Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:55 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7933
#KOTW7933
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 29, 2012
தினமும் ஐந்தரை மணி நேரம் மின்தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3935 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மின் பற்றாக்குறை காரணமாக, தற்காலத்தில் காயல்பட்டினத்தில் தினமும் ஐந்தரை மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

தினமும் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும்,
மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரையிலும்,
இரவில் ஒன்றரை மணி நேரம் ஏதாவது ஒரு நேரத்திலும்
மின்தடை செய்யப்பட்டு வருவதாகவும், மொத்தத்தில் தினமும் ஐந்தரை மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருவதாகவும் - தினசரி மின்தடை நேர விபரம் குறித்து ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தினரிடம் வினவியபோது தெரிவிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [29 January 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 16325

மத்தியில் உள்ளவர்களும், மாநிலத்தில் உள்ளவர்களும் அடிக்கிற கொள்ளையை அடிக்காமல் இருந்து, மக்களின் வரி, வருமானங்களை பயன்படுத்தி, ஒழுங்கான, உருப்படியான திட்டங்களை தீட்டி, முறைப்படி செயல்பட்டால் இப்படியான சங்கடங்களை மக்கள் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH) [29 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16327

வாழ்க தமிழ்நாடு! வளர்க...அரசியல் பெரிச்சாளிகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by Mauroof (Dubai) [29 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16329

தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவையை சமாளிக்கும் வகையில் முத்துவேலர் கருணாநிதி தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில் போதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படாமல் போனதே காரணம்.

இக்குறையை தீர்ப்பதே ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் தலையாய பனியாக இருக்கும் என தனது தேர்தல் பரப்புரையிலேயே தெரிவித்திருந்தார்கள். அதை செயல்படுத்தும் விதமாக போதிய உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்காக போதிய நிதி தமிழக அரசிடம் இல்லை என்பதால் மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திட முடிவு செய்துள்ளது கழக ஆட்சி.

இந்த உயர்வும் போதுமானதன்று. மாறாக இருக்கவே இருக்கு உலக வங்கி கடன் தருவதற்கு. பொதுமக்களாகிய நீங்கள் இந்த விலையேற்றம் குறித்து அச்சப்பட தேவை இல்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலத்தை ஒப்பிடும்போது உயர்தப்படவிருக்கும் மின்சார கட்டணமோ அல்லது உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணமோ தமிழகத்தில் மிக குறைவே. எனவே கடந்த காலங்களில் தமிழக மக்கள் இது போன்ற ஒப்பீட்டு விலை ஏற்றங்களுக்கு விரும்பியோ விரும்பாலோ ஒத்துழைப்பு தந்தது போன்று தற்போதும் ஆதரவு தாருங்கள்.

உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு ஆட்சியை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த விலை ஏற்றம் குளிர்சாதன பெட்டி, காற்றுப் பதனி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி போன்ற சொகுசு உபகரணங்கள் பயன்படுத்துவோரை மட்டுமே சிறிது பாதிக்கும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. வாழ்க தமிழக மற்றும் அனைத்து பகுதி இந்திய மக்கள். வளர்க தமிழகம் மற்றும் அனைத்திந்திய அரசியல்வாதிகள் மற்றும் திருவாளர் பண(ஜன)நாயகம்.

இந்த கருத்து யாரையும் புண்படுத்தாது என நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by Zainul Abdeen (Dubai) [29 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16332

நம்ம ஊரில் ஒரே ஒரு வியாபாரம் நன்றாக போகுது என்றால் அது inverter business தான்.

விடுமுறைக்கு ஊருக்கு செல்ல யோசிக்க வைத்துவிடும் இந்த power cut problem ....

பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை

அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை

தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை

வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை

வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [29 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16335

எல்லாம் சகஜம் தான்.

நாம் தான் கற்காலத்திற்க்கு மாறிக்கொள்ளனும். பழைய அரிக்கேன் விளக்குகளை துடைத்து, திரி போட்டு வைத்துக்கொள்ளுங்கள், கூடவே ரேஷன் அட்டையை மண்ணெண்ணெய்க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

அறிவியல் முன்னேற்றம் அடைய.. அடைய, நாம் பின்நோக்கி தான் செல்லுகிறோம். இதான் உண்மையும் கூட.

எங்கள் கம்பெனியில் பல வருடங்களுக்கு முன்பு அனைத்து வேலை ஆட்களும் வருகை பதிவேட்டில் வரும் நேரம், கையெழுத்து போட்டு விட்டு தான் செல்லனும். அப்போது எழுத தெரியாத, கைநாட்டு வைக்கும் ஒரு சவுதியை நான் கின்டல் பண்ணுவது உண்டு.

இந்த பதிவேட்டில் கள்ள கையழுத்து போடுகிறார்கள் என்று, ஒரு ஆளை வைத்து கண்காணித்தார்கள். அதிலும் தில்லுமுல்லு.

பின்பு எலேக்ட்ரானிக் கார்டு சிஸ்டம் கொண்டு வந்தார்கள், அதிலும் அடுத்தவரின் கார்டை முன்பே கொண்டுவந்து தேய்த்து விட்டு, அந்த சிஸ்டத்தையும் ஊத்தி மூடி விட்டார்கள்.

பின்பு, பல பல தொழில் நுட்பங்களை எல்லாம் அமுல் படுத்தி, சரி வராமல், இப்போது எல்லோரும் பெருவிரலை, கைநாட்டு மாதிரி வைக்கும், பின்கர் பிரின்ட் சிஸ்டம் (Fingure Print Sensor System ) கொண்டு வந்து நடைமுறை படுத்தி வருகிறார்கள்.

இப்போ, நான் ஒவ்வொரு முறையும் அந்த கருவியில் பெருவிரலை கைநாட்டு வைக்கும் போது, அந்த படிக்காத சவுதி, என்னைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பதை நான் உண்மையில் ரசிப்பேன்.

இப்போ சொல்லுங்க. நாம் கற்காலத்திற்க்கு மாறிக்கொண்டு தானே இருக்கின்றோம்...!!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by Mauroof (Dubai) [29 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16337

சகோ. செய்யது அஹ்மது அவர்களின் கருத்துக்கு நன்றி. தமிழகத்தில் ஒவ்வோர் ஆட்சியின் போதும் இது போன்ற கட்டண உயர்வுகள் அமுல்படுத்தப்படும்போது அவ்வரசுகள் பாடும் வழக்கமான பல்லவியைத்தான் நான் இங்கு நினைவுகூர்ந்தேன். வேறொன்றும் எண்ணமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by M.S.ABDULAZEEZ (G Z ) [29 January 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 16343

ஐந்தரை யா....??? ஓகே ஓகே அப்போ தமிழ் நாட்டுக்கு இனி ஏழரை? தான்.... அடபாவிகளா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. :தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by hasbullah (dubai) [29 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16344

ஜியாவுதீன் காக்கா சொன்னதற்கும் எந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை....

அரிக்கேன் லைட் வைத்து விட்டால் வீட்டில் Fan இடாமல் கொசு வை விரட்டி விடுவீர்களா?

கையெழுத்து போட தெரியவில்லை என்றாலும் கூட power இருந்தால் சுகமாக இருந்து விடலாம்...

power இல்லாமல் இருந்தால் கடற்கரைக்கு போய் கையை தடவிக்கிட்டே இருக்க வேண்டியது தான்....

மனசுல ஆயோ ?

ஜெயா தேர்தலின் அறிக்கையில் 2 மாதத்திற்குள் power cut ஒலித்து விடுவோம்...என்றார். அதை எங்கே ஒலித்து வைத்திருக்கிறார் என்று தான் தெரியவில்லை...

koodangulam அணுமின் நிலைய பிரச்சினையும் கூடவே.... என்ன செய்ய முடியும் என்று திணறுகிறார்...

தினமும் 5.30 மணி நேரம் தானே என்று சந்தோசப்படுங்கள்.... 12 மணி நேரம் power கட் பண்ணாமல் இருந்தால் சரியே....

வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வருவதற்கே பல பேர் யோசிக்கிறார்கள் என்பது தான் உண்மை? அப்படியே வந்தாலும் கூட பத்து நாளில் திரும்பி விடுவது தான் காலத்தின் சூழ்ச்சமம்

UAE sharjah வில் தங்குபவர்களுக்கும் எல்லா வருடமும் பயம் தான் ....

SUMMER காலம் 52 டிகிரி வெயில் அடிக்கும் போது POWER கட் ஆகும் ...4 TO 8 மணி நேரம்.... எல்லாம் அடுக்கு மாடிகள்..... 10 வது மாடியில் தங்கினால் ..........POWER போயி விட்டால் இறங்கி விட்டு பவர் வரும் போது LIFTIL ஏற வேண்டியது தான்..

LAST YEAR தப்பித்து விட்டோம்... நோன்பு காலத்தில் 2 முறை 1 மணி நேரம் CURRENT இல்லாமல் போனது , இரவு ஒரு முறை பகல் ஒரு முறை.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. TV , Mixie , Grinder இலவசமாக கொடுப்பதற்க்கு பதிலா வீட்டுக்கு ஒரு Inverter (UPS) கொடுங்க புண்ணியமா போயிடும்...
posted by M.Sulthan (Sudan) [29 January 2012]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 16348

தனக்குக்கூட ஒன்றுமே செய்துகொள்ளாத காமராஜர், கக்கன், அண்ணாதுரை போன்றவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் இன்று இருப்பவர்கள் எல்லாம் அரசியல் வியாதிகள், சாரி அரசியல் வியாபாரிகள். அவர்கள் எவருக்கும் அப்பாவி ஜனங்களை பற்றி கவலை இல்லை. இலவசங்களை பெறுபவர்கள் எவருக்கும் அதை பெறுவதற்கு விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் கொடுக்கிறார்கள். விடுவதற்கு மனமில்லாமல் இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இலவசங்களை கொடுப்பதற்கு செலவிடப்படும் பணத்தை இவர்கள் கூறும் நஷ்டத்திலியங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுத்து மக்கள் மீது திணிக்கப்படும் சுமையை தவிர்க்கலாம். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை அத்தியாவசியமான சேவைகளுக்குமட்டுமே பயன்படுத்தலாம். பெரும் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயனடையும் இலவச மின்சாரத்திட்டத்தை வரன்முறை படுத்துதல், அரசியல்வாதிகள், பணபலமிக்கவர்களின் மின்சார திருட்டை தடுத்து , சரியான நிர்வாகம் போன்றவற்றை முறையாக செய்தாலே EB லாபத்தில் இயங்கும்.

TV , Mixie , Grinder இலவசமாக கொடுப்பதற்க்கு பதிலா வீட்டுக்கு ஒரு Inverter (UPS) கொடுங்க புண்ணியமா போயிடும்...

கருவறையும் இருட்டு....

கல்லறையும் இருட்டு... இந்த ரெண்டையும் நியாபக படுத்தவா

ஐந்தரை மணி நேர பவர் கட்டு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒழிக!ஒழிக!ஒழிக!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16349

என்ன செய்தி வந்தாலும், இந்த பாலாப்போன கரண்ட கட செய்தி மட்டும் எந்த செய்தியிலும் வருவதில்லை!
நல்லாவே இருக்க மாட்டானுங்க!
நாசமாப் போவானுங்க!
போயும் போயும் அத்திபூக்கள் வரும்போது கட! அம்மா ஆட்சினா மட்டும் உங்களுக்கு இதல்லாம் தெரியாது! ஊருக்கு வந்தோமா, சும்மா இருந்தோமா என்றில்லாமல் ஒரே கமண்ட் அடிக்கும் நீங்கள் இந்த கரண்ட கட்டுக்கு மட்டும் வாயே திறப்பதில்லை ஏன்?
இதை எவனாவது வெளிச்சம் போட்டு காட்ட துப்பில்லை!

இது என் வீட்டு அம்மையார் சொன்னது!
இதையேதான் உங்க வீட்டு அம்மையாரும் சொல்வார்கள்!
இதையேதான் துப்புகெட்ட திராவிட அரசியல்வாதிகளின் மனைவியும் கேட்ப்பார்கள்!

விட்டுக்கொடுப்பானா அவன்?
கூடன்குளம்,
துரோகிகளின் சதி
அரசியல் ஆதாயம்.
அது போட்டுங்க,

இப்ப கேட்டாலும் சொல்வான் பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாகவே, நாங்கள் கரண்ட கட பண்ணுகிறோம் என்று!

அம்மா தாயே போதுமா! மனைவிமார்களே! இந்த கமண்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஐந்தரை மணிநேரம் மின் தடை
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [29 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16357

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தினமும் ஐந்தரை மணிநேரம் மின் தடை என்பது சரியான தகவல் அல்ல.

காலை 8.00 முதல் 10.00 வரை
மதியம் 2.00 முதல் 4.00 வரை
இதுதான் தொடராக மின்தடை செய்யப்படும் நேரங்கள்.

இதுபோக மாலையில் இருண்ட பின்னும் - இரவு நேரத்திலும் நேரம் காலமில்லாமல் ஓரிரு முறை ஒவ்வொரு முறையும் அரை மணிநேரம் மின் தடை ஏற்படும்.

இப்பொழுது அதை 35 நிமிடம் 45 நிமிடம் என்று சிறிது, சிறிதாக கூட்டி பழக்கப்படுத்திய பின் 45 நிமிடம் என்பதை வழக்கமாகி கொண்டுள்ளனர்.
-----------------------------------------------
ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை அன்று :

காலை 08.00 மணி முதல் 10.00 வரை 2 மணிநேரம்
மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை 2 மணி நேரம்
மாலை 6.45 மணி முதல் 7.35 வரை 50 நிமிட நேரம்
இரவு 9.08 மணி முதல் 9.38 மணி வரை 30 நிமிட நேரம்

ஆக ஜனவரி 24 இல் மட்டும்தான் 5 மணி 20 நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டிருக்கிறது. மற்றப்படி எல்லா நாட்களும் 5 மணி நேரங்களுக்கு குறைவாகத்தான் மின் தடை செய்கிறார்கள்.

ஆகையால் யாரும் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறதாக எண்ணி, விளையாட்டுக்காக கூட ஐந்தரை மணி நேரம் என்று சொல்லாதீர்கள் பிறகு அந்த ஐந்தரை வாடிக்கையாகி ஆறரை ஏழரை என்று மின்தடை செய்து நம்ம வாயை அடைத்து விடுவார்கள்.
------------------------------------------------
மானிடரிங் :

மின்தடை ஐந்து மணி நேரம் என்பதை ஏற்று சகித்துக் கொள்ளலாம் அதில் யாருக்கும் வருத்தமில்லை.

ஆனால் ஒரு வரைமுறை இல்லாமல் நினைத்த நேரத்தில் தடை பண்ணுவதையும் - இரவில் தடை பண்ணுவதையும்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மின் தடை நடைபெறுவதை மானிடரிங் செய்து வரப்படுகிறது - விரைவில் அதற்கு ஓர் ஒழுங்கு முறை ஏற்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.
-----------------------------------------------
" வரவு எட்டணா - செலவு பத்தணா " கதைதான்

கூடங்குளம் மட்டுமல்ல தமிழ் நாட்டில் உள்ள எல்லா குளத்திலும் இருந்து மின்சாரம் கிடைத்தாலும் ......
மின் வெட்டு மின் வெட்டுதான் .......
மின் தடை மின் தடைதான் .......

காரணம்
பற்றாக்குறை மின்சாரம் 1400 மெகா வாட் என்றால் புதிதாக கிடைக்க இருப்பது 1000 மெகா வாட் - புதிதாக கிடைக்க இருப்பது கைக்கு கிடைக்கும் முன்பே , புதிய , புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது அதனால் புதிதாக வருவதில் முக்கால் பங்கு புதிய தொழிற்சாலைக்கு கொடுத்து விட்டால் மின் வெட்டு எங்கிருந்து நீங்கும் ?

" வரவு எட்டணா - செலவு பத்தணா " கதைதான்.

ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் அதற்கு " தகுதியானவர்களாக " இல்லாத வரை மக்களுக்கு மனம் நிம்மதி கிடைக்க போவதில்லை.

இறைவன்தான் நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு மனித நேயத்தை கொடுக்க வேண்டும் - அதற்கு மக்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் - நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [30 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16380

மின்வெட்டால் என்போன்றவர்கள் படும் பாடு "நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்" படாத பாடுபட்டு கமேன்ட்சை டைப் செய்துவிட்டு சப்மிட் பண்ணுவதற்குள் கரென்ட் ஆரோஹரா...!

அவரவர்களுக்கு அவரவர் கவலைதானே இருக்கமுடியும்...!
வீட்டுக்கார அம்மாமார்களுக்கு கிரைண்டர் மிக்சி பற்றிய கவலைகள்.

அன்றொரு நாள் பாத்ரூமில் குளித்து சோப்பு போட்டுவிட்டு மறுபடி குழாயை திறந்தால் குழாயில் நீர்வரவில்லை மோட்டாரை போடு என்று வீட்டுக்காரஅம்மாவை கூப்பிட்டு குரல் கொடுத்தால் கரண்ட் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது..? குடிக்க வைத்திருந்த குடத்துநீரை எடுத்து குளியலை ஒருவாரு முடித்தேன்.

பொற்கால ஆட்சி தருவோம் என்றவர்கள் இப்படி நம்மை கற்காலத்தில் கொண்டுவந்து நிறுத்திய கொடுமையை என்னவென்பது..?

என்ன செய்வது ..இதையும் தாண்டி நம் காலம் போக்கத்தான் செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [30 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16382

KS முஹம்மது சுஹைப் நீங்கள் தம்பி ஜியாவுதீனுக்கும் ஒருபடி மேலே சென்று விட்டீர்கள்! அவருக்குதான் கதை கதையாம் காரணம் தெரியும்! நீங்களும் அப்படியா?

ஏங்க குடிதண்ணிய தலைக்கு ஊற்றும் முன்பு வாளிபோட்டு கிணற்று தண்ணிய கேக்கலாமுங்களே!
ஊட்டுல கிணறு இல்லையோ!
சும்மா தமாசுக்கு கேட்டேனுங்கோ!
தப்பா இருவரும் நினைக்காதீங்கோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [31 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16398

தம்பி உமர் அனஸ் ..இப்போது யார் வீட்டில்தான் கிணறு இருக்கிறது...?எல்லா வீட்டிலும்தான் பெட்ரூமிலோஅல்லது ..அடுப்பாங்கரையிலோ விட்டு மூடி போட்டு மூடிவிடுகிரார்களே,,,எங்கள் வீட்டிலும் அந்த கதைதான்...

நேற்று மின்வெட்டிற்கு பயந்து அவசர அவசரமாக கமேன்ட்சை முடித்து விட்டு போய்விட்டேன். அந்த குளியலறை சமாச்சாரம் பெரிய கதை தம்பி..இதோ அது தொடர்கிறது.....

மூஞ்சி முகரை எல்லாம் சோப்பு நுரை அப்பி நிற்க குழாயை திறந்தால் தண்ணீர் வரவில்லை...இது நேற்றைய தொடர்ச்சி.... கண் எரிச்சலில் வீட்டுக்காரியை கூப்பிட்டு அபயக்குரல் எழுப்பினேன். "அடியே...இவளே... மோட்டாரை போடு..."அவள் அடுப்பாங்கரை வேலையை விட்டு வந்த கடுப்பில் நம்ம முதல்வர் அம்மாவுக்கு ரெண்டு திட்டு.. சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் பாத் ரூமுக்குள் புகுந்த எனக்கு ரெண்டு திட்டு என விலாசினாள். ஆஹா... நண்பர்களே... சோப்பு எரிச்ச்லையாவது தாங்கி கொள்ளலாம். இறுதியில் ஒரு குடம் நீரை கொண்டு வந்து எரிச்சலில் ஏன் முன்பாக .."நங்க "என்று வைத்தாள்

நண்பர்களே...ஏதோ ஒரு திரை படத்தில் நடிகர் விவேக் கூவம் ஆற்றில் தெரியாமல் குளித்து விட்டு ஒரு பெண்ணின் கையால் பிளாஸ்டிக் குட அடி வாங்குவாரே... அதற்க்கு சற்றே குறைந்த நிலை ஆயிற்று ஏன் நிலை..

குளித்து முடித்து விட்டு வெளியேறி போகும் பொது அடுப்பில் கடுகு வறுபடும் சப்தம் சட ..சட ..வென கேட்டது ஆஹா... இது இன்னொரு தாக்குதல் "சிம்பாலிக்"கோ என விட்டேன் ஓட்டம் பெட்ரூமிற்கு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved