Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:47:06 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7885
#KOTW7885
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 23, 2012
“களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” என்ற தலைப்பில் இன்றைய தினத்தந்தி நாளிதழில் செய்திக்கட்டுரை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-

கடற்கரை
இந்தியாவில் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பானதோர் இடம்பெற்றுள்ள ஊர் காயல்பட்டினம். இவ்வூரில் இறைநேசச் செல்வர்களும், திருமறை விரிவுரையாளர்களும், அரபு மொழி வல்லுனர்களும், தமிழ்மொழி பெரும் புலவர்களும் வாழ்ந்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் வடக்கே நான்கு மைல் தொலைவில் கடலோரமாக அமைந்து இருக்கிறது காயல்பட்டினம். முன்பு காயல் எனவும், தென்காயல் என்றும், பவுத்திர மாணிக்க பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது காயல்பட்டினம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் 5000 ஆண்டுகள் தொன்மையும், பெருமையும், சிறப்பும் கொண்ட நகரமாகும்.

காயல் நகரின் வளர்ச்சி
தென்வங்கக் கடலோரம் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கே அமைந்து உள்ளது காயல்பட்டினம் நகரம். 1886-ல் கிராம பஞ்சாயத்தாக உருவாகி, 1982-ல் நகர பஞ்சாயத்தாக உயர்ந்து, 1.10.2004-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக வளர்ந்து, தற்போது 2-ம் நிலையாக நடைபோட உள்ளது. இந்த நகரில் 50 ஆயிரம் மக்கம் வாழ்ந்து வருகின்றனர். 18 உறுப்பினர்களைக் கொண்ட நகரசபையின் தலைவராக ஐ.ஆபீதா உள்ளார்.

இந்நகரம் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், திரையரங்கம், மதுபானக் கடைகள் கிடையாது. நகரைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்று எந்த ஒரு இடமும் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்றுதான் கடற்கரை.

கடந்த 1954-ம் ஆண்டு இந்த நகருக்கு வந்த முன்னாள் முதல் அமைச்சர் ராஜாஜி இந்த கடற்கரையைப் பார்த்துவிட்டு, “இதுபோல் அழகான இயற்கை மணல்பரப்பு மாகாணத்தில் வேறு எங்கும் இல்லை. இது சென்னை மெரினா கடற்கரை போன்று அழகுடன் அமைந்து உள்ளது” என்று வியந்தார். முன்னாம் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் காயல்பட்டினம் ஒரு துறைமுக நகரம். வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பெருமைபட தெரிவித்து உள்ளார்.

பொழுதுபோக்கு கடற்கரை
வார இறுதி நாட்களில், மாலை நேரங்களில் எல்லாக் கடற்கரை பகுதிகளிலும் திரளான மக்கள் கூட்டம், ஊர்ந்து செல்லும் வாகனங்கள், ஆடி, ஓடி விற்பனை செய்யும் வியாபாரிகள், கொட்டிக் கிடக்கும் குப்பைக் கூழங்கள் பொதுவாக காணப்படும் காட்சிகளாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள காயல்பட்டினம் கடற்கரை இந்த பொதுவான நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த கடற்கரைக்கு செல்லாதவரை, அதன் கவின்மிகு காட்சியையோ அதன் பழம்பெரும் வரலாற்று பெருமையையோ புரிந்து கொள்ள முடியாது. கடலை அணைத்து நிற்கும் இந்த அழகிய பட்டினத்துடன் பழம்பெரும் வரலாறு, தொல்பொருள் ஆய்வு, மாபெரும் மார்க்கம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

அலைகள் வரவேற்கும் காயல்
ஊரில் காணப்படும் குறுகிய பாதைகள், அகன்ற தார் பாதையுடன் இணைந்து, படிப்படியாக விரிந்து, பரந்து கிடக்கும் கடற்கரை பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கடற்கரை நுழைவில் பெரிய வரவேற்பு வளைவு ஒன்று நம்மை வரவேற்று நிற்கிறது.

அதைக் கண்டதும் மிகவும் நன்றாக பராமரிக்க பட்டு வரும் கடற்பகுதி என்பதை நம்மால் உணர முடிகிறது. உள்ளே நுழைந்ததும் பரவசமூட்டும் பெருங்கடல் நமக்கு காட்சி அளிக்கிறது.

முந்தைய நிலை
10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமர்வதற்கும், இன்ப பொழுதுபோக்கும் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடந்து செல்லும்போது பாங்குடன் காட்சி தரும் பச்சை புல்வெளிகள், பளபளக்கும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட அமர்வுகள், குடை வடிவில் வடிவமைக்க பட்ட சிமெண்டு ஒதுங்குமிடங்கள், பல வண்ணம் தீட்டப்பட்ட ஊஞ்சல்கள், சறுக்கு பலகைகள் நம் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன.

அங்குள்ள மூன்று நீர் ஊற்றுக்கள், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பச்சை மண் குன்றுகள், அதன் மேல் அமர்ந்திருக்கும் பறவைகள் நம் கண்களுக்கும், கருத்துக்கும் கிளுகிளுப்பு ஊட்டுகின்றன இந்த அழகிய சுற்றுப்புற தோற்றம். இவை அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு வரைதான். ஆனால் தற்போது கடற்கரை களைஇழந்து, பொலிவற்று பாலைவனம் போன்று காட்சி அளிக்கிறது.

கடற்கரைக்கு மெயின் பஜாரில் இருந்து செல்லும் சாலைக்கு கஸ்டம்ஸ் சாலை என்றும், கடற்கரைக்கு சுங்கத்துறை என்றும் பெயர் உள்ளது. விசாலமான கடற்கரைக்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் காயல்பட்டினம் மக்கம் மட்டுமின்றி பக்கத்து நகர்களாக ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், நாசரேத், திருச்செந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் கடற்கரை விழாக்கோலம் போல் காட்சி அளிக்கும். தினமும் மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் வந்து அமர்ந்து செல்கின்றனர்.

இந்த இயற்கையான கடற்கரையில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி ரூ.30 லட்சம் செலவில் சுற்றுலாத்துறை புதுப்பித்து பொழுதுபோக்கு வசதிகள், நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி ஓய்வு அறை, குடிநீர் தொட்டி, ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, செயற்கை நீருற்று இவைகளுடன், அன்றைய அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். ஆனால் அதன் பின் இன்று வரை எந்தவித பராமரிப்பும் இன்றி கடற்கரை பொலிவு இழந்து காணப்படுகிறது.

சிறுவர், விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், குடிநீர் தொட்டி பயனற்றும், கழிவறை கதவு கூட இல்லாமலும், செயற்கை நீருற்று சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் சாக்கடைகுளம் போல் உள்ளது.

களை இழந்த கடற்கரை
எவ்வித பராமரிப்பும் செய்யாததால் களை இழந்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தொட்டி இருந்தும் குடிநீர் இல்லை. கழிப்பறைகள் பெயரளவில் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை. கடற்கரை நடைபாதை இருந்த சுவர் தெரியாமல் போய்விட்டது. கடற்கரையில் முன்பு அமைக்கப்பட்ட செயற்கை நீருற்று குப்பை கொட்டும் களமாக மாறிவிட்டது. இதுபோன்ற குறைகளால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக கடற்கரை பயனாளிகள் சங்க துணை செயலாளர் எஸ்.கே.சாலிகிடம் கேட்டபோது, கடற்கரையை அழகுபடுத்துவது என்ற பெயரில் தேவையற்ற கட்டிடங்களைக் கட்டாமல், இயற்கையான கடற்கரையை விரிவுபடுத்தி, மக்கள் மாலை வேளையில் அமர்ந்து சுகாதாரமான இயற்கைக் காற்றை சுவாசிக்க தேவையான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் காரியங்களை செய்வதற்காக கடற்கரை பயனாளிகள் சங்கம் செயல்படுகிறது. இதன் தலைவராக ஓ.ஏ.நஸீர் அகமது, செயலாளராக எல்.எம்.இ.கைலானி, துணை செயலாளராக எஸ்.கே.சாலிஹ், துணை தலைவராக எம்.ஜெ.செய்யது இபுராகிம், பொருளாளராக ஏ.தர்வீஸ் முகமது மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

நிறைவேற்ற வேண்டிய பணிகள்
இந்த அமைப்பு சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை காயல்பட்டினம் நகரசபை மூலமாக தமிழக சுற்றுலாத் துறையை கேட்டுக் கொள்ளும் கோரிக்கை மனுவை நகரசபை தலைவியிடம் நிர்வாகிகள் ஏற்கனவே கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

* கடற்கரைக்கு வருபவர்களின் வாகனங்கம் நிறுத்த தனியிட வசதி.

* கடற்கரையை ஆண், பெண், குடும்பம், விளையாட்டு பகுதி என 4 பிரிவுகளாக பிரித்து அமைத்து அதற்கான வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்.

* மாலை நேரங்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு வழிகாட்ட ஆர்வலர்கள் நியமிக்க வேண்டும்.

* கடற்கரையின் தெற்கு, வடக்கு பகுதிகளில் முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை பகுதி முழுவதும் எங்கு இருந்து பார்த்தாலும் மணல்பரப்பு தெரியும் வகையில் சுத்தப்படுத்தி அகலப்படுத்த வேண்டும்.

* ஆண், பெண் கழிவறைகள் சீரமைக்க வேண்டும்.

* கடற்கரையில் குப்பை கூளங்கள் சேராத வண்ணம் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.

* தேவையற்ற வகையில் அமைந்துள்ள தடாகத்தை அகற்ற வேண்டும்.

* கடற்கரையில் தெற்கு, வடக்கு பகுதிகளிலும் ஒளி மின்விளக்குகள், டவர் அமைக்க வேண்டும்.

* குப்பைகள் போடுவதற்கு என்று குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

* நகரசபையின் அனுமதியுடனே கடைகள் வைக்க வேண்டும்.


இவற்றில் கூறப்பட்டு உள்ளவற்றை அரசு சுற்றுலாத்துறை, நகரசபை ஆகியவை தங்களுக்கு முடிந்ததை செய்து தரவும், முடியாதவற்றை செய்வதற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்துக்கு அனுமதி அளித்தால் தனியார் நிறுவனம், செல்வந்தர்கள் உதவியுடன் செய்ய முடியும் என்று மனுவில் கூறி உள்ளனர்.

கடற்கரையை துப்புரவு செய்ய, மெரினா கடற்கரையில் உள்ளது போல் தானியங்கி குப்பை அகற்றும் வாகனம் மற்றும் நுழைவு வாயிலில் மணிகூண்டு அமைக்க வேண்டும்.

இதுதொடர்பாக நகரசபை தலைவி ஐ.ஆபீதாவிடம் கேட்டபோது, "கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் விரிவுபடுத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். இதற்காக கடற்கரை பயனாளிகள் சங்கமும் முயற்சி செய்து வருகிறது. நகரின் பொது நல அமைப்புகள் மற்றும் நகர பிரமுகர்களின் ஆலோசனைகளை அறிந்து கடற்கரை விரிவுபடுத்தப்படும். சுகாதாரம், பாதுகாப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் இவைகள் அமைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடற்கரையை அரசு சுற்றுலாத்துறை மூலம் விரிவுபடுத்த தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி விரிவுபடுத்தும்போது பொதுமக்கம் தன்னார்வ தொண்டு நிறுவனம், கடற்கரை பயனாளிகள் சங்கம் ஆகியவற்றைக் கலந்து பேசி விரிவாக்கம் செய்யப்படும்'' என்று நகரசபை தலைவர் கூறினார்.

சென்னை மெரினாவுக்கு பிறகு அழகான கடற்கரை என பெயர் பெற்று உள்ள காயல்பட்டினம் கடற்கரை தற்போது உள்ள கோலம் மாற அரசும், அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.


இவ்வாறு, தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில், எட்டாம் பக்கத்தில் உள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சாளை அப்துல் காதர்,
ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16123

நன்றி. காலையில் படித்துவிட்டு உடனே மருமகன் S.K.SALIH அவர்களுடன் தொடர்பு கொண்டு சொன்னேன் தலைப்பு செய்தியாக இதை வெளியிட்டதற்கு நன்றி.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் மக்கள் குறை கேட்கும் நாளில் இந்த செய்தியை முக்கிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய செய்தியாக KAYALPATNAM BEACH USERS ASSOCIATION உறுப்பினார்கள் நகரமன்ற தலைவியிடம் எடுத்துரைக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

தக்க சமயத்தில் தின தந்தி இன்று அந்த செய்தியை வெளியிட்டதற்கு அதன் நிருபருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கி NOOHUTHAMBI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by Zainul Abdeen (Dubai) [23 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16125

நமதூர் கடற்கரை பற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன்னால் தினமலர்.com இணையத்தளத்தில் வெளி வந்ததை இங்கு சொடுக்கிட்டு காணலாம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=250651

இது எவ்வளவு பெரிய ஆபத்தை நம்ம ஊருக்கு கொண்டு வர முற்படுகிறார்கள் என்று புரிபவர்களுக்கு புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by koman babu (India) [23 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16126

ஜனாப் ஜைனுதீன் சொன்னது போலே விஷம் தினமலர் எந்த அளகு எண்ணெய் உற்ற முடியுமோ அந்த அளகு உற்றிவிட்டான். இதை நம் மக்கள் யாவரும் அனுமதிக்க கூடாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by HABEEB MOHAMED (DUBAI) [23 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16127

MR. ABDEEN KAKA மேலே குறிபிட்டுள்ள தின மலர் ''WEBSITE LINK'' படித்து பார்த்தல் அவர்களின் சூழ்ச்சி கண்டிப்பாக புரியும் நபர்களுக்கு புரியும் ...

அவர்களின்( RSS) வார்த்தைகள் '' SLOW POISON'' போன்றுதான் இருக்கிறது ...அதில் ஒரு வார்த்தைகளை கவனிக்க வேண்டுகிறேன்..தின மலரில் குற்பிட்ட வார்த்தை என்னவென்றால் ( வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காயல்பட்டணத்தில் ஒரு அழகான கடற்கரை இருப்பதை தெரிந்துகொள்ளும் விதமாக பெரிய அளவில் விளம்பர போர்டுகள் வைக்கப்படவேண்டும். இதனால் காயல்பட்டணம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.இதைப்போல் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் அனைத்து விடுதிகள் மற்றும் தனியார் லாட்ஜ்களில் காயல்பட்டணம் கடற்கரை குறித்து விளம்பரபடங்கள் வைக்கவேண்டும். இதனால் திருச்செந்தூரில் ஒரு நாளுக்கு மேல் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த 15 நிமிடத்தில் காயல்பட்டணம் கடற்கரைக்கு வந்து பொழுதை கழிக்க வாய்ப்புண்டு. வருமானம் கொட்டும்:)

மேற்கொண்ட தின மலரின் மூலம் வெளியிட்ட செய்தியின் மூலம் புரியும் அவர்களின் சூழ்ச்சி என்ன வென்று ..அப்போதுதான் கோவிலுக்கு வரும் சாமியார்களும் , பக்தர்களும் காயல் நகர்க்கு வந்து அஸ்தி கரைகிறேன், விசேச பூஜை செய்கிறேன் என்று மயான இடமாக அவர்களின்(RSS) எண்ணம் படி அமைத்து விடும் ..எனவே

காயல் நகரை அழகு படுதிகிறேன் என்று ஊரை வீனாகாதிர்கள் ...நகரின் ஒரு சில PHOTO பிரியர்கள் இது போன்ற வீணான விசயங்களில் துணை போகாமல் சரியான தொலை நோக்கு பார்வையில் பிரச்சனைகளை கையாளுங்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by ஹாஜி (Riyadh) [23 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16130

எந்த அடிப்படை வசதியும் தேவை இல்லை ,

தேவைஇல்லாமல் அடிப்படை வசதி செய்ய நினைத்து கலாச்சாரத்தை கெடுக்க நினைத்தால் ஒன்றுபட்டு ஒற்றுமையாக நின்று எதிர்போம், ஒருபோலும் இதை அனுமதிக்கமாட்டோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by ishak ibnu nahvi (abudhabi) [23 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16132

எந்த அடிப்படை வசதியும் தேவை இல்லை முதலில் அந்த சிங்க சி லையை உடைத்து போடுங்கள் ஊருக்குள் ஏருப்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

பெண்கள் கடற்கரைக்கு செல்லுவது நல்லது அல்ல அதை முதலில் தடுக்கநும் அழகு என்று சொல்லி ஊரின் பெருமையை பரி கொடுத்து விட்டோம் இனி நாம் கடற்கரை அழகு படுத்துவதை அனுமதிக்க கூடாது. ஊரின் பெருமையை நிலை நாட்டுவோம்.

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by M.Sulthan (Sudan) [23 January 2012]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 16134

எந்த ஒரு மாற்றமும் தேவை இல்லை... இருக்கிற மாதிரி இருந்தாலே நல்லது... கடற்கரையை அழகு படுத்தினால் நமது ஊர் கலாச்சாரம் கெடும்... ஊரின் பாரம்பரிய கலாச்சாரத்தை காத்துப் பேணுவது ஒவ்வொரு காயலரின் கடமை... சகோ: இப்னு நஹ்வி சொன்னதை போல அந்த சிங்க சிலையை முதல்ல அப்புற படுத்துங்க..

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [23 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16137

ஒரு முக்கியமான, சுருக்கமான. எல்லா செய்திகளுக்கும் தேவையான, எலா கமன்ஸ்களுக்கும் அவசியமான, அதி அவசரமான குறிப்பு என்னவென்றால்.?

எந்தக் காரியத்தை, எந்த நேரத்தில், எப்படிச் செய்தால் , அல்லாஹ் பொருந்துவானோ. கண்மனியான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சந்தோஷப் படுவார்களோ அந்தக் காரியத்தை தேடி அறிந்து செய்வதுதான் ஒரு முஸ்லிமுக்கும் முஃமினுக்கு இம்மையிலும். முக்கியமாக மறுமையிலும் வெற்றியை தேடித்தரும்.

இதற்கான செயல்முறைகளை எங்கு தெரிவது? சம்மந்தப்பட்டவர்களுடன் முறையான மஷூறா செய்வது முதல் படி, இரண்டாவது படி முறையாக இஸ்திஃகாறா தொழுவது, அதன் படி செயல்படுவது. மற்றவைகளை அல்லாஹ்வே வெற்றி கிட்டும் அளவுக்கு நமக்கு அறிவித்து உதவியும் செய்வான்.

அவைகள் யாவும் நம்மில் இன்றும் கூட கடை பிடித்து அணுபவித்து வருவது கண்கூடு. அல்லாஅஹ் தவ்ஃபீக்க் செய்வானாக, ஆமீன்.

தைக்கா றஹ்மத்துல்லாஹ்,
ஃபோன் 280852=காயல்பட்ணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by seyed (ksa) [23 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16138

கடற்கரை ஏற்கனவே அழகு படுத்த்கிரோன் என்று அழுக்ககியாச்சு. இனி என்ன வேண்டி கிடக்கு? நண்பர் நஹ்வி சொன்னதுபோல், கலாச்சாரத்தை கெடுக்க இது போன்று அழகு என்ற மாயை வேணாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நிர்வாகமே! தங்களின் கவனம் உள்ளூர்மக்களின் எதிர்பார்ப்புக்கும் உணர்வூகளுக்கும் மட்டும் தான்!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16140

அஸ்ஸலாமு அழைக்கும்.

நிர்வாகம்,பொது சங்கங்கள், மற்றும் அனைத்து மீடியாகலே! தங்களின் கவனமும் கவலைகளும் இந்த காயல் மாநகரின் கலாசாரத்திற்கும்,கட்டுபாட்டிற்கும், பங்கம் விளைவிக்காத வண்ணம் கலை என்பதைவிட சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம், இருக்கும் அம்சங்களை தகுந்த முறைபடுதினாலே போதுமானது. சுகாதாரத்துறை தரும் நிதிக்காகவோ, சுற்றுலா தளமாக ஆக்கி வருமானதிர்க்ககவோ மிக முக்கியமானவைகளை தவிர எந்த நடவடிக்கைகளும் அவசியம் இல்லை இந்த காயலுக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அலை இழக்கும் நாள்வரை களையிழக்காது எங்கள் கடற்க்கரை.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [23 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16141

அஸ்ஸலாமு அலைக்கும். என் காயல் கண்மணிகளே...... இயற்க்கைக்கு போட்டி போட்டு செயற்கையை புகுத்தி....... அழகுக்கு அழகூட்டும் மேக்கப்பை போல கடற்கரையை மேக்கப் பண்ணி பல ஆயிரம்கள் அதன் பெயரில் கொள்ளை அடித்துவிட்டு இப்பொழுது மேக்கப் களைந்ததால்..... ஆதிக்க சக்திகளின் பிளான்களுக்கு தொய்வு ஏற்ப்படுவதால் பத்திரம்களில் விளம்பரம் படுத்தும் வன்னம் செயலில் இரங்கி இருக்கிறார்கள். இதில் அக்கறை உள்ள பத்திரம்களுக்கு நம் காயலில் பக்கத்து ஆலையால் ஏற்ப்படும் கொடிய நோய் புற்றுக்கு முற்றுவைக்க விளம்பரப்படுத்தாதது ஏன்? காயலின் கண்ணியத்தை குறைக்க தொலை நோக்கு பார்வையில் மூக்கை நுழைக்கின்றன. ஒரு போதும் நம் நகர்மன்றம் அனுமதிக்ககூடாது. கடற்கரையை சுத்தப்படுத்துவதும், நகர்மன்ற அனுமதியுடன் கடைகளை ஆர்ச்சுக்கு வெளியில் அமைத்து.... கடற்கரையை சுத்தமாக வைத்தாலே.... அலை இழக்கும் நாள்வரை களையிழக்காது எங்கள் கடற்க்கரை.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:“சென்றுபாருங்கள் உண்மை புரியும்!!!
posted by OMER ANAS (DOHA QATAR) [23 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16143

காயல் கடற்க்கரை எப்படி அமைந்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும்,இரவு 11 மணிக்கு மேலும், காலை 7 மணிக்கு முன்பும், வீணான தேடல்களை விட்டு விட்டு சென்று பாருங்கள் உண்மை புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by syedahmed (GZ, China) [23 January 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 16144

முதலில் தொழுகை பண்ண அழகான் இடவசதி அமைக்க வழி சொல்லுங்கள்.. மற்ற ஆடம்பர சொகுசு நமது ஊருக்கு அவசியமில்லாத் ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்று (தற்போது) தீய பழக்கமுடையவர்களின் போதை பொருள் அருந்தும் மையமாக காட்சி அளிக்கிறது...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [23 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16145

களை இருந்து காணப்பட்ட கடற்கரையில் நமதூரின் கண்ணியம் கட்டுப்பாடு காணமல் போனது... இப்போது களையிழந்த கடற்கரை இரவு நேரம் அங்கு கயவர்களின் கூடாரமாக காணபடுகிறது.. குடை வடிவில் வடிவமைக்க கூடாரம் இன்று (தற்போது) தீய பழக்கமுடையவர்களின் போதை பொருள் அருந்தும் மையமாக காட்சி அளிக்கிறது...

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்று சும்மா பெயரளவில் சொல்ல கூடிய பல துறைகளும் இதில் அக்கறை எடுத்து தீய பழக்கமுடையவர்களை தண்டிபதாக தெரியவில்லை...

வாழ்க இந்தியா.. வளர்க தமிழகம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by SMSMD.LABBAI MFB (qatar) [23 January 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 16146

அன்பின் காயல் நண்பர்களே நம் கடற்கரை நன்றாகவே உள்ளது. மேலும் அழகூட்ட நினைத்தால் நம்கலாச்சாரம சீரழிய வாய்ப்பு உள்ளது.

எனவே நாளிதழ்கள் பலதும் சொல்லும். நாம் நல்ல முறையில் யோசனை செய்து ஊரின்பேரை காப்பாற்ற முயற்சி செய்வோமாக. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16151

மக்கள் மனங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்ட நிகழ்சிகள் எரிமலைகளாய் வெடித்திருப்பதை இந்த இணையத்தளத்தில் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிகிறது.

என்னதான் காற்று வாங்க எல்லோரும் கடற்கரைக்கு போனாலும் அங்கு நடக்கின்ற அசம்பாவிதங்களை உள்வாங்கிக்கொண்டு வேதனயுடந்தான் இருந்திருக்கிறார்கள்.ஒரு கவிஞர் நமதூர் கடற்கரையை பற்றி இப்படி எழுதினார். "இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும், அலைகளின் வாயும் ஹதீஸ்கள் பேசும்".தொழுகை இபாதத் பிணக்குகளை சுமுகமாக தீர்த்து வைக்கும் பெரியவர்கள் கூட்டம் எல்லாம் ஒரு காலத்தில் நமது கடற்கரையில் நடந்திருக்கிறது. இப்போது கூட மக்ரிப் தொழுகை நேரம் எல்லோரும் எழுந்து தொழுக வந்தால் மாற்று மதத்தினர்கள் அசந்துபோவர்கள்,கொஞ்சம் யோசிக்க ஆரம்பிப்பார்கள். KAYALPATNAM BEACH USERS ASSOCIATION தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் நிலைமைகளை சீர் செய்யலாம்.எல்லா தெரு, முஹல்லா வாசிகள், சங்கங்கள், பள்ளிவாசல்கள், அரசியல் கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக இது இருந்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக.

நாளை மறுநாள் நகரமன்ற தலைவி அறிவித்துள்ள மக்கள் குறை கேட்கும் நாளில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக நமதூர் கடற்கரை விஷயத்தை, இன்று மக்கள் பதிவு செய்துள்ள உணர்வுகளை, தினத்தந்தி வெளிப்படுத்தியுள்ள ஆதங்கங்களை, தினமலர் வெளிப்படுத்தியுள்ள துவேஷ மனப்பான்மைகளை நன்கு பரிசீலனைக்கு எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.மனதுக்கு இதமும் நிம்மதியும் தரக்கூடிய நமது கடற்கரை அமைய இறைவன் அருள்புரிவானாக. தீய சக்திகள் தலையெடுத்து விடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [23 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16154

குடை வடிவில் வடிவமைக்க கூடாரம் இன்று (தற்போது) தீய பழக்கமுடையவர்களின் போதை பொருள் அருந்தும் மையமாக காட்சி அளிக்கிறது...

I AGREE WITH Br. MUTHU ISMAIL'S COMMENT. JUST LAST WEEK, SEVEN KIDS / TEENAGERS WERE DETAINED BY THE POLICE FOR THIS ABOMINAL ACTS, THOUGH IT HAPPENED NEAR EEKKI APPA THAIKA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by Vilack SMA (Kayalpatnam) [24 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16160

தினமலர் செய்தியை நானும் பார்த்தேன் . அப்படி ஒன்றும் அதில் விசமத்தனம் இருப்பதாக தோன்றவில்லை .

கலாசாரம் , கட்டுப்பாடு என்று பேசுபவர்களுக்கு , என் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியை இங்கே தருகிறேன். சில வாரங்களுக்கு முன் , பஜாரில் இருக்கும் " அரசர் பேக்கரி " இல் , நமதூரை சேர்ந்த இளம் பெண்கள் , அங்குள்ள Dining Table இல் அமர்ந்து Pizza சாப்பிட்டதை கண்டிருக்கிறார் . எங்கே போயிற்று கலாசாரம் , கட்டுப்பாடு ?

தற்போது நமதூரின் கடற்கரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது உண்மைதான். எங்கு பார்த்தாலும் குப்பை , கூளங்கள் . சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லை . நகராட்சியின் கடுமையான கட்டுப்பாடுகள் மூலமும் , தன்னார்வ தொண்டர்கள் மூலமும் இதை நிச்சயம் சரி செய்யலாம் .

கடற்கரையில் பெருகி வரும் ஜனத்தொகையில் , தற்போது அதிமுக்கியமானது கழிப்பிட வசதி . நகராட்சி , இதில் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் , சேவை மனதுடன் செயல்பட்டால் , அனைவருக்கும் உதவியாய் இருக்கும் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by T,M,RAHMATHHULLAH (72) (Kayalpatnam) [24 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16162

எல்லாம் நூற்றுக்கு நூறு ஓக்கே தான். அல்ஹம்துலில்லாஹ் . மேலும் இன்னுm ஒரேஒரு பாய்ண்ட். அதாவது இஸ்லாமிய பெண்களின் :” ம ஆமலாத் “ என்னும் வாழ்க்கை முறையையும் ப்ரிண்ட் செய்து கடற்கரை உள்பட ஊர் பூறா விநியோகித்தும், சந்தி சந்தியாய் டிகிட்டல் போர்டுகள் வைத்தும் மக்களுக்கு ஞாபகம் ஊட்டிக்கொண்டே இருக்கனும், இதில் முக்கியமாய் ,விழாக்கள் நட்த்தும் விவேகிகளும், உபதேசம் செய்யும் உலமாக்களும் கட்டயமாய் பங் கெடு(க்காமல)த்து நடத்தவும் வேண்டும். இதற்க்கு முக்கியமாய் முறையான மஷூறா வேண்டும். அத்துடன் கீழ்கானும் ஆயத்தைக் கூறிய அல்லாஹ்வையும் ற்சூலையும் மறக்காமல் இருக்கவும் வேண்டும். அதாவது:_

33:33 وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

33:34 وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
33:34. மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.

33:35 إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

அல்லாஅஹும்மங் ஃபிற் லனா வற் ஹம்னா பி றஹ்மத்திக்க யா அற்ஹமர்றாஹிமீன். ஆமீன்.

தைக்கா றஹ்மத்துல்லாஹ்.
24-1-2012 வியா.29=2-1433.
காயல்பட்டனம்.
Visit.www.aroosuljannah.8m.com

Moderator: செய்தி வாசகங்களை கருத்தாளர் மீண்டும் தன் கருத்தில் முழுமையாக copy paste செய்துள்ளதால் அவை மட்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. களையிழந்து காணப்படும் கா...
posted by hasbullah mackie (dubai) [24 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16169

காயல் கடற்கரையில் என்ன செய்கிறார்கள் தற்போதைய நடைமுறையில் ? கால்பந்து விளையாடும் கூடமாக ஆகி விட்டதே? மக்ரிப் பாங்கு சொல்லும்போது கூட பேசி கொண்டி ருக்கிரார்கள். விளையாடுகின்றார்கள்... ஆண்களும், பெண்களும் family என்ற போர்வையில் வெட்கப்படவேண்டிய ஆண்களும், பெண்களும் ஒரே குழுவில் உட்கார்ந்து பேசுகிறார்கள்....

என்ன மார்க்கம் ஊரில் கடை பிடிக்கபடுகின்றது....

முன்னரெல்லாம் பெரியவர்கள் சொல் எடுக்கப்பட்டது... இப்போது ஈடுபட்டு விட்டது என்றே சொல்லலாம்....

மக்ரிப் தொழுகாமல் எதனை பேர் இஷா தொழுகையுடன் சேர்த்து தொழுகிறார்கள்....

சில நபர்கள் கடற்கரைக்கு இஷா தொழுகைக்கு மேல் போயி நேரத்தை கழித்து விட்டு சுபுஹு தொழுகையை லுஹருடன் சேர்த்து தொழுகிறார்கள்.....

சிலர் காதல் என்ற பெயரில் இரவை கடற்கடையில் பயன்படுத்துகிறார்கள்...இந்த மாதிரியான சீரழிவுகளுக்கு தடை ஏற்படுத்த வில்லை என்றால் அல்லாஹுவின் கோபப் பார்வை வந்தால் ......சற்று சிந்தியுங்கள்...

அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் சீரழிவுகளுக்கு இடம் கொடுக்கிறோம் என்பது தான் உண்மை...

இரவில் கடற்கரை செல்வதை அனுமதிக்காமல் நகராட்சி கட்டுபடுத்த வேண்டும்... ஒரு குறிப்பிட்ட வரையறை வைக்க வேண்டும்...

சுகாதாரமில்லாத வியாபாரங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.....

கடற்கரையை அழகு படுத்துகிறோம் என்று சொல்லி மாற்று மத சகோதரர்களின் விபசார கூடமாக ஆகி விடாமல் நம்ம ஊரையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்

சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்....

கடற்கரை பயனாளிகள் சங்கம் இது விஷயத்தில் முழுமையான உறுதியுடன் இறங்கி தீய விஷயங்கள் நடை பெறுவதை தடுக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டு கொள்கிறேன்...

அல்லாஹுவின் கோபத்தை விட்டும், சைத்தானின் கெடுதியை விட்டும் அல்லாஹு நம்மை காப்பாற்றுவானாக .. ஆமீன்

ஹஸ்புல்லாஹ் மக்கி.. துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. முள்ளாலே..... முள்ளு எடுக்க படவேண்டும்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [24 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16170

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு காயல் சகோதரர்களே..... நம் ஊரின் கண்ணியத்தை குறைக்க எப்பேற்பட்டவர்கள் சூழ்ச்சி செய்தாலும் நம்மில் மார்க்கப்பற்றும், ஒற்றுமையும் உறுதியாக, இருக்கும் வரை எவராலும் ஒன்றும் செய்திட முடியாது.

மேலும்.... இறைவன் அவர்களுக்கு மட்டும் (தினமலர்) புத்தி கூர்மையை கொடுக்க வில்லை என்பதை சுய பரிசோதனை பண்ணிக்கொள்ளட்டும். காயல்பட்டினத்தை பொழுது போக்கும் நகரமாக மாற்றும் திட்டம் இருக்குமேயானால்........ முள்ளாலே முள்ளை எடுக்கப்படவேண்டும். சி கஸ்டம்ஸ் ரோட்டில் சனி, ஞாயிறு தினம்களில் மாற்று மத நண்பர்களை சத்திய மார்க்கத்தை அறிந்து கொள்ளும் வன்னம் நோட்டீசும், டிஜிட்டல் பேனர்களும், மாற்று மத நண்பர்கள் சந்தேகம்களை களைய இரண்டு, மூன்று இடம்களில் கடற்க்கரை வரை உபதேச கூடாரம் அமைக்கவும் முயச்சிக்கணும். அப்படி செய்தால் காயலுக்கு கண்ணியத்திலும், கண்ணியமும். இறைவனிடத்தில் புண்ணியத்திலும், புண்ணியமும் கிடைக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by I.B.S.SINTHA MATHAR (KAYAL KAVIYARUVI) (chenneai) [24 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16173

ஸலாம் , ஊரின் கண்ணியத்தையும் , கலாச்சாரத்தையும் கெடுத்து , ஊரை பாழ்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்கள் அப்போது ஆதரவளியுங்கள் கடற்கரை அழகுபடுத்துவதற்கு!!!!!!!!!

கடற்கரை அழகுபடுத்தப்பட்ட கடந்த காலங்களில் கண்ட அசிகங்களையும், அவலங்களையும் இனியும் கண்டு கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவரா நீங்கள் அப்போது ஆதரவளியுங்கள் கடற்கரை அழகுபடுத்துவதட்கு!!!!!!

மெரீனா பீச் போல எங்கள் கடற்கரை உள்ளதால் அதைப் போன்று வசதிகள் வேண்டும் என்று ஆசைப்படுபவரா நீங்கள் அப்போது அங்கே காணப்படுகின்ற ஆணும், பெண்ணும் கலந்து கிடக்கின்ற கலாசார சீரழிவுக்கும் உங்கள் ஆதரவு உண்டுதானே!!!!!

கடற்கரை அழகுபடுத்தி பக்கத்து ஊர்மக்களை எல்லாம் வரவழைத்து, அதனோடு பிரச்சனைகளையும் வரவழைத்து சந்தோசம் காண வேண்டும் என்று ஆசைபடுபவர்களா நீங்கள், அப்போது கண்டிப்பாக கடற்கரை அழகுபடுத்தப் படவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by Muzammil (Dubai) [24 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16176

Assalamu Alaikkum

Yes i agree with Brother Hasbullah Mackie's comments. We have to take care of our Islamic Cultural activities and to avoid other bad things in future. May Almighty Allah show his mercy to all of us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by Noohu Sahib (Dubai) [24 January 2012]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16183

காயல் கடற்கரை அழகு படுத்துவது வீணான முயற்சி இதனால் சீர் அழிவுகளும் வேண்டாத விளைவுகளுமே ஏற்படும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by sulaiman (abudhabi) [24 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16186

அஸ்ஸலாமு அழைக்கும், 1999 நமது ஊரு கடற்கரை எப்படி இருந்ததோ அந்த நம்முடைய கடற்கரை நமக்கு மீண்டும் வேண்டும்."ஆடு நினைதுன்னு ஓநாய் கவலைபடுதாம்" எங்களுக்கு ஒரு புதுபிப்பும் வேண்டாம்.நாங்கள் எங்கள் இஸ்லாமிய ஒழுக்க கலாச்சாரத்துடன் எங்கள் ஊரு கடற்கரையை பாதுகாப்போம்.இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved