Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:25:08 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7303
#KOTW7303
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 26, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4789 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (47) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகளின் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்குரிமையுடனும், ஐக்கியப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் நகரப் பிரமுகர்கள் 25 பேர் அடங்கிய குழு வாக்குரிமையின்றியும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறையும் ஆண் - பெண் யாரும் போட்டியிடும் பொதுவானதே என்று கருதப்பட்ட நிலையில், காயல்பட்டினம் உள்ளிட்ட பல நகர்மன்றங்களின் தலைமைப் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக அரசால் திடீரென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நகர்மன்றத் தலைவியைத் தேர்ந்தெடுப்பதற்கான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின், நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டம் இன்றிரவு கூடியது. இதில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி - பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ள ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அதிக வாக்குகள் பெற்று நகர்மன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.S.MAHMOOD RAJVI (KAYALPATNAM) [26 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 8828

அஸ்ஸலாமுஅலைக்கும்

எமது அல்-அமீன் நற் பணி மன்றத்தின் மூத்த உறுப்பினரும் சமூக ஆர்வலருமான சலாஹுத்தீன் காக்கா அவர்களின் மனைவியை நகர்மன்ற தலைமைக்கான வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிக்க பொருத்தமானதாகும், அல்லாஹ் அவர்களுக்கு அளப்பரிய வெற்றியை தருவானாக ஆமீன். இவரை தெரிவு செய்ய வாக்களித்த அனைத்து ஜமாஅத் ,பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் இதற்காக உழைத்த நல் உள்ளங்கள் இதனை தலைமை ஏற்று நடத்திய ஐக்கிய பேரவையினருக்கும் நன்றி !

மஹ்மூத் ரஜ்வி,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shamsudeen (Bahrain) [26 September 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 8830

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)

By the unity of Kayalpatnam we have to support & respect the resolution of Kayalpatnam ஐக்கிய பேரவை to the benefit of kayalpatnam. Hope this will not entertain the culprit to come inside the municipality.

Our heartily wishes to newly elected chairman

“If not you, Then who”
“If not now, Then when”

Thanks & Regards,

Shamsudeen.M
Koman Street
Landmark Group of Hotels – Bahrain


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [26 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8831

யார் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்று கூட தெரியாமல் வாக்குச்சாவடிக்கு சென்றவர்களுள் நானும் ஒருவன்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அப்பா பள்ளியின் பிரதிநிதியாக (ஒட்டுரிமையுடன்) ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு/ தேர்தலுக்கு சென்ற இருவரில் ஒருவன் என்ற அடிப்படையில் அங்கு நடந்த நிகழ்வை சுருக்கமாக சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

எல்ல ஜமாத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்து ஐக்கிய பேரவைக்கு தெரிவித்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அங்கு இன்று தேர்தல் நடக்கும் என்று நான் எதிர்பார்கவில்லை. அங்கு நுழைந்ததும் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதை உணரமுடிந்தது. அப்பொழுது கூட வேட்பாளர்கள் யார் யாரென்று தெரியாத நிலை.

இஷா பாங்கிற்குப் பிறகு வழமைபோல் கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது. பின் வரவேற்ப்புரை. 25 நபர்கள் (ஓட்டுரிமை இல்லாதவர்கள்) ஐக்கியப் பேரவையால் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு காரணம் கூறப்பட்டது. விருப்ப மனு கொடுத்தவர்களின் பெயர்கள் (7 ) வாசிக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரகளின் (4 ) விபரங்கள் வாசிக்கப்பட்டு, மறுக்கப்பட்ட மனுதாரார்களின் (3 ) விபரகளுடன். மறுக்கப்பட்ட காரணங்களும் சொல்லப்பட்டது.

பின்னர் ஏற்றுக் கொள்ளபபட்ட மனுக்கள் மீது ஆலோசனை செய்வதா ? அல்லது நேரடியாக நான்கு பேரில் ஒரவரை தேர்ந்தெடுப்பதா? என்ற கேள்வி வாக்காளர்கள் (எங்கள்) மீது தொடுக்கப்பட்டது. பலர் அமைதி காத்தனர். சிலர் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்போம் என்றனர்.வேறுசிலர் ஆலோசனை பண்ணினால் கருத்து வேறுபாடுகள்தான் அதிகரிக்கும், ஆதலால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்போம் என்றனர். ஆக மொத்தத்தில் ஆலோசனை பண்ணும்படி யாரும் குரல் எழுப்பவில்லை.

எனவே ஓட்டுபோட்டு ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்றும் அதுவும் இரண்டு கட்ட ஓட்டு நடத்துவோம் என்றும் கூறப்பட்டது/முடிவுசெய்யப்பட்டது.

(இரண்டு கட்ட ஒட்டு எனபது, முதலில் நடக்கும் ஓட்டெடுப்பில் அதிக வாக்குகள் வாங்கும் முதல் இருவரில் இரண்டாவது கட்டமாக ஒட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பது எனபது. இந்த முறை உண்மையான் ஜனநாயகத்தில் நம்பிக்கயுள்ள நாடுகள் கடைபிடிக்கும் முறை)

பின்னர் ஓட்டெடுப்பின் விதிமுறைகள் விளக்கப்பட்டு வாக்காளர்களின் கருத்துகள்/ஆலோசனைகள் கோரப்பட்டது. நான் எழுந்து சென்று,

" ஓட்டெடுப்பு என்று முடிவு செய்தாகிவிட்டது, வேட்பாளர்களின் பெயர் விலாசம் மற்றும் குடும்பத்தை பற்றி கூறினீர்கள். அதை வைத்து வேட்பாளரை எப்படி தேர்வு செய்ய இயலும் at least வேட்பாளர்களின் profile , என்னவென்று கூறினால், அவர்கள் நம்ம ஊருக்கு செய்த சேவைகள், அவர்கள் செய்த பொதுப் பணிகள் பற்றி கூறினால் தேர்ந்தெடுக்க எதுவாக இருக்கும்" என்று கூறினேன்.

என்னுடைய இந்த ஆலோசனை/கருத்தை ஏற்றுக்கொண்டு வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுவில் சுற்றிக் காட்டிய விசயங்கள் வாசிக்கப்பட்டது.

என்னை தொடர்ந்து மூத்த சகோதரர் பல்லாக் கக்கா அவர்கள் எழுந்து சென்று, இரண்டு கட்ட வாக்கெடுப்பை பற்றி வினவினார்கள். அத்தாவது, " முதல் கட்ட வாக்கெடுப்பிலேயே ஒரு வேட்பாளர் 50 % சதவிகிதத்திற்கும் மேல் ஓட்டு வாங்கினாலும் இரண்டாவது கட்ட ஓட்டு தேவைதானா?"

(மிக அருமையான கேள்வி, "Vast General knowledge" and "Presence of Mind" உள்ள ஒருவர் மட்டுமே கேட்க நினைக்கும் கேள்வி)

50 % சதவிகிதத்திற்குமேல் ஒரு வேட்பாளர் ஓட்டு பெற்றால் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு தேவையில்லை, அவரே வெற்றி வேட்பாளர் என்று பதில் கூறப்பட்டது.

சகோ., சட்னி செய்து மீரான் கேட்ட கேள்விக்கும் பதில் கூறப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. வாக்காளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒட்டு சீட்டு தரப்பட்டது. ஒவ்வொருவராக சென்று ஒட்டு போட்டோம். 61 ஓட்டுகள் பதிவாகியது. சகோதரி மைமுனதுல் மிஸ்ரிய 40 வாகுகள் வாங்கி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சகோதரி வஹீதா 16 வாக்குகளும், மற்ற இரு சகோதரிகளும் முறையே 3 மற்றும் 2 வாக்குகள் பெற்றனர்.

து-ஆ வுடன் கூட்டம் sorry ஓட்டெடுப்பு நிறைவுபெற்றது.

ஓட்டெடுப்பு sorry கூட்டம் (Entire Process) ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

வேட்பாளர்(கள்) யார் என்று தெரியாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது இதுவே எனக்கு முதல் முறை. இன்ஷா-அல்லாஹ் இதுவே கடைசியாக இருக்குமா?

மொத்த நிகழ்வையும் ஒளிப்பதிவு செய்த ஒளிபதிவாளர்களை தவிர வேறு எந்த மீடிய காரர்கள் கண்ணில் படவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by vilack syed mohamed ali (Hetang) [26 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8834

ஐக்கிய பேரவையால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா , வெற்றி பெற்று , அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் .

எவ்வித ஆர்ப்பரிப்போ , விளம்பரங்களோ இல்லாமல் , சுமூகமான முறையில் , ஊர் ஒற்றுமையை கருதி , நகரமன்ற தலைவி பதவிக்கு போட்டி இட இந்த சகோதரியை தேர்ந்தெடுத்த ஐக்கிய பேரவைக்கு எனது பாராட்டுக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Fuad (Singapore) [27 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8836

அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் நகரமன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரி மிஸ்ரயா மரியாதைக்குரிய ஹாபிழ் எல்.எஸ்.எம். மஹ்மூத் அவர்களின் மகள். நமதூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஊரின் நலன் கருதி உறுதியாக சேவையாற்றுவோம்.

நகரமன்ற தலைவிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். அவரின் சேவை சிறந்தோங்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [27 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8839

Assalamu Alaikum....

I appreciate our Aikiya Payravai's effort in selecting an eligible candidate for the Presidency of our Municipality. Congratulations to our Sister. We hope and pray she leads her team in an efficient way.

For ((I am not offending)) Brother AWS.... I never understands why he always grieves in this comments page?! In this page, has always offload loads of complaint?! What is he trying to prove to the subscribers of kayalpatinam.com?! If he was not being informed of the candidates contesting, he should have had clarified that prior going to the poll gathering?! I never see any of his argument justified in this page.

Dear Kayalites, It is an unified stand by all Jama’at to support our (s)elected sister. Let us support her candidature for the unity and welfare of our society in general.

Wassalam,
AbdulKader


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஓன்று படுகிறது காயல் !
posted by K M SHAFEER ALI (CHENNAI) [27 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8840

அஸ்ஸலாமு அழைக்கும்

ஓன்று படுகிறது காயல் (அல்ஹம்துலில்லாஹ் ....)

ஆம்

அன்று

தாவா செனட்டர் பிரச்சனையில் அணைத்து ஜமாத்து மக்களும் ஓன்று பட்டோம்

இன்று

ஊர் தலைவியை தேர்ந்தெடுக்க ஓன்று பட்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ் !

இந்த ஒற்றுமை நம்மிடையே கடைசிவரை இருந்தால் நாம் மட்டும் இல்லை நம் ஊரே அல்லாஹ்வின் கிருபையால் நலமும்,வளமும் பெறுவோம்

பொது வேட்பாளராக தேர்தெடுக்கபட்டுள்ள நம் அன்பு சகோதரிக்கு என் துவாவுடன் கூடிய வாழ்த்துக்கள்

இந்த சகோதரியை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது அணைத்து காயல்ர்களின் கடமை

இந்த சகோதரியோடு களத்தில் இருந்த மற்ற 3 சகோதரிகளும் இந்த சகோதரிக்காக நம் ஊர் நன்மைக்காக ஒத்துளைப்பதோடு துவாவும் செய்யவும்

வாழ்த்துக்களுடன்

K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [27 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8843

சகோதரர் அப்துல் வாஹித் அவர்களுக்கு கோடி நன்றிகள்.

இந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் நாங்கள் அனைவர்களும் கலந்துகொண்ட உணர்வு ஏற்படுகின்றது. அவ்வளவு விபரமாக எழுதியுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் யார்? யார்? எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார்கள்.

ஓட்டு எடுப்பில் சேர்க்கப்பட்ட வேட்பாளர்களின் தகுதிகள், அவர்கள் முன்பு மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்பதையும், தாங்களோ அல்லது சகோதரர் சட்னி செய்யத் மீரான் அவர்களோ விவரித்தால் நல்லது.

எப்படியோ, ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, தலைமைக்கு கட்டுப்பட்டு, நாம் அனைவர்களும் ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களின் வெற்றிக்கு துஆ செய்து, அதற்க்கு உழைத்து, ஓட்டும் போடனும்.
-----------------------------
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.

ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் No. 7144. Volume :7 Book :93

வாழ்த்துக்களுடன்,
சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [27 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8844

நகரமன்ற தலைவியை சுமுகமாக தெரிவுசெய்த காயல் ஐக்கியபேரவைக்கு வாழ்த்துக்கள்.

61 க்கு 40 என்ற வாக்கெடுப்பில் சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா வெற்றிபெற்றாலும், மொத்த உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதகவே பொருள்.

இவர் ஐக்கியபேரவையின் பொதுவேட்பாளர்.

ஐக்கியபேரவையின் வேட்பாளர் நகர தலைவர் தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற துஆ செய்கிறோம்.

காயல் ஐக்கியபேரவையின் வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வாக்குப்பதிவும் செய்துவிட்டு, வெளியில்வந்து ஐக்கியபேரவையின் செயல்பாட்டை இணையதளங்களின் வாயிலாக விமர்சிப்பது "காயல் மக்களின் முதுகில் குத்துவது" போன்ற செயலுக்கு ஒப்பானது.

உங்கள்ளுக்கு மாற்று கருத்து எதுவும் இருப்பின், ஐக்கியபெரவைக்குள்ளேயே வலியுறுத்தி, உங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்றுகொள்ள செய்திருக்கவேண்டும்.

அதைவிடுத்து, வெளியில் விமர்சனம் செய்வது, ஊர் ஒற்றுமைக்கு உலைவைப்பதாகும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஒற்றுமையை குளைக்கும் செயல்பாட்டை தவிர்ப்பது நல்லது.

காயல் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salih (Bangalore) [27 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8847

Wish u all the best to the sister..

With Best regards,

Mohamed Salih
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (singapore) [27 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8848

சதக் தம்பி காக்கா, வாஹித் காக்கா ஒன்றும் தப்பாக சொல்ல இல்லையே? ஐக்கிய பேரவை உள்ளே என்ன நடந்தது என்பதை எல்லோருக்கும் அறிய தந்து இருக்கிறார்.

உங்கள் கருத்து " அதைவிடுத்து, வெளியில் விமர்சனம் செய்வது, ஊர் ஒற்றுமைக்கு உலைவைப்பதாகும்" என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஐக்கிய பேரவைக்கு உள்ளேயே சந்தேகங்களை நிவர்த்தி செய்து விட்டு தான் இந்த இணையதளத்தில் சொல்லி இருக்கிறார். தட்டி கேட்பது அவரவர் தனி உரிமை.

எனினும் உங்கள் வாதத்தை சொல்லாம். வார்த்தைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Our wishes & other side of the coin
posted by ahamed mustafa (Dubai) [27 September 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8849

Whilst congratulating & wishing the sister incumbent for this position & by all means assuming that we can see a job well done given the background she has.

Let me put a point here, as raised in this forum, it's always good for us to know the other side of the coin of the closed door, meetings. I always appreciate & enjoy reading some facts brought to light by Bro.Abdul Wahid, which none of us would know had this not been high lighted. In a democratic set up I feel this is essential & healthy.

Whatever happens that is for good. Seems a good choice !! Go sister.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - RIYADH) [27 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8851

ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாம் அனைவரும் நம் ஊரின் நன்மைகளை மட்டுமே நம் மனதில் உறுதி கொண்டு அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த சகோதிரியின் வெற்றிக்கு பாடுபடுவோம். வல்ல நாயன் அருளால் நமது ஊரு பல வகைகளிலும் நன்மைகள் பெற்று பயன்பெற நாம் அனைவர்களும் துஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [27 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8854

"வேட்பாளர்(கள்) யார் என்று தெரியாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது இதுவே எனக்கு முதல் முறை. இன்ஷா-அல்லாஹ் இதுவே கடைசியாக இருக்குமா?" என்று பதிவுசெய்தது ஐக்கியபேரவை கிண்டலடிப்பது போன்று எனக்கு தெரிந்தது .

மற்றபடி நான் யாரைப்பற்றியும் தனிப்பட்டமுறையில் தரக்குரைவாக ( இப்போதும்) எழுதவில்லை. எப்போதும் எழுதவும் மாட்டேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Fuad (Singapore) [27 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8858

சகோதரர் சதக்தம்பி, தம்பி வாஹிதின் கருத்துக்களை நன்றாக படித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவித்திருக்கலாம். வாஹித் எந்த இடத்திலும் ஊரின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகள் எதையும் உபயோகிக்கவில்லை.

ஐக்கிய பேரவை தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கே தான் சொல்லிய கருத்தக்களை மக்களுக்கு தெரிவித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அவர் யாருடைய முதுகிலையும் குத்தவுமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.R.Refaye (Abudhabi) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8859

புதிய அத்தியாயத்தை நம் நகர் மன்றத்தில் பதிக்க தேர்தெடுக்க பட்ட சகோதிரி மிஸ்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.40 வோட்ஸ் என்பது காயல் ஜமாஅத்களின் யகோபித்த முடிவு அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை போட்டி இன்றி அவர் தலைமையில் நகராச்சி சிறப்பாக அமையட்டும் நாம் எல்லாம் வேறுபாடுகளை மறந்து மறைத்து ஊர் நலன் காக்க உறுதி எடுப்போம்.

சகோதரர் சதக் தம்பி அவர்களின் கருத்து சாடல் உள்ளபடியே மன நெருடலை தருகிறது,சகோ வாகித் சபையில் நடந்ததை தானே சொல்லி உள்ளார் மிகை படுத்தி தந்திருப்பின் உங்கள் கருத்து வரவேற்க ஒன்று ஆனால் ஊர் நலனில் உங்களை போன்று அக்கறை கொண்டு கலந்து தம் பங்களிப்பை முறையாக தந்த சகோதரர்களை விமர்சிப்பது அதுவும் சகோதரர் சதக் தம்பி அவர்களின் கருத்தில் பார்க்கும் போது--------உங்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன வேண்டாம் சிறந்த,சீரிய என்ணம் கொண்ட நீங்கள் தான் "நடந்தது என்ன" தந்திருக்க வேண்டும் அதை விடுத்து "நீயா நானா "அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

கருத்தில் பிழை இருப்பின் பொருத்தருள்க.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by வெள்ளி முஹியதீண் (காயல்பட்டணம்) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8860

நகராட்சி தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட சகோதரிக்கு இதயம் கணிந்த வாழ்துகள்.

ஜமாதுகள் தெரிவு செய்த வேட்பாளர்களின் விபரம் ஜும்மாவிலும், பிரசுரம் வாயிலாகவும், பள்ளிகலின் ஒலி பெருக்கி வாயிலாகவும் மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும்

ஊரிண் அனைத்து முஸ்லிம் மக்கலும் அந்த வேட்பளர்களிண் வெற்றிக்காக உழைக்க வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackienoohuthambi (kyalpatnam) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8861

நினைத்தபடி தலைவர் தேர்வு ஒருமனதாக இல்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. எது எவ்வாறாயினும் தேர்தல் முடிவுகள் வரை காத்திருப்போம்.

யார் வெற்றிபெற்றாலும் அவர்களுக்கு மக்கள் எல்லோரும் ஒத்து உழைப்புக்கொடுத்து நமதூருக்கு அவசிய தேவையான கூட்டுக்குடிநீர் திட்டத்தை பெற்றுத்தரவேண்டும் என்று திடசங்கல்பம் கொள்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AHMED MOHIDEEN (dubai) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8862

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது அல் அமீன் நற்பணிமன்றம் FOUNDER MEMBER N T AHMED SALAHUDEEN காக்க WIFE தேர்ந்து எடுத்துள்ள ஐக்கிய பேரவைக்கு மிக்க நன்றி

ஊர் ஒற்றுமையை நிலைநாட்ட போட்டின்றி தெர்தேடுப்பது மிக நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Abdul Kader (AL Khobar) [27 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8863

நல் வாழ்த்துக்கள். வாருங்கள் நல் ஆட்சி தாருங்கள் மைமூனத்துல் மிஸ்ரியா அவர்களே.

என்னதான் ஐக்கிய பேரவை இவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தாலும் அதன் பிறகு வோட்டையும் போட்டு விட்டு, ஐக்கிய பேரவை பற்றி வெளியில் குறை கூறும் நபர்களை என்ன வென்று சொல்லுவது.

தங்களுக்கு ஐக்கிய பேரவை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருப்பது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ஒற்றுமையை பறை சாற்றுவோம்
posted by Miskeen Sahib (Bangkok) [27 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8865

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி மைமூனதுல் மிஸ்ரியா அவர்கள் ஒருமனதாக தேர்தெடுக்க அனைவரும் ஒத்துழைத்து ஊர் ஒற்றுமையை மீண்டும் பறை சாற்றுவோம். நம் ஊர் மக்கள் எல்லா காரியங்களிலும் ஓற்றுமையாய் இருந்து அரசின் நல்ல பல திட்டங்கள் நமக்கு கிடைத்திட வல்ல நாயன் துணை நிற்பானாக. சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S Mohamed Shuaib (kayalpatnam) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8869

ஐக்கிய பேரவையில் நடந்த வாக்கெடுப்பு விவரங்களை சகோ.வாஹித் வெளிப்படையாக சொன்னதில் என்ன தவறு?

ஒரு மக்கள் பிரதிநித்துவ அமைப்பு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். இப்போதும் கூட தங்கள் இணயதள செய்தியில் யார் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன எனபது சொல்லப்படவில்லை. சகோ.வாஹிதின் பதிவில்தான் அவை தெரிய வருகின்றன.

சகோ சதக்கு தம்பி ஓன்று கடுமையாக பேசிவிட்டாதாக நான் நினைக்கவில்லை. என்றாலும் ஐக்கிய பேரவையை யாரும் தொடவிடாத "தொட்டால் சிணுங்கி "யாக இருப்பதை அவரது தொடர்ச்சியான பல பதிவின் மூலம் நான் அவதானித்து இருக்கிறேன்.

தொடர்ந்த "ஜனநாயகப்படுத்தல்"மூலமாகத்தான் ஐக்க்கியப்பேரவை தன்னை நிலை நிருத்திக்கொள்ளமுடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. All the best Ya Salah!
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [27 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8874

We expect your support & service to the entire Kayal as you served/serving with Al-Ameen (AYWA) & ANP Jama'th (Acting Muthawalli).

என்றும் அன்புடன்
Anasudeen & Noordeen
Jeddah - Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாலிஹ் (பேங்காக்) [27 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8878

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சமூக ஆர்வலருமான சலாஹுத்தீன் காக்கா அவர்களின் மனைவியை நகர்மன்ற தலைமைக்கான வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட, தெரிவு செய்ய வாக்களித்த அனைத்து ஜமாஅத்,பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் இதற்காக உழைத்த நல் உள்ளங்கள் இதனை தலைமை ஏற்று நடத்திய ஐக்கிய பேரவையினருக்கும் எனது முதற்கண் நன்றி ! வெற்றி பெற்று , அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் .

ஐக்கிய பேரவையால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா அவர்கள் கவனத்திற்கு:

உங்கள் அறிவாற்றலால் ஜாதி,மதம்,இனம்,மொழி ஆகியவற்றை கடந்து தன்னலமில்லாத நேர்மையான சேவையை நம் நகர் மன்றத்துக்கு தரவேண்டும்.

அல்லாஹ் திருக்குர் ஆனில் கூறுவது போல் தக்வா( GOD Conscious ) எனும் ஆடையை எப்போதும் அணிந்தவர்களாக இருக்கவேண்டும். உங்கள் (இம்மை மறுமை) வெற்றிக்கு இன்ஷா அல்லாஹ் இது வழி வகுக்கும். சமுதாயத்திற்கு ஒளி கிடைக்கும்

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Hameed Mohamed (Cnash) (Kayalpatnam.) [27 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8881

நன்றி! சஹோ. வாஹீத் காக்கா!! நடந்தவைகளை மக்களுக்கு சொன்னதற்கு!! இதில் சஹோ. சதக்கு தம்பி என்ன தவறை கண்டுபிடித்தாரோ தெரியலே!! ஐக்கிய பேரவை தன்னுடைய செயல்களில் வெளிப்படை (transperancy ) தன்மையே இன்னும் காட்டுவது நல்லது!! இது ஊர் மக்களுக்காக உள்ள அமைப்பு...நகர் தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்கும் கூட்டம் தானே இது..இது என்ன நாசா ரகசியமா அங்கே நடந்ததை வெளிய தெரிவிக்காம இருக்க!!!

எத்தனை பேரு விருப்ப மனு தாக்கல் செய்தார்கள்... எந்த முறையில் தேர்தெடுக்கபட்டார்கள் எதற்காக நிராகரிக்க பட்டார்கள் தேர்தெடுக்கபட்டவரின் அனுபவம் என்ன திறமை என்ன என்பதை ஐக்கிய பேரவையே அதன் செய்தி தொடர்பாளர் மூலம் மக்களுக்கு சொல்லி இருக்கலாமே!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8882

இந்த ஒற்றுமை 'பூச்சாண்டி' கதையையில் காலம் தள்ளும் நிலை எப்போதுதான் ஒழியுமோ தெரியவில்லை..!!

ஐக்கியப் பேரவை ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பற்பட்ட / விமர்சிக்க கூடாத (இறைத்தூது வரும்) அமைப்பு இல்லை.

இந்த SO CALLED ஒற்றுமையில் சிறு அக்கரை உள்ள எவரும் தவறை சுட்டிக்காட்டுவது தான் சரி. தனிப்பட்ட இரகசியங்களைத்தான் வெளியில் சொல்வது நாகரிகமில்லை பொது விசயங்கள் வெளியிலும் பேசப்படவேண்டும், அப்போதுதான் அக்கறையுள்ளவர்கள் பங்கு எடுப்ப்பர்கள்.

என்ன நடந்தாலும், சம்பந்த பட்ட இடத்தில்தான் சொல்லவேண்டும் என்றால் - நீங்களும் நானும் ஊழல், லஞ்சம் போன்றவற்றை அதை செய்யும் மந்திரிகளிடமோ அல்லது குறைந்தபட்சம் நகர்மன்ற உறுப்பினராகி மன்றத்திலோதான் பேசவேண்டும் - நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க 'GOOGLE' காலத்தில் யாருக்கும் நம் WEAKNESS தெரியாமல் இருக்க !!

AWS நடந்ததை வரிசைபடுத்தி இருக்கிறார் அவ்வளவுதான் இதில் நல்லதையும் தனக்கு சரியில்லாததையும் சொல்லியிருக்கிறார். முடிவை நிராகரிக்க வில்லையே

இதில் முதுகில் குத்தவோ அல்லது மூக்கில் குத்தவோ ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

சென்ற கூட்டத்தை ஒப்பிடுகையில், இம்முறை பேரவையின் அனுகுமுறையின் மாற்றங்களுக்கு வெப் சைட்களின் கமென்டுகள் ஒரு பெரும் காரணம் என்பதை மணசட்சியுள்ள எவரும் மறுக்க இயலாது - வெளியில் வந்து பேசி என்ன பயன் என கேட்கும் நன்பர்கள் உள்பட..

நகர்மன்றம் பெண்களுக்கு ஒதுகப்பட்டதில் கூட இறைவன் நன்மையை நாடியிருப்பான் போலும்!! அல்லாமல் பொதுவானதாக இருந்தால் இவ்வளவு எளிதில், இவ்வளவு விரைவில் "ஆர்ப்பாட்டம் இல்லாமல்" முடிவு வந்திருக்காது.

பொது சேவையில் ஆர்வமான அவரது கணவரும் சகோதரின் சிறந்த செயல்பாட்டுக்கு துணையிருந்து இறையச்சத்துடன் நீதமாக நகரவையை வழிநடத்த இறைவனை வேண்டுகிறேன்.

ஓர் வேண்டுகோள்:

நல்ல முன்மாதிரியாக கோமான் ஜமாத்தின் ஹாஜி லுக்மான் காக்கா கொடுத்ததுபோல இந்த சகோதரியும் ஓர் உறுதிமொழி கொடுத்து எல்லோரின் முழு நம்மிக்கையுடன் தலைவியாகட்டும்.

இதுவும் இந்கு சொல்லணுமோ அல்லது டிக்கட் எடுத்து ஊருக்கு போய் ஐக்கியப்பேரவையில் தான் சொல்லனுமோ தெரியல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [27 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8887

அஸ்ஸலாமு அழைக்கும்.!!!

அல் அமீன் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் நண்பர் சலாஹுதீன் அவர்தம் மனைவிக்கு வாழ்த்துக்கள்! நண்பா வழி நடத்திச்செல். இங்கு ஒட்டு உரிமை அனைவரும் ஒப்புக் கொண்டபின்புதான் நடை பெற்றுள்ளது. யாரையும் வற்ப்புறுத்தி அல்ல.

சகோ சதக்கு தம்பிக்கு ஏதோ ஐக்கிய பேரவையை கிண்டல் செய்தது போல், தோன்றியது உண்மைதான். உள்ளே என்னது நடக்கிறது என்று வேவு பார்க்கவா நாம் போனோம்? நாமும் அதில் ஒருவர்தானே. நாம் ஒற்றுமைக்காக ஒன்று படுவோம்.விமர்சனங்கள் நம் மனதினை புண்படுத்தும். வாழ்த்துவோம் சகோதரியை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sithi katheeeja (singapore) [27 September 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 8889

ஐக்கிய பேரவையின் மூலம் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களை தேர்ந்தெடுத்திருப்பது அறிய சந்தோஷம்.சகோதரி அவர்கள் மூலம் நம் நாடு வளம் பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். சகோதரி மிஸ்ரிய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.சகோதரி அவர்களுடன் போட்டியிட்டவர்களின் பெயர்களை தெரியப்படுத்தவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Kangxi) [27 September 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 8891

நல்லதோ , கெட்டதோ , பெருவாரியான ஜமாத்துகளின் சம்மதத்துடன் , ஐக்கியப்பேரவையால் ஒரு நபரை தேர்ந்தெடுத்தாயிற்று . அந்த நபருக்கு நாம் அனைவரும் , முழு மனதுடன் ஒத்துழைப்பு கொடுப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே தவிர , " தட்டி " கேட்பேன் , " கொட்டி " கேட்பேன் என்பதையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்தால் உங்களுக்கும் நல்லது , ஊருக்கும் நல்லது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by N.M. MOHAMED ISMAIL (DUBAI) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8898

தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சகோதரி மிஸ்ரியாக்கு வாழ்த்துக்கள்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற அணைத்து சகோதரிகளும் வார்டு மெம்பெர் தேர்வில் நிறுத்த ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்யலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Ibrahim S.A (Dubai) [27 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8899

It seems to be a making problem for Mr.Sadak Thamby, which is Mr.wahid made a statement exactly correct.

*Thanks for your information Mr.Wahid keep it up.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. மெகாவுக்கு மகா வெற்றி கிட்டியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்……………………
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [27 September 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 8906

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மெகாவுக்கு மகா வெற்றி கிட்டியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்……………………

உங்களின் சேவை நமதூருக்கு தேவை நீங்கள் வெற்றி பெற்று சேவை ஆற்ற வல்ல இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாக !!ஆமீன்........

Moderator: தேவையற்ற விவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by H.M.SEYED AHAMED (chennai) [27 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8913

எமது அல்-அமீன் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ந.த. அஹ்மத் சலாஹுதீன் காக்கா அவர்களின் மனைவிக்கு வாழ்த்துக்கள்.நகர்மன்ற தலைமைக்கான வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்கலுக்கும் ஐக்கிய பேரவையினருக்கும் எனது நன்றி ! வெற்றி பெற்று , அவருடைய பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. 40 + 21 = 61 அந்த 21 பேர்களுக்கு....
posted by zubair (riyadh) [27 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8915

அஸ்ஸலாமு அலைக்கும். ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி - பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ள ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்கள் நமது ஊர் ஒற்றுமையின் அடிப்படையில் ஐக்கிய பேரவையின் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தேர்ந்து எடுத்தமைக்கு முதற்க்கண் சகோதரிக்கு வாழ்த்துக்களும், ஊர் ஒற்றுமைக்கு அரும் பாடுபட்டு எதிர்ப்புகளையும் சகித்து அல்லாஹுக்குகாக அவனின் கயிற்றை பற்றிபிடிக்க வைக்க எங்களை போன்றவர்களுக்கு உதவும் ஐக்கிய பேரவைக்கு கோடான கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

எனது அந்த 21 சகோதரர்களே.........

தாங்கள் இந்த சகோதரிக்கு வாக்களிக்கவில்லை என்பது நடந்து முடிந்த காரியம். ஆனால் தாங்களும் இப்பொழுது இந்த சகோதரியை ஆதரிக்கிறீர்கள் என்பது இறைவன் விதித்த விதியாக இருப்பதால்...... தாங்கள் அனைவரும் இந்த சகோதரி வெற்றி பெற்று நகர்மன்றத்தில் அமர உதவிடுங்கள் வேற்றுமையாய் எடுக்காமல் இறைவனின் கயிறாகிய (ஒற்றுமையை) முஹல்லாவாசிகளுக்கு உணர்த்தி இந்த சகோதரியை ஆதரிக்க சொல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் இதயம்களை ஒன்றினைப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. சாதாரண பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க வரும் மக்களிடம்..ஓநாய்கள்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8919

அன்பு சகோதரிக்கு - அஸ்ஸலாமு அழைக்கும் தேர்ந்தெடுக்கபட்டதற்கு வாழ்த்துக்கள்...

வீட்டில் சும்மா இருந்து கொண்டு தொலைபேசி மூலம் அலுவலக பணியை இயக்குபவராக இருக்காதீர்கள்... முழு நேர மக்கள் நல ஊழியரா தினமும் நகர் மன்றத்திற்க்கு போய் வந்து அலுவலக பணியை (கோப்புகளை) ஆராய்பவராக இருங்கள்... தினமும் பல தேவைகளுக்காக வரும் மக்கள் குறைகளை உடனே கேட்டு அறிந்து அதன் சம்பந்தபட்டவரை அணுகி நிவர்த்தி செய்ய கூடியவராக இருங்கள்... சாதாரண பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க வரும் மக்களிடம் நகர்மன்றத்தில் பணி செய்யும் சில ஊனமுற்ற ஓநாய்கள் 100 கொடு 200 ரூபாய் கொடு என்று கேட்டு இழுத்தடிக்கும் ஊனமுற்ற ஓநாய்களை அடையலாம் கண்டு எச்சரிக்கை செய்யுங்கள்...

நீங்கள் ரெம்ப பெரியதா ஒன்றும் ஊருக்கு பாடுபட முடியாட்டாலும்...! இந்த விசியதில்லாவது அக்கறை எடுத்தால் போதும்...! இது என் கருத்து..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - வி சி கட்சி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [27 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8920

புதிதாக ஊர்தலைவியாக போருப்பெற்றிட வரும் சகோதரிக்கு வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியா நடந்தேற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.

ஒருவழியாக ஒருமித்த கருத்தோடு நடந்தேறி இருக்கும் கூட்டத்தில் நடந்தவற்றை கூறுகையில் "வேட்பாளர்கள் யார் என்று தெரியாமல் போனவர்களில் நானும் ஒருவன் என்று சொன்னதில் கேலியின் சாயல் இருப்பதை சொல்லத்தான் மற்றொரு நண்பர் வேகமா சொல்லிவிட்டாரோ? எப்படி இருந்தாலும் மேலும் இந்த வாதத்தை தொடராமல் எல்லோரும் ஒன்றுபட்டுவிட்டோம் என்ற நினைப்பை திடப்படுத்திக்கொண்டு உம்மத்துக்கு நல்லதை செய்ய முயல்வோம்.

நகராட்சி தலைவருக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது, அவருடையா அதிகாரதிற்கு உள்பட்ட சேவை என்னென்ன என்பதை விளக்கினால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. நாளும் நமதே நாற்பதும் நமதே ..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [27 September 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8923

நகர்மன்றத் தலைவருக்காராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . தாங்கள் வெற்றி பெற்ற வாக்குகளை பார்க்கும் பொழுது நாளும் நமதே நாற்பதும் நமதே என்று ஒரு அரசியல் தலைவர் சொன்னது நினைவிற்கு வருகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [27 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8930

Horses with blinkers can not see what is on their right and what is on their left. How many times did Bro. Abdulkader (Abu dhabi) visit the polling station in order to cast his vote without the proper information about the candidate ?

I have very little knowledge about Abu dhabi. I will appreciate if Bro.Abdulkader can enlighten me in this regard. Do people in Abu Dhabi go to the polling station to cast their vote without knowing who are the candidates are and how many of them? Certainly here in our country the organizers of the election, (be it a company or government) always inform the voters about the candidates well before election. So, being an Indian, I expected the same from this election too. Was it my mistake?

Above all I did not know that I will be asked to vote on our very first meeting.

I could have easily raised this issue during the process. But I purposely let it go as I felt that there is no use.

a. Because few times if not many a times, I have raised very similar issue but to no avail.

b. I am the only person to voice the same.

Now I have understood that existing habits are hard to change. They have their way of doing it. I have mine.

As far as "backstabbing" concern, Someone numbered me as 'Backstabber" for telling the truth, then I am proud to be one.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [27 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8939

பேரவையின் Official Statement எங்கே ?

விண்ணப்பித்தது யார் யார்? ஒட்டேடுப்புக்கு தகுதியானோர் யார்? இதெல்லாம் தெரியபடுதுவார்களா? இதுவும் சிதம்பர ரகசியம்தான?

அல்லது வழமை போல இதையும் AWS காக்காதான் சொல்லி வாங்கி கட்ட வேண்டுமா?

பெரும்பான்மை தான் ஜனநாயகதிதின் சாபக்கேடு, இதை வைத்துத்தான் உலகிலும், நாட்டிலும், நகரிலும் ஆண்டவனை மறந்து ஆட்டம் போடுகிறார்கள்.

ஏதாவது கேட்கப்போனால் நாட்டைவிட்டு வெளியேறு என்று சொல்லும் வழக்கம் இப்போது நம்மிலும் வந்துள்ளது "பிடிக்காதவர்கள் பேரவையிலிருந்து வெளியேறட்டும்" என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.S.M.Muhammad Meera Sahib (Chennai) [27 September 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 8942

First of all Thaks to Allah and then Kayalpatnam Ikkiya Peravai. Peravai elect right canditate at right place on right time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by syed omer kalami (colombo) [27 September 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 8943

by looking wahid kaka "s statment something gone wrong in AIKIYA PERAVAI ELECTION.totally something unfair done.PERAVAI already preplanned and decided, whom to elect..PERAVAI SHOULD WORK WITH IQLAS AND FOR WHOLE OF KAYAL PEOPLE WITHOUT DIFFERENCE AND COLOUR.so only all section will keep faith in it .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by KMA Kader (Chennai) [27 September 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 8947

நகர்மன்றத் தலைவருக்காராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ஐக்கிய பேரவைக்கு ஒரு வேண்டுகோள் மாத்து வேட்பாளரையும் பதிவு செய்யுங்கள் ஏனெனில் மனு பரிசீலனை செய்யும்போது நிராகரிகபடாமல் இருக்கவேண்டும் வஸ்ஸலாம்

கே.எம்.எ .காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.S.Kader Sahib (Chennai) [28 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8980

நகர்மன்றத் தலைவருக்காராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [28 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9017

In his statement he didn’t say anything went wrong “said I am among the people gone there without knowledge of candidates and who are those”. Otherwise everything on mark, the candidate is elected (by vote) not selected. So don’t mislead the public by posting pessimistic comments and imagination.

(by looking wahid kaka "s statment something gone wrong in AIKIYA PERAVAI ELECTION. totally something unfair done. PERAVAI already preplanned and decided, whom to elect.. PERAVAI SHOULD WORK WITH IQLAS AND FOR WHOLE OF KAYAL PEOPLE WITHOUT DIFFERENCE AND COLOUR. so only all section will keep faith in it .posted by syed omer kalami)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ahmed shahul Hameed(Abusabu cabs) (Kayalpattinam) [28 September 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 9052

Assalaamu Alaikkum.

Please choose only the represetative who know how to respect and treat the people. better try to identify those so called "kind hearted" people. whom disrespect and treat people negligibly their house maids, cooks, drivers etc. and also try to note that all who sport a beard are truly pious(thaqwa)people.

this is my suggestion to the "Kayal muslim united council" the things I stated above are my own experience and the experience of my brethren drivers.so please avoid persons with this type of personalities.

may Allah show his right path all of us!led "kind hearted"people.whom disrespect and treat people negligibly their house maids,cooks,drivers etc.and also try to note that all who sport a beard are truly pious(thaqwa)people.this is my suggestion to the "Kayal muslim united council" the things I stated above are my own experience and the experience of my brethren drivers.so please avoid persons with this type of personalities.may Allah show his right path all of us!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Habeeb (Doha - Qatar) [28 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9070

ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாம் அனைவரும் நம் ஊரின் நன்மைகளை மட்டுமே நம் மனதில் உறுதி கொண்டு அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த சகோதிரியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.

இதே இணையதள செய்தியில் 2 வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்து இருந்தார்கள். பொதுவாக தேர்தல்களில் அறிமுகமானவர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். அந்த அடிப்படையில் நல்ல திறமைமிக்க சுயேச்சை வேட்பாளரை தலைவர் பொறுப்பிற்கு வாக்காளர்கள் (ஊர் பிரதிநிதகள்) தேர்ந்தெடுத்ததாக எண்ணிக்கொண்டு, "வேட்பாளர்(கள்) யார் என்று தெரியாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது இதுவே எனக்கு முதல் முறை. இன்ஷா-அல்லாஹ் இதுவே கடைசியாக இருக்குமா?" என்பது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நன்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. திருமதி மிஸ்ரிய்யா அவர்களை தலைவருக்கு என்ன தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10128

4 வது வார்டு உறுப்ப...ினர் பதவி போட்டிக்கே தனது தகுதியை இழந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களை தலைவருக்கு என்ன தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது...? ஆமினா பள்ளியில் 4வது வார்டுக்கு ஜமாஅத் ஆதரவுடன் போட்டியட 3 நபர்கள் கலந்து கொண்ட வாக்கெடுப்பில் அந்த 3 நபர்களில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்... ஆமினா பள்ளியில் நடந்த ஜமாத்தார்கள் வாக்கெடுப்பில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!!

மக்களை ஏமாற்ற முடியாது...! முன்பு போல் மக்கள் இல்லை ரெம்ப ரெம்ப உஷாரா இருக்காங்க...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved