக்கு எய்த அம்பை மக்களை நோக்கி திருப்பி விடுவது எந்த விதத்தில் நியாயம்?

உங்களின் உரிமைகளை பெற போராடுங்கள் - எல்லா சின்ன விஷயங்களையும் மக்கள் மன்றத்தின் முன் வைப்பது அவ்வளவு உசிதமான யுக்தி இல்லை. இப்படி செய்வதனால் உங்களுக்குள்ள மதிப்பு மக்கள் மத்தியில் கூடும் என்று மட்டும் தவறன கணக்கு போட வேண்டாம். அதற்காக நகராட்சி மன்றத்தில் நடக்கும் கூத்துக்களை அமபலமாக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, எதை சொல்வது எதை சொல்லக்கூடாது என்று பாகுபடுத்தி உங்களுக்கு மக்களிடமிருந்து அறிவுரைகளோ அல்லது ஆலோசனைகளோ தேவைப்படும் போதும் மட்டும் உங்களின் கருத்துக்களை மக்கள் மன்றத்தில் வையுங்கள்.

மேலே கூறப்பட்ட கருத்துக்கள் தம்பி ஜகாங்கீர் அவர்களுக்கும் பொருந்தும். உங்களின் ஆதங்கத்தை நேரடியாக நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்தால் இந்த இணையதளத்தில் இவ்வளவு வாதங்களை தவிர்த்திருக்கலாம் தானே?

ஏற்கனவே பல விஷயங்களில் மக்கள் குழம்பி இருக்கிறார்கள் இதற்க்கு மேலும் தயவுசெய்து பிரிவினைகளை உண்டு பண்ணாதீர்கள்.

இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு தயவான வேண்டுகோள்;

மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள், செய்ய வேண்டிய பல முக்கிய உதவிகள் போன்றவற்றில் சமூக ஆர்வலர்களும் நல மன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவிக்கொண்டிருக்கும் இந்த தருனத்தில், தயவுசெய்து மக்கள் மத்தியில் தேவையில்லாத வாதங்களை உருவாக்கும் பதிவுகளை வெளியிட வேண்டாமே.

எப்படி நாங்கள் உங்களுக்கு அனுப்பும் கருத்துக்களை கத்திரி போடுகிறீர்களோ, செய்திகள் அல்லாது மற்றவர்கள் தரும் இந்த மாதிரி தனி நபர்களின் பதிவுகளையும் கடுமையான கத்திரிக்கு பிறகு அனுமதித்தால் எல்லோருக்கும் பயனளிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அரசன் அன்று கொல்வான்..... தெய்வம் நின்று கொல்லும்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [09 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15780

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நல்லுள்ளம் கொண்டோர்களே..... பலமுறை இந்த வலைதளத்தை விமர்சித்தது அன்று சிலருக்கு புரியவில்லை என்றாலும்..... பலருக்கு இப்பம் புரிந்திருக்கும்.

இந்த இணைத்தளம் பல நல்ல விஷயத்தை எங்களுக்கு தந்தாலும்..... ஒற்றுமையை குலைக்கும் செயலில் இவர்களின் பங்கு அதிகம்.

அதிகம் நான் எழுதுவதை விட ஜைனுல் ஆபிதீன் (துபாய்) அவரின் விளக்கத்தையே.... நானும் ஆமோதிக்கிறேன். நகராட்சி விசயத்தில் இந்த இணைத்தளம் நீ பாதி..... நான் பாதி என்று இவர்கள் செயல் படுவதை சுட்டிக்காட்டிய என் கமாண்டை எடிட் பண்ணி தலைப்புக்கு சம்மந்தம் இல்லாமல் ஆக்கினார்கள். (Comment Reference Number: 13380) அந்த நீ பாதி.... நான் பாதி இந்த பிரச்சனையில் அம்பலம். பெரியவர்களின் தியாகம்களை மதிக்காமல் ஊரின் ஒற்றுமையை சிதைப்பவர்களை தெய்வம் நின்று கொள்ளும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மக்களை குழப்பாதீர்கள்........
posted by Habeeb Mohamed (Doha - Qatar) [09 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15781

5 வது வார்டு உறுப்பினர் சகோதரர் ஜகாங்கீர் அவர்கள் தனது வார்டுக்கு உட்பட்ட ரேசன்கார்டு திருத்தும் பணி காரணமாக ஆத்தூருக்கு செல்லமுடியாததை http://www.kayalpatnam.in/latest-news/2012-01-06-07-01-50.html (kayalpatnam.in news) ஆதாரத்தோடு விளக்கமாக சொன்ன பிறகும் நீ சப்போர்ட் பண்ணாவிட்டால் நானும் பிற தேவைகளுக்கு சப்போர்ட் செய்யமாட்டேன் என்பது போன்ற இட்டுக்கட்டான செய்திகளை தேவைஇல்லாமல் கொடுத்து மக்களை பிளவு படுத்தி குழப்பாதீர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவைகள் நல்லதாக நாயன் அருளால் அமையட்டுமாக ஆமீன்...
posted by சட்னி .செய்யது மீரான் (ஜித்தா....சவுதி அரேபியா ) [09 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15783

அஸ்ஸலாமு அலைக்கும்.....

எங்கள் ஐய்ந்தாவது வார்டு உறுப்பினர் ஒரு ஆற்றல் மிக்க அதுவும் பொது சேவையில் மிகுந்த ஆர்வமிக்க இளைஞர்..பொது நல சிந்தனை வாதி..

சிரித்த முகம் கொண்டு எல்லோரிடமும் பழகும் சிறப்புக்குரியவர்.... யாரிடமும் கோபம் கொள்ளாத பண்பாளர்.. இது விசயத்தில் பிறர் மற்றும் அவர் மீது அக்கறை கொண்டவர்கள் அவரை குறை காணவே அதுவும் தான் செய்யாத, மனதில் நினையாத ஒன்றை இவ்வளவு பூதாகரமாக்கி பிறர் குளிர் காய்கின்றார்கள் என்பதால் தான்.....வேதனை

நம்மில் யாருக்குமே உள்ளாட்சி தேர்தல் பற்றிய எண்ணம் வரும் முன்னரே நமது ஊரில் காக்கும் கரங்கள் அமைப்பின் உதவியோடு கடந்த ரமலானில் ஊரில் உள்ள பொது நல அமைப்பினர்களை ஒரு இடத்தில் கூட்டி ஊழல் அற்ற,உறக்கம் அற்ற,உயிர் ஓட்டமுள்ள நல்லதோர் நகராட்சியை அமைப்பது பற்றி தம்பிமார்கள் ஜகாங்கிர்,முஜாஹித் அலி போன்றோர் களம் இறங்கி காரியம் ஆற்றியதை கண்ணால் கண்டவனில் நானும் ஒருவன்... அவர்களோடு கை கோர்த்தவர்களிலும் நானும் ஒரு அங்கம்...

இவர்கள் தான் நம்மை விழிப்படைய வைத்தார்கள்....

அதற்க்கு பிறகு தான் நம்மில் எத்தனையோ புதியவர்கள்,பழையவர்கள், மூத்தோர்,இளையோர்கள் என கண் விழித்தார்கள்,கொடிபிடித்தார்கள்,கூட்டம் கூட்டினார்கள் கொள்கை வகுத்தார்கள் ,கோஷம்போட்டார்கள், பொது இடத்தில் மேடை போட்டார்கள்.....

தம்பி ஜகாங்கிர் கேள்வி எழுப்பி இருந்த நமதூருக்கு செயல்பட்டுவரும் இணையதள செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தது யார்? என பதிந்திருந்த கருத்துக்கு பக்கத்திலேயே வாசகர்களாகிய எங்களுக்கு சிகப்பு வண்ண எழுத்தில் சுருக்கமாக தரும் பதில் போல் 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அவர்களை யதார்த்தமாக நான் அன்று காலையில் சந்திக்க நேர்ந்தபோது, (எனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு) “என் குழந்தைக்கு சுகமில்லை... எனவே நான் செல்லவில்லை... நீங்கள் ஆத்தூர் செல்லவில்லையா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் விபரம் கேட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு பயணம் இருப்பது தெரியவந்தது. என தம்பி எஸ்.கே.ஸாலிஹ் செய்து இருந்தால் இவ்வளவு பெரிதாகி இருக்காது...

மேலும் தலைவி அவர்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் தம்பி ஜகாங்கிர்....

இது தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களோ.....

இனி வரும் காலங்களில் இது போன்ற குறைகள்,மன கசப்புகள் ஏற்படாதவாறு எல்லோரும் பார்த்து கொள்வதோடு தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது...

நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவைகள் நல்லதாக நாயன் அருளால் அமையட்டுமாக ஆமீன்... எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன் ...வஸ்ஸலாம் ...

உங்கள் அனைவரின் அன்பை என்றும் நாடும் சகோதரன்
சட்னி .செய்யது மீரான்
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by mohideen thambi s a m (kayalpatnam) [10 January 2012]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 15786

MOHIDEEN THAMBY SAM. (KAYAL PATNAM.)

சிந்தித்து பார்த்து,செய்கையை மாற்றி, சிறிதாய் இருக்கையில் திருத்துங்கள்! தவறு சிறிதாய் இருக்கையில் திருத்துங்கள்! தெரிந்தும்,தெரியாமல் நடந்திருந்தால்,அது திரும்பவும் வராமல் பார்த்து கொள்ளுங்கள்! இந்த கருத்து,இருவருக்குமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by gifto ismail (chennai) [10 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15790

அது இன்னையதளம் விளக்கமா அல்லது நிருபர் கருத்தா

Moderator: இது இணையதளத்தின் விளக்கமே! செய்தியின் தலைப்பிலும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இத்தோட முடிச்சுக்குருவோம்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [10 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15793

என்ன இஸ்மாயில் மச்சான் எல்லாம் ஓய போகிர நேரத்துல நீங்க தொடங்குறீங்க?

செய்தியை நீங்க சரியாக படிக்க வில்லையாக்கும்?

இணையதள நிருபரை குற்றம் சாட்டி ஜஹாங்கீர் எழுதிய இந்த லட்டரை (நம்முடைய கருத்தை எல்லாம் கத்திரி போடுவது போல) கத்திரி போடாமல் அப்படியே பிரசுரித்ததால் வந்த பிரச்சினை தான் இது.

இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா என்று சொல்லுகிற மாதிரி இதெல்லாம் நிருபர்கள் மத்தியில் சகஜம்பா என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.

இந்த செய்திக்கு என்னுடைய முதல் கருத்தில் நான் சொன்னது போல இதயெல்லாம் இப்படி பெரிசுபடுத்த வேண்டியதின் நோக்கம்?

சரி மச்சான் எல்லாம் ஓய்ந்து வருகிறது. இனி நல்ல தரமான செய்திகளை நம் ஊரின் முன்னணியில் உள்ள மூன்று இணைய தளங்களும் போட்டி போட்டு கொண்டு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தோட இது பற்றிய கருத்துக்களை முடிச்சுக்குருவோம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஆத்தூர் குடிநீரேற்று செய்...
posted by HASBULLAH MACKIE (dubai) [10 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15814

சகோதரர் சாலிஹிற்கு

ஒரு செய்தியை போடும் பொது நடைமுறைக்கு ஏற்ற மாதிரி எழுதினேன். அவரை நான் இப்படி நினைப்பார் என்று தெரியாது என்பதெல்லாம் ஒரு செய்தியை வெளியிடுபவருக்கு அழகல்ல..

ஒரு சமுதாய சேவை நடக்கும் இடத்தில உரிமையோடு அறிவிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் கலந்து கொள்ளுவது நல்ல விஷயம்,,,, ஆனால் யாரும் சொல்லமலேயே நான் கலந்து கொண்டேன் என்று சொல்லுவது பெருமையின் வெளிப்பாடு.

செய்திகளில் நாங்கள் கலந்து கொண்டோம்... இன்ன விஷயங்கள் பேசினார்கள் ,என்ன முடிவு செய்தார்கள் என்பதை எழுதினாலே போதுமானது , இதில் அந்த உறுப்பினர் வரவில்லை,இந்த உறுப்பினர் பங்குபெறவில்லை என்று எழுதுவது மனிதாபிமனமில்லை...மீறியும் எழுதுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டு விட்டு எழுதி இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.....

நீங்கள் மனசில் நினைக்கும் விஷயம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? இந்த விஷயத்தில் மூன்று பேர் ஏன் வரவில்லை என்று அறிய வேண்டி website மூலமாக பதில் எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம்?? இந்த முறையை கையாண்டால் நாளை kayalpatnam website & kayaltoday என்ற பிரிவாகி மாற்றி மாற்றி பதில் எழுதும் website ஆக மாறிவிடும்.....

அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பவர்கள் இந்த மாதிரியான விஷயத்தை கைவிடுங்கள்....

எங்களை போன்று வெளிநாட்டிலிருந்து இதே போன்ற செய்திகளை படிப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது....

இந்த செய்தியை வெளியிடாமல் தவிர்த்தால் 'தகவல்' அறியும் சட்டத்தில் தெரிந்து கொள்வேன்....ஹா ஹா .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. காயல் நகர செய்தியாளருக்கு தகுதியல்ல...............
posted by Habeeb Mohamed Nasrudeen (Doha - Qatar) [10 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15819

செய்திகளில் நாங்கள் கலந்து கொண்டோம்... இன்ன விஷயங்கள் பேசினார்கள் ,என்ன முடிவு செய்தார்கள் என்பதை எழுதினாலே போதுமானது , இதில் அந்த உறுப்பினர் வரவில்லை,இந்த உறுப்பினர் வரவில்லை என்று எழுதுவது மனிதாபிமனமில்லை...மீறியும் எழுதுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டு விட்டு எழுதி இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.....

5 வது வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் இதை விட மிக முக்கியமான பொது பணியான குடும்ப அட்டை திருத்தும் பணிக்காகதானே சென்றுள்ளார், அவர் என்ன யானை சாணத்தை படம் எடுக்கவா சென்றார்???????!!!!!!!!

செய்திகளை இட்டுக்கட்டி, புறம் பேசி எழுதுவது ஒரு செய்தியாலனுக்கு தகுதியல்ல. அதுவும் காயல் நகரை சேர்ந்த ஒரு முஸ்லிமான செய்தியாளருக்கு முறையல்ல.

இனியும் இது போன்று உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகளுக்கு உறுதுணை புரிந்தால் உங்கள் இணையதளத்தின் நம்பகதன்மையயும் உங்களுடைய கொவ்ரவதையும் இழக்க நேரிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் கனமழை!  (11/1/2012) [Views - 5263; Comments - 11]
நள்ளிரவில் கனமழை!  (10/1/2012) [Views - 2766; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved