Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:17:29 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7355
#KOTW7355
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 10, 2011
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (56) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 12)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காயல்பட்டின நகர்மன்றதிற்க்கான தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்புள்ள காயல் மாநகரப் பெருமக்களே! வெளியூர், வெளிநாடுகளில் வாழும் காயல் வாசிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமதூர் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில், ஊர் கட்சிகளிடையே போட்டி நிலவிய காலத்திற்குப் பின்னால், ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி இனி நமதூரில் தலைவராக வரக்கூடியவர் பொது வேட்பாளராக இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

சிறப்பான இந்த முடிவுக்குப் பிறகு முதல் முறையாக ஹாஜி S.S.ஷெய்கு அப்துல் காதர் (பாவலர் அப்பா) அவர்களும், அதன் பிறகு ஹாஜி L.K. லெப்பைத்தம்பி அவர்களும் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, போட்டியின்றி தலைவராக வந்து சிறப்புற பணியாற்றினார்கள்.

பிறகு பல ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல், அதிகாரிகள் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதற்குப் பிறகு 1986ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி ஹாஜி V.M.S. லெப்பை அவர்களைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஆக 1986 வரை ஜமாஅத்துக்கள் தலைவரை தேர்வு செய்யாத நிலையில் ஊர் பெரியவர்கள் எடுத்த முடிவையே இந்த ஊர் ஏற்றுக் கொண்டது.

1991ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிறகு ரத்து செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் அதிகாரிகள் ஆட்சியே நடைபெற்றது.

1996ம் ஆண்டு அரசு தேர்தலை அறிவித்து நமதூருக்கு பெண் தலைவர் வேட்பாளர் என குறிப்பிட்டது. உடனே ஜலாலியாவில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில், ஜமாஅத் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஹாஜ்ஜா K.M.E. நாச்சித்தம்பி அவர்களைத் தலைவராக தேர்வு செய்தார்கள்.

2001ம் ஆண்டு மீண்டும் பெண் தலைவி வேட்பாளர் என்று அரசு அறிவித்தது. அப்போது ஐக்கியப் பேரவை துவங்கிய காலம். இப்போது போன்றே அப்போதும் பேரவை, ஜமாஅத் பிரதிநிதிகளை அழைத்து கலந்து பேசி ஹாஜ்ஜா A.வஹிதா B.Sc அவர்களை இவ்வூர் உள்ளாட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்தது. புறநகர் பகுதியில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி மட்டும் போட்டியிட்டார். அனைவரும் உழைத்து அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஹாஜ்ஜா A.வஹிதா B.Sc. அவர்களை வெற்றி பெறச் செய்தோம்.

பிறகு 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 5வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்ற, அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களைத் தலைவராக்க வேண்டி ஏனைய கவுன்சிலர்களிடத்தில் ஐக்கியப் பேரவை விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதால் அவர்கள் தலைவரானார்கள்.

தற்போது (2011ம் ஆண்டு) பொதுத்தலைவர் பட்டியலில் இருந்த காயல்பட்டினத்திற்கு ஒரு ஆண் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஐக்கியப் பேரவை மேற்கொண்ட முயற்சிகளையும், திடீரெனப் பெண் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதால், குறைந்த கால அவகாசத்தில் ஐக்கியப் பேரவை எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள்.

பேரவையால் 08.09.2011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டக் கூட்டத்தில் நமதூர் ஜமாஅத் பிரதிநிதிகள்கள் கலந்து கொண்டார்கள். முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பிறகு அத்தீர்மானத்தின் அடிப்படையில் ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளிலிருந்து தலைவர் தேர்வுக் குழுவிற்கு பிரதிகள் கோரப்பட்டது. அப்பிரதிநிதிகளின் பெயர்களை எழுத்து மூலமாக் தகவலாகத் தந்தார்கள்.

பிறகு (பெண்வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில்) 26.09.2011 அன்று ஜலாலிய்யாவில் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பொறுப்புக்கு ஹாஜ்ஜா L.S.M.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா, B.Com. அவர்கள் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆக இத்தேர்வு ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புக்களின் தேர்வாகும்.

இதற்கு முன்னர் இவ்வூரில் பின்பற்றப்பட்ட நடைமுறையைத்தான் இப்போதும் நாம் பின்பற்றியுள்ளோம். மேலும் வேட்பளார் தேர்வில் வாக்கும் அளிக்காமல், கருத்துக்கூட தெரிவிக்காமல், அமைதியான பார்வையாளராக, கூட்ட ஒருங்கிணைப்பாளராக மட்டுமே ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வருகை தந்த தேர்வுக் குழுவினரே சாட்சி. தேர்வுக்குழு கூட்டத்திற்கு வருகைதர வாய்ப்பில்லாதவர்களுக்கு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளே சாட்சி.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, கடந்த காலங்களில் பொது விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பேரவை மீது தவறான எண்ணம் கொண்டுள்ள சில சகோதரர்கள் வதந்திகளை பரப்புவதும், எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதும் வருந்தத்தக்கது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளர்கள் போட்டியின்றி தலைவராக வந்திருக்கையில், தற்போது மட்டும் நம்மில் 5 பேர் தேர்தல் களத்தில் நிற்பது சரிதானா? இது நமது ஒற்றுமையை குலைக்காதா? வாக்குகள் சிதறுவதால் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகாதா? என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம்.

பொது வேட்பாளரின் வெற்றி ஜமாஅத்துக்களின் வெற்றி. ஊரின் ஒற்றுமைக்குக் கிடைக்கும் வெற்றி. எனவே பேரவையோடு கருத்து வேறுபாடு உடையோர் அதை தற்காலிகமாவது ஒத்தி வைத்துவிட்டு, நமதூர் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் நாம் இதுவரை கட்டிக்காத்த நடைமுறையை தொடர்ந்து அமுல்படுத்துவோம்.

உள்ளூரிலிருக்கும் வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் குடும்பத்தினருடன் வந்து பொது வேட்பாளருக்கு பஸ் சின்னத்தில் வாக்களியுங்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருப்போர் தங்கள் இல்லத்தினருக்கு பஸ் சின்னத்தில் வாக்களிக்கத் தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறேம்.

எல்லாம் வல்ல இறவைன் நமது நன்னோக்கங்கள் நிறைவேற அருள்புரிவானாக!

ஆமீன், நன்றி, வஸ்ஸலாம்.

இவண்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
பிரபு M.A. சுல்தான்,
பொதுச் செயலாளர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10139

அஸ்ஸலாமு அழைக்கும்

ஐகியா பேரவை தலைவர் & உறுப்பினர் அவர்களுக்கு .

அருமையான & பொதுவான வேண்டுகோள் .நம் ஊரு பாதுகாக்கப்பட வேண்டு மானால். ஐகியா பேரவை முடிவுக்கு கட்டு பட்டு நாம் அனைவர்களும் பஸ் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டியது நாம் யாவர் களின் கடமை .நிச்சயம் நாம் ஜெயிபோம்.

வாழ்த்துகள் .

k .d .n .mohamed lebbai

jeddah
k .s .a


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Sarjoon (Riyadh) [10 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10140

ஒற்றுமையை பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஐக்கிய பேரவையின் நடவடிக்கைகளை குறை சொல்லும் சகோதரர்கள் முன் வைக்கும் பிரட்சினைகள் சில. அவற்றில் எனக்குத் தெரிந்த இரண்டு முக்கியமான பிரட்சினைகள்

1) வேட்பாளர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்காமல், ஜமாத்துகளுக்கு அவர்களை தேர்ந்தெடுக்கும் முடிவை எடுக்கும் கால அவகாசம் கொடுக்காமல், ஜாமாத்துகள் மூலம் அனுப்பப்பட்ட தனி நபர்களின் சொந்த அபிப்பிராயத்தின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டதின் அவசியம் என்ன?

2) ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கும் பட்சத்தில் ஐக்கிய பேரவையின் ஓட்டெடுப்பில் இரண்டாவதாக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வேட்பாளராக நிறுத்த முனைந்து இருக்க வேண்டும். அதற்க்கு மாற்றமாக ஐக்கிர பேரவை வேட்பாளரின் தாயார் மனு செய்ததின் சூட்சுமம் என்ன?

இது போன்ற சந்தேகங்களுக்கு விடை அளிக்காமல் ஐக்கிய பேரவையின் இது போன்ற ஏனோ தானோ அறிக்கைகள் என் போன்ற நடு நிலையாளர்களின் சந்தேகங்களை வழுப் படுத்துகிறது. இழந்துவிட்ட ஒற்றுமையை மீட்டெடுக்க ஐக்கியப் பேரவை இது போன்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்குமா? இல்லை தேர்தல் புறக்கணிப்பு என்று சொல்லி பின்பு தாங்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்க உத்தரவிட்டு, ஏன் இந்த மாற்றம் என்று கேட்ட இணையதளத்தின் மீது குற்றம் சொல்லியதைப் போல நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று ஒத்தக்காலில் நிற்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [10 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10141

SALAM TO THE ELDERS IN THE AP.PLS DO'NT HIDES THE HISTORY WHAT HAD HAPPENED IN THE PAST, EVERYBODY KNOWS THAT CRYSTAL CLEAR. STILL AP DO'NT HAVE COURAGE TO SAY FACT WHAT HAPPENED DURING ELKAY MAMA AND MKT MAMA PERIOD. (DURING THAT TIME MY GRAND FATHER AND OUR FAMILY SUFFERED VERY BADLY) SO SPEAK THE TRUTH.

IN THE PAST THERE WAS NOT NO UNILATERAL DECISION

PLS SPEAK THE TRUTH ........................................ ONLY TRUTH WILL PREVAIL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளரை பற்றி இதில் குறிப்பிட இல்லையே...? பேரவையின் நடுநிலை சந்தேகமே...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10143

தாங்கள் ஆதரவு கேட்டமைக்கு நன்றி...!

திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளரை பற்றி இதில் குறிப்பிட இல்லையே...? பேரவையின் நடுநிலை சந்தேகமே...!

சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் துணை தலைவர் பதவிக்கு யாரை கொண்டு வர முடிவு பண்ணி விட்டீர்கள்...

துணை தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் கோமான் ஜமாஅத் சார்பாக உறுப்பினர் பதவிக்கு போட்டியில் களம் இறங்கி வெற்றி கனியை அடைய இருக்கும் பெரும் மதிப்புக்குரிய ஹாஜி லுக்குமான் அவர்களே தகுதியானவர்...

கடந்த முறை பாதியில் துணை தலைவரை மாற்றி பேரவை தேர்ந்துடுத்து பேரவையின் பெயர் கெட்டு போனது ஊர் அறியும்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி.சி.க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mahmood Naina (Bahrain) [10 October 2011]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 10145

இங்கே அனைவருக்கும் நினைவு படுத்துவது...

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள்.. பிரிந்து விடாதிர்கள்.. உங்கள் பதவி ஆசைக்கு எங்கள் மக்களை பலிகடா ஆக்கிவிடதிர்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [10 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10149

01. ஜாமாத்துகள் மூலம் அனுப்பப்பட்டவர்கள் ஜமாஅத் பொதுகூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தான், அப்படியானால் அவர்களுக்கு அவர்களின் விருப்பபடி ஓட்டளிக்கும் உரிமை உள்ளதுதான், வேட்பாளர்களின் பட்டியலை ஏன் முன்னமே அறிவிக்கவில்லை என்பதை அவர்கள் விளக்கினால் நல்லது, ஒருவேளை முச்சரிக்கையில் ஒப்பமிடாதவர் இறுதி நேரத்தில் முச்சரிக்கையை ஏற்றுகொண்டால் என்று தயங்கினார்களோ இதனை அவர்கள் விளக்கினால் நல்லது.

02. மாற்று வேட்பாளராக தாயாரை நியமித்தது நியாயமில்லைதான், முறைப்படி அடுத்தப்படியாக வாக்கு பெற்றிருந்த சகோ. வஹிதா அவர்களைத்தான் பரிந்துறை செய்திருக்க வேண்டும், ஒரு நண்பர் சொன்னப்படி ஒருவேளை இறுதியில் யாரும் போட்டியிலிருந்து விலகாமல் இருவருக்குமே போட்டி வந்துவிடும் என்று எண்ணினார்களோ?. அப்படி இருந்தால் மாற்று வேட்பாளரை அவர்கள் அறிமுகப்படுத்த தேவை இல்லை, ஒரு வேலை சகோ. மிஸ்ரியாவின் விண்ணப்பம் தள்ளுபடியானால் மக்களிடம் உங்கள் விருப்பபடி வாக்களியுங்கள் என்று சொல்லி இருக்கலாம். அல்லது இதற்க்கு தகுந்த காரணம் இருந்தால் விளக்கினால் நல்லது. அல்லது தவறுதலாக அப்படி நடந்துவிட்டால் அதை வெளிப்படையாக சொல்லிவிடுவதுதான் தெளிவு ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [10 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10150

இஸ்மாயில் காக்கா அவர்களே, நம்ம மக்கள் தேர்வு செய்த கவுன்சிலர்கள் அப்படி! நான்கு கவுன்சிலர்கள்தான் கரைபடியாதவர்கள் (தலைவர், இரண்டு பெண்கள், திருதீவராஜ் அவர்கள்) அப்படி என்றால் துணை தலைவர் யாருக்கு தான் கொடுக்கனும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by mohamed faiz (CHENNAI) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10152

அஸ்ஸலாமுஅலைக்கும்.

ஐக்கியபேரவையின் அறிவிப்பில் ஊர்மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதிலில்லை. பழைய கதைகளை யாரும் கேட்கவில்லை. இப்போதுள்ள சந்தேகங்களுக்கு தெளிவான பதில் தந்தால் நன்றாக இருக்கும். இதனை விட்டுவிட்டு யாரையும் சாடுவதில் அர்த்தமில்லை.

ஐக்கியப்பேரவை தனது முடிவை ஊர்மக்களிடம் திணிக்காமல் ஊர்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். ஒரு பக்கம் சாயாமல் நடுநிலைமையோடு முடிவெடுப்பது அவசியம்.சுயமாக பள்ளிவாசல் நிர்வாகிகளை சிந்திக்க விடாமல் ஐக்கியப்பேரவை முன்னதாகவே முடிவெடுத்துவிட்டு,அந்த முடிவினை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் திணிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஊர் நலத்துக்காகத்தான் ஐக்கியப்பேரவையே தவிர ஐக்கியப்பேரவைக்காக ஊர் இல்லை.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்ல. செய்த தவறுகளுக்கு சாக்குபோக்கு கூறாமல் ஊர் நலனுக்காக ஒன்று படுவது காலத்தின் அவசியம்.சகோதரி மிஸ்ரியா அவர்களையும் சகோதரி ஆபிதா அவர்களையும் அழைத்து, அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.தயவுசெய்து இதில் ஐக்கியபேரவை கௌரவம் பார்க்க வேண்டாம்.

இல்லையென்றால் யார் வெற்றி பெற்றாலும் ஊரில் பிளவு ஏற்பட்டுவிடும். ஒருவேளை சகோதரி ஆபிதா அவர்கள் வெற்றிபெற்றுவிட்டால் ஐக்கியப்பேரவையின் நிலை என்ன?.

இறைவனுக்கு பயந்து நடுநிலையோடு நல்ல முடிவினை ஐக்கியப்பேரவை எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கதை கதையாம் காரணமாம் ..!!
posted by M Sajith (DUBAI) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10154

அறிக்கை வெளியிட்டு கமெண்டுகளை முடக்கி விமர்சனங்களை சந்திக்க தெம்பு இல்லாமல் ஒழிந்து கொள்ளும் சிலரைப்போல இல்லாமல், கருத்துக்கொலை செய்யாமல் இருந்ததற்கு உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.

தாங்கள் வரிசை படுத்தியுள்ள என் பாட்டனார் பாவலர் அப்பா, LK அப்பா VMS அப்பா முதல் நாச்சி தம்பி ராத்தாவரை தேர்ந்தெடுத்த நல்ல சூழ்நிலைக்கு காரணம் கொள்கை, கட்சி சார்புகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் ஊர் நன்மை விசயத்தில் எல்லோருமாக தானாக முன்வந்ததுதான். அன்று இந்த ஐக்கிய பேரவை இல்லை என்பதை உங்கள் அறிக்கையே தெளிவாக விளக்கியுள்ளது.

பின் KMT பிரச்சைனையால், ஒரு அமைப்பு தேவை என்ற நிலையில் நல்லெண்ணத்தில் ஆரம்பம் ஆன இந்த பேரவை, அதன் தொடர்ச்சியாக ஒரு நல்ல காரியமும் செய்தது - அது சகோதரி வஹிதாவை தெரிவு செய்தது. இதிலும் KMT சம்பவம் போல ஒத்தகருத்தும் இருந்தது.

இதையே முழு அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு, எல்லா ஜமாத்துக்கும் 'நாட்டாமை' நடத்த துவங்கி கொள்கை, பகுதி என தன் 'டாமினேஷன்' காட்டியதால், ஒற்றுமைக்கும், ஐக்கியத்துக்கும் இது சீரழிவை எற்படுத்தும் என கருதியவர்களை ஓரம் கட்டிய கதை தெரியாதவர்கள் உங்களை நம்பத்தான் செய்வார்கள்.

அறியாமல் தவறுதலாக 'கீழ்' காயலின் ஒருவரை தலைவியாக்கிவிட்ட தவறு மீண்டும் நடந்துவிடாமலிருக்க 'முச்சரிக்கை' என்னும் உன்னதமான ஐடியாவில் சகோதரி. வஹிதாவை தோற்கடித்து காரியம் சாதிக்க நினைத்த உங்கள் சூழ்ச்சிககு சகோதரி ஆபிதாவால் ஆண்டவன் ஆப்பு வைப்பான் என்பது தெரியாமல் போனது வருத்தம்தான். இல்லை என்றால் கொள்கையை சொல்லி விளையாட தோதுவாக இருந்திருக்கும்.

இதற்கு முன்னர், தாங்கள் பட்டியலிட்ட யாரிடமாவது கையெழுத்து வாங்கியதுன்டா? சகோதரி வஹிதாவை உட்பட.. இந்த முறை அவரை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு எதற்காவது பயன்பட்டதா இந்த முச்சரிக்கை?

(முச்சரிகை ஏதும் வாங்காமல், நீங்கள் சொல்லும் "எல்லா" ஜமாத்தருக்கும் தெரியாமல்) தாயாரை மாற்று வேட்பாளராக நிறுத்திய கதை, வேட்பாளர்களின் பெயரை கடைசிவரை இரகசியம் காத்தது இவை எல்லாம் சொல்லமறந்துட்டீன்களே.. பரவாயில்லை 1,2,3 என வரிசையா அறிக்கை விடுவது தானே இப்போ பேஷன், நீங்களும் விடுங்க மறக்காமா மிச்ச கேள்விகளுக்கும் பதிலோட..

இன்று யார் வெற்றி பெற்றாலும், பேரவையின் மீதுள்ள நம்பிகை இழப்பே இத்துனை போட்டியளர்கள்.

பேரவையின் வேட்பாளாருக்கு எதிராக விழும் வாக்குகள் எல்லாம், பேரவையின் நம்பகத்தன்மைக்கு எதிரான வாக்குகளின் கூட்டுத்தொகையாக கருதி தார்மீக பொறுப்பேற்று நிர்வாகத்தேர்தல் பொதுமக்களிடம் நேரடியாக நடத்த முன்வரவேண்டும்.

இதையாவது ஜமாத்தே இல்லாத பள்ளிகளுக்கும், கால்பந்து மைதானாங்களுக்கும் இல்லாமல் பொதுமக்களுக்காக செய்யவேண்டும்.

நம்புவேம் .. நம்பிக்கையாளரகளின் கூட்டமைப்பு செய்யும் என்று.

_____________________________________________

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்- குறள்

பொருள்: நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணினால், அதுவே கெடப் போவதற்குரிய அறிகுறி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. UNKAL VOTTTU: BUS
posted by Pirabu Shuaibu (Hongkong) [10 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10155

UMMA-VAPPA- MAMA-MAMI-MACHI- MACHAN- KAKA- LATHA- THANGACHI-THAMBY -APPA-KAMMA.

UNKAL VOTTTU: BUS

TO VOTE FOR

SISTER : MISRIYA
SYMBOL IS: BUS

Shuaibu Pirabu


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அறிக்கை வெறும் ஏமாற்றமே ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10157

அன்பார்ந்த காயல் பெரியவர்களே , நாங்கள் உங்கள் மீதும் நம் ஐக்கிய பேரவையின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தோம் . ஆனால் இந்த தேர்தல் விசயத்தில் தங்களுடைய ஒருதலை பட்சமான நடவடிக்கைகள் தான் எங்களை போன்ற நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது .

1) பொது வேட்பாளரின் வெற்றி ஜமாஅத்துக்களின் வெற்றி. ஊரின் ஒற்றுமைக்குக் கிடைக்கும் வெற்றி என்றே வைத்துக்கொள்வோம் . ஆமினா பள்ளி ஜமாத்தில் வெறும் 11 வோட்டுகளே பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட வேட்பாளரை எப்படி நாங்கள் பொது வேட்பாளராக ஏற்று கொள்ள முடியும்...? ஒருவேளை அப்படி அவர்கள் வெற்றி பெற்றால் அது அவர்கள் ஜமாத்திற்கு தோல்வி அல்லவா ... பிறகு எப்படி பொது வேட்பாளரின் வெற்றி ஜமாஅத்துக்களின் வெற்றி என்று கூற முடியும் .

2) உங்களை நம்பி முச்சரிக்கையில் கையெழுத்திட்ட சகோதரி வஹிதா அவர்களை மாற்று வேட்பாளராக அறிவிக்காமல் சகோதரி மிஸ்ரியா அவர்களின் தாயாரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது எந்த விதத்தில் நியாயம் ...? சகோதரி ஆபித முச்சரிக்கையில் கையெழுத்து இட்டு இருந்தால் அவர்களுக்கும் இதே நிலை தானே ஏற்பட்டிருக்கும்.

3) அணைத்து கொள்கையுடைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தால் தானே அவர்கள் ஊர் பொது வேட்பாளர் ஆக முடியும் .அப்படியிருக்க ...?????

இத்தனை கேள்விகளுடன் உங்கள் பதிலுக்காக காத்திருந்த எங்களுக்கு உங்களின் அறிக்கை வெறும் ஏமாற்றமே ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by mohamed faiz (CHENNAI) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10159

சகோதரர் இஸ்மாயில் அவர்கள் கூறுவதுபோல கோமான் ஜமாத்தைச்சார்ந்த சகோதரர் லுக்மான் அவர்களுக்கு துனைதலைவருக்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [10 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10162

ஐக்கிய பேரவையின் அறிக்கை! அற்ப்புதம். புரியாத சிலருக்கு எதுவும் புரியாது. 2 ஆவது யார் வரணும் என்று ஐக்கிய பேரவை தீர்மானிக்க முடியாது. ஒட்டு போட்ட ஜமாத்து பிரதி நிதிகள் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். காரணம், பேரவை ஒட்டு போடும் எல்லா உரிமைகளையும், பிரதிநிதிகள் வசம் கொடுத்து விட்டு நாங்கள் நடு நிலை வகித்தோம் என்கிறார்கள். இது போதும் ஐக்கிய பேரவை இதில் தலையீடு செய்யவில்லை என்பது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Fuad (Singapore) [10 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 10163

அஸ்ஸலாமு அலைக்கும். ஐக்கியப்பேரவை செயலாளர் பிரபு சுல்தான் ஹாஜியின் காலம் கடந்த அறிக்கையாக இருந்தாலும் தற்பொழுது அந்த அறிக்கை மிக முக்கியமானது.

நமது காயல் மாநகரின் ஒற்றுமைக்காகவும், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கண்ணியத்தைக் காப்பாற்றும் விதத்தில் அனைத்து போட்டி வேட்பாளர்களும் தயவுசெய்து போட்டியிலிருந்து விலகி பொது வேட்பாளர்களுக்கு உங்களின் மேலான ஆதரவை நல்கிட அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Abdulrahman (kayalpatnam) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10170

சூப்பர் அறிக்கை , நல்லாவே ரீல் விடுறாங்க.பெரியவர்கள் எல்லோருடைய கருத்தையும் அறிந்து செயல் பட வேண்டும் ,நாடாமை பண்ணகூடாது. மேலும் பொய் அறிக்கை விடக்கூடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தெளிவு கிடைக்கவில்லையே
posted by Mauroof (Dubai) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10177

ஐக்கிய பேரவை ஒன்றும் பணம் சம்பாதிக்கும் பேரவை அல்ல என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மாறாக அது ஊர் நலனை/ஒற்றுமையை கருத்தில் கொண்டது.

சில சமயம் சில முடிவுகள் தவறாக போகும்/போயிருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை. இருந்த போதும் பேரவையின் நகரமன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றி பொதுமக்கள் பலரும் எழுப்பிய சந்தேகங்களுக்கு பேரவை நல்ல ஒரு விளக்கத்தை தரும் என்ற என்போன்றோரின் எதிர்பார்ப்புகளை இந்த அறிக்கை கேள்விக்குறியாகவே ஆக்கிவிட்டது.

நல்லதோர் நிர்வாக மாற்றத்தை இந்த பேரவை காண வேண்டும். வெளியில் இருந்து கொண்டு சதா பேரவையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நல் உள்ளம் படைத்த சில அறிவு ஜீவிகள் பேரவையின் நிர்வாகத்தில் இடம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

நட்புடன் - இஸ்லாமியன்.. AHMED MAUROOF , DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by mfsalih (Hong Kong) [10 October 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 10179

அஸ்ஸலாமு அழைக்கும்

pirabu shuaibu kaka ,U Missed " WIFE" In your statement. ONLY WIFE VOTE TO BOOK ? Really u forget to type or .......?

hmmmm election paduthuoora paadu wife marakadichiruchi.....

HAHAHAHHAHA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [10 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10182

சபாஷ் முத்துவாப்பா அவர்களே, ஊரில் எவ்வலவு கொள்கை உடையவர்கள் இருக்கிறார்கள் அதில் எவ்வலவு உட்பிரிவு என்று உங்களுக்கு தெரியுமா? சொந்த வீட்டில் அனைவரையும் திருப்த்தி படுதுவது குதுரை கொம்பான இந்த காலத்ல எல்லா கொள்கைகளையும் திருப்த்தி படுதினால் நோபல் பரிசுக்கு பரிந்துரைகலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Samu.A.B (Dubai) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10183

SOS from aykiya peravai. Peoples are not in a mood to pick-up your distress signal. Too little....tooooooo late.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by T.A.S.Meera Sahib (Dubai) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10184

ஐக்கிய பேரவைதான் ஊரின் தாய் அமைப்பு என்பதை யாராலும் மறுக்க ஏலாது. பேரவையின் பணி தேர்தலோடு முடிவதில்லை. ஆனால் பேரவை தனது தற்போதைய செயால்படுகளை மாற்றி கீழ் கண்ட விசயங்களில் கவனம் செலுத்துவார்களா?

1 அனைத்து பகுதி, அனைத்து கொள்கையை சேர்ந்த மக்களிடம் இந்த அமைப்பு தங்களது சொந்த அமைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

2 ஒரே இடத்தில, ஒரே பகுதியில் பேரவையின் கூட்டத்தை போடாமல் பரவலாக அனைத்து பகுதியுலும் போடவேண்டும்

3 பேரவையின் செயேல்பாடுகள் ஒளிவுமறைவில்லாமல் இருப்பது மிகவும் அவசியம்

4 அனைத்து கொள்கை சகோதரர்களையும் முக்கிய பதவியில் இடம்பெற செய்வது அவசியம்

5 பேரவை அங்கத்தினர் நாங்கள் majoirty என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு அனைத்து பகுதியினரையும் அரவணைத்து ஒட்டு மொத்த மக்களின் நன்னம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Kader Sulaiman (Kayalpatnam.) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10186

ஓட்டு போடும் பொதுமக்கள் ஆறு வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்புடைய இரண்டு வேட்பாளரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். யாருடைய நிர்பந்தத்திற்கும் ஆளாகாதீர்கள்.

நிர்வாகத் திறமை உள்ள, படித்த, சமூக பணிகளில் ஆர்வமுடைய ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் முந்தைய காலங்களில் ஏதேனும் சமூக பணிகள் ஆற்றியவரா அல்லது வீட்டு சமையல் கட்டில் வேலை செய்பவரா நகராட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து சுயமாக முடிவெடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohideen ( Durai) (Abu Dhabi ( U.A.E)) [10 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10188

Dear Kayal Citizens,

Please select Mrs Abida Sheik As Our Chairwoman.

By Mohideen(Durai)
+971502587101
+97125055571
+97126289083


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by mohd ikram (saudi arabia) [10 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10192

இந்த உள்ளாச்சி தேர்தல் முடிந்த உடன், முதலில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு தேர்தல் வைத்து, நீதமான நபர்களை தேர்ந்து எடுத்தால்தான், இனி வரும் காலங்களில் நமது ஊரு ஒற்றுமை உடன் காணப்படும். இல்லை என்றால் நாம் ஒருவரை ஒருவர் குறை கூறி, நமது ஊரின் ஒற்றுமையே கேள்வி குறியாகிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohideen (Jeddah) [10 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10195

சகோதரர் சாஜித் சொல்லுவது போல் பேரவையிடம் இருந்து அறிக்கை மேல் அறிக்கை வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் முக்கியமாக கேட்கப்பட் இரண்டு கேள்விக்கு (commt Ref : 10140) இன்னும் பதில் இல்லை.

மேலும் எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதை ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohamed Ibrahim S.A (Dubai) [10 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10197

நல்ல தூங்கிட்டு இருந்தார்ஹல் கமெண்ட் பண்ணி பண்ணி எல்லாரும் என்துரிக வச்சிடீங்கள

Please vote for her Ms.Abidha Sheik


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. கேட்கிற கேள்விக்கு மட்டும் பேரவை பதில் அறிக்கை தந்தாள் ஆரோக்கியமானது..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10200

4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆமினா பள்ளிக்கு ஜமாஅத் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்த மூன்று நபர்களுக்கு ஆமினா பள்ளி ஜமாத்தில் 4வது வார்டு உறுப்பினர் தேர்வில் வெறும் 11 வோட்டுகளே மட்டும் பெற்று தோல்வி அடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட திருமதி மிசிரியா அவர்களை (1) (ஜமாஅத் வாக்கேடுபிலேயே தனது தகுதியை இழந்த நபரை) எப்படி நாங்கள் பொது வேட்பாளராக ஏற்று கொள்ள முடியும்...? எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபட்டது...? (2) திருமதி மிசிரியா அவர்களின் தாயாரை (முச்சரிக்கை கையப்பம் இடவில்லை அணைத்து ஜமாஅதுகளிடம் ஆதரவு கேட்க படவில்லை) மாற்று வேட்பாளராக யார் நியமித்தது...?

இந்த இரண்டு கேள்வி தான் பெருவாரியான ஊர் மக்களின் கேள்வியாக பேரவைக்கு உள்ளது எனது கேள்வியும் கூட இது தான்...

பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போடாதாதால் தான் சமூக சேவகி திருமதி ஆபிதா ஒதுக்க பட்டார்கள் என்றால்...!
திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளர் பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போட்டு கொடுத்தார்களா...?

கேட்கிற கேள்விக்கு மட்டும் பேரவை பதில் அறிக்கை தந்தாள் ஆரோக்கியமானது..!
மவுனம் சாதிக்காமல் மக்களுக்கு விளக்கம் தந்தாள் பேரவைக்கு நல்லது...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. அன்றும்....... இன்றும்........!
posted by zubair (riyadh) [10 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10204

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் காயல் நடுநிலை & ஊர் ஒற்றுமைக்கு வேண்டியே...... ஐக்கிய பேரவையை சார்ந்துள்ள (சைத்தானுக்கு ஆப்பு வைத்த) இனிய நண்பர்களே...........

நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்..... அன்று ஐக்கிய பேரவை இல்லை என்று. ஆனால் அன்று ஊரில் சைத்தான்கள் குறைவு ஐக்கியம் இருந்தது..... பேரவை தேவை இல்லை. அன்று சிறியவர்கள் பெரியவர்களை அனுபவம் அடிப்படையில் கண்ணை மூடு (இறைவனுக்காக) நம்பினார்கள். இன்றோ அவர்களை விட நாங்கள் தான் மெத்தப்படித்தவர்கள் என்பதை (தலைக்கனமாக) வைத்து பெரியவர்களை சோதனைக்கும், மன சோர்வுக்கும் ஆளாக்கி உள்ளனர்.

அன்பு சகோதரர்களே..... ஐக்கிய பேரவையின் முகத்தில் கரியை பூசனும் என்று நினைப்பவர்கள் ஒன்று மட்டும் நினைவில் வைக்கட்டும். ஊர் பல விசயத்தில் ஒன்று பட்டு இருந்ததும் சீர் குழைய போவது திண்ணம். குட்டையை கலக்கி மீன் பிடிக்க துடிப்பவர்களை மக்கள் இனம் காணாமல் இல்லை. ஆனால் இதுவே... அவர்கள் அவர்களுக்கு வைக்கும் ஆப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohamed Cnash (MAKKAH ) [10 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10205

பாட்டன் காலத்து பழைய புராணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!! அப்போது நம் முன்னோர்கள் இதே தேர்தலுக்காகவும் தலைமை பதவிக்காகவும் சண்டை போட்டு ஊரே இரண்டு பட்டதும் யாருக்கும் தெரியாத கதை ஒன்றும் இல்லை!!!

ஆனால் இங்கே உள்ள நம் மக்கள் அறிய துடிப்பது இப்போது தேர்வுக்கு நீங்கள் பின்பற்றிய முறையையும் குளறுபடிகளையும் அதில் ஏற்பட்ட சந்தேகம் மீது விளக்கம் தானே தவிர பழைய பல்லவி இல்லை!!

இதற்கு முன்னர் இவ்வூரில் பின்பற்றப்பட்ட நடைமுறையைத்தான் இப்போதும் நாம் பின்பற்றியுள்ளோம் என்று அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள்!! அப்படியென்றால் இந்த முச்சரிக்கை கலாச்சாரம், பல பொழுதுபோக்கு சங்கங்கள் சேர்க்கபட்டது, இதர அமைப்புகள் அழைக்கபடாதது எல்லாம் முன்னரே பின்பற்றபட்ட நடை முறைதானா? தன் சொந்த ஜாமத்தில் ஒரு கவுன்சிலர் தேர்வுக்கு முன்றாம் இடம் பிடித்த வேட்பாளர் (சில நண்பர்கள் படித்த கருத்தில் இருந்து சொல்கிறேன்) ஊர் தலைவியாக முதல் இடம் பிடிக்க முடிந்த அதிசயம் எந்த நடைமுறையால் வந்ததோ?

மேலும் வேட்பாளர் தேர்வில் வாக்கும் அளிக்காமல், கருத்துக்கூட தெரிவிக்காமல், அமைதியான பார்வையாளராக, கூட்ட ஒருங்கிணைப்பாளராக மட்டுமே ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வருகை தந்த தேர்வுக் குழுவினரே சாட்சி என்ற உங்கள் அறிக்கை பாராட்டுக்குரியதே!! அதே சமயம் அதே தேர்வு குழுவில் ஒட்டு போட்ட அன்பர்கள் இணையதளத்தில் பதித்த அதிருப்தி கருத்துக்கள், KWT போன்ற இயக்கங்களின் அறிக்கை உங்கள் கூற்றுக்கு மாறாகவே உள்ளதே...அவர்களுக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்து இருக்கலாமே!!

சரி ஒட்டு போட வந்த ஜமாத் பிரதிநிதிகளுக்கு வேட்பாளர் விபரம் பற்றி ஏன் கடைசி வரை ரகசியம் காக்க பட்டது? வோட்டு போடும்போது சொல்லாமல் முன்னரே அவர்களுக்கு காலஅவகாசத்துடன் சொல்லபட்டு இருந்தால் அவர்களும் தங்கள் சார்ந்த ஜமாத் மக்களில் கருத்தை கேட்டு வாக்களித்திருப்பார்களே!! அப்போது தானே பொது வேட்பாளர் என்ற அந்தஸ்தை அடைய முடியும்!!

அதற்கு பின்பும் வேட்பாளர் குளறுபடிக்கு பின் போது வேட்பாளரின் தாயார் மனுதாக்கல் செய்தார்? அது பற்றிய பேரவையின் கருத்து என்ன? அப்படி யென்றால் பேரவையை நம்பி முச்சரிக்கை யில் கையெழுத்து போட்ட சகோ. வஹீதா வஞ்சிக்கபட வில்லையா? ஏன் அவர் தாயாருக்கு உள்ள தகுதி 5 வருடம் ஆண்ட முன்னாள் தலைவிக்கு இல்லையா?

இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் எப்படி நீங்கள் கை காட்டும் பஸ்சில் நாங்க ஏறி போக முடியும்... எனவே புத்தகம் திறந்த புத்தகமாக இருப்பதால், அறிவுக்கு விடை தருவதால் அதையே நாங்க தேர்ந்தெடுத்து படிக்கிறோம்!!

BETTER LUCK NEXT TIME IF ONLY THE APPROACH AND ATTITUDE OF PERAVAI SHALL BE RECTIFIED IN A PROGRESSIVE WAY TO ENHANCE THE PUBLIC INTERESTS!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [10 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10208

ஐக்கியபேரவையின் அறிக்கை இன்று அதன் மீது சந்தேகங்களை கேள்விகளை வைப்போருக்கு பதில் சொல்வதாக இல்லை. பொத்தம்பொதுவாக ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கிறார்கள்.

ஊர் ஒற்றுமை ஊர் ஒற்றுமை என்று பேசும் நீங்கள் முதலில் அதற்க்கு முன்மாதிரியாக நடந்து காட்டி இருக்கவேண்டும். ஆனால் உங்கள் செயல்கள் எல்லாமே மூடுமந்திரமாகவும் தாந்தோன்றிதனமாகவும் இருக்கின்றன.

இனிய நண்பர் மீராசாஹிப் சொல்வதைப்போல ஆரம்பம் முதலே உங்கள் பேரவை இந்த ஊரின் எல்லா மக்களுக்குமானது என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதில் தோல்வி அடைந்து விட்டது. குறிப்பிட்ட பகுதியனரும் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்தை சேர்ந்தவருகளும்தான் அதில் ஆதிக்கம் செலுத்துவதாக ஊரின் பிற பகுதியை சார்ந்தவர்கள் எண்ணுகிறார்கள்.

இதை எல்லாம் முதலில் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உங்கள் பேரவையின் செயல்பாடுகளில் எல்லா தரப்பு மக்களையும் எல்லா கொள்கையினரையும் அரவணைத்து செல்லவேண்டும். "சுன்னத் ஜமாஅத்தினருக்கு மட்டுமே உள்ள அமைப்புதான் இந்த பேரவை" என்ற எண்ணத்தை முதலில் தவிடு பொடியாக்க வேண்டும். இதை எல்லாம் செய்த பிறகுதான் நீங்கள் ஊர் ஒற்றுமை குறித்து பேசவேண்டும்.

ஊர் மக்களின் பரவலான அபிமானத்தை பெற்ற அமைப்புக்குத்தான் ஊரில் எந்த எதிர்ப்பும் இருக்காது. இன்றைக்கு உங்களுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது எனில் நீங்கள் ஒட்டுமொத்த ஊர்மக்களின் அபிமானத்தை பெறவில்லை என்றே பொருள்.

சிந்தியுங்கள்....!உங்கள் செயல்களை சீர்தூக்கிப்பாருங்கள்.....!
இனியேனும் உங்கள் தவறுகளை களைய முயற்சி செய்யுங்கள்!
என்றும் உங்கள் நலம் நாடும்
கே.எஸ். முஹம்மத் ஷூஐப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Ahmed Shahul Hameed(AbuSabu) Indian Human Rights&vigilance Organisation. (Kayalpattinam) [10 October 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 10209

Dear Kayal brothers&sisters, Assalaamu Alaikkum.

Pls select Mrs.Abidha Sheikh. For our municipal chairperson.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohiadeen (Phoenix) [10 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10211

Its time to change Ikkiya peravai, members should be elected rather than permanent.

My humble request to Ikkiya Peravai, there are few "Jalras" around you who running their life out of this oraganization like involving family dispute, land dispute and marketing their business. Please identify those and eliminate them and select your committee members by doing election on periodic basis to strengthen people hope on your oraganization.

"Any Organisation which is in public which should have transparency and respect public opinion".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [10 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10222

முத்து காக்கா அவர்களே, நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்! உங்களின் கூற்றின்படி சகோதரி மிஸ்ரியாவை ஆமீனா பள்ளி ஜமாஅத் வார்டு பொறுப்புக்கு ஆதரவு கொடுக்கவில்லை ஆதலால் சகோதரி மிஸ்ரியாவும் அப்பபொறுப்புக்கு நிக்கவில்லை. அன்பர்களே இங்கு யார் மீது தவறு இருகிறது? இது தவறா அல்லது பெருந்தன்மையா?

இப்போது நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு வருவோம். இப்பபொறுப்புக்கு சகோதரி சார்ந்துள்ள ஜமாஅத் அவர்களை எதிர்க்கவில்லையே? இங்கும் தவறு இருபதாக அறிய முடியவில்லை.

சகோதரி மிஸ்ரியாவின் பொறுமைக்கு, பெருந்தன்மைகு கிடைத்த பரிசு நகர்மன்ற தலைவர் பதவிக்கான பெரும்பான்மை ஜமாஅத் ஆதரவு பெற்ற பொது வேட்பாளர்.

மக்கள் ஆதரவு யாருக்கு என்று கூடிய சீக்கிரம் பார்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by M.N.ABDUL CADER (chennai) [10 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 10225

ASSALAMU ALAIKUM,

நமது காயல் மக்களின் & ஜமாஅத் இன் மனபூர்வமான ஒப்புதல் இல்லாத ஒரு வேட்பாளரை நீங்கள் தேர்ந்து எடுத்தது மிக பெரிய தவறு, உங்களுடைய இந்த செயலால் நடுநிலையான அனைவரும் அதுருப்தியில் உள்ளனர்.

நமது ஊருக்கு மக்கள் விரும்பும் தலைவர் யார் என்று அனைத்து மக்களின் கருத்தையும் கேட்டு உடனடியாக இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு காண உங்கள் கவுறுவத்தை பாராமல் ஊரின் நலம் மற்றுமே முக்கியம் என்று களம் எறங்கி திறமையான ஒரு தலைவரை மக்கள் முன் நிறுத்தவும் . இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by AbdulKader (Abu Dhabi) [10 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10227

அஸ்ஸலாமு அழைக்கும்...

எனதருமை சகோதர்களே....

ஐக்கிய முஸ்லிம் பேரவையையும் அதன் சேவையையும் பற்றி குறைகூறும் உங்களில் யாரெல்லாம் (எத்தனை பேர்) வெளிநாட்டில் இருந்து காயல்பட்டிணத்திற்கு விடுமுறையில் வரும்போது, ஐக்கிய முஸ்லிம் பேரவை அலுவலகம் சென்று தம்மால் இயன்ற உதவிகளை ஊரின் நலனுக்காக செய்துள்ளீர்கள்?

வெளியிலிருந்து குறைகூறி கமெண்ட்ஸ் அடிப்பது எளிது. அங்கு பணியாற்றுபவர்கள் தங்களுடைய்ய நேரத்தையும், பணத்தையும் ஊரின் நலனுக்காக செலவு செய்கிறார்கள். இதை பற்றி இங்கு கருத்து கலவரத்தில் ஈடுபடும் யாருக்காவது சிந்தனை இருக்கிறதா?

தயவு செய்து இங்கு கருத்து பதிவு செய்வதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். காரணம், இதன் பின்விளைவுகளை நமது ஊர் சந்திக்க நேரிடும் காலத்தை என்னால் எண்ணிப்பார்க்க முடிகிறது.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by kudack buhari (doha-qatar) [10 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10229

zubair (riyadh) காக்கா, நெத்தி அடி கலக்கிடீங்க ,நவீன சைத்தான் அதான் ( -- --)இப்ப நம்ம ஊருலே நிறைய வே இருக்கு,என்ன செய்ய நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் அதில் தான் அவர்கள் குளிர் காய்கிறார்கள் ,

வாங்க நாம பஸ் ல போலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by CNash (MAKKAH) [10 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10230

ஷாகுல் ஹமீது (HK ) உங்க புது விளக்கம் ரெம்ப நல்ல இருக்குது!!! ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி ஒ. பன்னீர் செல்வம் என்ற ஒருவர் முதல் அமைச்சரா ஆனாரே அது போல தான் இருக்கு!! தான் சொந்த ஜமாத்தால் கவுன்சிலருக்கு தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு தலைவர் பதவிக்கு மகுடமா!! வேட்பாளர் தேர்வின் பொது இந்த கதை எல்லாம் சொல்லிதான் அறிமுகம் செய்யபட்டாரா? எல்லா ஜமாத்தாரும் அதற்கதான் அவரை தேர்ந்தேடுதார்களா!! ஓஹோ இதற்குதான் அனைத்து ஜாமாத்தின் அமோக ஆதரவா!!

அப்துல்காதர் அவர்களே, வெளியே இருந்து நெட் இல் எல்லோரும் நீங்கள் போற்றும் பேரவையை துற்ற காரணம்!! உள்ளே ஐக்கியமாக உங்களை போன்ற நல்லவர்கள் தவறை சுட்டி காட்டாத காரணம் தான்!! இனியாவது அதை செய்யுங்கள் அப்போதுதான் வெளியே உள்ளவர்கள் வாழ்த்துவார்கள் !!!

அவர்கள் சுனாமி தொகுப்பு வீடு தேர்தல் புறகணிப்பு விஷயத்தில் திமுக ஆதரவு நிலை எடுக்கும் போது சுட்டி காட்டிய இதே இணையதளம் மீது வழக்கு போடுவோம் என்று எச்சரிக்கை!!! இந்த தேர்வு முறையில் நடந்த நியாயமான சந்தேகங்களை கேட்டால் அதற்கு பதில் ஒற்றுமை குலைப்பவர்கள்/ ஷரியத்க்கு எதிரானவர்கள் / கலாச்சாரத்தை கட்டி போட்டவர்கள் என்ற பெயர் தான்! வேற எப்படி தான் கேக்கனும்டு சொல்லி கொடுங்க!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohiadeen (Phoenix) [10 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10231

Mr.AbdulKader (Abu Dhabi)..,

Here people are questioning Ikkiya Peravai's transparency. Peravai never open their mouth.When one oraganization demanding public for vote to particular candidate it should be transparent.Peravai members should be elect rather than fixed.

Few peoples are destroying Peravai name by using Peravai name for advertise their business and involving in family dispute.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohiadeen (Phoenix) [10 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10232

Mr..AbdulKader (Abu Dhabi) ,

Dont you know all over the world our kayal people have kayal welfare association? When people are serving the public they all dont need to align particularly to "Ikkiya Peravai"? The service only the motive.

If Ikkiya Peravai maintains transparency and respect the public opinion i believe they will respect.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:கட்சி காரனின் கொள்கை....
posted by OMER ANAS. (DOHA QATAR.) [11 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10237

ஆமினா பள்ளி வெளியிடாத கருத்தை சில அரசியல் லாபம் தேடும், ஒரு சிலர் வெளியிடுவதை, மர்ஹூம் சாஃபி காக்கா நடாத்திய ஆமினா பள்ளி ஜமாஅத், வெளியிட ஆசை படுகிறார்கள். இதற்க்கு ஆமினா பள்ளி ஜமாஅத் மறுப்பு வெளி இட்டால், ஆமினா பள்ளியில் குழப்பம் என்று வெளி இடுவார்கள். கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும்.!!! பஸ்ல போகணும்னா டவுன் பஸ்ல போனாலும் நினைத்த ஊர் வந்து சேரும்.!!!!!!!!! ஆனால் மார்க்க புத்தகத்தில் கூட எந்த புத்தகம் படிக்கணும் என்று குழப்பம் உள்ளதே? வாக்காளப் பெரு மக்களே சிந்தித்து ஓட்டளிக்கவும்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Rayyan's Dad!! (USA) [11 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10242

நல்லதொரு கேள்வியை கேட்டு இருக்கிறார் அப்துல் காதர் (Comment Reference Number: 10227 ) அவர்கள். நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அது யாருடைய தப்பு என்பதற்காக இதை சொல்லவில்லை. என்றைக்காவது ஐக்கிய பேரவையோ அதன் தலைமையோ மக்களோடு மக்களாக எல்லாரோடும் கொள்கை, கீழ்/மத்திய காயல், பெரியவன் சிறியவன், மேல்/கீழ் தட்டு மக்கள் என்ற பாரபட்சமின்றி ஐக்கியமாகி இருக்கிறார்களா அல்லது அதற்கான முயற்சி... வாய்ப்பை நமது பேரவையோ/பேரவை சார்ந்த அன்பர்களோ என்றைக்காவது உருவாக்கி இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வில்லை.

பொதுவாக நீங்கள் சொல்வது மாதிரியான சூழ்நிலையை (ஒன்றோடு ஒன்றாக கலக்கிற) "அமைப்புகள்தான்" உருவாக்க வேண்டும்/முன்வரவேண்டும். அப்பொழுதுதான் உள்ளூர் மக்களும் அல்லது வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக காயல் வருபவர்களும் பேரவையின் ஆபீஸ் பக்கம் எட்டி பார்க்கமுடியும். நாம பாட்டுக்கு closed door system follow பண்ணினா எப்படி. முதலில் நமது பேரவை அதன் ஆபீஸ் நேரத்தில் எப்பொழுதும் திறந்துதான் இருக்கிறதா என்று தெரியவில்லை. சாமானியன் கூட உள்ளே செல்வதட்க்கும் அதன் செயல்பாட்டை/செயல்திட்டங்களை "கேள்வி கேட்க" உரிமையை தந்து இருக்கிறார்களா அல்லது easy access இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு வேளை பேரவைக்கு, அதன் தலைமைக்கு மிக நெருக்கமானவர்கள்/அவர்களின் சொந்தக்காரர்கள், குறுப்பிட்ட முஹல்லா/தெரு வாசிகள், ஒத்த கொள்கை (either religious or political /non political ) உடையவர்கள், "என்ன நடக்கின்றது என்றுகூட தெரியாமே...உடனே நாரே தக்பீர்" என்று வீர முழக்கமிடும் அன்பர்கள், பேரவையை பணத்தாலும் சாதுர்ய பேச்சாலும் கண்ட்ரோல்/influence பண்ணும் சக்தி படைத்தவர்கள் வேணும்னா எளிதாக சென்று வருகிற (கேள்வி கேட்கிற) வாய்ப்பை/சூழ்நிலையை பேரவை வழங்கி இருக்கலாம்..அதனால் அவர்களும் பேரவையின் பக்கம் சென்று வரலாம். ஆனால் சாமானியனும், மாற்று கொள்கை/கருத்து உடையவர்களும், பேரவை நல்லபடியாக செயல்படுவட்காக நியாயமான முறையில் விமர்சிப்பவர்கள் எளிதாக உள்ளே செல்ல முடியுமா அல்லது அவர்களின் பேச்சுதான் அங்கே எடுபடுமா?

விடுமுறைக்காக காயல் செல்லும் நம் மக்கள் (தம் சொந்த வேலை பளுவினை கூட ஓரம்தள்ளி விட்டு) இக்ரா ஆபீஸ் சென்று...அங்கு என்ன நடக்கின்றது அவர்களின் செயல்த்திட்டங்கள் தான் என்ன என்றெல்லாம் கேள்விகளை கேட்டு files களை ஆராய்ந்து (audit செய்து) தங்களுடைய மேலான ஆலோசனைகளை வழங்கி அவர்களை சப்போர்ட் செய்கிறார்கள். தயக்கம் இல்லாமல் தங்கள் கருத்துக்களை கூறும் வாய்ப்பை (Transparancy யை) இக்ரா வழங்கியுள்ளது என்பதனை நாம் எல்லோரும் செய்திகள் வாயிலாக நன்றாக அறிவோம். ஊடகங்கள் மூலம் நடுநிலையாளர்களின் நியாயமான கேள்விகளையே நமது பேரவை சட்டை செய்வதும் இல்லை அதை நிவர்த்தி (CLARIFICATION ) செய்ய கூட முன்வருவதும் இல்லை. இந்த விசயத்தில் நமது புதுப்பள்ளி ஜமாத்தினர் (whether they are right or wrong...atleast they responded) பரவாயில்லை என்று நினைக்க தோனுகிறது. முதலில் பேரவையின் மீது பெரும்பாலோனோருக்கு நம்பிக்கையும் understanding இருக்கிறதா என்றே தெரிய வில்லை. நிலைமை இப்படி இருக்கும் பொது தாங்கள் விரும்புவது எப்படி நடக்கும்.

அதே நேரத்தில் இத்தனை வருடமாக "நம்முடைய" ஐக்கிய பேரவையில் என்னதான் நடக்கின்றது, அது எந்த மாதிரி செயல்படுகிறது, செயல்திட்டம் தான் என்ன, அதை செயல்படுத்துவது மற்றும் கண்ட்ரோல் பண்ணுவது யார், அதன் organization structure என்ன, யாரெல்லாம் அங்கே இருக்கிறார்கள் என்பதனை கூட அறியாமல், எதேட்க்கெடுத்தாலும் நம் "பெரியவர்கள்" பார்த்து கொள்வார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்தது நம் அனைவருடைய தவறே. இனிமேலும் நாம் அப்படியே கண்டும் காணாமல் விட்டு விட்டால், ஐக்கிய பேரவை என்ற அமைப்பு, மக்களால் ஒரேயடியாக புறக்கணிக்கபட்டு போய்விடும் என்ற அச்சம் நம் அனைவருக்கும் இல்லாமல் இல்லை. அதட்க்கு ஒருகாலமும் நாம் அனுமதிக்க கூடாது. பேரவை ஒன்றும் ஒரு தனிமனித, serving only certain sects or ideological group or even certain areas / streets /muhallavaasis or ஜமாஅத் அமைப்பு அல்ல. எல்லா மக்களுக்கும் ஒரு பொதுவான அமைப்பு. அதில் நாம் அனைவரும் அதில் ஒரு அங்கம் என்பதனை உணர்ந்து ஐக்கிய பேரவையை முறையாக reorganize பண்ணி எல்லா ஜமாத்தினரும் பலதர பட்ட மக்களும் அங்கம் வகிக்கும் அமைப்பாக, மக்கள் மன்றமாக மாற்றி....வருங்காலத்துக்கு நல்லதொரு வழிகாட்டும் அமைப்பாக மாறவேண்டும்/மாற்ற வேண்டும். அதட்க்கு ஐக்கிய பேரவையின் அன்பர்கள் அனைவர்களும் வழிவகுக்க/வழிவிட வேண்டும் என்பதே நம் அனைவருடைய ஆவல்.

நாமும் மற்றவர்களைப்போல, பேரவை எதை செய்தாலும் நன்மைக்கே!! என்று கண்டும் காணாமல் support பண்ண ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நாம் அப்படி செய்தால் வருங்காலத்தில் நமது பேரவை ஒருதவறான முன்னுதாரமாகி விட கூடாது. நமது கருத்துக்கள் அனைத்தும் பேரவையை பலப்படுத்தவேயன்றி வேறெந்த உள்நோக்கமும் இல்லை. அல்லாஹ் எல்லாவற்றிக்கும் போதுமானவன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [11 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10243

சகோதரர் CNash (Macca ) அவர்களே! அஹ்மத் நைனார் பள்ளி எந்த தெருவில் உள்ளது? சகோதரி மிஸ்ரியாவின் வீடு எந்த தெருவில் உள்ளது? என்று உங்களுக்கு தெரியுமா?

அஹ்மத் நைனார் பள்ளி சதுகை தெருவிலும் சகோதரி மிஸ்ரியாவின் வீடு ஆறாம்பள்ளி தெருவிலும் உள்ளது.

சகோதரி மிஸ்ரியாவை மக்கள் தான் தேர்வு செய்ய முடியும் கவுன்சிலர்கள் அல்ல பன்னீர்செல்வதோடு ஒப்பிடுவதற்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by AbdulKader (Abu Dhabi) [11 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10268

அஸ்ஸலாமு அழைக்கும்.....

Dear Mohideen (Phoenix - USA)........ The transparency is well maintained at UMF. During your next stay at Kayalpatinam, please do visit and verify the records. Kindly do not listen to the speculators and those who confuse in the web page. This will help you in strengthening your confidence over UMF. FYI, every overseas organization do support UMF on all occasions...even today!!! Also, every overseas organization do consult, counsel and support UMF till today!!!

அன்பர் C. nash... நீங்கள் கூறுவது போல், நான் அறிந்தவரை ஐக்கிய முஸ்லிம் பேரவை சுனாமி தொகுப்பு வீடு தேர்தல் புறகணிப்பு விஷயத்தில்... ஒரு தவறும் செய்யவில்லை. காரணம்... நாம் நடத்திய போராட்டத்தின் விளைவாக... நமக்கு (கோர்ட்டில்) நீதிமன்றத்தில் கட்டுமானத்தை நிறுத்த தடை கிடைத்தது. அது நம் ஊரின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

மேலும்.... இன்று வரை கோர்ட்டில் நமது ஊருக்காக அந்த வழக்கை யார் எடுத்து வாதாடுகிறாகள்? யார் அதுக்காக பணம் செலவு செய்கிறார்கள்? இதில் உங்களின் பங்கு ஏதும் உள்ளதா? இது எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை.... புரியவில்லை? உங்களுடைய்ய கருத்தில் எப்போதும் நான் வாதத்தைதான் பார்கிறேன். அவசியமில்லாமல், "ஐக்கிய முஸ்லிம் பேரவை" பெயரை எடுத்து தயவுசெய்து, நீங்கள் நடுநிலை வாதிகளை குழப்பாதீர்கள்.

சகோதரர் "Rayyan's Dad"..... உங்களின்....... "நாமும் மற்றவர்களைப்போல, ............... அல்லாஹ் எல்லாவற்றிக்கும் போதுமானவன்!!"....... கருத்தில் நியாயமான ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால்... நாம் அதை எப்படி வெழிப்படுத்துவது? ஐக்கிய முஸ்லிம் பேரவையையும், இக்ராவையும் ஒப்பிடும் போது... இரண்டு இடத்திலும் ஒன்று போல்தான் நடக்கிறது!! இதற்க்கு காரணம் (என் கருத்துப்படி) ஒன்று... ஐக்கிய முஸ்லிம் பேரவையின் செய்திகள் வலைபக்கங்களில் நமக்கு தரப்படவில்லை.. அல்லது... ஐக்கிய முஸ்லிம் பேரவை செய்திகளை முறையாக வெளியிடவில்லை... அல்லது...... அனைத்து வெளிநாட்டு அமைப்புகள் அந்த கோரிக்கையை ஐக்கிய முஸ்லிம் பேரவையிடத்தில் கோரவில்லை?!

அல்லாஹ் எல்லாவற்றிக்கும் போதுமானவன்!!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [11 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10313

Re: Comment# 42 by AbdulKader (Abu Dhabi) (Cut & paste).

(அன்பர் C. nash... நீங்கள் கூறுவது போல், நான் அறிந்தவரை ஐக்கிய முஸ்லிம் பேரவை சுனாமி தொகுப்பு வீடு தேர்தல் புறகணிப்பு விஷயத்தில்... ஒரு தவறும் செய்யவில்லை. காரணம்... நாம் நடத்திய போராட்டத்தின் விளைவாக... நமக்கு (கோர்ட்டில்) நீதிமன்றத்தில் கட்டுமானத்தை நிறுத்த தடை கிடைத்தது. அது நம் ஊரின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி).

Yet an another false information.

Public protest has nothing to do with Court order. We people gathered to protest against the government's ("Slum Clearance Board" - A govt., department) decision to go head with the Tsunami project. Not to influence the Law court.

Law court makes orders based on laws and arguments put forward to it. The Honorable Judge ordered "Temporary Stay" . He also ordered government Surveyor to measure the distance (between sea-shore and the project starting point) and submit his report to the court. The government staves came to our town and measured the distance. We do not know when is the next hearing.

I believe the Judge ordered the "Stay" based on CRZ (Coastal Regulation Zone) Act which Aikkiya Peravai did not want to invoke at the early stage, which we knew why. (Had it not been CRZ Act, The Judge would not have ordered to measure the distance).

I am sure Aikkiya Peravai will not agree with Bro. Abdulkader (Abudhabi).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by AbdulKader (Abu Dhabi) [11 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10336

அஸ்ஸலாமு அழைக்கும்...

எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய AWS காக்கா அவர்களே...

ஒருவேளை என் தகவல் தவறான இருக்க முடியும்! அனால் நான் சொன்னது உண்மை. அதாவது... "நாம் நடத்திய போராட்டத்தின் விளைவாக... நமக்கு (கோர்ட்டில்) நீதிமன்றத்தில் கட்டுமானத்தை நிறுத்த தடை கிடைத்தது. அது நம் ஊரின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி."

இதை விடுங்கள்.. முக்கியம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே? . நீங்களும் ஊரில் இருக்கின்றீர்கள்...இன்று வரை கோர்ட்டில் நமது ஊருக்காக அந்த (சுனாமி குடியிருப்பு) வழக்கை யார் எடுத்து வாதாடுகிறாற்கள்? யார் அதுக்காக பணம் செலவு செய்கிறார்கள்? இதில் உங்களின் பங்கு ஏதும் உள்ளதா? இது எல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா அல்லது புரியவில்லையா ?

மேலும்...... உங்களைபோல் படித்தவர்கள் ஏன் ஐக்கிய முஸ்லிம் பேரவை தினமும் சென்று உங்களால் இயன்ற உதவிகளை செய்யக்கூடாது?

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [11 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10340

சகோதரர் அப்துல் காதர் (அபு தாபி) அவர்களின் கோரிக்கை ஆரோக்கியமானது. AWS காக்கா அவர்கள் ஐகிய பேரவையுடன் சேர்ந்து பொது காரியங்களில் ஈடுபடலாமே! இல்லை அங்கு சென்று தங்கள் ஆலோசனைகளை வழங்கலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re: விளக்கு மாமா வின் தேர்வு முற்றிலும் வெளிப்படையானது !!
posted by arabi haja (Hong Kong) [11 October 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 10344

ஐக்கிய பேரவையின் செயலர் ஹாஜி பிரபு சுல்தான் அவர்களின் அறிக்கையை படித்தேன். அதில் அவர்கள் தற்போதைய தலைவரின் தேர்வை நியாயப்படுத்த, விளக்கு மாமா வின் தேர்வை தேவையில்லாமல் தவறான முன்னுதாரணமாக இழுத்திருப்பதாகவே நினைக்கிறேன். விளக்கு மாமாவின் தேர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.

அந்த தேர்வு நடவடிக்கையில் நேரடியாக எங்கள் ஜமாஅத்தின் பிரதிநிதியாக அனைத்து ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொண்டவன் என்கின்ற முறையில், அவர்களின் கருத்தில் இருந்து மாறுபடாமல் என்னால் இருக்க முடியவில்லை. குறை கூறும் நோக்கு இல்லாமல், சரித்திரம் தவறாக எழுத படக்கூடாது என்ற உந்துதலால் இதை எழுதுகிறேன். சில விளக்கங்கள் இதோ!

1 . விளக்கு மாமாவும், பாதுல் அஷாப் ஹாஜியும் போட்டியாளர்கள். இருவரும் எல்லா நிலையிலும் சம தகுதியும், பன்முக அந்தஸ்தும் திறமையும் பெற்றிருந்ததால், தேர்வு என்பதே அன்று அனைத்து ஜமாஅத் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சவாலானது. கடினமானது .எனவே பல கூட்டங்கள் நடத்த வேண்டியதாயிற்று. யாரை தேர்வு செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னை, ஒரு முடிவு எட்ட முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் 'நீங்களே உங்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து (இன்னொருவர் விட்டுகொடுத்து) கொள்ளுங்கள்' என்று கேட்கவேன்டியாதயிற்று. அன்று இருந்த பெரியவர்கள் பழைய (பிரிவினை) சரித்திரத்தை நினைத்து எந்த தவறுக்கும் (மீண்டும் ஒரு பிரிவினைக்கு அவர்கள்) இடம் அளிக்கவில்லை. அந்த தேர்வின் முழு விபரமும் எழுத இங்கு இடம் இல்லை.

இப்போதைய நிலை அப்படியா ? சகோ. வகிதா அவர்களும் சகோ. மிஸ்ரியா அவர்களும் சம திறமையில், நிலையில் (வயது மற்றும் அனுபவம்) உள்லோரா ? அனைத்து தகுதிகளும் உள்ள வகிதா விற்கு 16 ஒட்டு , ஊர் நிர்வாகம் பற்றிய பால பாடமே தெரியாத, அனுபவம் ஏதும் இல்லாத மிஸ்ரியா விற்கு 40 ஒட்டு. ஊர் நலனில் அக்கறை உள்ள உங்களை போன்றோர் இப்படி நடக்க அனுமதித்தது எப்படி ? விளக்கு மாமா தேர்வில் யாருக்கும் அநீதி இளைக்க அன்று யாரும் முயலவில்லை. முடியவும் முடியாது. ஆனால் இன்று என்ன மர்மம் நடந்தது ? இதை அனுமதித்து சரியா ? 40 வாக்குகள் மிஸ்ரியா பெறுமாறு நடந்த ஏற்ப்பாடு என்ன ? இதற்காக தங்கள் வருந்துகிறீர்களா ?

2 . விளக்கு மாமாவின் தேர்வில் எந்த சந்தேகத்திக்கும் இடம் கொடுக்கா வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாகவும் வெளிப்படையாகவும், அனைத்து ஜமாத்துக்கும் கால அவகாசம் கொடுத்து வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. அன்று போட்டி வேட்பாளர் ஹாஜி பாதுல் அஷ்ஹாப் அவர்கள் சாதாரணமானவர்களா ? போட்டிக்கான அனைத்து காரணிகளும் இருந்தன. அன்று இருந்த பெரியவர்கள் நடுநிலையாக அழகாக அதை செய்து முடித்தனர். எந்த குறைக்கும் இடம் கொடுக்கவில்லையே !

இப்போதய தேர்வு அப்படியா ? பேரவையின் பொறுப்பான பதவியில் உள்ள நீங்கள் நீதிபதி அந்தஸ்தில் (அன்று போல்) இருந்து நடு நிலையாக அல்லவே தேர்வை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவசர கதியில் அள்ளி தெளிர்த்தற்போல் நடந்தது தெரிய வில்லையா ? எப்படி இரண்டும் சரி ?

3 . விளக்கு மாமாவின் தேர்வையும், தற்போதைய தேர்வையும்தான் உதாரணத்திற்கு இழுக்க வேண்டும் . நாச்சி தம்பி அவர்களும், வகிதாவின் முந்தியதும், வாவு அப்துர்ரஹ்மான் ஹாஜியின் தேர்வும் மறைமுகமானது. (உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்). மறைமுக தேர்வானதால் போட்டியாளர்கள் என்கின்ற பிரச்னை எழாது. குறைந்த எண்ணிக்கை உள்ள உறுப்பினர்களை சமாளிபது மிக எளிது. ஆனால் நேரடி தேர்வில் அப்படி இல்லையே ? பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் வாய்ப்பு உள்ளது என்பதை முன்னமே வுணர்ந்து, அதற்க்கான வாயில்களை அடைத்து அவற்றை வெளிப்படையாகவும், பல கட்டத்தில் கலந்து ஆலோசித்தும் அல்லவா இறுதி முடிவை எட்டியிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு மறுக்க பட்டதன் காரணம்தான் என்ன ? தயவு செய்து சொல்லுங்களேன் ?

வகிதா மற்றும் மிஸ்ரியாவின் தேர்வு அவ்வாறு வெளிப்படையாக, பல கட்ட ஆலோசனைக்குப்பிறகு நடந்ததா ? இறுதி முடிவு எட்டப்பட்டதா ? தயவு செய்து உண்மையை வெளிப்படுத்துங்களேன். மக்கள் சில விளக்கங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கான விளக்கங்கள் இல்லையே ?

எப்படி விளக்கு மாமாவின் தேர்வை மிஸ்ரியாவின் தேர்வுக்கு இணையாக வாதிக்க முடியும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [11 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10347

Re: comment # 44

முதலில் தெரிந்துகொள்ளுங்கள் இது சுனாமி குடியிருப்பு Project அல்ல. Slum Clearance Board ( குடிசை மாற்று வாரியம்) எடுத்து நடத்தும் Project. முதலில் தனி நபர்கள் பெயரில் வழக்கு போட்டு இதற்கு Stay வாங்க முயற்சி நடந்தது. இரு முறை தோல்விதான். கடைசியாக போடப்பட்ட வழக்கு நமது நகர்மன்றம் சார்பாக தற்போதைய தலைவர் அவர்கள் பெயரில் போடப்பட்டது.

இது விசயமாக ஜலாலியாவில் நடந்த ஜமாஅதினர்கள் கூட்டத்தில் முதலமைச்சருக்கு (கருணாநிதிக்கு) பொதுமக்கள் சார்பாக 5 ,000 ௦௦௦ Post Card போடும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்பொழுது எங்கள் ஜாமத்தை சார்ந்த பொறியாளர் ஷேக் அவர்களும் நானும் எழுந்து எங்களுடைய கருத்தை (Infact we advised aikkiya peravai to invoke CRZ Act) சொன்னோம். அந்த கூட்டத்தில் பொறியாளர் சேக் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் CRZ Act in முக்கியத்திவத்தை பற்றி பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். அந்த கூட்டத்தில் ஐக்கியமான் சில செல்வந்தர்களும், பிரபுக்களும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

மறுப்பதற்கு அவர்கள் எடுத்துவைத்த வாதம் அப்பொழுது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.. ( சில நாட்களுக்கு பிறகு அதிலுள்ள பயம் கலந்த சுயநலம் தெரியவந்தது). இதெல்லாம் பழைய கதை அதற்குள் இப்பொழுது செல்ல நான் விரும்பவில்லை.

தற்காலிக தடை விதித்த நீதமன்ற ஆணையின் நகலை பெற ஐக்கிய பேரவையில் பொறுப்பிலுள்ள நபரை இருமுறை அணுகினேன். ஏதோ இராணுவ ரகசியம் போன்று அதன் நகல் தர மறுத்துவிட்டார்கள். Rs. 1,500/- செலுவு செய்தால் நீதிமன்றதிலிருந்தே அதன் நகலை பெறமுடியும் எனபது கூட தெரியாதவர்கள் பாவம். (ஒரே ரூபாய் செலவழித்து Photocopy எடுக்கவேண்டிய ஒரு செயலுக்கு Rs.1,500/- செலவு செய்வது மடமை).

தூத்துக்குடியில் என்னுடைய நண்பர் (வழக்கறிஞர்) மூலமாக, நீதிமன்ற கிளையின் பெயர், வழக்கு எண், வாதி, பிரதிவாதி போன்ற விபரங்களை அறிந்துகொண்டு Right To Information Act மூலம் அந்த தற்காலிக தடையின் காரணங்களை கேட்டு எழுதியுள்ளேன். இன்ஷா-அல்லாஹ், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அந்த நகல் எனக்கு கிடைக்குமென்று எண்ணுகிறேன்.

ஒரு நீதிபதி தீர்ப்பு கூறும் போதோ அல்லது தற்காலிக தடை விதிக்கும்போதோ அதற்க்கான காரணங்களையும் அந்த தீரிப்பில் எழுதுவார். அதன் நகல் வாதிக்கும், பிரதிவாதிக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது நீதியின் ஒரு பகுதி.

மேற்படி வழக்கில் தற்காலிக தடை விதித்த நீதிபதி, "காயல்பட்டின மக்கள் போராட்டம் செய்தார்கள். அதனால் நான் இந்த தற்காலிக தடையை வழங்குகிறேன்" என்று அந்த ஆர்டர் இல் எழுதிஉள்ளார் என்று சகோ., அப்துல்காதர் சொல்ல வருகிறாரா? அதுதான் அவர் கூற்றிற்கு அர்த்தம். நீங்கள் சொல்லுவது உண்மை என்றால் ஆதாரத்துடன் நிருபியுங்கள்.

இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசிய எனக்கு இல்லை. இருந்த போதிலும். உங்களைப் போன்று வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதன் முழு விபரம் தெரிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதற்காக சொல்லுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. தவிர்த்து இருக்கபடவேண்டிய போட்டி
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [11 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10353

அஸ்ஸலாமு அலைக்கும்.. ஒரு பிரச்சினை இன்றி , தலைவரை ஐக்கிய பேரவையால் தேர்ந்து எடுத்து இருக்க முடியும்.. ஆனால் ஐக்கிய பேரவையின் நடைமுறைகள் மீது, பலருக்கு சந்தேகம் வந்த பொது, அந்த 25 சம்பந்தமாக தவிர, வேறு எந்த சந்தேகத்தையும், ஐக்கிய பேரவை மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை. இது ஐக்கிய பேரவையின் செயல்பாடு, transparent ஆகா இல்லை என்பதை தெளயுபடுதியது..

ஐக்கிய பேரவையின் சில நடைமுறைகள், மக்களுக்கு ஏனோ பேரவை முன்னமே முடயு செய்த வேட்பாளரை மக்கள் மீது , ஜனநாயக போர்வை சுற்றி , தின்க்கிறதோ என்ற சந்தேகத்தை வழுபடுத்தியது.. முக்கியமாக ஆலோசனை கூட்டம் என்று அழைத்து, தீர்மானத்தை வாசித்த போது, ஆலோசனை இல்லாமல் எப்படி தீர்மானம்...என்ற சந்தேகம்..ஆகா preplanned அண்ட் readymade தீர்மானம்..

ஆலோசனை என்ற பெயரில்.. தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்கும், களத்தில் யார் யார் உள்ளார்கள் என்று முத நாளே எல்லா ஜமாஅதிர்க்கும் தெரிவிக்காமல், தேர்வு அன்று மட்டும் தெரிவுத்து, ஜமாஅத் பிரதிநிதிகளை vote போடா சொல்லி தேர்வு செய்தது, அது ஜமாஅத் பிரதிநிதியிந்தநிபட்ட தேர்வே அன்றி, ஜமாத்தின் ஒட்டு மொத்த தேர்வு அல்ல ..

எல்லாவற்றையும் மீறி, பேரவை வேட்பாளர்இன் மனு நிராகரிக்க படலாம் என்ற செய்தி உலவிய போது, அவரின் தாயார், வேட்புமனு தாக்கல் செய்தது ஐக்கிய பேராவின் உந்துதல் படியா அல்லது தன்னிச்சையான முடியா. பேரவையின் முடிவு என்றால், எந்த முடிவு ஜமாஅத் பொது நல உறுப்பினரின் ஆலோசனை அல்லது வோட்டு முறையில் எடுத்தா அல்லது வேட்பாளரின் தாயார் என்ற முறையில் எடுத்தாதா..ஒரு சமயம் வேட்பாளரின் மனு தள்ளு படி செய்யப்பட்டு,தாயார் வெற்றி பெற்று இருந்தால், இத்தனை ஜனநாயக முறையி பேரவை நடந்ததற்கு சம்மட்டி அடிதானே.. அணைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பின் கருத்துக்கும் விரோதம் தானே..இதை இன்னும் பேரவை தெளிவு படுத்த வில்லை ...

நான் தனிப்பட்ட முறையில் பேரவையின் வேட்பாளரோ அல்லது தயாரோ விரோதம் இல்லை..இருவரில் யார் வென்றாலும் சாம் சகோதரிகள் வென்றதாகவே இருக்கும்..இதில் தனிப்பட்ட சிலரின் ஈகோ தான் இந்த போட்டியை ஏற்படுத்தி விட்டதோ என்று என்ன தோன்றுகிறது..இன்னும் எனது ஆசை , நல்ல முடிவு மூலம் ஒரு சகோதரியை தவிர மற்ற சகோதரிகள் பொடியை விட்டு அதிகாரபூர்வமற்ற முறையில் விலகி , நல்ல தலைவரை ஊர் இரண்டு படாமல் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது தான்.. அனால் இது காலம் கடந்த, சாத்தியமற்ற ஆசை என்றாய் எண்ணுகிறேன்..எது நடந்தாலும், தேர்தல் முடிவு, சமுதாயத்திற்கு அதிர்ச்சி தரும் முடிவாக கட்டாயம், இருக்காது என்றே எண்ணுகிறேன்..பிரார்திர்கிரேன்.

நடப்பது இறைவன் அருளால் நல்லதாக இருக்கட்டும்..இந்த தேர்தல் இருந்து பல படிப்புகளை நாம் பெற்றுள்ளோம்.. வரும் காலத்தில் ஐக்கிய பேரவை widespread representation உடன்,எல்லோரும் ஏற்கப்பட்ட byelaw உடன்,பேரவையின் நிர்வாக பதவிகள் சுழற்சி முறையில் அணைத்து தரபினர்க்கும் உள்ளடிகியதாக (அனைத்து தரப்பினர் என்று குறிப்பிடுவது ஜமாஅத், கொள்கை, வயது,போன்றவை)அமைந்தால் ஊருக்கு நல்லது. இந்த கருத்தை எந்த பேரவையின் நிர்வாகிகளை புண் படுத்த வேண்டு எண்ணத்தில், சத்தியமாக எழுத வில்லை..ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் ..

சிறு தவற்றால், பெரிய பிளவு தடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறுகிறேன்.. ஐக்கிய பேரவையின் நிர்வாகிகளின், அனுபவம், வயது, தியாக உணர்வு எதையும் குறைத்து மதிப்பிடுபவன் நான் அல்ல.இவ்வழு திறமை இருந்தும் எங்கோ தவறு நடந்து பயார்பட்டதை, இனி வரும் காலங்களை retrospect ஆகா அலசி ஆராய்ந்து , மீண்டு இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்வது நல்லது..வல்ல இறைவன் நமது காரியங்களின் முடிவை, ஊருக்கு நம்மை படைபதாக ஆக்கி வைப்பானாக அமீன்.

டாக்டர் D முஹம்மது கிஸார்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by CNash (Makkah) [11 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10361

AN EXCELLENT AND EXCEPTIONAL REACT BY BR. HAJA ARABI AGAINST THE PREJUDICED JUSTIFICATION OF AYKIYA PERAVAI FOR THEIR PRESENT BIASED STANCE. SUCH TREASURED WORDS COULD ONLY BE EXPECTED FROM AN EXPERIENCED AND KNOWLEDGEABLE PERSON LIKE YOU.

BUT NO MATTER WHAT WAS YOUR ARGUMENT, YOU COULD NOT GET SINGLE DROP OF MILK FROM THESE STERILED COWS I MEAN PATHWAY OF AYKIYA PERAVAI IS ALWAYS ONE WAY TRAFFIC, YOU WON’T GET ANY RESONSE. IF THE FACT BE TOLD ALL YOUR WORDS ARE LIKE A STONE IN THE WELL.

ADMIN: PLS, CONSIDER TO PUBLISH THE STATEMENT OF HAJA ARABI IN THE NEWS COLUMN NOT MERELY AS A COMMENT WITH HIS PERMISSION WHILE WORTHLESS INDIVIDUAL’S RIDICULOUS STATEMENT AND RIDICULOUS RESOLUTIONS ARE PLACED HERE AS THE NEWS!!

BR. BADHUL ASHAB, RESPONSE OF RAYYAN’S DAD AND AWS IS PRETTY ENOUGH TO CLARIFY YOU. I MAY RECALLL YOU THE PERISHED (By you) STORY OF TSUNAMI HOUSING PROJECT AND SUBSEQUENT CHANGES OF STANDPOINT OF AYKIYA PERAVAI THROUGH THE FOLLOWING LINKS FOR YOUR READY REFERENCE IF YOU MIGHT HAVE CONVENIENTLY FORGOTTEN.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5905

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5397

JUST READ MY RELEVANT COMMENTS TOO WHEREAS YOU COULD UNDERSTAND I AM NOT JUST A SYCOPHANT, I HAVE SUPPORTED AP WHEN IT WAS IN RIGHT PATH, I CONDEMED THEIR ACT WHILE IT WAS DERAILED.

நீங்கள் சொல்லுவது போல என் கமெண்ட் எப்போதும் விவாதம் பண்ணுவதாக உங்களுக்கு தெரிந்தால் மேல உள்ள லிங்க்ஸ் கிளிக் பண்ணி அதில் உள்ள செய்தியையும், என்னுடைய கருத்தையும் பாருங்கள், ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய இடத்தில எதிர்த்தும் தான் என் கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். உங்களை போல கண்ணை மூடி கொண்டு அது மிஸ்ரியாவை தேர்தெடுத்தாலும் சரி அவங்க உம்மாவை தேர்ந்து எடுத்தாலும் சரி ஆதரிப்போம் என்று சொல்ல வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை. .

தவறை சுட்டி காட்டுனா நீங்க ஊருக்கு வரும்போது உள்ள போய் பார்த்து இருக்கியா? வெளிப்படையா ஜலாலியாவில் நடந்த பேரவை நிகழ்ச்சியை வெளியே சொல்ல கூடாது என்று வாஹீத் காக்கவிற்கு அட்வைஸ் வழங்குநீர்கள் சாமனியார் உள்ள போய் கேள்வி கேக்குற அளவுக்கு அங்கே சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கா?

உங்கள் கூற்றுபடி கருணாநிதி அரசின் தவறை சொல்லுவதேன்றால் அறிவாலயத்திற்கு தினமும் போயிட்டு வந்துட்டு தான் இருக்கணுமோ?

நல்லதை பாராட்டுங்கள் !! தவறு என்று தெரிந்தால் சுட்டி காட்டுகள்!! அது உங்களை சந்தோர் சொந்தம் பந்தம் என்று யாரு அந்த அவையில் இருந்தாலும் சரியே!!

Br . ஷாகுல் ஹமீது (HK ), அது எந்த ஜாமத்தாகவும் இருக்கட்டும், அவர் போட்டியிட்ட ஜமாத்தால் நிராகரிக்க பட்டது உண்மைதானே!! (ஏன் ஜமாத் மாறி போட்டி போட்டார்? ) ஒரு குறிப்பிட்ட ஜமாத்தால் 3 ம் இடத்துக்கு அனுப்பட்ட வேட்பாளர்!! ஊரே கூடி இருக்கும் ஜாமாத்தால் 3 இல் 2 பங்கு வாக்கு வாங்க முடிந்த அதிசயம் பற்றிதான் கேட்டேன்.. நீங்கள் பெருந்தன்மைக்கு கிடைத்த பரிசு என்று சொன்னீர்கள்!!

பெருந்தன்மை என்றால் வந்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டு கொடுத்து விட்டு பொறுமையாக இருப்பதுக்கு தானே சொல்லுவாங்க!! தோற்கடிக்கப்பட்டு போட்டி இட முடியாமல் போனானும் பெருந்தன்மை தானா உங்க அகராதியிலே?

அப்படி யென்றால் பெருந்தன்மைக்கு பேர் போன மற்ற 3 வேட்பாளரை தானே நீங்க உங்க வேட்பாளருக்கு மாற்ற அறிவித்து இருக்கணும் அவங்க உம்மாவை இல்லையே என்ன ஒரு வியக்கியானமோ தெரியவில்லை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by AbdulKader (Abu Dhabi) [12 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10365

அஸ்ஸலாமு அழைக்கும்...

எனது அன்பின் உடன்பிறவா சகோதர்களே.....

என்னுடைய்ய கருத்துக்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில் கருத்து படிப்பதற்கு மிகவும் அழகாகவும், அறிவுபூர்வமாகவும் உள்ளது என்று எடுத்துக்கொண்டால்.... செயல் முறையில் அதற்க்கு வடிவம் கொடுக்க இயலாது!

நான் அதை செய்தேன், இதை சொன்னேன்...என்று சொல்லுவதெல்லாம் சரியே!!! ஐக்கிய முஸ்லிம் பேரவை எங்களுடைய கேள்விகளுக்கு பதில் தரவில்லை, நாங்கள் சொன்னதை கேட்கவில்லை, எங்களை உதாசீனப்படுத்தி விட்டார்கள் என்றெல்லாம் வெளியில் இருந்து சொல்ல்வதைவிட.... ஐக்கிய முஸ்லிம் பேரவையில் நம்மளுடைய்ய கேள்விகளுக்கு பதில் தர அங்கு யாரெல்லாம் வேலை செய்கிறார்கள்? அவர்களின் சம்பளம் என்ன? இன்னும் பல நிர்வாக சம்பந்தப்பட்ட கேள்விகளை நீங்களே கேட்டு, ஐக்கிய முஸ்லிம் பேரவை அலுவலகம் சென்று உண்மையை தெரிந்து கொண்டால்.... உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்ஷாஅல்லாஹ்..... கண்டிப்பாக பதில் கிடைக்கும்.

நான் தங்கள் முன் எழுப்பிய "ஒரு கேள்விக்கு" உங்களில் யாருக்கும் பதில் தர முடியவில்லை போலும்?!! ஒன்று புரிந்து கொள்ளுங்கள்... கேள்விக்கு பதில் கேள்வி இல்லை. ஆகையால்.... தயவு செய்து என்னுடைய்ய கருத்தை ஒரு வாதத்திற்காக எடுத்து என்னுடன் திரும்ப திரும்ப கேள்வி கேட்கவேண்டாம் என்று பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. புற நகர் மக்கள் கயல்படினத்தின் மண்ணின் மைந்தர்கள் கிடையாதா ?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [12 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10374

பேரவையே...? நீங்கள் சொன்ன (பேரவை சார்பாக 25 பிரதிநிதி) உங்களின் 25 பிரதிநிதி ஆரம்பமே ஊர் மக்களை யோசிக்க வைத்து விட்டது - பல எதிர்ப்புக்கு மத்தியில் பின்பு தங்கள் 25 பிரதிநிதி (உள்நோக்கம்) திரும்ப பெறப்பட்டது தானே...! மக்கள் ரெம்ப ரெம்ப உங்களின் செயல்பாடுகளை உள்நோக்கத்தை கவனித்த வண்ணம் இருக்காங்க...!

புறநகர் சங்கங்களுக்கு பொது வேட்பாளர் தேர்வுக்கு அழைப்பு கொடுத்தீர்களா ? அவர்களை பேரவை நீங்கள் புறக்களித்து இருக்கிறீர்கள்... காயல்பட்டின நகர் மன்றம் பேரவைக்கும் ஊர் ஜமாஅத்களுக்கும் மட்டும் தானோ ? புற நகர் மக்கள் கயல்படினத்தின் மண்ணின் மைந்தர்கள் கிடையாதா ?

அணைத்து சமூக மக்கள் அண்ணன் தம்பியாக வாழும் இந்த ஊரில் உங்களின் (பேரவையின்) அணுகு முறையால் பிளவுபட்டு கிடக்கிறது

இனியும் உங்களின் ஒருதலை ராகம் செல்லாது..!

பேரவையின் மேல் மக்களுக்கு இருந்த மதிப்பும், நம்பிக்கையும், மரியாதையும் விலகி ரெம்ப நாட்கள் கடந்து விட்டது...!

இனியும் மக்களை ஏமாற்ற முடியாது... வரும் 17ஆம் தேதி ஊர் மக்கள் மற்றும் புறநகர் மக்களின் மனநிலையை தாங்கள் அறியலாம்...

வெறுப்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Mohiadeen (Phoenix) [12 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10377

There is no use of writing comments again and again and telling the past to hide the wrong. Time has changed a lot,now kayal people are started questioning and many candidates had nominated.It should be taken into consideration by respective organisation.

It wont be a long for people revolution. If not this election surely next if the same continues. Its been ordered by time.Its world truth and we all knew that.

Whoever win, they should wish to surve the people regardless of money/castes/religions.

WE WILL HOPE THE BEST IN FUTURE.

Thanks
Mohiadeen(USA)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by sholukku.aj (kayalpatnam) [12 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10387

அஸ்ஸலாமு அலைக்கும். தெளிவான விளக்கம் . நல்ல அணுகுமுறை. காயலின் சொந்தங்களே ஐக்கிய பேரவை நம் நலனுக்காக உள்ளது . அதில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்குமேஆனால் நாம் சரிசெய்து கொள்ள முடியும் . அதை விட்டு ஐக்கிய பேரவையை எதிர்த்து வேறு ஒருவரை நிறுத்துவது நம் ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காதா? சிந்திக்கஊம் .நிச்சியம் உண்மையே வெல்லும். நல்ல முடிவு இறைவன் அருளால் விரைவில் வெளிப்படும். நன்றி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Shahul Hameed (Hong Kong) [12 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10392

சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களே! சகிப்பு தன்மை வேண்டும். வெறுப்பு வேண்டாம். நட்புடன் பணியாற்றுங்கள், உயர்ந்த பதவிக்கு வரலாம்.

நட்புடன்

ஷாகுல் ஹமீது
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by MOHAMED ADAM SULTAN (K) [12 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10398

KWT அறிக்கையின் நியாயமான சந்தேகங்களுக்கு பதில் இல்லாமல் மலுப்பி இருக்கிறது ஐயக்கிய பேரவை அறிக்கை;

ஐயக்கிய பேரவையின் திங்களன்று நடந்த ஊர் தெருமுனை பொது கூடத்தில் ஒரூ "காயல்" கர்ஜித்தது, ஊரில் எந்த ஒரு ஆபத்தும் எவருக்கு ஏற்பட்டாலும் உடனே ஓடிவந்து ஐயக்கிய பேரவை பாதுகாப்புகொடுக்கும் என்று கொக்கரித்தார்.

கடந்த மாதத்தில் தான் தாவா சென்டர் மாணவியை காவல்துறை பலவந்தமாக இலுததுசென்றதென்று அதை கண்ணடித்து ஆர்ப்பாட்டம் கூட நடந்ததே, அப்பொழுது ஐய்கிய பேரவை எந்த அட்ரஸில் அமுங்கி இருந்தது . குறைந்தபட்சம் ஒரு அனுதாப அறிக்கையையாவது விட்டார்களா இந்த கல் நெஞ்சு கர்ரர்கள்.

ஒரு மொட்டை நோடீசில் நம் பெரியவர்களின் பெயர் பழுதாவதை பொறுக்காத அன்றைய அஷ்ஹர் கத்தீபே மேடை ஏறி முழங்கி போராட்டத்தை முன்னின்று நடத்தி ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்தார்கள்.

சென்ற சுனாமி வீடு ஆக்ரமிப்பு ஆர்பாட்ட கண்டன கூட்டதில் இதே "காயல்" கொட்டிய வார்த்தையாவது

என் கையாலையே 80 மீனர்வர்களுக்கு ரேசன் கார்டு எடுத்து கொடுத்து குடியமர்த்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஒரு ஊர் துரோகியை ஊரை காட்டிகொடுதவரை ஊர் ஒற்றுமையையை பாதுகாக்கும் புன்னியவரை பாருங்கள் என்று ஐய்கிய பேரவை மேடையில் ஏற்றி அழகு காட்டும் நிகழ்ச்சிக்கு ஈடு இணை உண்டுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [12 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10403

KWT அறிக்கையின் சந்தேகங்களுக்கு எந்த பதிலும் தராத தரமுடியத் அறிக்கைதான் ஐய்கிய பேரவை அறிக்கை.

சென்ற திங்களன்று நடந்த ஐய்க்ய பேரவை பொது கூட்டத்தில் ஒரு "காயல்" கர்ஜித்தது, ஊரில் எந்த ஒருஇடத்தில எந்த ஒரு ஆபத்து யாருக்கு நேரத்தாலும் உடன ஓடோடி வந்து காப்பாற்றுவது ஐய்கிய பேரவைதான் என்று பொளந்து கட்டினார்.

சென்ற மாதம் தாவா சென்டரில் ஒரு மாணவியை வலுகட்டாயமாக காவல் துறை இழுத்து சென்றதென்று பெரிய ஆர்பாட்டமே நடந்தது. அப்பொழுது ஐய்கிய பேரவை எந்த அட்ரஸில் அமுங்கி இருந்தது. குறைந்த பட்சம் ஒரு அனுதாப அறிக்கை கூட வெளியடவில்லை இந்த கல் நெஞ்சுகாரர்கள்.

மொட்டை நோட்டிசில் ஊர் பெரியவர்களின் பெயர் பழுதாகியத்தை பொறுக்காத அன்றைய அஸ்ஹர் கதீப் அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மேடிஎறி கண்டன குரல் எழுப்பி ஊர் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்தார்கள் அந்த ஜமாத்தினர்.

சுனாமி வீடு ஆக்கிரமிப்பு ஊர் கண்டன பொது கூடத்தில் இதே "காயல்" கொட்டிய வார்த்தைகள். இதே கையால் தான் 80 மீனவர்களுக்கு ரேசன் கார்டு எடுத்துகொடுத்து குடியமர்த்தினேன் என்று எல்லோர்களின் மத்தியில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஊர் துரோகியை,ஊரை காட்டிகொடுதவரை,சென்ற திங்களன்று கூடத்தில் மேடையேற்றி ஐய்கியபேரவை அழகுபார்கிறது.

நம்மூர் ஒற்றுமையை ஓங்கசெய்யும் உத்தமர்களையும்,அதற்கு துணை போகும் ஐய்கிய பேரவையையும் அடையலாம் கண்டுகொள்ளுங்கள். . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved