Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:27:53 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21582
#KOTW21582
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 9, 2019
2018 – 2019 பருவத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினத்திற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “மெகா / நடப்பது என்ன?” பெற்ற தகவல் வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1020 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2018 – 2019 பருவத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் – தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து – காயல்பட்டினத்திற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு, அத்தொகை என்னென்ன பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பன குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) பெற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் - அவரின் தொகுதி மேம்பாட்டுக்காக, மாநில அரசு - ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது.

அந்த நிதி மூலம் MEMBER OF LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCY DEVELOPMENT SCHEME; MLACDS அவரின் தொகுதியில் உள்ள எந்த பகுதிக்கும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள - சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்யலாம்.

ஆண்டொன்றுக்கு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் தொகை - 2011 - 2012 நிதியாண்டு முதல், 2 கோடி ரூபாயாகும். இந்த தொகை - ஜனவரி 2018 இல் 2.5 கோடி ரூபாய் என்றும், இவ்வாண்டு ஜூலை மாதம் - 3 கோடி ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 15 சதவீத வாக்காளர்களை கொண்ட காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு, சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - 2011 - 2012 முதல், எவ்வளவு நிதி ஒதுக்கினார்?

இது குறித்த விபரங்களை (2017 - 2018 வரை), நடப்பது என்ன? குழுமம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RIGHT TO INFORMATION ACT; RTI) கீழ் பெற்று - 2018 ஜூலை மாதம் வெளியிட்டது.





அதன் விபரங்கள் இதோ:

2011-2012 முதல் 2017-2018 வரை, காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய மொத்த தொகை - ரூபாய் 64,40,750*

ஆண்டு வாரியாக சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிய தொகை

2011-2012: ரூபாய் 0
2012-2013: ரூபாய் 21,00,000
2013-2014: ரூபாய் 0
2014-2015: ரூபாய் 14,90,750
2015-2016: ரூபாய் 10,00,000

2016-2017: ரூபாய் 1,00,000
2017-2018: ரூபாய் 17,50,000

தற்போது 2018 - 2019 நிதியாண்டில் என்ன தொகை செலவு செய்யப்பட்டது, நடப்பாண்டில் (2019 - 2020) இதுவரை என்ன செலவு செய்யப்பட்டது என்ற விபரம் - நவம்பர் 15 தேதிய கடிதம் மூலமாக பெறப்பட்டுள்ளது.

2018 - 2019 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சியில், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் நிதியில் இருந்து, கீழ்க்காணும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

பெரியநெசவு தெரு - ஐஓபி சந்திப்பு பயணியர் நிழற்குடை - ரூபாய் 500,000

கடையக்குடி (கொம்புத்துறை) நடுப்பள்ளிக்கு பெஞ்ச்/டெஸ்க் - ரூபாய் 450,000

காயல்பட்டினம் அரசு மகளிர் பள்ளிக்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட RO PLANT - ரூபாய் 500,000

காயல்பட்டினம் அரசு மகளிர் பள்ளிக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் மற்றும் LCD PROJECTOR - ரூபாய் 250,000

பப்பரப்பள்ளி மயானநிலத்தை சுற்றி சுவர் - ரூபாய் 500,000

2018-2019: ரூபாய் 22,00,000 (காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு செலவு செய்த தொகை)

இந்த காலகட்டத்தில் (ஓர் ஆண்டிற்கு) - தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கிய தொகை - ரூபாய்.2.5 கோடி ரூபாய். அதாவது - தனது தொகுதியில், சுமார் 15 சதவீதம் மக்களை கொண்ட காயல்பட்டினம் நகராட்சிக்கு - சட்டமன்ற உறுப்பினர் - 2018-19 - காலகட்டத்தில், மொத்த நிதியில் செலவு செய்த சதவீதம் - 8.8.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு தேவையான பணிக்கு ஜூலை மாதம் துவக்கத்தில் 10 லட்சம் ரூபாய் - சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கியதாகவும், அதன்பிறகு கூடுதலாக நவம்பர் துவக்கத்தில் - 10 லட்சம் ரூபாய் (அதாவது மொத்தமாக 20 லட்சம் ரூபாய்) ஒதுக்கியதாகவும் தகவல் வெளியாகியது.

ஆனால் - 2019 - 2020 நிதியாண்டில், நவம்பர் 15 (2019) தேதி வரை - காயல்பட்டினம் நகராட்சி பகுதியில், எந்த பணிக்கும், சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியதாக - RTI மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள்படி - தகவல் இல்லை.

இவ்வாண்டு ஜூலை மாதம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியினை, ஆண்டொன்றுக்கு தமிழக அரசு 3 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...விழிப்புணர்வு தரும் அதிர்ச்சி தகவல்
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46455

இந்த தகவல்களை தனியொரு இயக்கம் காழ்ப்புணர்ச்சியில் சொல்வதாக யாரும் சொல்ல முடியாது ஏனெனில் இந்த தகவல் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின்படி அவர்கள் எழுதிக் கேட்டு தகவல் அறியும் சட்டம் அவர்கள் சட்டப்படி தந்துள்ள தகவல்.

திருமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டபோதும் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை சுமார் 15 ஆண்டுகளாக நமது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

அவருடைய வெற்றிக்கு காயல்பட்டினம்தான் திலகமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவரே நன்கு உணர்ந்தும் இருக்கிறார். அவர் வெற்றிக்கு காயல்பட்டினம்தான் பலமுறை கைகொடுத்துள்ளது என்பதை அவர்களே பல மேடைகளிலும் சொல்லி வந்திருக்கிறார்.அவரை நாம் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்வதோடு நிற்காமல் ''நல திட்ட நாயகன்'' என்று பெருமையுடன் அழைத்தும் வருகிறோம்.



நமதூரில் நடக்கும் மங்கள நிகழ்ச்சியானாலும் சரி அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி எல்லாவற்றிலும் அவர் கலந்து கொண்டு காயல்பட்டினம் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அவ்வாறெல்லாம் இருந்தும் கூட அவர் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் 15 விழுக்காட்டுக்கு மிகவும் குறைவாக 8.8 விழுக்காடுதான் நமதூருக்கு செலவு செய்திருக்கிறார் என்ற அரசின் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அவர்கள் மேல் வீண் பழி சுமத்தி அவருடைய கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாக இதை ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கம் முயற்சிக்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது .அரசின் புள்ளி விவரம் சரி இல்லை என்று அண்ணாச்சி சொல்ல வேண்டும் தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை விட வேண்டும் என்று அவர் மேல் அன்பு கொண்டுள்ள காயல்பட்டினம் மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே.,

இடிக்கும் துணையாள்வாரை யாரே கெடுக்கும் தகைமையவர் என்று வள்ளுவம் சொல்கிறது. ஒரு ஆட்சி தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்பதற்கு ஒருவர் இருந்தால் அந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று வள்ளுவர் சொல்கிறார்.

நபி தோழர் உமர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது ஒரு செய்தியை சொல்கிறார். நான் ஆட்சி பொறுப்பு ஏற்கிறேன் நான் தவறு செய்தால் என்னை தட்டி கேட்க யாரும் உண்டா என்று அவர்கள் கேட்டபோது நீங்கள் தவறு செய்தால் இந்த வாழ் உங்களுக்கு பதில் சொல்லும் என்று இன்னொரு தோழர் தைரியமாக சொல்ல, எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி அந்த தோழரை கட்டி அனைத்துக் கொண்டார்கள் என்ற தகவலை நான் எங்கோ படித்த ஞாபகம் .

எனவே திருமிகு அனிதா அவர்கள் நமதூருக்கு செய்யவேண்டிய சேவைகளை தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் .

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved