Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:27:15 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7931
#KOTW7931
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 28, 2012
பாம்பன் பாலத்தைப் போன்ற வலிமை! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3757 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.

அதனடிப்படையில், ஜன.25 அன்று நடத்தப்பட்ட மக்கள் குறைதீர் முகாமின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குறைதீர் விண்ணப்பங்களில், ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டிய குறைகள் குறித்த ஆய்வுப் பணி நேற்று துவங்கியது.

நகரில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலைகளின் தரத்தை சந்தேகித்தும் அம்முகாமின்போது பொதுமக்களால் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, காயல்பட்டினம் சித்தன் தெரு மற்றும் நெய்னார் தெருக்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா நேரில் பார்வையிட்டார். அவருடன், நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆய்வுப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவ்விடத்திற்கு நேரில் வந்த - சிறிய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் அளித்தவர்கள், மக்கள் நலனைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தான் பொருள் சம்பாதித்தால் போதும் என்ற ரீதியிலேயே இச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.



சித்தன் தெருவிலும், நெய்னார் தெருவிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னரே ஓரக்கல் அமைக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அச்சாலையை இன்று வரை தரை மட்டத்துடன் சமப்படுத்தாமல் காலந்தாழ்த்தி வருவதால், ஏராளமானோர் கீழே விழுந்து எலும்பு முறிவுகளைச் சந்திப்பதாகவும் தெரிவித்த அவர்கள், எல்லோரையும் பரலோகம் அனுப்பிய பின்னர்தான் இச்சாலைகள் சரிசெய்யப்படுமா என்று கேள்வியெழுப்பினர்.



சிமெண்ட் சாலைகள் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட அளவில் முறையாக கலவைகள் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், அடுத்து ஒரு பருவமழையை சந்தித்தால், இச்சாலைகள் எல்லோரும் பார்க்கும் வகையில் பல்லிளிக்கும் என்றும் தெரிவித்தனர்.



ஒப்பந்தக்காரரிடம் வெறுமனே ஒப்பந்தத்தை வழங்கிவிட்டு, சாலையமைப்புப் பணிகள் எதையுமே நகராட்சி அதிகாரிகள் முழுமையாக நேரில் நின்று பார்வையிடவில்லை என அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பின்னர், நெய்னார் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்ட கற்கள் மீது பொதுமக்களில் ஒருவர் குறைந்த அழுத்தத்துடன் கால் வைத்துக் காண்பிக்க, அது வெறுமனே அடுக்கி வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் போல் பெயர்ந்து வந்தது.





அதனைத் தொடர்ந்து, அக்கற்களில் ஒன்றைக் கையில் எடுத்து அவர்கள் நசுக்க, அது பொடிப்பொடியாகப் பெயர்ந்து, வெறும் மணலாக கீழே விழுந்தது.



இதுதான் சாலை மற்றும் சாலையோரப் பணிகளின் தரம் என்று அப்போது அவர்கள் நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒப்பந்தக்காரரிடம் விளக்கம் கேட்குமாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விசாரிக்கப்பட்டபோது, கலவைகள் அனைத்தும் சரியான அளவிலேயே போடப்பட்டதாகவும், போதிய பணியாட்கள் இல்லாத காரணத்தால், சிமெண்ட் சாலையோரங்களை தரையுடன் சமப்படுத்த காலதாமதமாகிவிட்டதாகவும் தெரிவித்ததாகத் தெரிகிறது.

அவர்களை எச்சரித்துப் பேசிய அதிகாரிகள், எஞ்சிய பணிகளை குறைவின்றி விரைந்து முடித்துத் தருமாறும், பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகவும், பணிகளில் குறைவேற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, அப்பகுதி பொதுமக்களான பி.எம்.ஏ.முஹ்யித்தீன், கல்ஃப் ட்ராவல்ஸ் செய்யித், அபுசாபு ஷாஹுல் ஹமீத், பிலால் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Future Kayal is in good hand
posted by Riyath (HongKong) [28 January 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 16302

This is a great milestone by taking right decision with analysis and people consideration. Believe that Kayal will be a model town If this kind of work continues.

Bilal machan is a stong man who broken brick in single touch :-). May god give more strength and healthy ever to him and all our people..

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by T,M,RAHMATHHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [28 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16303

இப்பத்தான் னநகரசபை வேலைகள் சூடு பிடித்தமாதிரி இருக்கிரது. அல்ஹம்துலில்லாஹ். இதுபோல் தொடர இறை அருள் செய்வானாக. இருந்தாலும் இரண்டொரு கண்ட்ராக்டர் மேல் டெமெரேஜ் வழக்குப்போட்டு நஷ்ட்ட ஈடு வாங்கினால் கனவிலும் கூட இப்படி செய்ய் மாட்டார்கள். மக்களும் நகர சபையோர்களை கனவிலும் நல்லபடி நினைப்பார்க்ள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by L.A.K.புஹாரி (Hong Kong) [28 January 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 16305

நமது நகரை சேர்ந்த & நகரிலேயே வாழும் பொறியாளர்கள் அல்லது திறமைமிக்க அனுபவமிக்க நபர்கள் ஒப்பந்தம் எடுத்தாலொழிய இந்த பிரச்சினை முற்றிலும் தீராது..

அந்த நபர் நமது நகரிலேயே வசிப்பதனால் மிகுந்த அக்கறையுடன் சாலைகள் ஏற்படுத்துவதுடன், பராமரிப்பிலும் கவனம் செலுத்துவர். அருகிலே இருப்பதனால் மக்கள் சந்திப்புக்கும் குறை தீர்க்கவும் முன் வருவர்.

நெடுஞ்சாலை துறையினரும் இது போன்ற சாலை பணி ஒப்பந்தங்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த தகுதியுடைய தனி நபர் / நிறுவனங்கள் /ஜமாத்தார் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தர முன் வந்தால்தான் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாற்போல் அமையும். அவ்வாறாயின், அரசு ஒதுக்கிய நிதியை கணக்கு காட்டுவதற்கு என்பது போலாகிவிடும்..

ஒரு முறை ஏற்படுத்தும் சாலைகள் பல ஆண்டுகளுக்கு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைத்தாலே போதும் அப்படியே படிப்படியாக நகரின் அனைத்து சாலை வசதிகளும் கட்டமைப்பு பெரும். நிதி ஆதாரங்கள் இன்ன பிற நல திட்டங்களுக்கு செவ்வனே திருப்பிவிடப்பட அத்திட்டங்களும் முழுமை பெரும். அதுவரையில் INFRASTRUCTURE முறையான வளர்ச்சி அடையாது. இதற்கென பிரத்தியேகமான ஒரு அமைப்பு துவங்கப்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நடவடிக்கை...தேவை.....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH) [28 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16306

கண்டிப்பாக இதில் சம்பந்தம் உள்ளவர்கள் மீது நகராட்சி நடவடிக்கை.... எடுக்க வேண்டும்.... தவறுகள்.... நடந்திருந்தால்..... தண்டிக்கப்படவேண்டும்..... லஞ்சம், ஊழல்... ஒழிக்கப்பட வேண்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வேலை எப்படி திணறாமல் இருக்கும்.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16308

நம் குறைகளை காது கொடுத்து கேட்கிறார்கள் என்றாலே ஒரு சந்தோசம் தான்.

அதுவே நேரடியாக களத்துக்கே வந்து நம் குறைகளை பார்வை இடுகிறார்கள் என்றால் மன நிம்மதியுடன் கூடிய சந்தோசம் தானே.

குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டால்..அப்பப்பா.. சொல்லவே தேவை இல்லை... இன்ஷா அல்லாஹ், குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

சகோ. L.A.K.புஹாரி காக்கா அவர்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளன, நடைமுறை படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். படுத்தனுமே.

இருக்கும் ஒப்பந்தக்காரர்களும் நன்றாக வேலைகளை செய்யக்கூடியவர்கள் தான்.. ஆனால் முடியாது...

ஏன் என்றால் ஒப்பந்தம் எடுத்த கனத்தில் இருந்து, கடைசி காசோலை பெறுவதுவரை கமிசன்.. கமிசன் என்று மாவட்டம், வட்டம், முதல் சதுரம், கோணம், அருங்க்கோணம் தொடர்ந்து அதிகாரிவரை பாய்ந்தது போக மிச்சம் இருப்பதில் அவரும் லாபம் பார்த்து, வேலை செய்வது என்பது, ஐயோ.. கமெண்ட்ஸ் அடிக்கவே தினறுதே...வேலை எப்படி திணறாமல் இருக்கும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முதலின் அந்த ஏரியாவாசிகள் சிமென்ட் ரோடு போடுவதற்கு அனுமதி அளித்து இருக்க கூடாது.. இது தான் முதல் தவறு...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [28 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16310

அவர்களை எச்சரித்துப் பேசிய அதிகாரிகள், எஞ்சிய பணிகளை குறைவின்றி விரைந்து முடித்துத் தருமாறும், பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகவும், பணிகளில் குறைவேற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றம் தெரிவித்தனர். COPY - PASTE

நடவடிக்கையா... ? யாரு மேல் நடவடிக்கை எடுக்க போறாரு...? ஒப்பந்தக்காரர் அதிகாரிகள் மற்றும் அந்த ஏரியா உறுப்பினர் இவர்கள் இருவர்கள் மேலும் ஒப்பந்தக்காரர் நடவடிக்கை எடுத்து விட போறாரு... கவனம்...! மக்கள் திருப்திக்காக அந்த பொது இடத்தில் ஆறுதலுக்காக நடவடிக்கை எடுக்கபடும்னு அதிகாரிகள் சொல்லி இருப்பார்...

கட்டிங் FILLING எல்லாம் முடித்து விட்டது.... புரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்... போங்க..

முதலின் அந்த ஏரியாவாசிகள் சிமென்ட் ரோடு போடுவதற்கு அனுமதி அளித்து இருக்க கூடாது.. இது தான் முதல் தவறு... இனி ரோடு எப்படி போனால் என்ன...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [28 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16312

எது வந்த போதிலும் உண்மையினை மட்டும் சுட்டிக்காட்டிய காயல் இணைய தளதம்பி S K ஸாலிஹ் உனக்கு எங்கள் பள்ளி சார்பாகவும்,உனது தெரு சார்பாகவும் நன்றி!

தம்பி நாம் இந்த காயலில் பிறந்ததற்கு அர்த்தம், நாம் நம் ஊருக்கான நல்ல செயலில் யாருக்கும் எப்போதும் வளைந்து கொடுக்கக் கூடாது!

அதை நான் முதல் எல்லோரும் புரிந்து கொண்டால், நிச்சயம் வளமான காயலை நாம் காண்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (காயல்பட்டணம்.) [28 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16314

சிமெண்ட் ரோடு போடுறதுன்னாலெ அவிங்களுக்கு(?) ஏன்? சர்க்கரை பொ௦ங்கல் சாப்பிடுற மாதிரின்னு இப்பத்தான் தெரிகின்றது! அரசல் புரசலா ரோட்டைப் போட்டு இப்ப ரோடு முழி பிதுங்கி நிற்கிறதெ பார்க்கும் போது மக்கள் பணம் பாழடிக்கப் பட்டுள்ளது பகிரங்கமாத் தெரியுதுங்கோய்...!!! இனியாவது அன்னை ஆபிதாவின் பார்வை கொஞ்சம் அலர்ட்டாகவே இருக்கட்டும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by PMA. MOHIADEEN (kayalpatnam) [28 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16319

அஸ்ஸலாமு அலைக்கும். தெளிவாக்வும், விளக்கமாகவும், செய்திகளை போட்ட sk ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி.

நகர்மன்றம் கான்ட்ராக்டர், பொறியாளர் இவர்கள் மீது கேஸ் போட்டால்தான் எவ்வளவு பணம் கொள்ளை அடித்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:பாம்பன் பாலத்தைப் போன்ற வ...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [28 January 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 16321

இதுக்கு அந்நியன்? தான்வரனும் வருவான் .....வருவான் காயலில் ஒரு அந்நியன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இவங்க ஸ்பீடு தான். நம்ம தான் லேட்டு.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [30 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16364

அரசு வேலைகள் என்றாலே ஆமை வேகத்தில் தான் நீங்கும்.

மலையாளத்தில் ஒரு பழமொழி கூட உண்டு:- "சர்க்காரு கார்யம் முற போல."

இங்கு என்னடான்னா புகார் கிடைத்த 45 மணி நேரத்தில் அதற்க்கான பரிகாரம் காண புறப்பட்டு விட்டார்கள் தலைவியும் அதிகாரிகளும். (நம்ம இணையதளத்தில் செய்தி வந்தது தான் கொஞ்சம் தாமதம், நம்ம ஊரின் பிற இணையதளத்தில் உடனேயே செய்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது) அல்ஹம்து லில்லாஹ், உண்மையிலேயே தலைவியின் இந்த செயல்கள் மிகவும் பாராட்ட தக்கது. இந்த செயல்கள் எப்போவும், எல்லா நல்ல விஷயங்களிலும் இருக்கவும், பொறாமைகாரர்களின் கண்ணு படாமலிருக்க பிரார்த்திப்போம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved