Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:09:12 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7364
#KOTW7364
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 12, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தல் குறித்த மலபார் கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம் குறித்த விமர்சனங்களுக்கு, அவசர செயற்குழு விளக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் குறித்த மலபார் காயல் நல மன்றத்தின் செயற்குழு தீர்மானம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து, அதற்கான விளக்கத்தை மலபார் காயல் நல மன்றத்தின் அவசர செயற்குழு பின்வருமாறு வெளியிட்டுள்ளது:-

மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) அவசர செயற்குழு கூட்டம் மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் அவர்கள் தலைமையில் 11-10-11 அன்று இரவு 9 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது.



நகர் மன்ற தேர்வு:
நகர் மன்ற தேர்வு விசயமாக 9-10-11 அன்று செயற்குழு மினிட்டில் உள்ள தீர்மானம்:- ஊரில் நகராட்சி தேர்தல் பற்றி உறுப்பினர்கள் மத்தியில் கலந்தாலோசனை நடந்தது. மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் அவர்களுக்கு இந்த விசயத்தில் உடன்பாடு இல்லாததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். நமது ஊர் நலன் கருதி நகர் மன்ற தலைவர் பொறுப்பிற்கு வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா என்ற பெண்ணுக்கு MKWA தனது முழு ஆதரவை தெரிவிக்கின்றது. நகர் மன்ற தேர்வு விசயமாக கலந்தாய்வில் செயற்குழு உறுப்பினர்கள் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 12 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் வெளிநடப்பு செய்தார். மீதம் உள்ள 11 உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில் தலைவர் நீங்கலாக 8 ஆதரவும் ஒரு எதிர்ப்பும் ஒரு நடுநிலையும் வைத்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது.

செயலாளர் அறிக்கை:
மேலும் இந்த சலசலப்பால் MKWAவின் ஒற்றுமைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் கூட்டத்திற்கு உணர்த்தி சொன்னார்.

இரவு 9.00 மணிக்கு துடங்கிய கூட்டம் இரவு 10௦.30 மணிக்கு அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [12 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10376

அஸ்ஸலாமு அழைக்கும்...

ப்ப்பு.............. இதைத்தான் சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் "உண்மை" என்று சொன்னாரா????

சிரிப்புதான் வருது.... "எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு நான் செய்தேன்" இன்று கருத்து பதிவு செய்தலே போதுமே! எதற்கு எங்களை எல்லாம் இவர்கள் குழப்ப வேண்டும்?

இனி "ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா" நம் யாவரையும் குழப்பாமல் இருந்தால் சரி.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதுதான் ஜனநாயகம் மிகவும் தெளிவான,திடமான முறையில் செய்துள்ளிர்கள் மசூத் காக்கா மனமார்ந்த நன்றிகள்.
posted by சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.) [12 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10379

அஸ்ஸலாமு அலைக்கும்...

உடனடியாக அவசர கூட்டம் போட்டு அலசி ஆராய்ந்து முந்தய கூட்டத்தில் நடந்தது என்ன என்று விளக்கமாக, விபரமாக அறிவித்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

வலைதளம் மூலம் அவரவர் கருத்தை பதிவு செய்வார்கள்.. இதற்காக வேண்டி உங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் எந்த காரணம் கொண்டும் வேண்டாம்.தீய சக்திகளை உங்களை விட்டும் என்றும் தூரமாக்கி வைப்பானாக அல்லாஹ் ஆமீன்.

உங்கள் மன்றத்தின் செயல்பாடுகளும், உங்கள் சொந்த வியாபாரங்களில் தகுந்த கவனமும் செலுத்தி வீறு நடை கொண்டு வெற்றி பயணம் மேற்கொள்ளுங்கள் இறைவன் உங்கள் காரியங்களில் என்றும் துணை புரிவானாக ஆமீன்.

எனது அண்டை வீட்டுகாராரும், என்அன்பு சாளைஅப்பா அவர்களின் மகனும்,பாசத்திற்குரிய சகோதரர் மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் அவர்களுக்கு இந்த விசயத்தில் உடன்பாடு இல்லாததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது நியாயமே. மீதம் உள்ள 11 உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில் தலைவர் நீங்கலாக 8 ஆதரவும் ஒரு எதிர்ப்பும் ஒரு நடுநிலையும் வைத்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது.

இதுதான் ஜனநாயகம் மிகவும் தெளிவான,திடமான முறையில் செய்துள்ளிர்கள் மசூத் காக்கா மனமார்ந்த நன்றிகள். என்ன புன்னகை பூத்து குலுங்குது உங்களது முகங்களில் புகைப்படம் பார்க்க எங்களுக்கும் சந்தோசம்.

இதற்கும் கேலி கிண்டல்களோடு பதிவு செய்வார்கள் நல்லதை ஏற்று கொள்ளுங்கள்,அல்லாததை விட்டு விடுங்கள் இதுவூம் ஜனநாயகத்தின் பொது விதி என்று...வஸ்ஸலாம் ..

வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.

அலைபேசி .....8508570955


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம். ) [12 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10380

அல்ஹம்து லில்லாஹ்.

" இந்த சலசலப்பால் MKWAவின் ஒற்றுமைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் கூட்டத்திற்கு உணர்த்தி சொன்னார்" ,

இந்த வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.

வரும் காலங்களில் நலமன்றங்கள் இந்த மாதிரி விசயங்களில் அதிக அக்கறை காட்டாமல் இருப்பதே நல்லது.

பலர் பல பல விசயங்களில் வித்தியாசப்படுவார், நம் மன்றங்கள் ஒற்றுமையுடன் மக்களுக்கு நற்பணிகள் செய்வதில் ஒன்று கூடி இருப்பது, அவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது ஆகியவை ஈசியான காரியம் அல்ல.

இந்த ஒற்றுமையை பலரும் பெருமையாக சொல்லுவதை நான் கேட்டது உண்டு. இதே ஒற்றுமை அனைத்து இடங்களிலும் நம்மிடம் வர வல்ல இறைவன் உதவிசெய்வானாக..

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10382

இப்போ மேட்டர் ரொம்ப தெளிவா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் இதற்கும் எப்படி எல்லாம் comments வரும் பாருங்க. எப்படி எட்டு பேர் ஆதரிக்கலாம்? - இது ஒரு தரப்பு. யார் அந்த கருப்பு ஆடு? - இது மற்றொரு தரப்பு.

அப்பாடா... எங்களுக்கு ஒரு வகையா நல்ல டைம் பாஸ் ஆகுது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [12 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10383

கேள்விகள் கேட்கப்ப்படும் போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். கேள்வி கேட்காத சமுதாயம் முன்னுக்கு வருவதில்லை எனபது ஒரு மேற்கத்திய நாட்டின் முதுமொழி. MKWA எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர்களின் இந்த செயலை (விமர்சனங்களுக்கு விடையளிக்குமுகமாக விளக்கம் தந்தது) பாராட்டாமல் இருக்க முடியாது.

விமர்சனங்களை ஏற்று அதற்கு தகுந்த பதில் அல்லது விளக்கம் தரும் அமைப்புதான் தனது சேவையின் தரத்தை உயர்த்த முடியும். இது நாட்டுக்கும் பொருந்தும். தனக்கு எதிராக வரும் விமர்சனத்திற்கு பதில்/ விளக்கம் தரும் நாடுதான் அதன் மக்கள் நலனில் அக்கறையுள்ள நாடாக இருக்க முடியும். கம்யுனிச கொள்கையுடைய நாடுகளிலும் , மன்னர்கள் ஆட்சி நடுக்கும் நாடுகளிலும் விமர்சனகளுக்கு விளக்கங்கள் வராது. மாறாக விமர்சிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நமதூர் பாசையில் சொல்வதானால் ஓரம் கட்டப்படுவார்கள்.

MKWA வின் செயலில் பலருக்கும் படிப்பினையுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [12 October 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 10386

இதில் எந்த குழப்பமும்இருப்பதாக தெரியவில்லை . பெரும்பான்மை யுடன் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

ஒருவர் மட்டும்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்.அதில் தவறில்லை.இந்த தீர்மானத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை போலும்.

ஒருசிலரைப்போன்று, கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு , ஓட்டும் போட்டு விட்டு , பின்பு வெளியில் வந்து ,குற்றம் சுமத்தவில்லை ..

பொதுவாக நமதூரில் முதுகில் குத்தும் கலாச்சாரம் தான் இப்போது அதிகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது . அதற்கு இந்த சகோதரர் எவ்வளவோ பரவாயில்லை.

எனினும் இந்த சகோதரரின் மனமும் மாறும்.மாற வேண்டும் .இவரும் நம் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டுகிறேன்.ஆதரிப்பார் என நம்புவோமாக .அல்லாஹ் நன்மையை நாடுவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sholukku.aj (kayalpatnam) [12 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10388

சலாம் & நன்றி உங்கள் எல்லோருக்கும் .நல்ல ஒரு முடிவை நல்ல சமயத்தில் எடுத்து உள்ளீர்கள் . சத்தியம் வெல்லும் . அசத்தியம் அழியும் . நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [12 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10406

சதக் தம்பி அவர்களே,

நன்றாக சொன்னீர்கள்.

புரியாதர்வகளுக்கு சொன்னால் புரியவைத்துவிடலாம் ஆனால் குழப்பத்தை பித்னாவை உண்டுபென்ன கூடியவர்களுக்கு என்ன தான் போதித்தாலும் புரியாது மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுவதிலும் அவர்களின் இலக்கை (பித்னா செய்வதிலும்) அடைவதிலும் தான் குறியாக இருப்பார்கள்.

அவர்களின் ஆள்கள் எல்லா ஜமாஅதுகளின் மூலமாக (ஐக்கிய பேரவை) தேர்வு செய்யாததினால் - ஐக்கிய பேரவையை குறை சொல்வதிலும் (ஐக்கிய பேரவை ஒருசரருக்கு சொந்தமானது என்றும்), எல்லா ஜமாஅதுகளின் மூலமாக தேர்ந்து எடுத்த நபருக்கு எதிராக நிற்கும் நபரை ஆதரிப்பதிலும் அவர்கள் தாரக மந்திரமாக கொண்டவர்கள்.

அவர்கள் ஊரில் இருந்துக்கொண்டே ஐக்கிய பேரவையை நேரடியோகவோ அல்லது அவர்களின் ஜமாஅத், அல்லது சங்கம் மூலமாகவோ அணுகாமல் ஐக்கிய பேரவையை மூடு மந்திரம் என்று சொல்லூபவர்கள்.

பெரியவர்களை மதித்து நடக்கும் பண்பினை இழந்தவர்கள். இவர்களுக்கு ஊர் ஒற்றுமையை பற்றி என்ன சொன்னாலும் புரியாதப்பா. செவிடன் கத்தில் ஊதிய சங்குதாணப்ப.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10453

Commt Ref : 10382

நூர்தீன் காகா சொல்லுவது 100% சரி. இங்கு கருத்து எழுதும் பல பேர் டைம் பாஸ்காகவே எழுதுகிறார்கள். பின்னே office முடிந்து வந்தவுடன் பொழுது போக வேண்டாமா? அப்படி ஊரின் மேல் அக்கறை உள்ளவர்கள் இது வரை ஊருக்காக என்ன செய்து இருக்கிறார்கள் ( except 10 - 15 % )

சொல்லுகிறவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள் செய்ரவர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள்

ஆகையால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இங்கு வரும் கருத்தை பார்த்து குழம்ப வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by omar abdullatheef (RIyadh) [12 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10454

Hello Associations , Pls give up your useless selection or election process to support a particular candidate .

Instead Keep up your honour to fight against corruption voting which is planned by the famous Kayal V.I.P to make victory their organisation elected Candidates .for the Chairman post ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by seyed Mohamed Sayna (Bangkok) [13 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10496

Ref. No::10453

அன்பு சகோதரர் அவர்களே ,

ஒரு நல்லது செய்ய யவளவோ இலன்சர்கள் ஆவலோடு இருகிறார்கள் , அவர்கள் செய்ய முற்படும் பொது , நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தேறியது , என்று சொல்லுகிறார்கள் ,

கமெண்ட்ஸ் குடுபவர்கள் எல்லாம் போலூது போக்குக்க , குடுக்க வில்லை , உண்மை நியாயம் சொல்லுகிறார்கள் ,

தாங்கள் பொழுது போக்குகாக கமெண்ட்ஸ் குடுபீரகள் போல தெய்ரிகிறது ,

Seyed Mohamed Sayna
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [13 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10559

Ref. No::10496

ஆகையால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இங்கு வரும் கருத்தை பார்த்து குழம்ப வேண்டாம்........................

தாங்கள் சரியாக புரியவில்லையா அல்லது எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லையா என்று தெரிய வில்லை.

ஒரு விசயத்தை பல பேர் சொல்லுவதற்கும் ....ஒரு விசயத்தை பல தடவை சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தாங்கள் இங்கு வரும் கருத்தை பார்த்தல் தெரியும். ஒரே விஷயம் பக்கம் பக்கமாக (copy paste )வருகிறது. இதற்கு என்ன பேர் என்று சொல்லுவது.

யாரையும் குருபிட்டு சொல்ல வில்லை. நான் சொல்வதில் ஏதாவது பிழை இருப்பின் பொருந்தி கொள்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நன்றி!!!
posted by Ansari YentY (K S A) [13 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10576

அருமையான கருத்துக்கள்..சகோதரர் V D SADAK THAMBY (Guangzhou ,China)அவர்களே...நான் என்ன கருத்து பதிய வேண்டும் என்று நினைத்தேனோ அதை நீங்கள் அப்படியே அழகாக பதித்து விட்டீர்கள்...நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved