Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:15:31 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7791
#KOTW7791
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 31, 2011
திருக்குர்ஆன் விரிவுரையாளர் மவ்லவீ கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பஈ காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4293 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் மவ்லவீ கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பஈ இன்றிரவு 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71.

கடலூர் மாவட்டம் ஆயங்குடியைச் சார்ந்தவரான இவர், சென்னையில் வசித்து வந்தார். சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராகவும், பேச்சாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்த இவர், சென்னை புரசைவாக்கம், புதுப்பேட்டை பள்ளிவாசல்களில் வாராந்திர தொடர் திருக்குர்ஆன் வகுப்பை நடத்தி வந்துள்ளார்.

வேறு இரு அறிஞர்களுடன் இணைந்து திருக்குர்ஆனுக்கு இவர் வெளியிட்டுள்ள மொழியாக்கம் சென்னை திரீயெம் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. பின்னர், கோவை திருக்குர்ஆன் ட்ரஸ்ட் நிறுவனத்தால் அது மறுபதிப்பு செய்யப்பட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தப்லீக் ஜமாஅத்தில் அதிகம் வாசிக்கப்படும் அமல்களின் சிறப்பு நூலை தமிழாக்கம் செய்துள்ள இவர், தமிழில் பல தலைப்புகளில் பல்வேறு மார்க்க விளக்க நூற்களை வெளியிட்டுள்ளார். ‘ஹஜ்ஜின் வழிகாட்டி‘ என்ற இவரது நூல், தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே - சிறந்த ஹஜ் வழிகாட்டு நூலாகக் கருதப்படுகிறது.

அன்னாரின் ஜனாஸா, நாளை 01.01.2012 நண்பகல் லுஹர் தொழுகைக்குப் பின், சென்னை - புரசைவாக்கம் தானா தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.N.புகாரீ
மற்றும்
நோனா உவைஸ்,
புரசைவாக்கம், சென்னை.


படம் இணைக்கப்பட்டது. (பட உதவி: S.A.C.ஹமீத், அபூதபீ) (01.01.2012 - 20:26hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [31 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15313

أسأل الله أن يغفر ذنوبه كلها.. جعل مشرق قبره... إعطاء الجنة في يوم القيامة... آمين

محمد كزار طبيب


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by s.e.m. abdul cader (bahrain) [31 December 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 15315

யா அல்லாஹ் அவர்களின் கபுரை ஒளியைக்குவாயாக ,சொருகத்தில் மேலான பதவியை கொடுபாயாக. ஆமின் ,யா ரப்பல்ஆலமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by S.A.C.Hameed (Abu Dhabi) [31 December 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15316

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

ம‌வ்லானா நிஜாமுத்தீன் ம‌ன்பஈ அவ‌ர்க‌ள‌து ம‌றைவு த‌மிழ‌க‌ முஸ்லிம் ச‌முதாய‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். இறைம‌றையை இன்ப‌த் த‌மிழில் யாத்த‌ளித்த‌ க‌ண்ணிய‌மிகு மேதை. தோற்ற‌த்தில் எளிமை, பேச்சினில் ந‌ளின‌ம், ப‌ழ‌குவ‌தில் ந‌ளின‌ம், ஒழுக்க‌மான‌, நேர்மையான‌ பொது வாழ்வு, இதுதான் நிஜாமுத்தீன் ஹ‌ஜ்ர‌த்.

திரும‌றை மொழியாக்கத்தில் அவ‌ர்க‌ளோடு சேர்ந்து ப‌ணியாற்றிய‌ என‌து பெரும‌திப்பிற்குரிய‌ ஷேஹுத் த‌ர்ஜுமா ம‌வ்லானா அப்துல் வ‌ஹ்ஹாப் M.A.B.Th , ந‌ண்ப‌ர் காஞ்சி அப்துர் ர‌வூஃப் பாக்க‌வி M.A ஆகிய‌ அறிஞ‌ர்க‌ளோடு உறவாடும் பாக்கிய‌ம் கிட்டிய‌ என‌க்கு, ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ள‌து ம‌றைவு பேரிழ‌ப்பாகும்.

30 வ‌ருட‌த்திற்கு முன்ன‌ரே DNA, RNA ஸ்ட்ர‌க்ச்ச‌ர் ப‌ற்றி விரிவாக விள‌க்க‌மாக‌ ஜும்ஆ ப‌யானில் பேசும் ஆற்ற‌ல் ப‌டைத்த‌ அறிஞ‌ர் ம‌ர்ஹூம் ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ள் புர‌சை ம‌ஸ்ஜிதை அருமையாக‌ விரிவாக்க‌ம் செய்து அதற்கு நிர‌ந்த‌ர‌மான‌ வ‌ருமான‌த்த‌யும் உருவ‌க்கிய‌தில் அன்னாருக்கு பெரும் ப‌ங்கு உண்டு.

இன்று அவ‌ர்க‌ள் நம்மிடையே இல்லை. அவ‌ர்க‌ள் அஞ்சி ந‌ட‌ந்த‌ வ‌ல்ல‌ ர‌ஹ்மான் அவ‌ருக்கு க‌ருணை செய்யப் போதுமான‌வ‌ன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by PS ABDUL KADER (JEDDAH) [31 December 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15317

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் மவ்லவீ கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15318

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சொல்லாற்றல், பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்க ஒரு உன்னதமான இறைவிசுவாசி. அவர்கள் மறைந்துவிட்டாலும் அவர்கள் எழுதிய நூல்கள், அவர்கள் பேசிய பேச்சுக்களின் ஒலி நாடாக்கள், குறுந்தகடுகள் அவற்றை நமது அலைபேசிகளில், மடிக்கணினிகளில் ஓடவிட்டு கேட்கும் போதும் பார்க்கும்போதும் நம்மிடையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் மிக சிலரே. அந்த வரிசையில் ஆலிம் அவர்கள் பெரிய வெற்றிடத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டு விட்டு மறைந்திருக்கிறார்கள்.

எல்லா உயிர்களும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் என்ற அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கு நாம் எல்லாம் தலை சாய்த்து, மர்ஹூம் அவர்களின் மஹுபிரதுக்காகவும் சுவர்க்க வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போமாக, ஆலிம் அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக, அவர்கள் விட்டு சென்ற அழைப்பு பணியை தொடர்ந்து செய்வதற்கு அவர்கள் சந்ததிகளுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.

மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள், மக்கி ஆலிம் இல்லம் சொளுக்கார் தெரு காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by MAK. JAINULABDEEN, president, kaakkum karangal narpani mantram. (kayalpatnam) [01 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15319

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் எல்லா பாவ பிழைகளையும் வல்ல நாயன் அல்லாஹ் மன்னித்து அருள்வானாக.ஆமீன்.மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு சபூரன் ஜமீல என்னும் மேலான பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by sithi katheeja (singapoore) [01 January 2012]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 15320

எல்லா வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [01 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15321

ஒரு ஆலிம் மரணிப்பது ஒரு பெரும் கூட்டம் மரணிப்பதை விட மிக இலேசானது. ( நபி மொழி ) மிக சிறந்த பேரறிவாளர் . ஹழ்ரத் அவர்களின் தெளிவுரையை நாளெல்லாம் கேட்டுகொண்டே இருக்கலாம். அப்படி பட்ட சிந்தனை சொற்பொழிவாளர். புரசை வாக்கம் ஜுமா பள்ளி பிரமாண்டமாக காட்சி அளிப்பது அவர்களின் சீரிய முயற்சியே . அப்படி பட்ட நிஜாமுதீன் ஹஜ்ரத் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து சொலேன்னா துயரம் அடைந்தோம் . எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி மேலான ஜென்னத்துல்பிர்தௌஸ் என்னும் சுவனத்தில் நுழைய செய்வானாக.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல்பட்டினம் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [01 January 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 15323

இன்னாளில்லாஇன்னைலஹிரஜெஊன்

யாஅல்லாஹ் அன்னாருக்கு நற்பதவி நல்கிடுவாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. INNA LILLAHI...
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [01 January 2012]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 15332

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON."MAY ALMIGHTY ALLAH SHOWERS HIS BLESSINGS,ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS"-NOOHU 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by HABEEB MD. NIZAR (JEDDAH- K.S.A.) [01 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15336

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by Kaleel Rahman (Chennai) [01 January 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 15343

மவ்லவீ அவர்களின் மறைவு நமது சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பே..

இவர்களின் குரான் ஹதீத் விளக்கங்கள் எளிதில் எவரையும் சென்று அடையும் அளவுக்கு உரை ஆற்றுவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இரண்டு மணி அளவில் நடைபெற்றது. இதுவரை நான் கண்டிதா அளவுக்கு மக்கள் திரண்டு வந்து இருந்தனர் .

வல்ல நாயகன் அல்லாஹ் அவர்களின் எல்லா பிழைகளையும் மன்னித்து சுவனபதியை கொடுத்து அருள்வானாக.ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by T,M,RAHMATHHULLAH-04639.280852 (KAYALPATNAM 04639 280852) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15346

இன்று 1-1-2012 ஞாயிறு 6 ஸபர 1433புது வருஷத திலேயே சொர்க்கம் புகும் பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்க ஒரு உன்னதமான இறைவிசுவாசி. அவர்கள் மறைந்துவிட்டாலும் அவர்கள் எழுதிய நூல்கள், அவர்கள் பேசிய பேச்சுக்களின் கம்ப்யூட்டர் ஒலிப்பதிவுகள் செய்து அவற்றை நமது அலைபேசிகளில், மடிக்கணினிகளில் ஓடவிட்டு கேட்கும் போதும் பார்க்கும்போதும் நம்மிடையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் மிக சிலரே. அந்த வரிசையில் ஆலிம் அவர்கள் பெரிய வெற்றிடத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டு விட்டு மறைந்திருக்கிறார்கள் ." WA FAWQA KULLA ZEE ILMIN AZHEEM " எனும மறை வாக்கியத்திபடி அல்லாஹ் நமக்கு மற்றொரு எத்தனையோ மகான் களை தருவானாக!

மவலான நிஜாமுத் தீன் ம‌ன்பஈ அவ‌ர்க‌ள‌து ம‌றைவு உலகுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் ச‌முதாய‌த்திற்கும் பேரிழ‌ப்பாகும். இறைம‌றையை இனிய த‌மிழில் அற்பணித்த‌ க‌ண்ணிய‌மிகு மேதை. தோற்ற‌த்தில் எளிமை, பேச்சினில் நசூக்கான நகைச்சுவை ந‌ளின‌ம், ப‌ழ‌குவ‌தில் மென்மை , ஒழுக்க‌மான‌, நேர்மையான‌ பொது வாழ்வு, இதுதான் நிஜாமுத்தீன் ஹ‌ஜ்ர‌த். ..... உதாரனத்துக்கு ஒன்று, 1906 ல் சென்னை மத்ரஸா யே நிஸ்வான், பொன்விழாவில் ஒரு பயானில்.. இக்கால பெண்களின் அரை குறை பர்தாவைப் பற்றி கண்டித்து கூறும்போது ஒரு நகைச்சுவை

” அணண்லும் நோக்கினார்- அவளும் நோக்கினார்” என்ற ஒரு காதல் இலக்கிய வாக்கியம் உண்டு. அதனை சொல்லி விவரித்து விட்டு “அண்ணன் கையிலும் நோக்கியா இவள் கையிலும் நோக்கியா ”என்று நகைச்சுவை நயத்தோடு இக்கால வாலிபர்களும் வாலிபி களும் தவறான முறையில் Nokia செல் உரையாடி வாழ்க்கையை பழாக்கும் கலாச்சாரத்தை கண்டித்தார்கள். நிற்க, ஒரு முறை எனது வேண்டுகோளின் படி தஃலீம் கிதபுகளில் கையாளப்படும் பல,பல கடின தமிழ் வார்த்தைகளை குறிப்பாக இலங்கை மக்களுக்காகவே இலகுவாக மாற்றி அமைக்க உதவினார்கள் . இதற்கு தனிப்பட்ட முறையிலும் நான் நன்றி கூறினேன்

திரும‌றை மொழியாக்கத்தில் அவ‌ர்க‌ளோடு சேர்ந்து ப‌ணியாற்றிய‌ என‌து பெரும‌திப்பிற்குரிய‌ முற்ஷித் அவர்கள் ஷைகுல் த‌ர்ஜுமா ம‌வ்லானா அப்துல் வ‌ஹ்ஹாப் M.A.B.Th , ஆகிய‌ அறிஞ‌ர்க‌ளோடு உறவாடும் பாக்கிய‌ம் கிட்டிய‌ என‌க்கு, ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ள‌து ம‌றைவு பேரிழ‌ப்பாகும்.

أسأل الله أن يغفر ذنوبه كلها.. جعل مشرق قبره... إعطاء الجنة في يوم القيامة آمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15352

மௌலவி நிஜாமுதீன் மன்பஈ அவர்கள் குறித்து நான் கேள்வி பட்டிருக்கிறேன். அன்னாரது உரையை நான் கேட்டதில்லை. ஆனால் "கேட்டோர் பிணிக்கும் கேளாதோர் வருந்தும் "சொல்லேர் உழவன் என்றும் அவர் குறித்து அறிந்திருக்கிறேன்.

நீண்ட காலம் இந்த சமூகத்திற்கு தேவைபடுபவர்களை இறைவன் தன பக்கம் அழைத்துக்கொள்கிறான். இறைவனின் நாட்டத்தை நாம் பொருந்திக்கொள்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by Muzammil (Dubai) [01 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15356

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15364

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by ABDUL WADOOD (KAYALPATNAM) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15377

அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் அவர்களின் மரணம் இந்த சமுதாய திற்கு மிகப்பெரிய இழப்பு ஒரு ஆலிமின் மரணம் உலகம் மரணத்திற்கு சமம் .எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தா ஆலா அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து கப்ரை ஒலி மயமாக்கி மேலான ஜன்னத்துல் பிரதௌஸ் சில் அமர்துவனாக ஆமீன் DR KIZAR அவர்கள் எழுதிய அரபி வாசகம் இப்படி அமைவதே மிக சரியானது

سأل الله أن يغفر ذنوبه كله..و جعل قبره روضة من رياض الجنة وانزل علي قبره الضيآء والنور الفسحة والسرور واسكنه الجنة ... آمين

இதே துஆ வை நாமும் கேட்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by M.Sulthan (Sudan) [02 January 2012]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 15384

இன்னாளில்லாஇன்னைலஹிரஜெஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னலில்லாஹி.....
posted by SH Abul Hassan (Tung Chung / Hong Kong) [03 January 2012]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 15410

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:திருக்குர்ஆன் விரிவுரையாள...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [03 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15450

பிஸ்மிஹி தஆலா

மவ்லவி நிஜாமுத்தீன் ஆலிம் மன்பயீ அவர்கள் வஃபாத்(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜி ஊன்.ُ

63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(ஆனால்), அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கிறான்.

100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுஆஸ்(ரலி)அறிவித்தார். VOLUME :1 BOOK :3

கடலூர் மா.வ.,ஆயங்குடி சார்ந்த சென்னை புரசை வாக்கம் மஸ்ஜிதின் இமாமான மவ்லவி. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் 31-12-2011 சனி பின்னேரம் ஞாயிறு இரவு 9-30 மணி அளவில் வஃபாத் ஆனார்கள்.

2-156,,,. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க ஒரு உன்னதமான இறை விசுவாசி. அவர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் எழுதிய நூல்கள், அவர்கள் பேசிய பேச்சுக்கள் கம்ப்யூட்டர் ஒலிப்பதிவுகள் செய்தவற்றை நமது அலைபேசிகளில், மடிக்கணினிகளில் ஓடவிட்டு கேட்கும் போதும் பார்க்கும்போதும் நம்மிடையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் மிகச் சிலரே. அந்த வருசையில் ஆலிம் அவர்கள் பெரிய வெற்றிடத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டு விட்டு மறைந்திருக்கிறார்கள்

وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ - கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான் 2-76 எனும் மறை வாக்கியத்தின்படி அல்லாஹ் நமக்கு மற்றொரு எத்தனையோ மகான் களை தருவானாக!

ம‌வ்லானா நிஜாமுத்தீன் ம‌ன்பஈ அவ‌ர்க‌ள‌து ம‌றைவு உலகுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் ச‌முதாய‌த்திற்கும் பேரிழ‌ப்பாகும். இறைம‌றையை இனிய த‌மிழில் அர்ப்பணித்த‌ க‌ண்ணிய‌மிகு மேதை. தோற்ற‌த்தில் எளிமை, பேச்சினில் நசூக்கான நகைச்சுவை ந‌ளின‌ம், ப‌ழ‌குவ‌தில் மென்மை , ஒழுக்க‌மான‌, நேர்மையான‌ பொது வாழ்வு, இதுதான் நிஜாமுத்தீன் ஹ‌ழர‌த் அவர்கள். உதாரண்த்துக்கு ஒன்று, சென்ற 2006 ல் சென்னை மத்ரஸா யே நிஸ்வான், பொன்விழாவில் ஒரு பயானில்.. இக்கால பெண்களின் அரை குறை பர்தாவைப் பற்றி கண்டித்து கூறும்போது ஒரு நகைச்சுவை;

” அண்ணலும் நோக்கினார்- அவளும் நோக்கினாள்” என்ற ஒரு காதல் இலக்கிய நூலில் ஒரு வாக்கியம் உண்டு. அதனைச் சொல்லி விவரித்து விட்டு “அண்ணன் (வாலிபன்) கையிலும் நோக்கியா இவள் (வாலிபி) கையிலும் நோக்கியா ” என்று நகைச்சுவை நயத்தோடு இக்கால வாலிபர்களும் வாலிபி களும் தவறான முறையில் NOKIA செல் உரையாடி வாழ்க்கையை பழாக்கும் கலாச்சாரத்தை கண்டித்தார்கள்.

நிற்க, ஒரு முறை எனது வேண்டுகோளின் படி தஃலீம் கிதாபுகளில் கையாளப்படும் பல, பல கடின தமிழ் வார்த்தைகளை குறிப்பாக இலங்கை மக்களுக்காகவே இலகுவாக மாற்றி அமைத்தார்கள். இதற்கு தனிப்பட்ட முறையிலும் நான் நன்றி கூறினேன். அவர்கள் தொகுத்தும், தற்ஜமா செய்தும்,ஹஜ் வழிகாட்டிகள், பல்சுவை மலர்,ஸலவாத்தின் சிறப்பு, அமல்களின் சிறப்பு, சாந்தி நபி,ஹயாத்து ஸஹாபா, துஆக்களின் களஞ்சியம் மற்றும்.. அநேக நூல்கள் எழுதிய பன்னூல் ஆசிரியராவார்கள். அல்லாஹுமங்ஃபிற் லஹூ...வற்ஹம்ஹூ. மேற்கண்ட கிதாபுகளில் அநேகம் இன்றளவும் கோடிக்கணக்கில், மில்லியன் கணக்கில் உலகளவில் வாசிக்கப்படும் தப்லீக் தஃலீம் ஹல்கா ளில் வாசித்து மிகப்பெரிய நன்மையை பெற்று வருகின்றனர்.

மேலும் சமீபகாலமாய் மார்க்கத்தில் தடுமாற்றத்தில் இருந்த மக்களை குறிப்பாக வாலிபர்களை “ஹை அத்துஷ் ஷரீ ஆ பேரவை” எனும் மார்க்க முன்னேற்ற சபை மூலம் மற்ஹூம் ஃகலீல் அஹ்மதுகீரனூரி மவ்லானா அவர்கள், மவ்.முஸ்தஃபா ஹழரத் அவர்கள்,மவ்.றூஹுல் ஹக் ஸாஹிப் அவர்களோடும் பல உலமாக்களோடும் தஃவத் பணிகள் பல செய்து மக்களை விழிப்படையச்செய்து மிகப்பெரிய சேவைகள் செய்து ழலாலத் என்னும் வழிகேட்டை விட்டு வாலிபர்களை அல்லாஹ் உதவியால் காப்பாற்றி வந்தார்கள்

திரும‌றை மொழியாக்கத்தில் அவ‌ர்க‌ளோடு சேர்ந்து ப‌ணியாற்றிய‌ பெரும‌திப்பிற்குரிய‌ முற்ஷித்னா, ஷைகுல் த‌ர்ஜமா, ம‌வ்லானா. மற்ஹூம் அப்துல் வ‌ஹ்ஹாப் M.A.,B.Th , ஆகிய‌ அறிஞ‌ர்க‌ளோடு உறவாடும் பாக்கிய‌ம் கிட்டிய‌ என‌க்கு, ஹ‌ழஜ்ர‌த் அவ‌ர்க‌ள‌து ம‌றைவு ஒரு பேரிழ‌ப்பாகும்.

நேற்று பகல்1-1-1012 ஞாயிறு 2 மணியளவில் சென்னை,தானா தெரு மையவாடியில் மர்ஹூம் அவர்களின் பணி செய்த இடமான புரசை, ஜாமிஆ மஸ்ஜிதிலே மற்ஹூம் அவர்கள் தொழுது. ஃகுத்பா ஓதி தொழவைத்து இமாமத் செய்த அதே மிஹ்றாபில் ஜனாஸாவை (இது ஒரு நற்பாக்கியமே) வைத்தே ஜனாஸா தொழுது, சென்னை,தானா தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா தொழுகையில், மஸ்ஜிதில் 3 மாடியும் நிறைந்து வெளியிலும் சுமார் 10-13 ஆயிரம் பேர்கள் தொழுது துஆ செய்தார்கள் என அறிகிறோம்... அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹூ. அல்லாஹும்மஜ் அல் கப்றஹூ றவ்ழத்தன் மின் றியாழில் ஜினான்.. ஆமீன்.

இன்று திங்கள் ( 2-1-2012) இரவில் காயல்பட்டணம் ஜாவியாவில் ஙாயிப் ஜனாஸா தொழுது, இரங்கல் கூட்டம் நடத்தி ஈஸால் ஃதவாபும் நாடி துஆவும் செய்யப்பட்டது.

மேலும், இன்ஷா அல்லாஹ் இன்று காயல்பட்டணம் அறூஸுல் ஜன்னஹ் மத்றஸதுன் நிஸ்வானில்.ஃகத்தம் ஓதி ஈஸால் ஃதவாபு துஆவும் செய்தோம்.

2-1-2012 ன்- தகவல்; அல்ஹாஜ், தைக்கா. றஹ்மத்துலாஹ், 59, தீவுத்தெரு, காயல்பட்டணம்.628204.ஃபோன்.04639280852 Email.rahmathullahtm38@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2516; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved