Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:40 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7794
#KOTW7794
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 2, 2012
ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும்! தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், கடந்த வெள்ளிக்கிழமையன்று காயல்பட்டினத்திற்கு நேரில் வந்து ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் வழித்தடங்களை ஆய்வு செய்து சென்றார்.

ஒருவழிப்பாதைக்கு புதிய வழித்தடமாக பெரிய நெசவுத் தெருவை பரிசீலிக்காமல் மாற்று வழியை பரிசீலிக்கக் கோரி, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைசார் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவழிப்பாதை குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் 31.12.2011 அன்று (நேற்று) மாலை 06.30 மணிக்கு, ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமையிலும், துணைத்தலைவர் ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, கவுரவ ஆலோசகர்களான ஹாஜி எஸ்.மூஸா, எஸ்.இ.மரைக்கார் ஆலிம், ஹாஜி எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலையிலும், வெளிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

துவக்கமாக, கூட்டத்தின் நோக்கம் குறித்து, பள்ளியின் செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத் விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பள்ளியின் துணைச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மத் நியாஸ் விளக்கினார்.



பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பள்ளி துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித், ஹாஜி பி.ஏ.ஷேக், ஹாஃபிழ் நெய்னா முஹம்மத், கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா, என்.எம்.அஹ்மத், காயல் மவ்லானா, கொமந்தார் இஸ்மாஈல், ஹாஜி ஆதம் சுல்தான், எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகிய - பள்ளியின் செயற்குழு / பொதுக்குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.



பேருந்து போக்குவரத்து காரணமாக கே.டி.எம்.தெரு மக்கள் இன்றளவும் அனுபவித்து வரும் சோதனைகள் குறித்தும், ஒருவழிப்பாதை நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், எவ்வித ஆதாரமுமின்றி - கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்று நெசவு ஜமாஅத் சார்பில் தெரிவித்துள்ளதாகவும், அதை தாங்கள் கண்டிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், கடந்த 29.12.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில் ஒருவழிப்பாதை குறித்து பேசப்பட்ட நிகழ்வுகளை, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் விளக்கினார்.

காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தில், சில ஆவணங்களுடன் அந்த ஜமாஅத் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை, அப்பகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் - நகராட்சிக் கூட்டத்தில் முன்வைத்ததாகவும், அடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, ஒருவழிச்சாலை போக்குவரத்து நகர்மன்ற கட்டுப்பாட்டுக்குட்பட்டதல்ல என்பதோடு, மாவட்ட அளவில் அரசு உயர்மட்டக்குழு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்ந்து வருவதால், நகர்மன்றம் முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

அடுத்து பேசிய நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தான் தாயிம்பள்ளி ஜமாஅத், நெசவு ஜமாஅத் ஆகிய இரு ஜமாஅத்துகளுக்கும் பொதுவான உறுப்பினர் என்ற அடிப்படையில், நெசவு ஜமாஅத் சார்பில் தன்னிடம் தரப்பட்ட கோரிக்கையை, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டப் பொருளில் வைத்ததாகவும், இதுகுறித்து நகராட்சி முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.



நிறைவாக,

ஒருவழிப்பாதையை காயல்பட்டினத்தில் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும்...

இதுவரை பெரிய நெசவுத் தெரு பெயரை கே.டி.எம். தெரு மக்களோ, ஜமாஅத்தோ சுட்டிக்காட்டாமல் - ஒருவழிப்பாதை அவசியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே தம்மால் கூறப்பட்டு வரும் நிலையில், கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று ஆதாரமின்றி நெசவு ஜமாஅத் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிப்பு... அத்தீர்மானத்தை மேற்படி ஜமாஅத் திரும்பப் பெற வேண்டும்...

இதுவரை நகரில் பெரும்பாலான ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் வேண்டுகோள் படி, பேருந்து போக்குவரத்திற்கு வசதியாக உள்ள பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதை தற்போது இந்த ஜமாஅத் வலியுறுத்துகிறது...

ஆகிய கருத்துக்களில் இக்கூட்டத்தில் தீர்மானம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அத்துடன், தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில், மக்கள் குறைதீர் நாளான 02.01.2012 அன்று (இன்று) ஒருவழிப்பாதையை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கவும், அம்மனுவின் நகலை காயல்பட்டினம் நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு அளிப்பதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தாயிம்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நீண்ட நேரம் கூட்டம் நடைபெற்ற காரணத்தால், இஷா தொழுகை சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH-K.S.A.) [02 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15369

யா அல்லாஹு எமது ஊர் மக்கள், பரந்த மனப்பான்மையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், சகோதர பாசத்தோடும், ஒன்று பட்டு , வாழ அருள் புரிவாய், யா அல்லா, நீ எதில் நன்மையை நாடி உள்ளாயோ, அது உனது நாட்டம் படி நடந்தே தீரும் , நீயே வெற்றியாலன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by omar abdullatheef (maraikarpalli street - kayal) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15370

START YOUR STRIKING HOURS TO INITIATE THE ONE WAY THROUGH THROUGH FORCE , BY PROTESTING OR BLOCKING THE BUS IN K.M.T STREET .SINCE YOU HAVE RIGHT . IT IS USELESS TO HAVE MEETING ALL THE TIME . THE PERIYA NESAVU STREET DISAPPOINTING THE MAJORITY OF THE PEOPLE

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வேண்டும் வேண்டும் ஒரு வழி பாதை வேண்டும்.
posted by S.A.MUHAMMAD ALI (VELLI) (Dubai) [02 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15372

இந்த விசயத்தில் நகராட்சி மன்றம் நழுவ பார்க்கிறது. இதற்கு முன்பு வட்டாட்சியர், நகர்மன்றத்தில் தீர்மானம் போட்டு கொடுங்கள், இரண்டு நாளில் ஒரு வழி பாதை அமுல்படுத்துகிறோம் என்று கூறினார் என்ற செய்தியை உங்கள் வெப்சைட் இல் படித்த ஞாபகம் உள்ளது.

(Moderator: சகோ.வெள்ளி முஹம்மத் அலீ அவர்கள் குறிப்பிட்டுள்ள செய்தியை மீண்டும் கவனமாக படித்து கருத்து எழுதலாம்.)

எல்லா மக்களையும் திருப்தி படுத்த வேண்டும். நாம் யாரையும் பகைத்து கொள்ள கூடாது. நம்முடைய பதவி தான் முக்கியம் என்று கருதும் உறப்பினர்கள் நமக்கு தேவை இல்லை. அது யாராக இருந்தாலும் கவலை இல்லை.

தாயிம்பள்ளி ஜமாஅத் நம் ஊரில் அணைத்து மக்களிடத்திலும் கை எழுத்து வேட்டை நடத்த வேண்டும். இதற்கு ஆதரவாக உள்ள அணைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து கலெக்டர் இடம் முறையிட வேண்டும்.

நெசவு தெரு காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மூப்பனார் ஓடையை (BETWEEN KTM STREET AND NESAVU STREET MORE THAN 10 FEET ) மீட்டு எடுக்க வேண்டும்.

தனியார் வாகனங்கள் மாற்று பாதையை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

உடனடியாக ஒரு வழி பாதை அமுல்படுத்த படவேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவியுங்கள்.

ஊரின் வளர்ச்சிக்கு நம் பங்கு எப்பொழுதும் உண்டு. அவர்கள் பங்களிக்கா விட்டாலும் பங்கம் விளைவிக்காமல் இருந்தால் சரி.

ஒற்றுமை என்றால் என்ன என்று நம் ஜமாத்தின் மூலம் நிரூபியுங்கள். நமது உரிமையை உரிமையோடு தைரியமாக கேளுங்கள்.

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன் டா." பட்டம் நமக்கு வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [02 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15374

ஊரில் தற்போது இருக்கும் தலையாய பிரச்சனைகளில் இந்த ஒருவழிப் பாதை பிரச்சனையும் ஒன்று, அதுவும் பல காலங்களாக தீர்க்கப்படாமலேயே...

இங்கு பதிவு செய்த அனைவர்களும் அவர்களின் மன ஆதங்கத்தை கொட்டியுள்ளார்கள், யாருடைய கருத்தையும் குறைத்தோ அல்லது இழிவாகவோ மதிப்பிட முடியாது.

KTM தெரு, மெயின் வீதி, ஹாஜி அப்பா தைக்கா தெரு மக்களின் சேவைகளை பாராட்டாத மனது ஒரு நல்ல மனது அல்ல. அது போல நெசவு தெரு மக்களின் ஆதங்கத்தையும், குறைகளையும் புரியாத மனதும் ஒரு நல்ல மனது அல்ல.

நான் +2 படிக்கும் போது, கணித டியூஷன் யார் வீட்டில் வைத்து எடுக்கலாம் என்று ஆலோசனை நடைபெறும் போது, கண்டிப்பாக KTM தெருவில் வைத்து மட்டும் கூடவே கூடாது ( 3 மாணவர்கள் KTM தெரு வாசிகள்தான்), அங்கு போக்குவரத்து நெரிச்சல், ஹாரன் சவுண்ட், ஒரே தூசியும் புழுதியுமாக இருக்கும், ஆக நிம்மதியாக பாடங்களை கவனிக்க முடியாது என்று நிராகரிக்கப்பட்டு, வேறு தெரு நண்பனின் வீடு தெரிவு செய்யப்பட்டது.

அடுத்து, என் நண்பனுக்கு KTM தெருவில் பெண் பார்க்கப்பட்டது. அனைத்தும் திருப்தியாக அமைந்தது. உடனே பெண்களில் இருந்து மறுப்பு வந்தது. ஒரே காரணம் மேலே உள்ள டியூஷன் காரணம்தான், கூடவே நிம்மதியாக தூங்க முடியாது என்றும் காரணம் கூறி அந்த பெண் நிராகரிக்கப்பட்டாள்.

இப்படி, இவர்கள் இழந்தது பல... பல...

சரி, இதே நிலைமை எங்களுக்கும் வரும் தானே என்று நெசவு தெரு மக்கள் கூறுவதும் நியாயம் தான்... அவர்களின் கூற்றிலும் நியாயம் உண்டு... இந்த நியாயங்கள் தொடர்ந்து கொண்டே சென்றால் தீர்வு தான் என்ன.

முன்பு, நெய்னா தெருவில் ஒரு ஈ, காகம் செல்லாது. அவ்வளவு ப்ரீ ஆக தெரு இருக்கும். இன்றோ மெயின் வீதி மாதிரி அவ்வளவு போக்குவரத்து. கடையக்குடி செல்லும் வாகனங்கள், பேருந்து, மினி பேருந்து அதற்கும் மேலாக எமனை தலையில் வைத்துக்கொண்டு அதி விரைவாக செல்லும் மீன் லாரிகள் என்று ஒரு நிம்மதி இல்லாத தெருவாக இந்த தெரு ஆகிவிட்டது.

இதே நிலைமை கீழ நெய்னா தெருவில் கூட தொடர்கிறது.. இந்த தொடர் குத்துக்கள் தெரு, சதுக்கை தெரு என்று பயணிக்க தவறவில்லை.

ஆக சிரமங்கள் அனைவர்களுக்கும் இன்றைய காலத்தில் பொதுவானதாக ஆகிவிட்டது. இவர்களும் போர்க்கொடி தூக்கினால்...

ஆக, ஊர் நலனில் தாங்கள் அக்கறை உள்ளவர்கள் என்று அனைவர்களுக்கும் தெரியும். புதிய மாற்றங்கள், சிரமங்கள் முதலில் கசக்கத்தான் செய்யும். கம்ப்யூட்டர் அலுவலகங்களில் புகுந்த சமயம் பலரும் இதனால் பல சிரமங்கள், மாற்றங்கள் உண்டாகும், வேலை இல்லா திண்டாட்டம் பெருகும் என்று கூறியது உண்டுதானே. ஆனால் இன்று..

ஆக நெசவு தெரு சொந்தங்களே, அல்லாஹ்விற்காக கொஞ்சம் இறங்கி வாருங்கள். ஊர் நலனில் இன்னும் கூடுதல் பங்களிப்பை கொடுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான். (அல்குர்ஆன் 4:40)

*** சிலரின் கருத்துக்களில் உள்ள செய்தியை ("இரட்டை வேடம் போடுபவர்களின்") படித்து மிகவும் வருத்தம் தான் மிஞ்சுகிறது. வல்ல ரஹ்மானுக்கு பயந்து கொள்ளுங்கள். உங்களின் செயல்பாடுகளை நன்மையின் பக்கம் திருப்பிக்கொள்ளுங்கள்.

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104).

நெசவு தெரு சகோதரர்களே, இந்த விண்ணப்பத்தை இருதயத்தின் ஒரு பகுதியான உங்களிடம் வைக்காமால் விசாலாட்சியம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை மக்களிடாமா வைப்பது.

இன்ஷாஹ் அல்லாஹ் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [02 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15376

மற்றவர்கள் என்னபாடும் படட்டும் நாங்கள் சுகமாக இருக்க வேண்டும், எங்கள் தெருவுக்குள் போக்கு வரத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என முடிவெடுத்து, மாற்று பாதை என உதாவாத பாதையை வரைபடம் மூலம் திரு மாவட்ட ஆட்சியரிடமே விளக்கும் வரை தாயிம் பள்ளி ஜமாஅத்தை சார்ந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இப்போது தான் விழிதுல்லார்கள் போலும்.

கலெக்டர் வரும் போது ஒரு குறிப்பிட்ட ஜமாத்தின் கூட்டத்தையும் அதன் பிரதிநிதியையும் தானே காண முடிகிறது, தங்கள் ஜமாத்தின் பெரியவர்களையோ முன்னணி செயல் வீரர்களையோ காணவில்லையே! தங்கள் வார்டு உறுப்பினரும் துணை தலைவருமானவர் தங்களுக்கு தகவல் தரவில்லையா?

ஊரிலுள்ள பொது நல இயக்கங்களின் பிரதிநிதிகள், பொதுநல விரும்பிகள், பெரியவர்கள், ஹஜியப்பா தைக்கா தெருவைச்சர்ந்தவர்கள், மெய்ன் ரோட்டில் உள்ளவர்கள் யாரையும் கலெக்டர் வந்த போது கானவில்லேயே! தகவல் இல்லாமலா கலெக்டர் வந்தார்? இல்லை நகராட்சியால் வருகை ஒரு குறிப்பிட்ட தெருவுக்கு மட்டும் அறிவிக்க பட்டதா?

செய்தி பதிவு செய்திருக்கும் அருமை மருமகன் S.K. சாலிகு அந்த இடத்தில இருந்தாரா? இருந்தால் தன் கருத்தை கலெக்டரிடம் பதிவு செய்திருப்பாரே?

வெளியிலிருக்கும் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by mohamed abdul kader (dubai) [02 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15378

அஸ்ஸலாமு அழைக்கும்

நெசவு ஜமாஅத் மக்கள் நமது வூர் மக்களையும் அவர்கள் பிற்காலத்தில் அனுபவிக்க போகும் கஷ்டங்களையும் பற்றி நீங்கள் கவலைபடுவதாக தெரியவில்லை ஆனால் நீங்கள் யாருக்காக உங்கள் தெரு வழியா போக்குவரத்து வரகூடாது என்று போராடுகிரிர்களோ அந்த மக்களை - உங்கள் தெரு பெண்களை நினைத்து பாருங்கள் நாளை வூருக்கு அப்பால் இருந்து பஸ் ஏற இறங்க சென்று வரும்போது அவர்களின் பாதுகாப்பிற்கு மற்றவர்களால் குந்தகம் ஏதும் நடந்தால் அதனால் வருந்துவது நீங்கள் மட்டும் அல்ல வூர்மக்கள் அனைவரும்தான்

இவர்களை நினைத்தாவது இரங்கி வாருங்கள் இதுபோன்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அல்லாஹ் போதுமானவன். வஸ்ஸலாம்

mohamed abdul kader
k.t.m.street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. என்னைப் பற்றி...
posted by SKS (Daruttibyan Network) (Kayalpatnam) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15379

சகோ. ஜாஃபர் ஸாதிக் காக்கா (ஜித்தா) அவர்களே!

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்தது வெள்ளிக்கிழமை. காலை 10 மணிக்கு வருவார் என தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஆட்சியர் வர தாமதமாகிக்கொண்டே சென்று, நிறைவில் ஜும்ஆ நேரமும் வந்தது. எனவே, காத்திருந்த பலர் ஜும்ஆ தொழுகைக்காக இரண்டு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர்.

அந்நேரத்தில், “நாம் ஜும்ஆவையும் இழந்துவிடக்கூடாது... அதே நேரத்தில் இந்த முக்கிய நிகழ்வையும் பதிவு செய்தாக வேண்டுமே...” என்று நான் கவலைப்பட்டது போலவே, அங்கு காத்திருந்த சில பகுதிகளைச் சார்ந்த மக்களும் கவலைப்பட்டனர்.

இறுதியில், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் சற்று தாமதமாகத்தான் ஜும்ஆ தொழுகை நடைபெறுகிறது என்ற தகவலறிந்து, அதில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தோம். சில மணித்துளிகளில் ஆட்சியரும் வந்தார். சிலர் அவரவர் கோரிக்கைகளை அளித்தனர். என் கடமைக்கு நான் செய்தி சேகரிப்பில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன். இதுதான் நடப்பு!

நான் இக்கருத்தில் சொல்ல வருவது என்னவெனில், தாங்கள் உட்பட பலர் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என் தகுதிக்கு மிஞ்சியதாகவே உள்ளது என்பதுதான். ஓரிடத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், (எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் - இல்லாவிட்டாலும்) அந்நிகழ்வை அப்படியே பதிவாக்கி, உள்ளது உள்ளபடி செய்தியாகத் தருவது மட்டுமே எனது பணி என்பதை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என் மனக்குறைக்குக் காரணம்... இந்த ஒருவழிப்பாதை செய்திகளில் கூட சில அன்பர்கள், நான் கே.டி.எம். தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால், நெசவுத் தெரு மக்கள் சந்தேகப்படுவதும், நெசவுத் தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால் கே.டி.எம். தெரு மக்கள் சந்தேகப்படுவதும் அந்தந்த செய்திகளின் கருத்துப் பகுதியிலேயே தெரிகிறது.

என்னைப் பொருத்த வரை நான் ஒரு செய்தியாளன்... எனக்கென பொதுவாழ்விலோ, ஜமாஅத் ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ, மார்க்க அடிப்படையிலோ சில கருத்துக்கள் இருப்பினும், நான் செய்து வரும் செய்திப்பணியில் அக்கருத்துக்கள் அணுவளவும் பிரதிபலிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன்.

அவ்வாறிருக்க, செய்தியாளராக நான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு சரியெனப்பட்ட கருத்தை வலியுறுத்தத் துவங்கினால், பின்னர் என் செய்தியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே நான் மவுனம் காத்து வருகிறேன்.

இத்தனையையும் தாண்டி, உங்களில் சிலருக்கு என் விஷயத்தில் தெளிவு கிடைக்கவில்லையெனில், எனது கைபேசி எண்ணுக்கு (+91 98658 19541) தொடர்புகொண்டு கேட்டறிய அன்புடன் வேண்டுகிறேன்.

செய்திப்பணியைப் பொருத்த வரை விமர்சனங்களை நாம் ஏற்கப் பழகித்தான் ஆக வேண்டும் என்பதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நன்கறிவேன் என்பதால்தான் இதுநாள் வரை இதுகுறித்து எந்தக் கருத்தும் என் பெயரில் தெரிவிக்காமலிருந்தேன். ஆனால் ஜாஃபர் ஸாதிக் காக்கா அவர்கள் தற்போது என் பெயரைக் குறிப்பிட்டே கேட்டுவிட்ட காரணத்தால்தான் இந்த விளக்கம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அல்லாஹ் நம் யாவருக்கும் உளத்தூய்மையையும், நிறைவான நகர்நல சிந்தனைகளையும் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Cnash (Makkah ) [02 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15391

அஸ்ஸலாமு அலைக்கும்!!

இந்த பிரச்னை தலைதூக்க ஆரம்பித்த நாளில் இருந்தே எங்கள் தெருவாசிகள் பல களங்களிலும் மேலும் சில நாட்களாக நாங்களும் இது போன்ற இணையதளங்களிலும் விவாதித்து களைத்து விட்டோம்... ஆனாலும் இதற்கு ஒரு நல்ல முடிவு வரும்வரை தளர்ந்து விடமாட்டோம்.

பிடிவாதகாரர்களின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. எனவே KTM தெருவாசிகலான நாங்களும் எங்கள் போக்கை மாற்ற இருக்கிறோம். இனியும் விட்டு கொடுப்பது, படியில் ஆரம்பித்து படிப்படியாக வீடு வரை இழந்து கொண்டிருக்க நாங்கள் மட்டும் இளிச்சவாயர்கள் இல்லை. ஊர்நலன் பேணப்பட வேண்டும், அதற்காக நாங்கள் இழந்தது ரெம்பவே அதிகம். இறங்கி போய் உரிமையை இழந்து சுமைதாங்கி பட்டத்தை சுமப்பதை விட இறங்கி போராடி உரிமையை நிலை நாட்டவே எங்களின் இன்றைய சந்ததியினர் விரும்புகின்றனர்.

அவர்களுக்கு சுகத்தை அனுபவிக்க மட்டும் ஊரும், ஊர் மக்களின் ஆதரவும் வேண்டும், அதை எல்லாம் காலங்காலமாய் அனுபவித்து விட்டு இன்று அவர்கள் ஜமாத் மட்டும் காயல்பட்டினத்தின் தனித்தீவை போல செயல்படுவது, இதை முன்ன்னின்று நடத்தும் முற்போக்குவாதிகளை(!) உண்மையாக ஊர் நலம் பேணுபவர்கள் கண்டிக்க வேண்டும்.

இது ஒன்றும் தனிப்பட்ட இரு ஜாமாத்துக்கோ, தெருவுக்கோ உள்ள பிரச்னை இல்லை. ஊர் நலனை எதிர்கொக்கி இருக்கும் பிரச்னை எனவே ஊரின் மற்ற பொதுநல அமைப்புகளும், பேரவையும் முன்வந்து எதிர்நோக்கி இருக்கும் முட்டுகட்டைகளை தகர்த்த முன்வர வேண்டும்.

இவர்களின் சுயநல போக்கை இப்படியே தொடரவிட்டால் இன்று ஆணவத்தில் KTMதெரு, மெயின்ரோடு, HATதெரு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் இல்லாத ஒன்றை இட்டுகட்டி காட்டி கொடுக்க முயற்சிபவர்கள். நாளை அவர்கள் தெருவின் உள்ள ஒரு 100 பேர் சொகுசா வாழ்வதற்கு சுற்றி இருக்கும் இரண்டு தெருவையும் அகற்ற சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை.

நகராட்சிக்கு வெறும் கருத்து கேட்பதோடு அதன் பணி முடிந்துவிடவில்லை. மாறாக மக்களுக்கு நல்லது எது என்று தொலைநோக்கு பார்வையில் திட்டமிட்டு வரும் எதிர்ப்பை எல்லாம் பின்தள்ளி விட்டு, உரிய திட்டத்தின் மூலம் ஒரு வழிபதை பிறக்க வழிசெய்ய வேண்டும். எதிர்ப்பை மட்டும் கருத்தின் கொன்டால் இவர்களை விட பலமடங்கு வீரியத்தோடு எதிர்பதற்கு எங்களுக்கு எல்ல உரிமையும் திறனும் இருக்கிறது... ஊர் நன்மை கருதி தாங்கிகொண்டிர்கிறோம்.

இறுதியாக, துணைதலைவரின் நிலை தடுமாறிய நிலை அவருடைய நாளைய அரசியல் ஒட்டு கணக்குக்கு வேணுமானால் சரியாக இருக்கலாம், நீதிக்கும் நியாயத்திற்கும் உகந்ததல்ல!! அவர்கள் தரும் மனுவை கொண்டு போய் நகர்மன்றத்தில் சமர்பிக்க நீங்கள் வகிக்கும் பதவி ஒன்றும் தபால்காரர் பணி அல்ல.. நாளை அவர்களின் நீதமில்லாத கோரிக்கைக்கு துணை தலைவர் உடன்பட்டார் என்றுதான் நகராட்சி அலுவலக பதிவுகள் சாட்சி கூறும்.

அவர்களின் கோரிக்கைகளின் ஒன்றான KTM தெரு ஆக்கிரமிப்பு அகற்றபட வேண்டும் உட்பட கோரிக்கையும் நெசவுதெரு ஜமாத்தார் சார்பாக துணைத்தலைவர் வைத்தார் என்றுதான் நகரமன்ற ஆவணத்தில் கருதபடும்.

நீங்கள் பொதுவானவர்தான்.. அநீதிக்கும் அசத்தியதிக்கும் பொதுவானவர் இல்லை... நீதி செய்வதிலும் நன்மை செய்வதிலும் மட்டுமே பொதுவானவராக இருங்கள்!! எல்லோரையும் திருப்தி செய்ய முயற்சிப்பதை விட்டுவிட்டு நல்லோர்களை திருப்தி செய்யுங்கள்.. நல்லவைகளுக்கு துணை போகும் துணை தலைவராக மட்டும் இருங்கள்!! அது நம் ஜமாதிர்க்கும் தெருவிற்கும் எதிராக இருந்தாலும் கூட!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [02 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15397

அன்பின் சகோதர்களே....

கே டி எம் தெரு சகோதரா்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இடைஞ்சல்களையும் கொஞசமும் குறைவில்லாமல் எங்கள் தெருவும் அனுபவித்து வருவது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

ஒரு வழிப்பாதை அவசியம் ..அது எங்கள் தெருவுக்கும் அந்த ஒரு வழிப்பாதை வேண்டும். சகோதரா்களே ....கடந்த வருடங்களில் சின்ன நெசவுத் தெருவில் ஏற்பட்ட விபத்துகளை தாங்களும் அறிவீா்கள். இனியும் விபத்துகள் நடக்கா வண்ணம் எங்கள் தெருவுக்கும் ஒருவழி பாதை வேண்டும். சகோதரா்களே! மாற்று வழியை காணுங்கள்..... தீர்வு பிறக்கும்.

ஒருவரையெருவா் சாடுவதையும் முகத்திரைகளை கிழிக்கவும் போராடும் சகோதரா்களே மாற்றவழி பற்றியும் சிந்தியுங்ககளேன்.

ஒருவழிப்பாதை வரும் என்ற நம்பிக்கையுடன்.
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஊருடன் பகைக்கின்
posted by farook LT (ktm st) [02 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15399

ஊருடன் பகைக்கின்
வேருடன் கெடும்;

நம் ஊரின், நம் மக்களின் சவ்கரியத்துகாக இதுவரை எத்தனையோ சந்தோசங்களையும், வசதிகளையும் இழந்து நிற்கிறோம் .ஆனால் நம் ஊரையோ நம் மக்களையோ சிறிதளவும் எண்ணிப் பார்க்காமல் அந்நிய உள்ளத்தோடு சுயநலத்தோட செயல்படும் சிலர் நம் ஊருக்கும் எங்களுக்கும் (மாற்றுப்பாதை, ஆக்கிரமிப்பு )பாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் தான் உங்க ஆதரவும் ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை. ஊரின் நலனுக்காக ஊருக்கு எதிரான அந்த குறுகிய மனம்படைதவர்களுக்கு எதிராக எல்லோரும் உங்க எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15400

காஷ்மீர் பிரச்சினை, தெலிங்கான பிரச்சினை, முல்லைபெரியாறு பிரச்சினை, காவேரி பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை இவை பற்றி பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது, நமது ஒரு வழிப்பிரசினையே இந்த பாடு படுகிறது. தெரிகிறதா, தலைவலியும் திருகுவலியும் அவரவர்களுக்கு வந்தால் தெரியும். ஊர் நன்மைக்காக விட்டுக்கொடுக்க நமக்கு மனம் வருவதில்லை, பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் உள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்குவதற்கு நமது பெரியவர்கள் அதில் தலையிடுவதற்கு தயார் இல்லை.நகராட்சி தோல்விக்கு யார் காரணம் என்று சிந்தித்து கொண்டிருப்பதை விட தோல்விக்கு எது காரணம் என்று சிந்தித்து அந்த குறையை சரி செய்துகொண்டு மீண்டும் பொதுப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள யாருமே முன்வராவிட்டால், தீர்வு ஒன்றுதான். அதுதான் புரட்சி தலைவியின் அதிரடி அறிவிப்பு. சற்று கசப்பானதுதான், ஆனால் அதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போவோர் விட்டுக்கொடுப்பதில்லை என்ற நல்லோர் வாக்கியத்தை மனதில் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை வசமாக்கி தருவான். நபிகள் நாயகம் ஹுதைபியாவில் எதிரிகளுக்கு விட்டுக்கொடுத்தார்கள். ரோம சாம்ராஜ்யம் அவர்கள் காலடியை முத்தமிட்டது. நாம் மூமின்கள், விட்டுக்கொடுத்தால் அல்லாஹ்வே நம் எதிரிகளை நம் காலடியில் முத்தமிட செய்வான். அல்லாஹ் மிக அறிந்தவன். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [02 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15402

KTM தெரு,மெயின் பஜார் HAT தெருக்களின் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்திற்கு வசதி செய்து கொடுக்கவேண்டும் எனபது பெரிய நெசவு ஜாமத்தின் உத்தரவு.

சரி அவர்கள் உத்தரவுப்படியே தற்போது KTM தெருவை அகலபடுத்தவேண்டும் என்றால் தற்போதுள்ள 20 அடி ரோட்டுக்கு பதிலாக 60 அடி ரோடாக விரிவாக்கம் செய்யவேண்டும் .மீதி 40 அடிக்கு இருபுறமுள்ள அணைத்து வீடுகளையும் இடிக்கவேண்டும்.

பிறகு அணைத்து KTM தெருவாசிகளும் காட்டு மொகுதூம் பள்ளிக்கு பின்னால் குறைந்த விலையில் பிளாட் வாங்கி வீடுகட்டி குடியேற வேண்டியதுதான். ஏனெனில் அங்குதான் பேருந்து வராது.

இடிக்கபடுகின்ற வீடுகள் ஆக்கிரமிப்பு வீடுகள்தான் என்று பெரிய நெசவு ஜமாஅத் காரர்கள் நிரூபிக்க முடியுமா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [03 January 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 15413

அஸ்ஸலாமு அழைக்கும் mackie noohuthambi காக்கா , இப்போது புரிகிறதா " தலைவலியும் திருகுவலியும் அவரவர்களுக்கு வந்தால்தான் புரியும் " என்பது . அன்று பெரியவர்களை மதிக்க வில்லை . இப்போதுமட்டும் அவர்களை அழைப்பானேன் ? .

" விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போவோர் விட்டுக்கொடுப்பதில்லை " தேர்தல் நேரத்தில் ஒரு பெரியவர் இதைத்தான் சொன்னார் . யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை . இதனால் , இதை சொன்னவர் ஒன்றும் கெட்டுப்போகவும் இல்லை .

" ஒருவழி பாதை " ஊர் பிரச்சினை என்பதை மறந்து , ஒருசில தெருவாசிகளின் சொந்த பிரச்சினையாக போய்க்கொண்டு இருக்கிறது . தீர்வு ............? அரசிடம் இருந்து அதிரடியாக ஒரு தீர்வு வரும் . அப்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளும்படியாக வரும் .

முடிவு எடுக்க தெரியாத ஒரு தலைவி , இவரை எதிர்த்து வாக்களித்த 8193 பேர் மற்றும் வாக்களிக்காத 35 சதவீதம் பேர் இப்போது சிரமப்படுகிறார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. எங்கே செல்லும் இந்த பாதை
posted by S.A.MUHAMMAD ALI (VELLI) (Dubai) [03 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15421

பெருகும் வாகன நெருக்கடி ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தையே குலைத்துவிடும்.

நம் ஊரில் எத்தனை நற்பணி மன்றங்கள் உள்ளது. வெளிநாடுகளில் எத்தனை உள்ளது. எத்தனை கட்சிகள் இவர்கள் அனைவரும் இந்த விசயத்தில் வாய் மூடி மௌனமாக இருப்பதன் நோக்கம் என்ன?

இது KTM தெரு ஹாஜி அப்பா தைக்கா தெரு மக்கள் சம்பந்த பட்ட விஷயம் என்று எண்ணுகிறார்களா?

அன்பாலோ, கலகத்தாலோ தீர்வு காண கூடிய விஷயம் இல்லை என்றாலும் சம்பந்த பட்ட மக்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்று தான் நாங்களும் எண்ணி கொண்டு இருந்தோம். ஆனால் அவர்களின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது நாம் தான் இத்தனை நாளாய் பலிகடா ஆக்கப்பட்டு விட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.



இவர்கள் கூறும் மாற்று பாதை அமுல்படுத்த குறைந்த பட்சம் 2 வருடங்கள் ஆகும். ஓடையை மூடி பாதை அமைக்கணும். தண்ணீர் செல்ல குழாய்கள் பதிக்கணும். இது நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம்.

நாங்கள் ஒன்றும் எங்கள் தெருவை அடைத்து விட்டு அவர்கள் தெருவில் போக்குவரத்து பாதை கேட்க வில்லை. தயவு செய்து ஊரில் உள்ள அனைத்து மன்றங்களும் இதில் தலையிட்டு ஒரு சுமூக தீர்வை எட்டுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

ரத்னாபுரி, பூந்தோட்டம் என்று ரவுண்டு அடிக்காமல் ஊருக்குள் வந்து சென்றால் தான் நமக்கு பாதுகாப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இதில் வெற்றி தோல்வி என்று பார்ப்பதை விட்டு விட்டு ஊர் நலனை கருத்தில் கொண்டு செயல் படுமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

செயலில் தேவைகளில் ஒற்றுமையில் முடிவுகளில் சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின் எம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!

கனத்த மனதோடு

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by mohamed abdul kader (dubai) [03 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15428

அஸ்ஸலாமு அழைக்கும்

நமது தாயும் பள்ளி ஜமாத்க்கு ஒரு வேண்டுகோல் இன்ஷா அல்லாஹ் நெசவு தெரு ஒருவளிபாதை அமைந்துவிட்டால் அவர்கள் பிள்ளைகள் விளையாட தனி ஒரு பூங்கா அமைத்துதர ஆவன செய்யப்படும் என நகர்மன்ற தலைவி திருமதி ஐ. ஆபிதா அவர்கள் 26-12-2011 அன்று நெசவு தெருவில் தெருவித்து உள்ளார்

( இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார். )

இவ்வாறு நடக்குமாஇன் அது நமது k.t.m.தெரு சிறார் களுக்கும் தனி ஒரு பூங்கா அமைத்தல் வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்க வேண்டும் நாங்கள் எங்கள் வயதுவரை விளையாட இடம் இல்லாமல் இருந்தது போதும் இனி எங்கள் பிள்ளைகளுக்கும் அந்த நிலைமை வேண்டாம் ஒவ்ஒருவரின் சுயநலங்களும் இப்போதுதான் வெளிவருகின்றது நாம் மட்டும் பொதுநலம் பொதுநலம் என்று இருந்து நமது வீடுகளின் சிலபகுதியை இழந்ததுதான் மிச்சம் எனவே நான் மேல்கூறிய தனி ஒரு பூங்கா அமைத்தல் கோரிக்கையும் ஆணித்தரமாக வையுங்கள்

வஸ்ஸலாம்

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15433

Comment Reference Number: 15413
அன்பு சகோதரர் Vilack SMA அவர்களுக்கு,

======"முடிவு எடுக்க தெரியாத ஒரு தலைவி , இவரை எதிர்த்து வாக்களித்த 8193 பேர் மற்றும் வாக்களிக்காத 35 சதவீதம் பேர் இப்போது சிரமப்படுகிறார்கள்"======= என்பது தங்கள் கருத்து.

Please refer News ID # 7776
"ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாருடன் நகர்மன்றத் தலைவர் சந்திப்பு!"

>>>>>>>>>அதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இந்த ஒருவழிப்பாதை குறித்து ஆய்வு செய்யவும், முடிவெடுக்கவும் சாலை போக்குவரத்துத் துறைக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும்,

இதுவரை அதிகாரிகளால் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பெரிய நெசவுத்தெருவே ஒருவழிப்பாதைக்கு உகந்ததாக உள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.<<<<<<

இது தலைவர் அவர்களின் பதில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [03 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15434

சகோ. விளக்கு SMA அவர்களின் கருத்தில்,

"முடிவு எடுக்க தெரியாத ஒரு தலைவி , இவரை எதிர்த்து வாக்களித்த 8193 பேர் மற்றும் வாக்களிக்காத 35 சதவீதம் பேர் இப்போது சிரமப்படுகிறார்கள்"

என்ற வாசகம் ???... ???

ஆமாம், இந்த ஒருவழிப்பாதை பிரச்சனை அதி நீ..நீ..நீ..நீ....நீண்ட காலமாக முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்றது அல்லவா... அதாவது மூன்று மாத காலமாக...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Abdul Cader S.H. (Jeddah) [03 January 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15439

எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு!!

ஒரு வழி பாதைக்கு இரு ஜமாத்தும் இணங்கினால்தான் ஒரு வழி பிறக்கும். அதைவிடுத்து ஒருவர் இனொருவர் மீது குற்றம் கூறுவது முறையல்ல. நாங்களும் பல இன்னல்களுக்கு ஆளானாலும் ஊர் நலன் கருதி பொறுமையுடன் சகித்து வருகிறோம்.

நம் முன்னோர்கள் அன்று ஊருக்குள் ரயில் வரவிடாமல் ஒரு மைல் தள்ளி வளைத்து விட்டார்கள். அதுபோல் எங்கள் ஜமாத் முன்னோர்கள் பஸ் K.T.M. தெருவிற்குள் வரவிடாமல் தடுத்திருந்தால்..!!! பஸ் வாசனயை ஊருக்குள் நுகர்ந்து இருக்க முடியாது.

எல்லோரும் இன்புற்றிருக்கவே நாங்கள் பெருமை கொள்கிறோம். அதைவிடுத்து ஆக்கிரமிப்பு என்று நெசவு தெரு ஜமாத் கொக்கரிப்பது முறை இல்லை. நான் பிறந்து வளர்ந்து அறிந்தவரையில் 48 வருடத்தில் எந்த வித ஆக்கிரமிப்பும் நடந்ததாக தெரியவில்லை இருந்தது இருந்த படியே உள்ளது. இருபினும் படி இழந்து பால்கனி இழந்தோர் பலர் இன்னும் எதை இழக்கவேண்டும்.

எனவே இரு ஜமாத்தும் கலந்து நல்லதொரு முடிவெடுத்து ஒரு வழி பிறக்க நல்ல வழி காட்டவும். இதுவே நம் ஊருக்கு நன்மையாய் அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஒருவழிப்பாதை - மாற்று யோசனை ...
posted by M Sajith (DUBAI) [03 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15440

ஒரு வழிப்பாதை ஏதோ இப்போதுதான் தோன்றியது போல ஒரு பிரம்மையை VSMA காக்கா தனது வழமையான குதற்கத்துடன் சொல்லியிருகிறார்.

பெரியவர்கள் தலைமையில் இருந்த காலத்திலும், பெரியவர்களால் நியமித்தவர்கள் காலத்திலும் இதில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்பது அவருக்கும் தெரியும், என்றாலும் வாய்ப்பை விடலாமா.. அதனால் தான் கிடைத்த கேப்பில் ஆப்பு வைக்கும் இந்த முயற்ச்சி !! - KEEP TRYING

சரி விசயத்துக்கு வருவோம்... தற்போது உள்ள வழித்தடத்தில், சின்ன நெசவுத்தெரு வாசிகளும், தங்கள் சாலையிலும் விபத்தை குறைக்க ஒரு வழிப்பாதையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

காயல்பட்டணத்தில் அதிக விபத்துக்கள் நடந்ததும் உயிர் பலிகள் ஆனதும் சின்ன நெசவுத்தெருவிலும் L.F. ரோட்டிலும் தான் என்பது அனுபவ உண்மை.

முன்புபோல இல்லாமல் இப்போது L.F.ரோட்டிலும் நிறைய வீடுகள் வரத்துவங்கிவிட்டது - தற்சமயம் காலியக உள்ள மனைகள் எல்லாம் விரைவில் வீடாகும், அங்கும் குழந்தைகள் விளையாடவேண்டும், தெருவை அடைத்து திருமணங்கள் நடத்தப்படவேண்டும், முதியோர்கள் தூங்க வேண்டும்... எதுவும் வருமுன் காப்பது நல்லதில்லையா ?

எனவே,ஊருக்கு வெளியில் ரயில் நிலையம் உள்ளது போலவே, பேருந்துக்களும் ஊருக்குள் வராமல் இருப்பது சிறந்த முடிவு என கொள்ளலாம்.

வீரபாண்டியன்பட்டணத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு பேருந்துகளை திருப்பிவிடலாம். அல்லது காட்டு மொஹுதூம் பள்ளியை அடுத்து, அடைக்கலாபுரம் வரை செல்ல ஒரு பாதை (பிளானில் உள்ளதாம்) அதன் வழி மாற்றலாம்.

அங்கே புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம், நமதூரின் தற்போதைய பேருந்து நிலையத்தை முறையான 'டாக்ஸி ஸ்டான்டாக' மாற்றி நகராட்சி வாடகை வசூல் செய்யலாம்.

நகருக்குள் இருந்து வெளியூர் செல்ல, ஆறுமுகநேரியில் இருந்தோ அல்லது வீரபாண்டியன் பட்டணத்தில் இருந்தோ செல்ல நகரில் நாலாபுறத்தில் இருந்தும் 'சிற்றுந்துகள்' இயக்கலாம்.

இவற்றுடன் போட்டி போடும் ஷேர் ஆட்டோக்களும், வேன்களும் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதுடன், பாரபட்சமின்றி எல்ல தெருக்களிலும் விபத்துக்கள் பரவலாக நடக்கவும் தோதுவாக இருக்கும்.

ஆக யாரும் யாருக்காகவும் தியாகம் செய்யாமல், சிரமும் சுகமும் பொதுவாகிவிடும்... என்ன தலைசுத்துதா..? எனக்கும்தான்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Ahamed (Chennai) [03 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15442

செய்திக்கும் கருத்திருக்கும் தொடர்பில்லாத பல கருத்துகளையும், பிரச்சனையை தூண்டும் விதத்தில் இருக்கும் அனைத்து கருத்துகளையும் அட்மின் உடனே நீக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [03 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15452

ஒரு வழி பாதை எப்பொழுது வரும் என்று வழி மேல் விளி வைத்து காத்துக் கொண்டிருந்த அணைத்து காயலருக்கு மத்தியில் எங்கள் வழி தனி வழி என்று பிடிவாதம் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம்...??

இந்த பிரச்சனைக்கும் முல்லை பெரியாறு பிரச்சனைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை . நாங்க எல்.எப் ரோட்டுல தான் இருக்கோம் எங்கள் வீட்டிலும் குழந்தை ,குட்டிங்க இருக்கு ,எங்களுக்கும் ஆடு மாடு மரங்க வளர்க்க ஆசை தான் அதை எல்லாம் நாங்க பார்த்த ஊருக்குள்ள பஸ் வாராது . தயவு செய்து சுய நலத்தை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு ஊர் பொது நலத்திற்காக ஒரு வழி பாதைக்கு சம்மதியுங்க ....எல்லாருடைய துஆவும் உங்களுக்கு கிடைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [03 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15456

இங்கு சீனாவும் வெள்ளியும் டாக்டரும் நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் ஒரு வழி பாதையை வழியிருத்தி கை வலிக்க கம்மென்ட் எழுதி "ஒருவழி" யானது ஒரு புறம்! அதனை எப்பாடு பட்டாகினும் தங்கள் தெரு வழி விடுவதில்லை என்று கங்கணம் கட்டிகொண்டு, நெசவு ஜமாஅத் மறு புறம்! இது இரண்டு தெருவுக்கும் இடையில் மட்டும் நடக்கும் சண்டை! நமக்கேன் வம்பு என்று, வேடிக்கை மட்டும் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம்! வேடிக்கை கூட்டம் நினைவில் கொள்ளட்டும்! திருநெல்வேலி பஸ் நிலையதில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் பஸ் கிடைக்காமல் "ஊர்வழி" போகும் பஸ்கல் கூட "நேர்வழி" ஆகும்போது அது உங்களையும் பாதிக்கும். இனி வரும் காலங்களில் திரூநேல்வேலியிலிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும்! தயாரா?

ஊர் நலன் என்று சொல்வார்கள்! ஊர் ஒற்றுமை இருக்காது! ஊர் ஒற்றுமை என்று சொல்வார்கள்! ஊர் நலன் இருக்காது! இதோ, இப்போது ஊர் நலனும் ஒற்றுமையும் (வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை விட்டு விடலாம் ) ஓர் அணியில் நின்று நெசவு ஜமாத்தை வேண்டுகின்றது! செவி சாய்க்க விட்டாலும் பரவாயில்லை!நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரேஞ்சுக்கு மாற்று வழி "மேப்போடு" திரிய வேண்டாம்!

இங்கு கிடைத்த கேப்பில், தமக்கு "வேண்டாதவருக்கு" ஆப்பு வைக்க ஒருவர்! அவரை தாக்கும் முகமாக தமக்கு "வேண்டியவருக்காக" வக்காலத்து வாங்க இன்னொருவர்! நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், இதனால் திசை திரும்பி விட வேண்டாம்! உரிமையில் உங்கள் குரல் ஒளித்து கொண்டே இருக்கட்டும்!

சிங்கிள் வழிக்கே சிங்கி அடித்து கொண்டு இருக்கின்றோம்! நாலு வழி கற்பனையோடு என்று சரக்குகளை இறக்கி விடும் சகோதரருக்கு ஒன்றை சொல்லி கொள்கின்றேன்! கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! எனக்குகூட பேயன்விலையில் ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வருவது மாதிரியும் அதில் இறங்கி வீட்டுக்கு பத்தே நிமிடத்தில் வந்து சேர்வது மாதிரியும் கனவு வருவது உண்டு! தொலை நோக்கு பார்வை என்று காத்திருக்க முடியுமா? சகோதரர் சொல்லும் ரோடுக்கு இன்னும் இருபது வருடம் காத்திருக்கலாம்! ஆனால் அது வரும் வரையாவது நெசவு தெருவை பயன்படுத்தி கொள்ளலாமே? இங்கு ஒரு வழி பாதை நடைமுறை படுத்தி விட்டவுடன் அந்த திட்டங்களெல்லாம் (ஒருவேலை உருவாகினால்) ஒன்றும் கேன்சலாகிவிடாது!

திருச்சியும் திருநெல்வேலியும் பை பாஸ் அடைவதிற்கு கால் நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது! காயல் பட்டினம் என்ன, அண்ணா ஹசாரே உடைய அஜண்டாவிலா இருக்கின்றது, உடனே கிடைக்க? தள்ளிப்போக வைக்கும் சாக்குகள், உங்களின் சரக்குகள்! தயவு செய்து புரிந்துகொள்ளவும்!

சந்தடி சாக்கில், LF ரோட்டையும் சந்தைக்கு கொண்டு வருகின்றார்கள். LF ரோட்டில் எத்தனை வீடுகள் ரோட்டை நோக்கி இருக்கின்றது? முக்கால்வாசிக்கு மேல் குறுக்கு ரோட்டில் தானே இருக்கின்றது? குறுக்கு ரோட்டில் ஒன்னும் பஸ் போகவில்லையே! பிள்ளைகள் விளையாட, பந்தல் போட அது போதாதா?

நகர் மன்றம் இப்போது எங்கள் கையில் ஒன்றும் இல்லை என்று "கை" கழுவலாம்! நெடுஞ்சாலைதுறை முடிவு வெளியாகி அது நெசவு தெருவுக்கு எதிராக அமைந்தால், அப்போது அது செயல் பட வேண்டியிருக்கும், தம் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி! அப்போது தயங்கினால் நான் மேற்சொன்ன சீனாவும், வெள்ளியும் டாக்டரும் அவர்களையும் ஒரு கை பார்ப்பார்கள், நினைவிருக்கட்டும்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by farook LT (ktm st) [03 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15460

நெசவு தெரு சகோதரர்கள் நாங்கள் தான் மாற்றுவழி சொல்லுகிறோமே அதை ஏற்றுகொள்ளவேண்டியதுதானே என்கிறார்கள். அந்த மாற்றுவழி செயல்பாட்டுக்கு வரும்வரை உங்கள் தெருவை ஒருவழி பாதைக்கு அனுமதிப்பீர்களா?

கே டி எம் தெருவை விட இருமடங்கு நிலப்பரப்பை அல்லாஹ் தந்திருந்தும் ,பல காலமாக தன்சிறு நிலப்பரப்பில் இருவழி பாதையால் பல இன்னல்களை தன சகோதர தெரு அனுபவிப்பதை தினதினம் பார்த்துகொண்டு இருந்தும் அல்லாஹ் கொடுத்தும் மனமில்லாமல் போதாததற்கு கே டி எம் தெரு இல்லங்களை உடைத்து தெருவை அகலப்படுத்தி நாம் எல்லோரும் சவ்கரியமாக போய்வர்வோம் என்று சொல்லுவது தான் நம் மார்க்கம் சொல்லிதந்ததா?

இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால். இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான் அல்குரான் .4:39

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2442 :புகாரி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15476

சின்ன நெசவு தெரு என்பது நெசவு தெருவிற்கு மட்டும் சொந்தமான தெரு கிடையாது. தாயிம்பள்ளி ஜமாஅத் மற்றும் பிற ஜமாஅத்தை சேர்ந்த மக்களும் உங்களுக்கு இணையாக இருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் கூப்பாடு போடவில்லை. சின்ன நெசவு தெருவின் அகலத்திற்கு மூன்று வழி பாதையே போடலாம். அங்கு யாரும் வாகன நெரிசல் உள்ளது என்று குறை கூறவில்லை.

KTM தெரு வாசிகள் செய்தது தியாகம் மற்றவர்கள் செய்தது துரோகம் என்று பெருமை அடிக்க கூடிய விஷயம் இல்லை. பெருகும் வாகன போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இருக்கும் வழிகளில் சிறந்த வழியாக நெசவு தெரு, கூல கடை பஜார் வழி தான் என அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

வரும் காலத்தில் ஒரு வழி பாதை வராவிட்டாலும் பிள்ளைகள் தெருவில் வந்து விளையாட முடியாது. இப்பொழுது வீட்டுக்கு வீடு பைக், கார் வந்து விட்டது. எந்த நேரத்திலும் கவன குறைவாக இருந்தால் விபத்து ஏற்படலாம். எங்கள் தெரு பிள்ளைகள் ஒன்றும் விளையாட்டிலும் படிப்பிலும் குறைந்து போய் விடவில்லை.

உங்கள் தெரு கல்யாணத்தை உங்கள் பள்ளிவாசல் அருகே போக்குவரத்து இல்லாத இடத்தில அமைத்து கொள்ளலாம். நிரந்தர மேடை போட்டு கல்யாண செலவை கூட குறைக்கலாம். தற்போது கூட உங்கள் தெரு பிள்ளைகள் தாயிம்பள்ளி சங்கத்தில் எங்கள் தெரு பிள்ளைகளோடு விளையாடுவதை காண்கிறேன். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

உங்களை யாரும் துரோகிகள் என்று கூறவில்லை. அண்ணன் தம்பிக்குள் சண்டை வந்தால் கோபத்தில் சில வார்த்தைகள் வரதான் செய்யும். அதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு பேசி கொண்டு இருக்க கூடாது.

விபத்து என்பது எங்கள் தெருவிலும் நடதுள்ளது நைனார் தெருவிலும் நடந்துள்ளது. அது நம்முடைய கவன குறைவாலும் ஏற்படும்.

வேண்டாம் என்பதற்கு சில காரணம் கூறும் உங்களுக்கு வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் எங்களாலும் கூற இயலும். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வரும். நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆகும்
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [04 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15481

சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களே..... இங்கு யாரும் சந்தடி சாக்கில் சிந்து பாடவில்லை - நீங்கள் எந்த தெருவில் வசிக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் நாங்கள் எல்.எப்.ரோட்டில் வசிக்கின்றோம்.

நீங்கள் நினைப்பது போன்று எல்.எப் ரோடு தற்பொழுது ரெட்டை பனையோ, ஒத்த பனையோ இல்லை. எல்லா தெரு மக்களும் தற்பொழுது ஊருக்குள் நிலம் கிடைக்காம இங்க தான் வந்து வீடு கட்டுறாங்க. ஏன் இன்னும் சொல்ல போனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ரொம்ப தொலைவில் இருக்கின்ற துளிர் பள்ளி இருக்கின்ற இடத்தில நிலம் வாங்குவதோ மிகவும் சிரமமாக உள்ளது. இப்படியே பொய் கொண்டிருந்தாள் இன்னும் கொஞ்ச நாளுல நடு ரோட்டுல தான் பந்தல் போடணும்.

வாய்க்கு ஈசியா, கையில KEY BOARD இருக்குன்னு ஈசியா சொல்லிடலாம். எல்.எப் ரோட்டுக்கு என்ன பிரச்சனைன்னு. காலையிலேயே மாதா கோயில் மணியோசை, பேருந்துகளின் அலறல் சத்தம், கோயில்களின் பக்தி பாட்டுக்கள் இவை அனைத்தையும் சகித்து கொண்டுதான் நாங்கள் இருக்கின்றோம்.

சாஜித் காக்கா சொன்ன மாதிரி அதிக விபத்துக்கள் நடப்பதும் இங்கு தான் . பாதிக்க பட்டவர்களுக்கு தான் அதனுடைய வலியும் , வேதனைகளும் தெரியும் .

எல் .எப் ரோட்டை இந்த சந்தைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை . கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆகும் என்பது தாங்கள் அறிந்ததே ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15510

அன்புள்ள முத்துவாப்பா தம்பி அவர்களுக்கு!

நான் கே டி எம் தெருவில்தான் வசிக்கின்றேன். இங்குதான் கத்தரிக்காய் முத்தி முப்பது வருஷம் ஆகிவிட்டது. உங்கள் தெரு கத்தரிக்காய் இப்போதுதான் செடியில் பூபூக்க தொடங்கியிருகின்றது! அது முத்தி கே டி எம் தெரு லெவெலுக்கு வர இன்னும் முப்பது வருஷம் ஆகும்!

ஊரில் இருக்கும் நேரங்களில், நான் தினமும் துளிர் வரை நடப்பது வழக்கம் என்பதால் எனக்கும் தெரியும்! உங்கள் காக்கா கூட இதை உணர்ந்துதான் வரும் முன் காப்போம் என்று சொல்கின்றார்! நீங்கள் இப்போது உங்கள் ரோட்டை இழுப்பது விவகாரத்தை கிடப்பில் போடத்தான் உதவும் என்பதால்தான் நான் அதனை குறிப்பிட்டேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை!

"ஒருவழி" இனியும் உருவாகவிட்டால் நாங்களும் அங்குதான் வரவேண்டியிருக்கும். துளிர் வழி புது ரோடு திட்டம் நம்மை விட்டு தூரம் போய் கொண்டிருக்கின்றது. அடைக்கலபுரம் வழியில் அடையாலமெல்லாம் போட்டுவிட்டதாக கேள்விப்படுகின்றோம்.

இந்த நிலையில் அதனை எதிர்பார்த்து உள்ளூரில் "ஒருவழி"யை விட்டு விட்டால், பின்னர் வேறு ஒரு வழியும் பிறக்காது! அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்!

நாம் அந்த வழியையும் முயற்சிக்கலாம். அது வரை இந்த வழியையும் பயன் படுத்தலாம். உங்கள் கத்தரிக்காய் முத்தும் முன் வேறு ஒரு வழியும் பிறக்காமலா போய் விடும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved