குவைத் நாட்டின் மாலியா என்ற பகுதியில் அமைந்துள்ள முதன்னா காம்ளக்ஸ் என்ற இடத்தில், ரமழான் 08ஆம் நாளன்று காயலர்களால் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 15 காயலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு - கோமான் ஷேக் சுலைமான் என்பவரால் தயாரிக்கப்பட்ட - காயல்பட்டினத்தின் பாரம்பரிய முறையிலான கோழிக்கறி கஞ்சி, பருப்பு வடை, சமோஸா, பழக்கூழ், கடற்பாசி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
![](/newsimg/88201225525.jpg)
![](/newsimg/88201225539.jpg)
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டதையடுத்து, அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. இஞ்சி கலந்த தேனீர் உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
ஹஸன் அமானுல்லாஹ்
மற்றும்
காராஃபி முஹம்மத் அலீ,
குவைத். |