Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:00:29 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6370
#KOTW6370
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 2, 2011
மாணவர்களுக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சியர்! காயல்பட்டினம் சாதனை மாணவர் அமானுல்லாஹ்வும் கலந்துகொண்டார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3558 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தனதில்லத்தில் விருந்தளிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் மாவட்ட மாணவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், 01.06.2011 அன்று மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனதில்லத்தில் விருந்து வைத்தார்.



ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், அவரது குடும்பத்தினர், அவர் பயின்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோருட்பட மாவட்ட சாதனையாளர்கள் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.



மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளாவும் விருந்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாணவர்களுக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சியர்! காயல்பட்டினம் சாதனை மாணவர்
posted by சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் .ஜித்தாஹ் (.ஜித்தாஹ் ) [02 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4965

ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தனதில்லத்தில் விருந்தளித்து உபசரித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் .

வந்து குறிகிய காலத்தில் மாவட்ட மக்களின் மனம் எல்லாம் நிறைந்த நமது மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று மக்கள் சேவை செய்யவும் மீண்டும் மீண்டும் எங்கள் காயலுக்கும், தூத்துக்குடி மாவட்டம் வரவும் அன்புடன் வேண்டுகின்றோம்

ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் மற்றும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோருட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்க வளமாய் நலமாய் ஆமீன் .

புதிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களையும் மிகுந்த அன்புடனும் நேசத்துடனும் வரவேற்கின்றோம் சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் .ஜித்தாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஐயோ...புல்லரிக்குதுங்க...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [02 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4966

ஐயோ...புல்லரிக்குதுங்க...

எவ்வளவு சந்தோசமான நிகழ்வு, எவ்வளவு மன நிறைவு. கூடுதல் ஆனந்தம் என் ஆசான் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா சாரும் கலந்து கொண்டது.

இந்த நல்ல மாவட்ட ஆட்சியாளரை மாத்திப்புட்டாங்களே..

வருபவரும் இவரை விட நல்லவராக இருக்க பிராத்திப்போம்.

ஆமாம் விருந்து கவுச்சியா.. கவுச்சி இல்லாமையா. புரியவில்லையா.. சுத்த தமிழில் சொல்லுவதாக இருந்தால் விஜிடேரியனா இல்லை நான்-விஜிடேரியனா..

ஐயா மாவட்ட ஆட்சியாளருக்கு நன்றிகள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்க என்றும் வளமுடன்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [02 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4969

எளிமையும், நேர்மையுமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களே! எதையும் மாற்றும் சக்தி இறைவனுக்கு மாத்திரமே இருக்கிறது. புதிய ஆட்சியர் மூலமாக எமது மக்களுக்கும், தங்கள் மூலமாக கிருஷ்ணகிரி மக்களுக்கும் நன்மையே நடக்க இறைவன் நாடியிருப்பின் அதைத் தடுக்க யாரால் முடியும்? எது எப்படியிருப்பினும், உங்களது மாற்றம் எங்களுக்கு வருத்தமே!

விளைந்த நெல்கதிர் தலைசாய்த்து நிற்பது போன்று, படித்து அறிவிற்சிறந்த நீங்கள் அடக்கத்தோடு, எளிமையுடன் நடந்து கொண் டவிதம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்!

இறையருளால், நீங்கள் விரும்பியபடி தூத்துக்குடி மாவட்டத்தில், அதுவும் எங்கள் காயல் மண்ணில் இருந்து அதிவிரைவில் மாநிலத்தின் முதல்மாணவர் அல்லது மாணவி உங்களை எங்களின் பிரதிநிதியாக சந்திப்பார். அப்போது இன்ஷா அல்லாஹ், எங்களது விருந்தினராக எமதூருக்கு நீங்கள் வரவேண்டும் என்ற எனது ஆவலை பதிவு செய்து, நீங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பாராட்டுக்குரிய மாவட்ட ஆட்சியர்!!
posted by Abdul Cader S.H. (Jeddah) [02 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4971

பாராட்டுக்குரிய மாவட்ட ஆட்சியர்!!

மாணவர்களை ஊக்குவிக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகுரியவரே!
மற்ற மாவட்ட ஆட்சியருக்கு இவர் ஒரு role model.

சகோ. சட்னி மீரான் மிக தெளிவுபட பாராட்டை பதிந்துள்ளார். நல்ல பல கருத்துகளை அழகு தமிழில் தாருங்கள் இதுவே நம் காயலுக்குப் பெருமை. நன்றி!!!

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இந்தியாவின் தலை சிறந்த மாவட்ட ஆட்சியாளர்!! இக்ராவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [02 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4973

அஸ்ஸலாமு அழைக்கும்.

நான் ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளரை பற்றிய பதிப்பு இது.

நாம் நல்ல ஒரு மாவட்ட கலெக்டரை இழந்துள்ளோம். நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளோதான். சி.ந.மகேஸ்வரன் I.A.S. அவர்களே! தாங்கள் மிக சிறப்பாக பணியாற்றி எங்களின் மனதை கொள்ளை கொண்டதமைக்கு வாழ்துக்கள்.

உங்கள் நேர்மையான ,மாணவ செல்வங்களை உற்சாக படுத்தும் திறன், அணைத்து சமுதாய மற்றும் அதிகாரிகளை நேர்மையுடன் பணியாற்ற வைக்கும் திறன், அணைத்து அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகளையும் அமுல்படுத்தி மக்களின் சேவையை முதல் பணி என்று பாடுபட்ட உங்களை போன்ற அதிகாரிகள் நமது நாட்டிற்கு மிக மிக அவசியம் என்பதுடன் புதிதாக வந்துள்ள DR.செல்வராஜ் I.A.S. அவர்கள் உங்களையும் மிஞ்சி மிக சிறப்பாக பணியாற்ற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆக, சி.என்.மகேஸ்வரன் I.A.S. அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் மிக மிக தலை சிறந்த மாவட்ட ஆட்சியாளர். அ.தி.மு.க. வின் பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! தங்கள் முயற்சிகளை கொண்டு நமது மாவட்ட ஆட்சியாளரை நமது மாவட்டத்திலே தொடர ஆவனைசைய்யவூம்.

இக்ராவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!

தங்களின் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவனை நிகழ்சிகளின் சிறப்பு விருந்தினராக அல்லது தனி நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி நமது மாவட்ட ஆட்சியாளரான சி.என்.மகேஸ்வரன் I.A.S. அவர்களை அழைத்து நமது காயல் மக்களின் அன்பினை வெளிபடுத்தும் முகமாக நினைவு பரிசினை வழங்கி கவ்ரவிக்க மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாராட்டுதலுக்குரிய கலெக்டர்!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [03 June 2011]
IP: 72.*.*.* United States | Comment Reference Number: 4979

நமது கலெக்டர் அவர்களின் இந்த அருமையான செயல்பாடு நிச்சயமாக பாராட்ட படவேண்டிய ஒன்று.

மாணவர்களை ஊக்குவிப்பதோடு நின்று விடாமல் அந்த மாணவர்களை பெற்றவர்களையும் அந்த மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரையும் இந்த விருந்துக்கு அழைத்து அவர்களையும் பெருமைபடுத்தி, கௌரவித்து இருப்பது ஒரு புதுமையான சிந்தனையும் கூட என்றே எனக்கு தோனுகிறது.

பொதுவாக கலெக்டர்களுக்கு தங்களுடைய பணிச்சுமையில் மாணவர்களை பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதே அரிது. ஆனால் இந்த செயல் நமது கலெக்டர் மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் ஈடுபாட்டை வெளிபடுத்துகிறது.

மேலும் இதுமாதிரியான நிகழ்வு வேறெந்த மாவட்டத்திலும் நடந்ததாக தோணவில்லை. நிச்சயமாக இந்த மாதிரியான நிகழ்வுகள் மற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் என்பதில் எந்ததொரு சந்தேகமுமில்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved