Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:05:36 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5918
#KOTW5918
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 4, 2011
ஏப்.17இல் திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2925 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரள மாநிலம் திருவனந்தபுரம் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து திருவனந்தபுரம் காயல் நல மன்றத் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.

திருவனந்தபுரம் காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற நிர்வாகிகளின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம் மன்றம் இறையருளால் கடந்த 15.01.2010 அன்று துவக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டும் இரண்டு மாதங்களும் ஆகிவிட்டன, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து சீருடன் செயலாற்ற அன்பு உறுப்பினர்களாகிய உங்கள் யாவரின் மேலான துஆவும், நிறைவான ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும்.

கடந்த ஒரு வருட காலத்தில் நாம் நினைத்திராத நல்ல பல காரியங்கள் நம் மன்றத்தின் சார்பில் இறையருளால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. செயற்குழுக் கூட்டத்தில் அழகான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து முடிக்க் நம் மன்ற செயற்குழு உறுப்பினர்களும் முழு ஆர்வத்தோடும், முனைப்போடும் உள்ளனர்.

குறிப்பாக, திருவனந்தபுரம் நகரில் ஒரு “முத்துச்சாவடி” உருவாக்குதல்... அதற்கான முழு முயற்சி போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்று இன்னும் பல நல்ல காரியங்களை நாம் தயக்கமின்றி செய்ய முனைவோம், இன்ஷாஅல்லாஹ்! ஆம், இக்காரியங்கள் அனைத்தையும் செயல்படுத்திட எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், அயராத வேலைப்ப்ளுவுக்கிடையிலும் தமது பொன்னான நேரத்தை செலவிட ஆயத்தமாக உள்ளனர் நம் மன்ற நிர்வாகிகள்!

ஆகையால், இவை யாவறைறையும் முறையாகவும், நிறைவாகவும் செய்து முடித்திட முக்கியத் தேவை “பொருளாதாரம்” அல்லவா? அதற்கு ஆதாரம் எது? நாம் நமக்குள் திரட்டிக்கொள்ளும் சந்தா தொகை மட்டுமே! ஆனால் அந்த சந்தா அனைத்து உறுப்பினர்களாலும் முழுமையாக செலுத்தி முடிக்கப்படவில்லை என்பதும், பலருக்கு நிலுவைத்தொகை உள்ளதென்பதும் நமது பணிகளைத் தொய்வடையச் செய்திடும் மிகப்பெரும் காரணியாக உருவெடுத்துவிடும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. இதை நாம் நமது சிந்தையில் இருத்திக்கொள்ள வேண்டும்.

பொதுக் காரியங்களைப் பொருத்த வரை உள்ளதை மட்டும் கொண்டு செயலாற்றினால் போதும் என்ற மனநிலையில் நாமிருந்தால் அது முழுப்பலனை ஒருபோதும் தராது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். எனவே, அவை முறையாகச் செய்து முடிக்கப்படுவதற்கான ஆதாரங்களை நாம் இனங்கண்டாக வேண்டும்.

நற்சேவை நம் தேவை என்ற குறிக்கோளுடனும், வீருடனும் செயல்படத் துடிக்கும் இளைஞர்கள் நம் மன்றத்தின் தூணாக இருக்கின்றனர்... இருக்க வேண்டும். இதற்காக மூத்த செயல் வீரர்கள் வழிவிட ஆயத்தமாகவே உள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

இதுபோன்ற பல நல்ல அம்சங்கள் குறித்து நமக்குள் கலந்தாலோசிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடுதான் இன்ஷாஅல்லாஹ் வரும் 17.04.2011 அன்று நடைபெறவுள்ள நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம்!

17.04.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை. நமது திருவனந்தபுரத்தில் அனைவருக்கும் விடுமுறை நாள்! அதைக் கருத்தில் கொண்டே இந்நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டை, அட்டக்குளங்கரை காவல் நிலையம் எதிரிலுள்ள இக்பால் நூலக அரங்கில் நம் மன்ற பொதுக்குழு அன்று காலை 10.30 மணிக்கு உற்சாகத்துடன் நடத்தப்படவுள்ளது.

கூட்ட நிறைவில் மதிய உணவு விருந்துபசரிப்பும் காத்திருக்கிறது. நமக்குள் மகிழ்ச்சியாக அளவளாவும் அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமாக நகர்நலப் பணிகளையும் பிற மன்றங்களைப் போலவோ, அவற்றை விடவும் சிறப்பாகவோ செய்ய நாம் இப்பொதுக்குழுவில் உறுதியெடுக்க வேண்டியுள்ளது.

எனவே, நம் மன்ற உறுப்பினர்கள் தயவுகூர்ந்து அன்றைய தினத்தில் வேறெந்த காரியங்களுக்கும் நேரம் ஒதுக்காமல், அன்றைய பகல் பொழுதை நம் மன்ற பொதுக்குழு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விருந்துக்காக ஒதுக்கி, ஆவலுடன் பங்கேற்று, அரிய பல நல்லாலோசனைகளை வழங்கி, நகர்நலப் பணிகளில் உறுதுணை புரிய வருமாறு உங்களை நம் மன்ற நிர்வாகிகள் அனைவர் சார்பாகவும் அன்புடனும், உரிமையுடனும் மனமுவந்து அழைக்கின்றேன்.


இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்ற தலைவர் எம்.முஹம்மத் அபதுல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சப்- என்று அடிக்க...
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [04 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3750

ஒரு வயது குழந்தை -திருவனந்தபுரம் கா.ந.மன்றதிற்கு வாழ்த்துக்கள்.

இந்த குழந்தை தாண்ட நினைக்கின்ற தூரம் மிகவும் அதிகம்தான், அதாவது திருவனந்தபுரம் நகரில் ஒரு “முத்துச்சாவடி” உருவாக்குதல் என்பது, ஆனாலும் இந்த குழந்தையால் கண்டிப்பாக இயலும். இன்ஷா அல்லாஹ். அவர்களின் இந்த முயற்சி பிரமிக்கதக்கது.

இந்த “முத்துச்சாவடி” கண்டிப்பாக நம் மக்களுக்கு தேவைதான். நம் பெண்கள், குழந்தைகள் திருவனந்தபுரம் வரும்போது அவர்கள் சற்று ஒதுங்க படும் அவஸ்தைகள் நாம் அறிந்ததுதான்.

அப்புறம் மறந்து விடாதீர்கள், சந்தாவை முறையாக செலுத்தி விடுங்கள்.உங்களின் தாராள உதவியை கொண்டுதான் அக்க பணிகள் எல்லாம் செய்ய முடியும்.

வெறும் கையை வைத்து அளவு எடுத்து (முழம் போட்டு) என்ன பயன். 'சப்' என்று அடிக்க தான் இயலும், அது நமக்கு எதுக்கு.

வாழ்துக்களுடன் சாளை.S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. abhivanthanangal!!! aasamsagal nearunnu!!!
posted by M.N.L Mohamed Rafeeq(Le-Meridien Makkah) (Holy Makkah) [04 April 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3761

Entha cettan maare? nalla kaariyathinu yepozhum padachavade kirpa unndaavum. ningalude pravaththanam, dhwthiyam, sramam, yellathinum yende abhivanthanangal!!! aasamsagal nearunnu!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. TriVnsrun Kayal Association
posted by sheit (Dubai) [09 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3858

Assalamu Alaikkum, Padachavanu orthu e karyangal nallareethieil pani nadakatte ennu padachavanoodu dua irakkam.

ennu
sheit


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved