Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:28:54 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7784
#KOTW7784
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 31, 2011
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3462 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, அவர் தமிழகத்திற்கு வருவதைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழக (தேமுதிக) கட்சி நிறுவனரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கறுப்புக்கொடி காட்டியமைக்காக கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாவட்ட முன்னாள் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கோமதி கணேசன் முன்னிலை வகித்தார்.

இப்போராட்டத்தில், காயல்பட்டினம் நகர தேமுதிக சார்பில், அதன் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சித்தீக் ஹஸன் ஆகியோர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.



சாலை மறியல் போராட்டம் நடத்தியமைக்காக அவர்களைக் கைது செய்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன் தலைமையிலான காவலர்கள், சில மணி நேரத்திற்குப் பின் அவர்களை விடுதலை செய்தனர்.



தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
துணைச் செயலாளர், தே.மு.தி.க., காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by Mohmed Younus (Trivandram) [31 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15264

கேப்டன் உங்களுக்குமா தண்ணி கேட்குது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI) [31 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15265

மொத்தமே எட்டு பேர்.... ஐந்து கொடி..... இதற்கு பெயர் சாலை மறியல் போராட்டம்னு.... வேறே வேலை இருந்தால் பாருங்கப்பா... சின்ன புள்ள தனமா இருக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by hasbullah (dubai) [31 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15269

இதுலயும் போயி நம்ம காயல் மக்களா?

கருப்பு கொடி எதெற்கு காட்டனும்? அப்போ பிஜேபி தலைமையில் வந்தால் மஞ்சள் காவி கொடி காட்டுவீங்களா என்ன?

வேற நல்ல விஷயத்துக்கு போராடுங்க. நம்மட்ட அல்லாஹ் பிரதமர் வருகை பத்தி கேட்கபோவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery,DMDK kayalpatnam town (kayalpatnam) [31 December 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15279

அஸ்ஸலாமு அலைக்கும். தென்தமிழக விவசாயத்திற்கு மிகப் பெரும் நீர் ஆதாரமாக இருக்கும் முல்லைப் பெரியார் அணை விசயத்தில் இரட்டை வேடம், கூடங்குளம் அணு மின் நிலைய விசயத்தில் மக்களின் நியாயமான பயத்தைப் போக்காமல் அவர்கள் மீதே வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுவது, அப்பாவி தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவிப்பதை வேடிக்கைப் பார்ப்பது போன்ற தமிழர்களுக்கு எதிரான எல்லா விசயங்களிலும் பாரதப் பிரதமர் மௌனம் காத்துவருவதைக் கண்டித்து கறுப்புக் கொடிக்காட்டாமல் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கவா வேண்டும்?

சகோதரர் யூனுஸ் அவர்களே, அவருக்கு தண்ணீர் தேனியில் தேவையில்லை, சென்னையிலேயே கிடைக்கும். மக்களுக்காக போராடும் ஒரு தலைவரை பாராட்டமல் இருந்தாலும் பரவா இல்லை, கிண்டல் பண்ணாதீர்கள். இன்றைய அரசியலில் 173000000000000 ஊழல் செய்யும் அரசியல்வாதியும், சொந்த மக்களுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மக்களுக்காக போராடும் ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே.

சகோதரர் சுப்ஹான் பீர் முஹம்மது அவர்களே, போராட்டத்திற்கு சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். போராட்டம் பண்ணுவதற்கு ஆல்பலம், பண பலம் தேவை இல்லை, மன பலம், தைரியம் ,தில்லு இருந்தா போதும். நீங்க சொன்ன எட்டு பேரும் தேவையில்லை ஒருவர் போதும். நாங்க எங்க வேலையே மட்டும் பார்துட்டு போன காய்கரிகூட நீங்க அபுதாபியில் இருந்துதான் அனுப்பனும்.

சகோதரர் மகரூப் அவர்களே, இதுலயும் நம் காயலர்களா?என்றால்.....புரியல, காயல்பட்டணம்காரர்கள் எல்லாம் தி.மு.க.ல தான் இருக்கனுமா? கருப்பு கொடி என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கு, மஞ்சள் காவி கொடி... என்ன சொல்லவருகிறீர்கள், மக்களுக்காக போராட வேண்டாம் என்று குர்ஆனிலோ, ஹதீதிலோ கூறப்பட்டிருந்தால் சொல்லவும், எதை சொல்வதாக இருந்தாலும் தெளிவாக சொல்லவும்.

குடிநீர்ப் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, அப்பாவி தமிழ் மீனவர்களை கொள்ளுகின்ற பிரச்சனை, இதர்க்காகப் போராடுவது நல்ல விஷயம் இல்லை என்றாக் எது நல்ல விஷயம், சொல்லுங்கள். கண்டிப் பாக்க போராடுவோம்.

இவண்,
எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன்,
நகர துணை செயலாளர்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம்,
காயல்பட்டணம் நகரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by Cnash (Makkah ) [31 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15280

இப்போராட்டத்தில், காயல்பட்டினம் நகர தேமுதிக சார்பில், ............................................. ஆகியோர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

திரளானோர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மத்தவங்கல்லாம் எங்கே? கோபால் மாறி யாரும் தீக்குளிக்க முன்வராம இருந்தாங்களே அதுவரை நல்லது!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by SEYED ALI (ABUDHABI) [31 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15282

இதிலும் காயல் மக்களா?

என் இந்த கேள்வி? காயல்பட்டணம் ஒன்றும் அந்தரத்தில் தொங்கிக் கொன்டிருக்கவில்லை ஆகாசத்தில் கோட்டைகள் கட்டுவதற்கு. அதுவும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு இருந்தால்தான் கயல்பட்டனமும் இருக்கமுடியும்.

ஐந்து பேரோ அல்லது ஒரு ஆளோ மாநில உரிமைக்காகத்தானே. அங்கெ கேரளாவில் முஸ்லிம் என்றோ பிஜேபி ஆர் எஸ் எஸ் என்றோ இல்லை.

எல்லா மலையாளிகளும் அநியாயமாக தேவையில்லாத வதந்தியை கிளப்பி மாநிலத்தின் தண்ணீர் ஆதாரத்தையே த்கர்த்துக்கொண்டிருக்க இங்கே நாமோ துப்புக்கேட்டவர்களாக இருக்கிறோமே. இந்த காமெண்டை இந்த குறுகிய நோக்கம் கொண்ட இந்த வெப் சைட் வடிகட்டலாம். வெட்கம் கெட்ட குறிகிய மதியீனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மெத்த படித்த.. மேதாவிகள்....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH-K.S.A.) [31 December 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15283

தம்பி ஜைனுல் ஆப்தீன்... கிண்டல்... செய்தவர்களுக்கு... அழகாக ஆப்பு... வைத்து உள்ளீர்கள்.... சும்மா....எதாவது கருத்து எழுதவேண்டும் என்று கண்டதை எழுதாதீர்கள்.....வாப்பா மார்களா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN,, joint secretery, DMDK kayalpatnam town (kayalpatnam) [31 December 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15285

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் சீனாஸ் அவர்களே, அது என்ன ஒரு............ மூன்று நிர்வாகிகள் பேர் தெளிவாக எழுதி இருக்கே? கோபால மாதிரி தீக்குளிக்காம இருந்ததற்கு நாங்கள் மக்களிடம் நாடகம் போடும் கட்சியை சார்ந்தவர்களும் அல்ல, காயல்பட்டணம் சார்பாக போன நாங்கள் உங்களை போல அதி புத்திசாலியும் அல்ல.

அல்லாஹுவையும், ரசூல்(ஸல்)அவர்களையும் பின் பற்றக்கூடிய ஒரு முஸ்லிம். நான் பின்பற்றக் கூடிய இஸ்லாத்தில் இயற்க்கை மரணத்தை தவிர நமது உயிரை நாமே மாய்த்துக் கொள்ளக் கூடாது என்றுத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஒங்களுக்கு எப்படி சொல்லி தந்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.

ஆகவே சகோதரரே, வார்தைகளை யோசித்து போடுங்கள், ஏதோ லேப் இருக்கு, நெட் கனக்சன் இருக்கு என்று எதாவது எழுதாதீர்கள். அடுத்தவர் மனதினை புண்படுத்தும்படி எழுதாதீர்கள். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [31 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15291

விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

எல்லாரும் பாத்துக்குங்க நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ஜெயிலுக்கு போறேன். அட காமடி பீசுப்பா.

இத போய் சீரியஸா எடுத்துகிட்டு,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery, DMDK kayalpatnam town (kayalpatnam) [31 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15295

அஸ்ஸலாமு அலைக்கும். கே.டி.எம்.தெரு நண்பர்களான சீனாசும், முகம்மது அலியும் விஜயகாந்தை கிண்டல் செய்யும் விசயத்திலும் ஓன்று சேர்ந்துவிட்டார்கள். நல்லது செய்பவர்களை பாராட்டுவதுதான் பரந்த மனப்பான்மை, அதை விட்டு, நக்கல் நய்யாண்டி பண்ணுவது என்பது மிகவும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [31 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15297

நான் தே.தி. மு. க வும் இல்லை. விஜயகாந்தின் அரசியலும் எனக்கு பிடிக்காது. என்றாலும் ஒருமாநிலம் சார்ந்த பிரச்சினைக்காக ஒரு கட்சி செய்யும் போராட்டத்தை குறை கூறுவது நியாயம் அல்ல.

கூட்டம் சேர்வது அல்லது சேர்ப்பது இதெல்லாம் அரசியல்கட்சிகளின் சிங்கடிசிங்கா வேலைகள்தான். கூட்டத்தை வைத்து மட்டும் ஒரு போராட்டத்தின் நியாங்களை கொச்சை படுத்திவிடக்கூடாது.

இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு பெரிய அளவில் மக்கள் சேர்வதில்லைதான். ஆனால் அவர்கள் பேசும் விஷயங்கள் யாவும் எப்படியோ மக்களை எட்டிவிடும். இரண்டுமாநிலங்களில் அவர்களின் நிர்வாகம் நடக்கிறது. விஜயகாந்த் எப்படிப்பட்டவர் அவரது அரசியலின் தரம் என்ன என்பதை விவாதிக்க வேறு களங்கள் இருக்கின்றன. அங்கு அதை விவாதித்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் எந்த கட்சிதான் இதுபோன்ற கூத்தை நடத்தவில்லை..? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். கட்சிகள் நடத்தும் போராட்ட வடிவம் எல்லாம் கேளிக்குரியதுதான்.

தி.மு கவினர் அரசியல்சட்டபிரதி எரிப்பு எனசொல்லிவிட்டு பிரச்சினை என்று வந்ததும் "நாங்கள் அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை. காதல் கடிதத்தைத்தான் எரித்தோம் "என பல்டி அடிக்கவில்லையா..?

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. எல்லாம் அரசியல் தானுங்கோ!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [31 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15298

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, பாஜக, முஸ்லீம் லீக் போல தேமுதிகவுக்கு கேரளத்தில் அடித்தளம் இருந்தால் இவர்களின் போராட்டத்தின் நிலை எப்படி இருக்கும்னு கொஞ்சம் நடுநிலையோடு யோசிச்சு பாருங்க?

அதாங்க எல்லாம் அரசியல்தான். மக்களுக்காக என்பதெல்லாம் சும்மா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. அட்மினின் உள் குத்து.....!!!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [31 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15302

அட்மின் அவர்களே......

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் (கைதை இது என்ன மெட்ராஸ் பாஷையா...? கைதானதை என்று போட்டால் நன்றாக இருந்து இருக்கும்.) கண்டித்து, தேமுதிக சாலை மறியல்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [31 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15303

கமெண்ட்ஸ் எழுதும் போது தயவு செய்து நல்ல வார்த்தைகளை போடுங்க,,,, அடுத்தவங்க மனம் புண்படும்படியா போடாதிங்க,,, அப்படி என்ன தப்பா பண்ணிட்டாங்க,,,, நல்ல ஒரு காரியத்திற்காக போராடிய கட்சி தலைவரை கைது பண்ணியதற்காக ஒரு போராட்டம்,,,,,,,,,,

இதிலே ஏன் தற்கொலை ,,,,,,, நாலைந்து பேர்தானே ,,,,,,,,,,என்ற வார்த்தைகள் ???????????? சகோதர்களே ஒரு யூதன் நினைத்தான் இன்று ஒரு இஸ்ரேல் பிறந்திருக்கு ,,,,,,,,,,,, மறந்திடாதிங்க ,,,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by saburudeen (dubai) [31 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15308

தேமுதிக கட்சி நிறுவனரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் போராட்டங்களால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுவிட கூடாது என்ற கொள்கையில்தான் போராட்டங்களை பல காலங்களாக தவிர்த்து வந்தார். பெரும் பிரட்ச்சனைகளுக்கு போராட்டம் முலம் தான் தீர்வு காணப்பட முடியும் என்பதை உணர்ந்து அதே மக்களுக்காக தன் முடிவை மாற்றி போராட்ட களத்தில் குதித்துள்ளார்.

மக்கள் அவருக்கு அளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அவர் மக்களுக்கு செய்ய வேண்டியகடமை கள் நிறைய உண்டு அதன் அஸ்திவாரம்தான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் சரியான தீர்வு காண தவறிய பிரதமர் தமிழகத்திற்கு வருவதைக் கண்டித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தி அவர் கைது செய்ய பட்டார்

தலைவர்கள் கைது செய்ய படும் போது தொண்டர்கள் தன் எதிர்ப்பை காட்டுவது வழமையான ஒன்றுதான் .எதிர்ப்பு குரலுக்கு நபர் எண்ணிக்கை முக்கியமல்ல .அதன் வலிமை தான் முக்கியம் .என்னை பொறுத்த வரை தேமுதிக நம் சமுதாயத்தின் தோழமையான கட்சிதான் அதில் நம் மக்கள் அங்கம் வகிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [01 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15329

தம்பி ஜைனுல் ஆப்தீன், அரசியல் வாதிகள் யாரும் பொது சேவை செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அரசியலுக்கு வருவதில்லை. ஒன்று பணம், அல்லது புகழ் அல்லது பதவி இது போன்ற எதாவது சுயநலம் காரணமாக தான் வருகிறார்கள். இதற்கு விஜயகாந்த் ஒன்றும் விதி விலக்கல்ல. அவர் மூலமாக நம் ஊருக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் நாமும் வரவேற்போம். பெரும்பாலான நேரங்களில் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. தடுமாற்றத்தோடு பேசுகிறார். கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு வருகிறார் எதற்கு?

எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லாமல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன? டம்மி பீஸ் இல்லாமல் வேறு என்ன?

நம்ம DCW விற்கு எதிராக ஒரு போராட்டம் பண்ண கூப்பிடுங்களேன். நாங்களும் ஆதரவு தருகிறோம்.

S.A.MUHAMMAD ALI (VELLI)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by Cnash (Makkah ) [01 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15340

அஸ்ஸலாமு அலைக்கும், தம்பி ஜைனுல் ஆப்தீன் நம்ம திராவிட கட்சிகளுக்கும் அவர்களை கண்மூடி தனமாக நம்பும் பைத்தியகார தொண்டர்களுக்கும் தீக்குளிப்பது டீ குடிப்பது போல உள்ள உள்ள ஒரு சாதாரண செயல்... அதற்க்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை அதை ஆதரிக்காத எந்த ஒரு தலைவனும் இல்லை..

அல்லாஹ் நம் முஸ்லிம்களின் மனதில் ஈமானை தந்திருக்கிறான் நம் அதுபோல செயலை மனதால் கூட ஆதரிக்க மாட்டோம்... ஆனால் உங்க கட்சியில் உள்ள முருகனும், செந்திலும், குமரனும், ஈமான் ஊட்டி வளர்க்க பட்டவரும் இல்லை..உங்க தலைவர் ஒன்றும் ஈமான் கொண்டவரும் இல்லை... உடல் மண்ணுக்கு உயிர் தலைவருக்கு என்ற கிறுக்குதனமான கொள்கைதான் எல்லா பைத்தியகார தொண்டனிடத்திலும் ஊறி கிடக்கிறது...நான் குறிப்பிட்டு சொன்னது உங்களை போன்ற நம் சகோதரை இல்லை... எல்ல திராவிட கட்சியிலும் நிறைந்திருக்கும் கோபால் போன்ற இது போன்ற பைத்தியகரைகளைதான் !! நம் அனைவர்களின் ஈமானையும் இறைவன் பாதுகாப்பான்? நீங்கள் ஏன் வீணாக அவர்களை சொல்லும் பொது டென்ஷன் ஆகிறீர்கள்!! இந்த கட்சிகளுக்கு இது என்ன புதியதா? இல்லை ஷரியத் சொல்லி வளர்த்து எடுக்கபட்ட தொண்டர்களா?

நீங்கள் வேணும்னா தன்மான தலைவர் தன்னிகரில்லா ஒரே தலைவன், உன்னத தலைவன் என்று சொல்லி கொள்ளுங்கள் அவரை!! எங்களுக்கு அவர் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்!!

அது என்ன பிரதமருக்கு கருப்புகொடி காட்டினா கைது செய்யது அவர் போன பின் ரிலீஸ் பண்ணுவதுதான் சட்ட நடைமுறை... அவரை என்ன தடா சட்டத்திலா கைது செய்து இருகிறார்கள்!! அதற்கு எதற்கு சாலை மறியல்..மக்களுக்கு தொந்தரவு!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN,, joint secretery,DMDK kayalpatnam town (kayalpatnam) [01 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15347

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் முஹம்மது அலி மற்றும் சீனாஸ் அவர்களே,விஜயகாந்த் எதிர்க் கட்சி தலைவர் ஆகி ஒன்னோ,இரண்டோ வருடங்கள் ஆகிவிட வில்லை. ஆறு மாதம் தான் ஆகிறது,ஆட்சி துவங்கி நூறாவது நாளில் எல்லா தலைவரிடமும் பத்திரிக்கை நண்பர்கள் ஆட்சி பற்றி கருத்துக் கேட்டார்கள்,ஒவ்வொரு தலைவர்களும் கூட்டணி கட்சியாக இருந்தால் ஆதரவான கருத்தையும்,எதிர்க் கட்சியாக இருந்தால் எதிரான கருத்தையும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில்,கேப்டனிடம் வந்து உங்களின் கருத்து என்ன?என்று கேட்டார்கள்.ஆட்சிக்கு வந்து நூறு நாள் தான் ஆகிறது.ஆறு மாதங்கள் போகட்டும் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆறு மாதங்கள் கழித்து தமிழக அரசு பால் கட்டணம்,பஸ் கட்டணம் மிகக் கடுமையான அளவில் கூட்டியது.

அப்போது முதன் முதலாக தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன அறிக்கை விட்டு,தமிழகம் முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடத்தியவர் கேப்டன் மட்டுமே.அதற்குப் பிறகுதான் மற்றக் கட்சிகள் நடத்தின.

அதேபோல் நடுக் கடலில் தமிழ் அப்பாவி மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்படுவதை கண்டித்து முதன் முதலில் ராமேஸ்வரம் சென்று போராட்டம் நடத்தியவர் கேப்ட்டன் மட்டுமே,அதற்குப் பிறகுதான் மற்றக் கட்சிகள் நடத்தின.தென் தமிழக விவசாயத்திற்கு மிகப் பெரும் நீர் ஆதாரமாக இருக்கும் முல்லைப் பெரியார் பிரச்சனையிலும் முதன் முதலில் போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தே.மு.தி.க.தான்.

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்த மக்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர் கேப்டன் தான்.இந்த எல்லா விசயத்திலும் இரட்டை வேடம் போடும் பாரதப் பிரதமர் தமிழகம் வருகையை ஒட்டி கறுப்புக் கொடி போராட்டம் முதன் முதலில் அறிவித்து கைதான தலைவரும்,கேப்டனும் அவருடைய கட்சியினரும் தான்.எதிர்க் கட்சி தலைவராக இருந்து வேறே என்ன செய்யவேண்டும் இதற்க்குமேல்.மற்ற தலைவர்களைப் போன்று வீட்டில் இருந்து பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா?

மக்களுக்காக களத்தில் இறங்கி போராடக் கூடியவன்தான் தலைவன்.அதில்லாமல் தொண்டர்களை மட்டும் போராட விட்டு தான் வீட்டில் தோழியுடன் இருந்து வேடிக்கைப் பார்ப்பதும்,பொது மக்களுக்காக பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதி,தன் மக்களுக்காக டெல்லிக்கு நேரடியாக செல்லக் கூடியவர்கள் உண்மையான தலைவர்கள் இல்லை.படித்த,அறிவுள்ள நீங்களுமா இதைக் கூட யோசிக்கத் தெரியாமல் இருக்கிறீர்கள்.

தீ குளிப்பது அவர்களுக்கு டீ குடிப்பது மாதிரி என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதை இங்கே சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது அவரவர் கொள்கை.எங்களுடைய கொள்கை அதுவல்ல. விஜயகாந்த் தப்பு செய்தாலும் நாங்கள் கண்டிப்போம்.அது தான் எங்களுடைய கொள்கை,அவர்களை சொல்லும் போது டென்ஷன் ஆகிறீர்கள் என்றில்லை.ஒரு கருத்தை சொல்வதற்கு ஒரு வரை முறை இருக்கு.என்னைப் பொருத்தவரை நல்லது செய்பவர்களை ஆதரிப்பவன்.தப்பானவர்களில் நின்றும் விலகி நிற்பவன்.இன்றைய அரசியல் தலைவர்களில் இவரை எனக்கு நல்லவர்ரக தெரிகிறது.நான் ஆதரிக்கிறேன்.அதே நேரத்தில் மற்ற அரசியல் கட்சியைப் போல் தான் இதுவும் என்று தெரிந்தால் நான் உடனே விலகிவிடுவேன்.

யாருக்கும் சப்பைக் கட்டு கட்டவோ,ஜால்ரா அடிக்கவோ எனக்கு தெரியாது.அவசியமும் இல்லை.இந்த விளக்கம் புரியக் கூடிய அறிவுள்ளவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.புரியக் கூடிய சக்தி இல்லாத்தவர்களுக்கு அல்லாஹ் புரியக் கூடிய சக்தியைக் கொடுப்பானாக.ஆமீன்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஆங். ... அண்ணே கேப்டன் வாழ்க மட்டும் சொன்னா போதுமா?
posted by S.A.Muhammad Ali (Dubai) [02 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15365

தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஏற்பட்ட புதிய சட்டமன்றத்தில் பெரும்பாலான நாட்களில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில நாட்களே கலந்து கொண்டு பேசினார். தேமுதிகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் புதியவர்கள். சட்டமன்ற அனுபவம் இல்லாதவர்கள்.

விஜயகாந்த் சட்டசபையில் இருந்து அவர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டியிருக்க வேண்டும். விஜயகாந்த் மற்றும் அவர் கட்சியினர் முக்கிய விவகாரங்களில் பங்கேற்று விவாதங்களில் பேசியிருக்க வேண்டும். விஜயகாந்த் வராத காரணத்தால், விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்கள் பேச முற்பட்ட பல நேர்வுகளில், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ஜெயலலிதா, முதலில் விபரங்களை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார்.

இது போன்ற நேர்வுகளில் விஜயகாந்த் அவையில் இருந்திருந்தாரேயானால், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக குறுக்கிட்டு பேசியிருக்க முடியும். ஆனால், 27 எம்எல்ஏக்கள் கிடைத்த திருப்தி, விஜயகாந்தை, காமராஜரைப் போல படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று எண்ண வைத்து விட்டதோ என்று தோன்றுகிறது.

சட்ட சபையில் நிதி அறிக்கை வெளியிடும் போது எங்கே போனார்?

கருணாநிதி ஆட்சியில் கொடுத்த இலவசத்தை எதிர்த்த கேப்டன் அம்மாவிடம் அடக்கி வாசித்தது ஏன்?

இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி, புள்ளி விபரங்களை எடுத்துப் போடுங்க ஜைனுல் ஆப்தீன். ஆங். ... அண்ணே கேப்டன் வாழ்க மட்டும் சொன்னா போதுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by siddiq (Chennai) [02 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15367

DCW விற்கு எதிராக ஒரு போராட்டம் பண்ண விஜயகாந்தை கூப்பிடுங்களேன். நாங்களும் ஆதரவு தருகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by hasbullah (dubai) [02 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15368

எதிர் கட்சி தலைவர்? ஒரு நல்ல காமெடி ?

என்ன சட்டசபையில் மக்களுக்காக பேசினார் என்று தெரியவில்லை? வெளியே தைரியமாக சத்தம் போடுவதும் சட்ட சபை மீடிங்கில் போட்டி பாம்பு போல சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டி விட்டு வருவதும் ஒரு opposite party தலைவருக்கு அழகா?

மனித சமுதாயதிற்கு பாடு படும் நல்ல சமூக கட்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள் தப்பில்லை..... ஆனால் இத்தகைய நடிகர்களுக்கு ஆதரவாக கருப்புக்கொடி ?

காக்கும் கரங்களில் நீங்கள் பாடு படும் செயல் வரவேர்ப்புகுரியது... ஆனால் இவர்களுக்காக கண்ணீர் சிந்துவதால் ஒரு பிரயோஜனம் கிடையாது....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by Zainul Abdeen (Dubai) [02 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15388

joint secretery,DMDK kayalpatnam town

சார் நீங்க சொல்லறது மாதிரி ஈமான் இஸ்லாம் ஷரியத் எல்லாம் Ok . தான் அனா building சரியில்லையே ..... நான் நடிகர் விஜய காந்தை (Black MGR ) சொன்னேன். ஒரு நடிகருக்கு பின்னால் செல்வது அவ்வளவு நல்லது இல்லை. அது மட்டுமில்லாமல் காசுக்காக அரசியல் செய்யாதவர் , அப்படி இப்படி என்று சொல்லுவதெல்லாம் நமக்கு தெரியாதவரைதான். முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் (சசிகலாவின் தமயன்) கல்யாணத்தை நடத்தாமல் இருந்தால், டான்சி வழக்கில் சிக்காமல் இருந்தால் ஒரு வேலை முதல்வர் ஜெ ஜெ செய்த ஊழல் நமக்கு தெரியாமல் இருந்து இருக்கும்.

2G spectrum ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மற்றும் கனிமொழி MP ஊழல் பன்னியாதாக குற்றம் சாற்றியது தெரியாமல் இருந்தால் நமக்கு DMK செய்த ஊழல் தெரியாமல் போயிருக்கும். ஆகா திகா (DMK ) என்று முடியும் அனைத்து கட்சியினரும் தீஹார் வரை சென்றவர்கள்தான். இதை மறந்து விட்டு உங்கள் தலைவர் விஜயகாந்துக்காக சப்ப கட்டு கட்டதீங்கோ ........

இன்னும் தனிநபர் விமர்சனம் (இந்த வலைதளத்தில்) யாரும் செய்யவில்லை. அதில் சிக்காமல் இருத்தலே பெரிய விசியம் உங்க தலைவருக்கு. யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் உங்கள் தலைவரின் தேர்தல் நேர பிரச்சாரத்தை. அவர்கள் வென்றது உங்கள் கட்சி மேல் உள்ள நல்ல அபிப்ரயதினால் இல்லை, உங்கள் கட்சிக்காக எதிர் பிரச்சாரம் செய்த காமெடி புயல் , கைபுள்ளை வைகை வடிவேலுவின் அசிங்கமான பிரசாரத்தினாலும் அதை கை தட்டி வாய் மூடி கேட்டு கொண்டு இருந்த இருந்த DMK பெருசுங்கலாளும்தான் என்பதை மறக்க வேண்டாம்.

இதுனால் நான் உங்களின் தமிழ் உணர்வையும் , சேவை மன பான்மையும் கொச்சி படுத்தினேனே என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். இந்த உணர்வு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், போராட்டமாக தொடர்ந்து இருக்க கூடாது அதற்க்கு தீர்வு இருக்க வேண்டும் என்பதே எனது அவா ...

அது சரி அந்த புகை படத்துலே ஒரு சகோதரர் கீழே விழுந்து கிடக்குராரே என்ன விசயம். யாரும் மாற்று கட்சி காரங்க வாழைபழ தோளை அந்த இடத்தில வீசினார்களா..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery, DMDK kayalpatnam town (kayalpatnam) [02 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15390

அஸ்ஸலாமு அலைக்கும்.

1 . சகோதரர் முஹம்மது அலி அவர்களே, விஜயகாந்த் அவர்கள் சட்ட மன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள். கேப்டன் அவர்கள் அணைத்து சட்ட சபைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சும்மா ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லக் கூடாது.

2 .கேப்டனின் ஆதரவுடன் அதிகார உச்சத்தில் இருக்கும் முதல்வர் அம்மா அவர்களுக்கு உதவியவர்களை எட்டி உதைப்பது, அவமானப்படுத்துவது என்பது அவர்களுடைய நிலைபாடு.

3.நான் ஏற்கனவே சொன்னது போல அரசியல் அரங்கில் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடக் கூடிய ஒரே தலைவர் கேப்டன் தான். தேர்தலில் படுத்துகிட்டு, நின்றுகிட்டு எப்படி வேண்ணாலும் ஜெயிக்கட்டும். மக்கள் பணியாற்றுகிறாரே, மக்களுக்காக ரோட்டில் இறங்கி போராடுகிறாரே? இதைப் பாராட்டாமல் இருந்தாலும் தூற்றாமல் இருக்கும் மனம் கூட படித்த, அறிவாளியான உங்களுக்கு இல்லையே? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

4.கருணாநிதி ஆட்சியில் கொடுக்கப் பட்ட இலவசங்களாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியில் கொடுக்கும் இலவசமாக இருந்தாலும் சரி இரண்டையுமே கேப்டன் எதிர்க்கதான் செய்கிறார். ஒங்களுக்கு எந்த விவரத்த அள்ளிப் போட்டாலும் மண்டைல ஏறாது. அதனால் நீங்க கேப்டன் வாழ்க, என்றெல்லாம் சொல்லவேணாம். ஓங்க அறிவுக்கு புரியக் கூடிய விசயங்களை பாருங்கள். அல்லா ஒங்களுக்கு புரியக் கூடிய சக்தியை தருவான்.

ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்களே, நடிகன் பின்னால் நிற்காதீர்கள் என்று சொன்ன நீங்கள் யார் பின்னால் நிற்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள், நம் சமுதாயத்தை நல்ல வழியில் நட்டக் கூடிய தலைவர்கள் இருந்திருந்தால் நாங்கள் அந்த சமுதாய அமைப்பில்தான் இருப்போம். நான் முன்பே சொன்னதுபோல், இருக்கின்ற தலைவர்களில் எனக்கு தெரிந்து நல்லவர் கேப்டன் தான். அதனால் நான் ஆதரிக்கிறேன். அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நமது இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே? இருந்தால் சொல்லவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by M.Sulthan (Sudan) [02 January 2012]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 15401

எல்லாம் சரிதான் சகோ: ஜெய்னுலாப்தீன் அவர்களே......, பண்ருட்டி ராமசந்திரன் சட்ட சபை சிறப்பு கூட்டத்தில் வாசித்த பெரியாறு அணை சம்மந்தமான உரையை உங்கள் கேப்டன் வாசித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.பேசவேண்டிய இடத்தில் பேசுவதை விட்டுவிட்டு இப்போது பேசுகின்றீர்கள்???? இவர் பிரதமரை ஏன் சந்திக்க போகவில்லை? மொழி பிரச்சினையோ? எதிர் கட்சி தலைவர் என்கிற தனது அந்தஸ்தை கூட புரிந்து கொள்ளாமல்..அடக்கொடுமையே..!!

பேசாமல் ஹசா‌ரேயுடன் சேர்ந்து ஒரு சீன் எடுத்திருந்தால் நன்றாக இருக்கும்... பேரும் புகழும் ஓங்கி நிற்கும்....

உண்மையா போராடுவதா இருந்தா இப்டி செய்யவேண்டிய அவசியம் இல்ல . பிரதமர் கிட்ட தெளிவா பேசி இருக்கலாம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery, DMDK kayalpatnam town (kayalpatnam) [03 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15415

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்கள் சீனாஸ், முகம்மது அலி, ஹஸ்புல்லாஹ் மக்கி, ஜெயினுல் ஆப்தீன், ஆகியோர் வரிசையில் மேலும் ஒருவர், சூடான் சுல்தான் பாய்.

காக்காமார்களே மக்களுக்காக போராடாமல் சும்மா கடிதம் எழுதியும், பேருக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் உங்களின் அபிமானத் தலைவர்களை இன்னும் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் தலையை தொங்கப் போட்டு பின் பன்ற வேண்டும். மற்ற உண்மையான தலைவர்கள் மக்களுக்காக என்ன நன்மைகள் செய்தாலும், பூனை தன்கண்ணை மூடினால் உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமே, அந்த மனோ பாவத்தில் கண் மூடித்தனமாக உங்களைப் போன்று எல்லாரும் ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்னைப் போன்ற படிப்பறிவு இல்லாத்த சுய அறிவுள்ளவர்களிடத்தில் வேகாது.

அல்லாஹ் நமக்கு கூடுதலாக ஒரு அறிவையும் தந்திரிகிறான். அது நாம் சுயமாக யோசித்து செயல்ப்படுவதற்குதான். இன்ஷா அல்லாஹ் புரியக்கூடிய பக்குவம் உள்ளவர்கள் புரிவார்கள். உங்களுக்கு பதில் சொல்லும் நேரத்தில் ஊரில் அல்லாஹ்வின் உதவியால் நாலு நல்ல காரியம் செய்து விட்டு போவேன். இதற்கு மேல் இந்த விவாதம் இங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர்!
posted by Firdous (Colombo) [03 January 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15425

அன்பின் சகோ. ஜைனுல் ஆப்தீன் (DMDK) அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் இருக்கும் கட்சியின் தலைவர் நம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக தனது படத்தில் சித்தரித்தவர். மற்ற நடிகர்களைவிட இவர்தான் அதிகமான படங்களில் நம்மை அவமான சின்னங்களாக காட்டியவர். இவர் ஒன்றும் பெரிய தியாகி அல்ல.

முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா! 1991 ம் ஆண்டுகளுக்கு பிறகு காவி பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல்கள் எத்தனையோ அம்பலமாகியுள்ளன! அதை வைத்து காவி பயங்கரவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுக்க வேண்டியதுதானே!

நாளை அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் அவர்களை வேறுண்ட காரணமாக இருப்பார் எமது கருப்பு MGR.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் (திராவிட கட்சிகள்).

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by seyed mohamed (KSA) [03 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15430

சரிப்பா, இங்கே தேவையல்லாத விவாதம் தொடரவேண்டாம். நாலு கட்சியில் நம்ம நாலு பேரு இருந்து எதோ சமுதாயத்துக்கு செய்தால் நல்லது தான். சகோ. ஜைனுலாப்தீன் ஒரு நல்ல சேவகர்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [03 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15432

தம்பி ஜைனுல் ஆப்தீன்,

நமது ஊரில் எல்லா கட்சியிலும் பாகுபாடு இல்லாமல் ஆட்கள் இருக்கிறார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். ஆனால் நமது ஊருக்கு ஒரு பிரச்னை என்றால் நீங்கள் அனைவரும் கட்சியை மறந்து ஊர் நன்மை ஒன்றே குறிக்கோள் ஆக கொண்டு நடக்க வேண்டும்.

உங்கள் கட்சி இஸ்லாத்திற்கு எதிராக எந்த நிலையிலும் துணை நின்றால் கட்சியை தூக்கி எரிந்து விட்டு இஸ்லாத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்களுடைய நல்லெண்ணத்தை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. உங்களை போன்ற இளைஞர்கள் வெளிநாடு செல்லாமல் ஊருக்காக உழைப்பதே பெரிய விஷயம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery, DMDK kayalpatnam town (kayalpatnam) [03 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15465

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் பிர்தௌஸ் அவர்களே, சினிமாவை சினிமாவாகப் பாருங்கள். எதார்த்தமாகப் பார்காதீர்கள். எதார்த்தமாகப் பார்க்கப் போனால் முஸ்லிம் தீவிரவாதி என்ற பெயர் கலைஞ்சரின் ஆட்சியில் தான் அரசால் பரப்பி விடப்பட்டது. அப்படி செய்தவர் இஸ்லாமிய நண்பர். இதுதானே உங்களின் வாதம். வாழ்க உங்களின் சமூக அக்கறை.

பின்னே முஹம்மது அலி பாய், நானும் ஒங்களுக்கு திரும்ப திரும்ப தமிழ்ல தான் சொல்றேன். யாரையுமே கண்மூடித்தனமாக நம்புகிறவர்கள் கூட்டத்தில் நான் இல்லை. யார் தப்பு செய்தாலும் அது தப்புதான். அதை தட்டிக் கேட்கக் கூடிய தைரியம் எனக்கு இயற்கையாகவே இறைவன் தந்த நன்கொடை.

எனது ஒன்பது வய து(என்னுடைய அப்பா தி.மு.க.நகர முன்னணி நிர்வாகியாக இருந்த ஈசா லெப்பை அவர்கள்) முதல் தி.மு.க.அனுதாபியாக இருந்த நான் என்றைக்கு கலைஞ்சர் முஸ்லிம் தீவிரவாதி என்று அழைக்கத் துவங்கினாரோ, அன்று முதல் அந்த கட்சியை வெறுத்தவன் நான். என்னைப் பொறுத்தவரை எனக்கு எனது கட்சியை விட எனது சமுதாயமும், எனது ஊரும் தான் முக்கியம். என்னைத் தெரிந்தவர்களிடத்தில் விசாரித்தால் தெரியும். அதனால் திரும்பவும் சொல்றேன். எனக்கு தெரிந்தவரை இன்றைய அரசியலில் நேர்மையான, மக்களுக்காக உண்மையாகப் போராடக் கூடிய ஒரே தலைவன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இப்படி சொல்வதனால் எனக்கு யாரும் அள்ளி ஒன்னும் தரமாட்டார்கள். அது எனக்கு தேவையும் இல்லை. அல்லாஹ்வின் உதவியால் நான் நன்றாகத் தான் இருக்கிறேன்.

அல்ஹம்து லில்லாஹ்........நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by hasbullah mackie (dubai) [04 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15504

நான் நீங்கள் யார் பின்னாடி போயும் நிற்கவேண்டியதில்லை என்பதை தான் சொல்லுகிறேன்...

மறுமை நாளின் அடையாளத்தில் ஒன்று , தலைமையும் அதிகாரமும் தகுதியிள்ளடவர்களுக்கு தான் கிடைக்கும்...

என்ன எண்ணத்தில் அவரை பின் தொடர்கிறீர்கள் என்பது தான் புரியவில்லை...

அரசியல் விவரம் உள்ளவனிடம் , எதிர்கட்சியில் இருந்தால் ஆளும் கட்சி செய்யும் தவறுகளை உடனே தட்டி கேட்க வேண்டும்,

ஆறு மாதம் கழித்து அம்மா பேசுவதற்கு chance கொடுப்பார்களாம்.... அதற்க்கு பிறகு போயி பேசுவாராம்...

நடிகர்களுக்குதான் தமிழ்நாட்டில் மவுசு அதிகம்...

வீர வசனம் பேசி விட்டு சினிமாவில் வந்தவர்கள் அதிகம்....

விஜயகாந்த் முல்லைபெரியார் விஷயாம என்னத்தை போயி பிரதமர்த்ட பேசினார்....

கருப்பு கொடி எதற்கு என்பதை உங்கள் தலைவரிடமே கேளுங்கள் ....

மார்க்கத்தில் இந்த மாதிரி அரசியலுக்கு வழிமுறை நபி சொல்லிதரவில்லை ....

கட்சி தொண்டன் என்ற முறையில் சில சலுகைகள் பெறுகிறீர்கள் என்பதாகவே நான் நினைக்கிறேன்...

தலைவனின் கொள்கையை பற்றி பிடியுங்கள்....

எல்லோரும் கருப்பு கொடி தான் காட்டுகிறார்கள்...

ஒரு change க்கு சிகப்பு கொடி காட்டலாமே ...அடுத்த முறை .....

அரசியல் ஒரு சாக்கடை அதற்க்கு ஒரு சப்பக்கட்டு

உங்களின் வாழ்கையை நல்ல நேரத்திற்காக செலவழிக்கவும்....



Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK.JAINUL ABDEEN, DMDK joint secretery,kayalpattanam town (kayalpatnam) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15586

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்களே,நீங்கள் எந்த நினைப்பில் எழுதுகிறீர்கள்.இது இந்தியா,ஜனநாயக நாடு.நீங்கள் இருப்பது தான் இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகின்ற துபாய்.அதனால் கொஞ்சம் யோசித்து எழுதவும்.

இஸ்லாமியர்கள் தி.மு.க.லதான் இருக்கணும் என்று இருக்கிறதா?அல்லது இஸ்லாமியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று புதியதாக உங்களுக்கு எதாவது வஹி வந்ததா?என்ன சொல்ல வருகிறீர்கள்.

பின்னே சிகப்புக் கொடி எதற்கு காட்டனும்,வெள்ளக் கொடி எதுக்குக் காட்டனும்,கறுப்புக் கொடி எதற்குக் காட்டனும் என்று படிக்காத பாமர மக்களுக்கும் தெரியும்.படித்த உங்களுக்கு இதுவரை புரியவில்லையே.அதனாலே besik தெரிந்து கொண்டு கமெண்ட்ஸ் கொடுங்கள்.இதுக்கு மேல் ஒங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by hasbullah mackie (dubai) [06 January 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15633

நான் சொல்லுவதற்கும், நீங்கள் என் கருத்தை படித்து விட்டு சம்பந்தமில்லாமல் சொல்லுவது தான் ஆச்சிரியமாக இருக்கிறது///

தெளிவாக நான் சொன்ன விஷயம்,, நடைமுறையில் இருக்க கூடிய எந்த கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வென்றும் என்ற எண்ணம் இல்லை ....

கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, கேப்டனும் sari அவரவர் கட்சியை வளர்ப்பதற்காக பாடுபடுகிரார்களே தவிர மக்களுக்கு வேண்டியதாக இல்லை.....

நடித்து காட்டி ஆட்சி நடத்துபவர்கள் என்பதை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.....

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வரும் முன் & வந்த பின்னும் இந்த மாநிலத்தில் 2 மாதத்திற்கு பிறகு power cut அறவே இல்லாமல் ஆகுவோம் என்று சூளுரைத்தார்...

3 மணி நேரத்துக்கு எடுத்து கொண்டிருந்த power cut தற்பொழுது 5 மணி நேரமாக கூட்டப்பட்டுள்ளது .....

இந்த அடிப்படை தேவைகளை பற்றி உங்க எதிர்க்கட்சி தலைவர் என்னத்த பேசினார்னு சொல்லுங்களேன்?

எனக்கு basic தெரியலைன்னு வச்சுக்குவோம், ? நீங்கள் கேப்டன் என்ன செய்துள்ளார் இதுவரை என்று சொல்லுங்கள்.....

எதிர் கட்சி தலைவராக இருந்து சாதித்தது என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:முல்லைப் பெரியாறு அணை பிர...
posted by MAK.JAINUL ABDEEN,DMDK joint secretery,kayalpattanam town (kayalpatnam) [06 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15663

அஸ்ஸலாமு அலைக்கும். எதை சொன்னாலும் புரியக் கூடிய மனம் உங்களுக்கு இல்லை. அதனால் உங்களுக்கு பதில் சொல்லும் நேரத்தில் ஏதாவது நல்ல காரியம் செய்து விட்டு போவேன். புரிபவர்கள் புரிந்துக் கொள்வார்கள். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2516; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved