Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:25:27 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7790
#KOTW7790
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 31, 2011
ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5234 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்து வந்தனர்.

முன்னதாக, காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக - இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள், எடுக்கப்பட்ட அளவீடுகள் குறித்து அது தொடர்பான அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கலந்தாலோசனை செய்தார். முடிவில், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்காக பரிசீலிக்கப்படும் இடங்களை தான் நேரில் பார்வையிட்ட பின்னர் இறுதி முடிவு செய்யலாம் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், 30.12.2011 அன்று (நேற்று) நண்பகல் 12.00 மணியளவில், ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் வழித்தடங்களை நேரில் பார்வையிடுவதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் காயல்பட்டினம் வந்தார். அவரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் வரவேற்றனர்.

துவக்கமாக, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலிருந்தவாறு, ஒருவழிப்பாதை வழித்தடங்கள் குறித்து, கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி, வாகன போக்குவரத்து ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கினர்.





பின்னர் அங்கிருந்து, காயல்பட்டினம் பிரதான வீதி, கே.டி.எம். தெரு, தாயிம்பள்ளி குறுக்குச் சாலை மூப்பனார் ஓடை வழியாக பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், விசாலாட்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.



பெரிய நெசவுத் தெரு பகுதிக்கு அவர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து, பெரிய நெசவுத்தெரு அல்லாத மாற்று வழித்தடத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து தெரிவித்த விளக்கங்களை அவர் கவனமாகக் கேட்டறிந்தார்.





மதியம் 01.15 மணியளவில் ஆய்வுப்பணிகளை நிறைவு செய்துவிட்டு, தூத்துக்குடிக்கு கிளம்பிச் சென்றார்.

திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் வைகுண்டம், ஸ்வாமிதாஸ், சாலை ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [31 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15310

எவன் எப்படி செத்தாலும் பரவா இல்லை, தன தெரு மக்கள் மட்டும் நிம்மதி ஆக இருக்க வேண்டும் , ஆனால் தங்களும், பொது சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற நெசவு தெரு ஜமாதாரின், குறுகிய மனப்பான்மை இன்னும் மாறவில்லை என்பதை தெள்ள தெர்ரிவாக தெரிகிறது..

இதற்க்கு முன்னின்று, பல பொது சேவைகளை முன்னர் செய்த இப்னு சௌத் அவர்கள் செயல்படுத்தியதை பார்க்கும்போது, அவர்கள் மீது இருந்த நல்ல அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும் என்றே தோன்றுகிறது..

தனக்கு விரும்புவதையே தன சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் முழு முஹ்மின் ஆக முடியாது என்ற நபிமொழியை இவர்கள் மறந்து விட்டார்களா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by OMAR A-LATIF (KAYAL) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15322

IT IS AN AGGREESIVE WAY TO CONFUSE THE COLLECTOR FOR THE useless ALTERNATE WAY BY A GENTLEMAN from neasavu strret . it shows their selfishness and not caring for the welfare of the town .SINCE IT WAS DECIDED LONG TIME BACK TO ROUTE THROUGH periya nesavu street which wide and have spacious for the highway . it is really needed for the one-way . at any cost KTM street people should not allow to use 2 way on the same street , other wise it will lead for protest


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [01 January 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15326

This is the final stage on the one way traffic and it is already been decided

The district collector is the final authority in the district administrations & his recommendations will talk anywhere & let us hope.

இந்த தீர்ப்பு உங்களுக்கு எதிராக இருந்தால், அதை எதிர்க்க மாட்டோம் என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்வார்களா? கொள்கைவாதிகள் இல்லை மீண்டும் கூடுவார்களா?....

இறைவன் கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது அவன் தடுக்க நினைத்ததை யாரும் கொடுக்க முடியாது.

மானுக்கும், புலிக்கும் நடக்கும் ரேசில் (ஓட்டத்தில்) சில நேரங்களில் புலி வென்றுவிடுகிறது, பலநேரங்களில் மான் வென்றுவிடுகிறது ஏன் என்றால்- புலி ஓடுவது உணவுக்காக -மான் ஓடுவது உயிரை காப்பாற்றிக்கொள்ள....

மான் என்ற நாங்களா இல்லை புலியா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Abdul Kader (Makkah) [01 January 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 15330

ஒரு வழி பாதை பிரச்னை காலம் காலமாக நமதூருக்கே இருந்து வரும் ஒரு சாபக்கேடு, இதற்க்கு இடையில் பெரிய நெசவு தெரு சஹோதரர்களின் இந்த பிடிவாத போக்கு நம் நகருக்கு ஏற்படும் வளர்சிக்கு ஒரு முட்டுகட்டையாக இருந்துவருகிறது, எனவே காலம் தாழ்தாமல் துரித நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதஹா அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, இதற்கு மேலும் இவர்கள் இதனை தொடர்ந்தால் சட்டம் அதன் உரிய கடமையை செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [01 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15334

நாளுக்கு நாள் நமதூரில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் ஏற்படும் சிரமம் சொல்லவொண்னாது.இடைஞ்சல் மிக்க இச் சூழ்நிலை காரணமாக அநேகப் பேருந்துகள் அடைக்கலாபுரம் வழியாகச் செல்வதாக செவிவழிச் செய்தி வேறு வருகின்றது.ஒரு வழிப்பாதையின் அவசியம் இன்றியமையாதது.எனவே சிலரது வசதிக்காக பலருக்கு துன்பம் ஏற்படுத்திக் கொண்டு பழய பஞாங்கம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!!உடனே ஆக வேண்டியதைச் செய்தால்தான் போக்குவரத்து நெரிசலில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்!

“மயிலே!மயிலேன்னா அது இறகு போடாது” என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

-ராபியா மணாளன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருவழிப்பாதைக்கு பூந்தோட்டம் வழி பரிசீலனை ..
posted by V D SADAK THAMBY (Hong Kong) [01 January 2012]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 15338

"மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வை முடித்த சென்ற பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவழிப்பாதை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுவழியான பூந்தோட்டம் வழியாக செல்லும் பாதையை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஸ் குமார் அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது." --------------------- இது சகோதர வலைதளத்தில் குறிப்பிட்ட செய்தி.

இதைப்பற்றி யாரும் இங்கு குறிப்பிட வில்லை.

பூந்தோட்டிம் வழிதான் சச்சரவு இல்லாத வழி.

முதலில் ஒருவழிப்பாதையாக துவக்கி, படிப்படியாக விரிவுபடுத்தி , நாள்வழிசாலையாக மாற்றம் பெற வேண்டும்.

துளிர் பள்ளி அருகில் ஒரு தாற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி , படிப்படியாக , புது பஸ் நிலையமும் ஏற்படுத்த வேண்டியதுதான்.

அப்போதுதான் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்.

KTM தெரு மற்றும் பெரிய நெசவு தெரு வாசிகளுக்கும் தொல்லை இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [01 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15341

பொது நல ஆர்வலர்களான தம்பி ஹைதர் அலி, இப்னு சவூத் போன்றவர்களே இந்த திட்டம் எப்படியும் "இலகுவான வழியான அவர்கள் தெருவழியே நிறைவேறக்கூடாது" என செயல் படும் போது என்ன சொல்வது?

இத்திட்டத்திற்கு சிறிதும் வசதியற்ற அடுத்தவன் தெரு எப்பாடும் படட்டும் என்று வரைபடம் கொடுதுதுள்ள இவர்கள் சிந்தனைக்கு என்ன சொல்வது?

இவர்களை போல் நம் முன்னோர்களான சீதேவிகள் நினைத்திருந்தால்!

இன்று நாம் வீட்டில் இருந்தபடி குடிநீரை பெற முடியாது, நம் சொந்த ஊரிலேயே ஆரம்ப மற்றும் உயர் கல்வியினை நம் மக்கள் பெற முடியாது, குறிப்பாக பேருந்து ஊருக்குள்ளேயே வந்திருக்காது இப்படி பல ..............கோடிட்டு காட்ட முடியும்.

ஊரின் முன்னேற்றத்தை நாடும் நம் பெரியவர்கள் இனியும் தாமதிக்காமல் செயல் பட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by MAK.JAINULABDEEN,,joint secretery,DMDK kayalpatnam town (kayalpatnam) [01 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15345

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்க்காக பல வருடங்களாக நடந்து வரும் முயற்ச்சியில்,ஒரு வழிப்பாதைக்கான ஒட்டுமொத்த காயல்பட்டணம் மக்களில் 98 சதவீதம் மக்களும் சொல்லும் பெரிய நெசவு தெரு பாதைதான் சரியான தீர்வு.ஏற்கனவே ஒரு மாத காலம் அந்த வழியாக போக்குவரத்து நடைபெறவும் செய்தது.

கூலக்கடை பஜார் ரோட்டை அகலப் படுத்தும் பனி நடக்கும் போது பெரிய நெசவு தெரு வழியாக சென்ற போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அதற்கிடையில் பொது நலனில் அக்கறையுள்ள ஜனாப் இப்னு சஊத் அவர்கள் இந்த வழியாக பஸ் போக்குவரத்து செல்லக் கூடாது என்று மதுரை உயர் நீதி மன்றத்தில் இடைக் கால தடை கேட்டு மனு செய்திருந்தார்.

அந்த மனுவை மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சில தினங்களுக்கு முன் ஒரு வழிப் பாதை ஆய்வு செய்ய திருச்செந்தூர் கோட்டாட்சியர் பொற்கொடி மேடம் அவர்கள்,நகராட்சியில் உடனே தீருமானம் போட்டு அனுப்பி தாருங்கள்.என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.அவர்களுடன் வந்திருந்த திருச்செந்தூர் DSP ஜான சேகரன் அவர்களும் உடனே தீர்மானம் போட்டு அனுப்பி மட்டும் தாருங்கள்,இரண்டு நாளில் ஒரு வழிப்பாதை வருவதற்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுதான் சென்றார்கள்.

அன்றைய தினம் அநேகமான உறுப்பினர்களும் உடன் இருந்தார்கள்.ஆனால் நகராட்சி துணை தலைவராக இருக்கும் அந்த வார்டை சேர்ந்த உறுப்பினர் இல்லை.தலைவி சென்னை சென்று இருந்தார்கள்.இது நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இது வரை அனுப்பியதாக தெரியவில்லை.கடந்த நகரமன்றத்தில் போட்ட தீர்மானத்தையும் அவர்களால் இதுவரை அனுப்ப முடியவில்லை.ஆதலால் இந்த விசயத்தில் இரட்டை வேடம் போடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும்.

மேலும்,ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் பொடுபோக்காக இருக்கும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அனைவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.நன்றி.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [01 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15351

தம்பி ஜைனுலாப்தீன் சொன்னதுபோல் சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள் அதுதான் எனக்கு கிடைத்திருக்கும் தகவல்படி உண்மையாக தெரிகிறது.

அவர்கள் யார் என்பதை விரைவில் அடையாளம் காட்டும் களத்தில் குதித்துவிட்டேன். அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எந்த செல்வாக்குள்ளவராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அவர்களின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு அடயாளம் காட்ட தயாராகிவிட்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவன்தான் இந்த ஆதம் சுல்தான்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by abbas saibudeen (kayalpatnam) [01 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15357

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர் ஜைனுலாப்தீன் அவர்கள் கருத்து விபரம் தெரியாமல் தந்துள்ளார். அதற்கான ஆதாரம் இருந்தால் தரவும்.

எங்கள் ஜமாத்தில் யுள்ள ஒரு நபரின் பெயரில் அது சம்பந்தமாக கேஸ் கொடுக்கப்பட்டு முறையான ஆர்டர் இ மதுரை ஹை கோர்ட்டில் பெற்றோம்.

தாங்களின் தகவல் வுன்மைக்கு புறம்பானதே....... அறியாததை பரப்பாதிர்கள். வுன்மையின் பக்கம் வழி நில்லுங்கள். நபிமொழிகளின் கண்ணியத்தை கெடுககாதிர்கள், இந்த ஒன் வே மேட்டர்காக நபிமொழிகளை வுதரனபடுதாதிர்கள் . வுன்மையான ரெகார்ட் இருந்தால் கருத்து பரிமாறிக்குல்லுங்கள். வருங்காலத்துக்கு அது தான் கைகுடுக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. sensitive issue
posted by Noohu T (மா பா ) [01 January 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 15359

எல்லோலோருக்கும் நோகாமல் நொங்கு தின்ன ஆசைதான். எந்த மகானும் தங்கள் தெருவில் பேருந்து செல்வதை விரும்ப மாட்டார்கள்.

கோமான்தெரு கந்தூரி சேதிக்கு வாசகர் கருத்தை block பண்ணியது போல், இந்த செய்தியும் block பண்ணவேண்டும். இப்படி இங்கு கருத்து போர் நடத்துவதும், பாட்சானை (cockroach) தூக்கி பனியனில் விடுவதும் ஒனுதே.

வஸ்ஸலாம்
p.s . Lets start from very this comment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Cnash (Makkah ) [01 January 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15361

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த சமீபத்திய செயல்பாடுகள் மூலம் இந்த ஒரு வழிபாதை பிரச்னை சிலரை அடையாளம் காண பல வழிகளை தந்து இருக்கிறது!!

என்ன ஒரு சமூக சிந்தனை, Dr .கிஜார் அவர்களே! நாமும், நம் முன்னோர்களும், நம் ஜமாத்தினர்களும் தான் ஊர்நலம், ஊர்மக்கள் நலம், என்று பரந்த மனதோடு பேசிக்கொண்டு இருப்பதையெல்லாம் இழந்து கொண்டு வருகிறோம்.. நம் தலைமுறையினர் இன்னும் அப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது ... மற்றவர்கள் செய்யும் செயல்களை, பிடிவாததையும் பார்க்கும் நம் தலைமுறையினரும் இனி நாளை சகித்துகொண்டே இருப்பார்கள் என்று நாம் சொல்ல முடிமா? நேற்று நடைபெற்ற தாயும் பள்ளி ஜமாத் கூட்டத்தின் நெசவு தெருவினர் போல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், அனுமதிக்க மாட்டோம் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றாமல் போனது நமது பெருந்தன்மை நம் ஊர் நம் மீது நமக்குள்ள அக்கறை!! இதுவே சிலருக்கு நம்மை இளிச்சவாயர்களாக நினைக்க வைக்குமோ என்ற அச்சமும் வருகிறது.

சுல்தான் காக்கா சொல்லுவதை போல இந்த பிரச்சனையின் இரட்டை வேஷம் போடுவோரின் முகத்திரை கண்டிப்பாக கிழிக்கப்படவேண்டும். நகர்மன்றம் உண்மையிலே நல்லது செய்யநாடி இருந்தால் எல்லோருடைய ஒருமித்த கருத்துபடி ஏற்புடைய இலகுவான பாதையான இந்த ஒருவழிப்பாதையை உடனடியாக அமுல்படுத்தும் திட்டத்திற்கு சுயநலகாரர்களின் சொற்களை புறந்தள்ளிவிட்டு மாவட்ட ஆட்சியர் இடத்தில் நிறைவேற்ற நகர்மன்றத்தில் தீர்மானம் போடவேண்டும். இல்லையென்றால் இது நகரமன்றத்தின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது என்று நாளைய தலைமுறை பலிக்கும்.

துணைத்தலைவர் இரு தெருவுக்கும் பொதுவான கவுன்சிலர்... உண்மைக்கும் நன்மைக்கும் மட்டுமே பொதுவானவராக இருக்கவேண்டும்.. ஓட்டுபோட்ட தெருவுக்கும் அவர்கள் செய்யும் அநீத செயலுக்கும் பொதுவானவராக இருக்க தேவையில்லை!!

இது ஊர் நன்மைக்கு கொண்டு வரும் திட்டம், விரல்விட்டு என்னும் மனிதருக்கு மட்டும் நன்மை தருவதற்கான திட்டம் இல்லை. இதற்கு துணை போனால் கேரளாவில் ஒட்டு அரசியலுக்காக முல்லை பெரியாறு அணையை வைத்து ஒட்டு பொறுக்கும் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் அரசில்வாதிக்கும் உங்களுக்கும் எந்த ஒரு வேறுபாடையும் நாங்கள் பார்க்க முடியாது.

தம்பி ஜைனுலாப்தீன்!! உங்களை போன்ற காக்கும்கரங்களுக்கு சொந்தகாரர்கள் இது போன்ற ஊர் நன்மையை சிதைக்கும் கரங்களை ஒடுக்கும் கரங்களாக வர வேண்டும்!! அதற்கு எங்களை போன்றோரின் எண்ணற்ற கரங்கள் என்றும் துணைவரும்.

சதக் தம்பி காக்கா, நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வரும் பூந்தோட்டம் போன்ற மாற்றுவழிக்கு இந்த நெசவு தெருகாரர்கள் போல அவர்களும் அவர்கள் குழந்தைகள், மின்கம்பிகள், ஆடு, மாடு என்று காரணம் காட்டி எதிர்க்கமாட்டார்கள் என்று உத்திரவாதம் தரமுடிமா? நம்மவர்களே இப்படி பேசும்போது அவர்களிடம் யார் போய் பேசுவது? சொல்ல முடியாது அவர்களிடம் மார்க்கம் இல்லாவிட்டாலும் வழி கொடுக்க மனம் இருக்கும். அப்படி ஒரு திட்டம் வந்தால் அப்பாட என்று நாங்கள்தான் முதலில் நிம்மதி அடைவோம்.. அப்போது தெரியும் உங்களுக்கு KMT தெரு வாசிகள் செய்த தியாகமும் நன்மையையும்.

சகோ. அப்பாஸ், நபிமொழி இதற்குதான் பேசணும் என்றோ எந்த பிரச்சனைக்கு பேச கூடாது என்றோ மார்க்கம் எந்த ஒரு அளவைவும் நமக்கு தரவில்லை... மாறாக எல்லா பிரச்சனையிலும் நாம் இறைவனின் அருள்மொழியையும், இறைவனின் அருள்மொழியையும் சார்ந்தே வாழ்கிறோம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. :ஒருவழிப்பாதைக்கு நபி வழியில் பரிசீலிக...
posted by T,M,RAHMATHHULLAH 25-12-2011 (K) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15362

இப்படித்தான்1923 ல் ? நமதூருக்கு ரயில் வரும்போது எதிர்த்தார்களாம், இதுனால் நாம் படும் பாடு இன்று நமக்கு தெரியும்.ஆருமுகநேரிக்கி 7 முதல் 100 ரூபாகுடுத்து ரைல் ஏருகிரோம்.

ASAA AN தக்ர ஊ ஷைஅன் வஹுவ க்கைருன் லகும் என்ற திரு மறை வசனத்தையும் முறைப்படி மஷஊரா செய்தவன் மன சஞ்சலம் அடையமாட்டான் என்பது நபி வழி என்பதையும் மனதில் வைத்து முறையான மஷூரா செய்வதை எப்படி என நெசவு .தெரு ஹாஜி அஹ்மது sAALIH ஹாஜி அப்துர்ராசிக் ஆகியவர் களிடம் கேளுங்கள். மேற்படி தெருவும் வேறு எந்த தெருவும் அரசாங்கத்துக்கு சொந்தம் நகராட்சிக்கு ஆட்சி உரிமை .ஊர்,உலக மக்களுக்கு அனுபவிக்கும் உரிமை,காயலப்ட்டனத்துக்கு பஸ் அனுப்புவதும் அரசாங்கத்துக்கும பஸ் காரனுக்கும் உரிமை.எல்லாத்தையும் னடத்தி அழகு பார்ப்பது ஆண்டவனுக்கு உரிமை..இஸ்லாமிய "மூளையோடு தலை"வருக்கு கட்டுபடுவது நமக்கு கடமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சமூக சேவகர்கள் எங்கே?
posted by S.A.Muhammad Ali (Dubai) [02 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15366

ஊரில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் இதை பற்றி ஒரு இயக்கம் கூட வாய் திறக்க வில்லை. நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி இருக்கிறார்களா?

கலெக்டர் நம் ஊருக்கு வந்த சமயம் அவரிடம் நேரிடையாக தாயிம்பள்ளி ஜமாதார்களும் முறையிட்டு இருக்கலாம்.

தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

கலெக்டர் இடம் கொடுக்கும் விண்ணப்பத்தில் ஊரில் உள்ள அணைத்து மக்களிடத்திலும் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்தால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும். ஐக்கிய ஜமாதிற்கும் ஒரு விண்ணப்பம் கொடுங்கள். ஊரில் இருக்கும் சமுதாய அமைப்புகள் அனேகமாக இதற்கு ஆதரவு தருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

நகராட்சி மன்றத்திலும் ஒரு மனு கொடுக்கவும். அவர்களின் தீர்மானம் என்ன என்று அறிந்து கொள்ளவும்.

தற்போது உள்ள வாகன நெருக்கடியில் விபத்துகள் ஏற்பட அநேக வாய்ப்புகள் உள்ளன. ஏதாவது பெரிய விபத்து ஏற்பட்டு அதன் பின்பு தான் நாங்கள் முடிவு எடுப்போம் என்று காத்து இருக்கிறார்களா?

பூந்தோட்டம், ரத்னாபுரி வழியாக போக்குவரத்து ஆரம்பித்தால் கூடிய விரைவில் நம் ஊருக்கு போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என சொல்லி கொள்கிறேன். இரவு நேரங்களில் நம் பெண்கள் தொலைவான இடத்தில இறங்கி ஊருக்குள் வர வேண்டும்.

தயவு செய்து KTM தெருவிற்கு மட்டும் சொந்தமான பிரச்னை என்று பார்க்க வேண்டாம். இது நம் ஊரின் ஒட்டு மொத்த மக்களின் பிரச்சனை. எனவே இதில் அனைத்து அமைப்புகளும் ஒன்று கூடி முடிவு எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.

S.A.Muhammad Ali (Velli)

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Javed Nazeem (Chennai) [02 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15371

சகோதரர் சதக் அவர்களே, உங்கள் திட்டம் தொலைநோக்கு பார்வையுடையது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதனால் நன்மைகளை விட சிரமங்களே அதிகம். நகருக்கு வெளியேதான் ஏர்போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பேருந்துக்களை ஊருக்கு வெளியேதான் இயக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்று தெரியவில்லை.

அப்படி செய்தால் குறைந்த பட்சம் பேருந்து நிலையம் செல்வதற்காக மினி பஸ்கள் அனைத்து அல்லது பெரும்பாலான தெருக்களுக்கு செல்லும் படி செய்ய வேண்டும். இப்போழுது நாம் காணும் காட்சிகளை வைத்துப் பார்க்கையில் அவை சாத்தியம்தானா என்பதை சிந்தித்துப் பாருங்கள். அல்லது ஆட்டோ fபேர்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும். இப்படி நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்.

இன்று வரை தாங்கள் அனுபவித்து வரும் சிரமங்களைப் பற்றி KTM தெரு வாசிகள் இப்படி உரக்கச் சொன்னது இல்லை. அலியார் தெரு மட்டும் புவி இயல் அடிப்படையிலும் சற்று விசாலமாகவும் அமைந்திருந்தால் எங்கள் ஜமா-அத்திற்குள்ளேயே இது தீர்க்கபட்டிருக்கும். சகோதர ஜமா-அத்தினர் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு மனசாட்சியுடனும் இறை அச்சத்துடனும் சிந்திக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இதெல்லாம் எங்களிடம் இல்லையா என்று ஹைதர் பாயோ கிதுறு மச்சானோ சண்டைக்கு வர வேண்டாம். அனைத்து நிலைகளிலும் இவை வேண்டும், அதைதான் குறிப்பிடுகின்றேனே அல்லாது இன்னுமொரு விவாதத்தை துவக்க இதைப் பதியவில்லை.

இறுதி முடிவு எடுக்கபட்டால் அது நமக்கு உடன்பாடில்லாத நிலையிலும் பொருந்திக் கொள்வதே சரியாகும். நீதி மன்றங்களை அணுகுவது தவறான முன்னுதாரணத்தை தருவதோடு தொடர்ச்சியான வருத்தமான சூழ்நிலைக்கே வழி வகுக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [02 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15375

நண்பர் அலி சொன்னது மிகவும் சரியானது. கன்டிப்பாக பூந்தோட்டம் வழி நடை முறைக்கு வந்தால் ஓடக்கரை வளைவில் ஒரு பஸ் ஸ்டாப் வரும், அதனை தென், கிழக்கு (நெசவு தெரு உட்பட) காயல் மக்கள் உபயோகிப்பார்கள் .பெண்களுக்கு குறிப்பாக இரவு நேரங்களில் கன்டிப்பாக பாதுகாப்பாக இருக்காது. பிறகு இனி அனைவரும் நம்ம ரயில்வே ஸ்டேஷன் போர மாதிரிதான் பஸ் ஸ்டான்டுக்கும் போகனும்.

சதக் தம்பி காகா ... அடிக்கடி பூந்தோட்டம் பாதைதான் சரியானது ,லேன்ட் மார்க்கெட் அதிகமாகும், ஊர் விரிவடயும்னு சொல்றாங்க!!! அவங்களுக்கு அந்த ஏரியால நிலம் இருப்பது போலும் !!! ரோடு, பஸ் ஸ்டாண்டு வச்சிதான் ஊர் விரிவடைனும்னு இல்லை, நம்ம ஊரு கல்ச்சருக்கு தன்னால விரிவாஇடும்.

ஏற்கனவே நேசவுத்று மக்கள் இன்னும் ஊர்நலன் புரியாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது, இன்னும் இப்படி ஒரு சிலர் அவர்களை ஊக்குவிப்பது அவர்கள் செய்வது சரிதான் என்று நினைக்க தோன்றும். நாம் அனைவரும் ஒரே வழி இல் இருந்தால் அவர்கள் வழி மாறி போகாமல் சரியான வழி இல் வந்து நமது ஊருக்கு நல் வழி என்னி ஒரு நல்ல ஒரு வழிப்பாதைக்கு வழி வகுக்க உதவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஒருவழிப்பாதைக்கு பதிலாக மாற்று வழிப்பாதையே சிறந்தது
posted by V D SADAK THAMBY (HONG KONG) [02 January 2012]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 15380

ஓடக்கரை-பூந்தோட்டம் -ரத்தினாபுரி பாதையை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு மேலும் ஒரு நன்மை விழையவிருக்கிறது..

சென்னை-நாகப்பட்டினம் -தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி யின் ECR தேசிய நெடுஞ்சாலை பணிகள் அநேகமாக முடிவடையும் நிலையில் உள்ளது.

இதன் கடைசி பகுதியாகிய தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி பகுதி மட்டுமே விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு விரிவு படுத்தும்போது இப்பாதை காயல்பட்டினம் வழியாகவே செல்லும்/செல்லவேண்டும்.

நமதூரின் மெயின் ரோடு-KTM தெரு பாதை ECR பாதைக்கு ஏற்புடையதல்ல. பெரிய நெசவு தெரு ஒருவழிப்பாதையும் இதற்க்கு ஏற்புடையதில்லை.

ECR தேசிய நெடுஞ்சாலைக்கு நாம் இடம் கொடுக்கவில்லை என்றால், இந்த விரைவுபாதை அடைக்கலாபுரம் வழியாக செல்லும் வாய்ப்புள்ளது.

ஓடக்கரை-பூந்தோட்டம் -ரத்தினாபுரி பாதையை நாம் தேர்தெடுத்தால் நமக்கு ஒருவழிப்பாதை பிரச்னையும் தீரும். ECR தேசியநெடுஞ்சாலையும் இந்த வழியாக செல்லும் வாய்ப்பு ஏற்படும். இந்த ஓடக்கரை-பூந்தோட்டம் -ரத்தினாபுரி பாதை தற்போதிய வடிவில் இல்லாமல் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் குறுகிய வளைவு ஏதுமில்லாமல் எளிதான போக்குவரத்திற்கு ஏற்றார்போல அமைக்கப்பட வேண்டும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.

ரதினாபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம்.

இந்த புதிய பேருந்து நிலையம் எளிதாக வந்து செல்ல சுற்றுவட்டப்பாதையில் MINI பஸ்சை இயக்கலாம். இவைகள் யாவும் படிப்படியாக வரும். எல்லா காலமும் ஆட்டோக்களை நம்பி இருக்க வேண்டியதில்லை. பயணிகளின் வரவேற்ப்பை பொறுத்து போக்குவரத்தி வசதிகள் பெருகும்.

இவற்றிற்கு நாம் இடம்கொடுக்கவில்லை எனில் , அனைத்து பஸ்களும் ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லும்.

இரவு நேரங்களில் திருச்செந்தூர் அல்லது ஆறுமுகநேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?

அல்லது

ரத்தின்னாபுரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?

இரண்டில் எது சிறந்தது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் ஊர் விரிவடையும். புதிய மாற்றுவழிப் பாதையின் அருகாமையிலுள்ள நிலங்கள் ஏற்றம் பெரும்.

குறுகியகால நன்மைகளைவிட தொலைநோக்கு திட்டங்களே சிறந்தது . இந்த திட்டத்திற்கு அநேகமாக எதிர்ப்பு எதுவும் இருக்காது.

இதுவே அதிக நன்மை பயக்கும் திட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [02 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15382

சகோதரர் V D SADAK THAMBY அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம்.

நான் ஆத்தூர் செல்லவேண்டும், நான் எவ்வாறு செல்வது?

ரதினபுரியில் இருந்து ஆத்தூர் செல்ல ஏழு ருபாய், ஆனால் எங்கள் தெரு (தைக்கா தெரு)இல் இருந்து ரத்தின புரிக்கு ஆட்டோவில் செல்ல நூறு ரூபாய், அக, நான் ஆத்தூர் சென்று வர இருநூற்று பதினான்கு ரூபாய் செலவு செய்ய வேண்டும். (Rs. 214.00).

சிந்தித்து செயல் படுங்கள் சகோதரர் அவர்களே, நாங்கள் ஒன்றும் மன்னர் பரம்பரை கிடையாது.

======உங்களின் கேள்வி அருமை?======
இரவு நேரங்களில் திருச்செந்தூர் அல்லது ஆறுமுகநேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?
அல்லது
ரத்தின்னாபுரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?

இரண்டில் எது சிறந்தது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

====உங்கள் கேள்விக்கு அனைத்து காயல் மக்களின் பதில்======
>>>>> எல்லாவற்றையும் விட எளிது காயல்பட்டினத்தில் இறங்கி நடந்து செல்வதுதான்<<<<<<<


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by hasan (khobar) [02 January 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15383

ஓடக்கரை - பூந்தோட்டம் - ரத்தினாபுரி பாதை ஒரு வழி பாதையா இரு வழி பாதையா? சகோதரர் சதக் தம்பி அவர்கள் முதலில் பதில் கூறவும். நீங்கள் சொல்லும் பயன் எல்லாம் இரு வழி பாதைக்குத்தான்.

1923லே ரயில் ஊருக்குள்ளே வரக்கூடாது. 2012லே பஸ் ஊருக்குள்ளே வரக்கூடாது. Open Up Guys... இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் ஒரு வழிப்பாதை வரத்தான் போகிறது. அதுவும் அனைவரும் விரும்பும் எளிதான, ஊருக்குள்ளே உள்ள அகலமான வழியில்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by MAK. JAINULABDEEN, ,joint secretery,DMDK kayalpatnam town (kayalpatnam) [02 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15387

அஸ்ஸலாமு அழைக்கும். சகோதரர் சதக் தம்பி அவர்கள் சொல்வது போல் நமதூரில் ECR ரோடு KTM தெரு வழியாகவோ நெசவு தெரு வழியாகவோ வரவே வராது. மாறாக, நமதூர் சாஹுபுரத்தில்( DCW )அருகில் இருந்து பைப்பாஸ் ரோடு வழியாக வந்து ரத்னாபுரி பெட்ரோல் பல்கிற்கு மேற்கே உள்ள ரோடு வழியாகவோ, அல்லது பைப்பாஸ் ரோடிலிருந்து சர்ச் வழியாக வந்து துளிர் ஸ்கூலுக்கு அருகிலோடயோ தான் நான் கேள்விப் பட்டவரை ECR ரோடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது கூட சில அரசியல்வாதிகளின் சுயநலனுக்காக அம்மன்புரம், அடைகலாபுரம் வழியாக மாற்றி விட்டு முற்றிலும் நமதூரை புறக்கனிக்கப் போகதாகவும் தகவல்கள் வருகிறது.

நமதூர் வழியாக கொண்டு வர தே.மு.தி.க.முழு முயற்ச்சி எடுத்து வருகிறது. அதனால் நதூரின் உள்ளில் ஒரு வழிப் பாதை கொண்டு வருவதற்கும் ECR ரோடு வருவதற்கும் சம்பந்தம் இல்லை. அதை இதில் கலக்காமல் தயவு செய்து அனைத்து ஊர் மக்களின் நலனிற்க்காக மகான் ஹாபிழ் அமீர் (ஒலி) அப்பா அவர்களின் பெயரைத் தாங்கி நிற்கும் ஜமாத்தார்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறுத்துகிறேன். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:மாற்றுவழிப்பதை - விளக்கம்
posted by V D SADAK THAMBY (HONG KONG) [02 January 2012]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 15389

Ref: Comment Reference Number: 15382 / 15383

நல்ல கேள்விதான்.

1 . மினி பஸ்களை ரத்னாபுரி-மெயின் ரோடு-ஓடக்கரை சுற்றுவட்ட பாதையில் இயக்கலாம். மினி பஸ்களை ரத்னாபுரி-ஓடக்கரை மெயின் ரோடு-சுற்றுவட்ட பாதையிலும் இயக்கலாம். இதன் மூலம் எந்த இடத்திலும் ஏறி எந்த இடத்திலும் இறங்கிக்கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் பஸ்ஸில் செல்ல முடியும். .ஏனையோர் ஆட்டோவில் செல்லலாம். .

2 . தற்போதுள்ள பாதையில் குறுகிய தூர( நம் தாலுகா அளவிலான) பஸ்களை மட்டும் / மற்றும் காயல்பட்டணம் வரும் தனியார் வாகனங்களும் இருவழி போகுவரதாக வழக்கம்போல பயன்படுத்தலாம்.

புதிய மாற்று வழிப்பாதையை நீண்டதூர பஸ்களும் காயல்பட்டனம் வர தேவையில்லாத இதர கார் & பஸ்களும் செல்வதற்கு பயன்படுத்தலாம்.

இதன்மூலம் நம் ஊரில் வாகன போக்குவரத்து நெருக்கடி குறையும்.

வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் (நம் ஊர் போன்றதுதான்) என்ற ஊரில் இதைபோன்றுதான் நடைமுறை உள்ளது.

மாற்றுவழிசாலை முதலில் இருவழி போக்குவரத்தாக தொடங்கி அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்றார்போல நால்வழி போக்குவரத்து செல்லும் விதமாக அமைக்கப்பட வேண்டும். மாற்றுவழிசாலை ஏற்படுத்துவதன் மூலம் ECR தேசிய நெடுஞ்சாலையின் பயனை நாம் அனுபவிக்க முடியும் .

இந்தசாலை அமைக்கபட்டால் முதலில் அது மாநில நெடுஞ்சாலையாக இருந்து , பிறகு ECR தேசிய நெடுஞ்சாலையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

இது நடைமுறைக்கு வந்தால் நமது மெயின் ரோடு-KTM தெரு எப்போதும்போல தொடர்ந்து இருவழிப்பாதையாகவே இருக்க முடியும். வாகன நெருக்கடி இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [02 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15393

Ref: Comment Reference Number: 15389

(1) தமிழகம் முழுவதும் ஓடும் சிற்றுந்துகள், 24x7 முறையில் இயங்கவில்லை. பொதுவாக சிற்றுந்துகள், இருக்கைகள் மற்றும் நிற்பவர்கள் (Sitting & Standin), முழுமை ஆனபிரகுதான் பேருந்தை எடுப்பார்கள். குறைந்த பயணிகளை வைத்து கொண்டு அதிக ட்ரிப் அடிக்க மாட்டார்கள். இந்த யோசனை முற்றிலும் வழக்கத்துக்கு மாற்றமான யோசனை.

(2) ஆருமுகநேரியில் இருந்து ரத்னபுரி வந்து இறங்கும் ஒருவர், அடுத்து சிற்றுந்து வரும் வரை காத்திருக்க வேண்டும், அவ்வாறே சிற்றுந்து வந்தாலும் அது நிரம்பும் வரை காத்திருக்க வேண்டும்? 10 நிமிட பிரயாணம் 30நிமிடங்கள் ஆகும்.

(3) நடைமுறை சாத்தியம் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட (குறிப்பிட்ட ஜமாதார்களை தவிர) ஒருவழி பாதை தான் காயல் நகர கலாச்சாரத்திற்கு உகந்தது.

(4) தனியார் பேருந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை, நகரில் ஓடும தனியார் பேருந்துக்கள் அநேகமாக, அலுவலக/பள்ளி நேரங்களில் தான் இயங்குகின்றன.

(5) குறுகிய தூர( நம் தாலுகா அளவிலான) அரசு பேருந்துக்கள் அனைத்தும் நகருக்குள் வர வாய்ப்பில்லை, ஏனென்றால் அரசு வாகன ஓட்டுனருக்கு, பயணிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருக்கு மாத சம்பளம் சரியாக கிடைத்துவிடும், அவர்களுக்கு கலெக்சன் பற்றி அக்கறை இல்லை, எனவே அரசு பேருந்துகள் நகருக்கு வராது.

(6) அருகில் உள்ள ஆத்தூர், ஆருமுகநேரிக்கு யாரும் இரண்டு பேருந்து ஏறி செல்ல விரும்ப மாட்டார்கள்.

(7) காயல் – ரத்னபுரி – 4.00 ரூபாய். ரத்னபுரி – ஆறுமுகநேரி – 7.00 ரூபாய், ஆகமொத்தத்தில் ஆறுமுகநேரி 4நபர் சென்று வந்தால் 100 ரூபாய்.

(8) இரவு நேரத்தில் சிற்ரூந்துக்கு எங்க போரதம்?

(9) நெசவு தெருவில் ஒருவழி பாதை வேண்டாம் என்று கூறும் சகோதருக்கு, KTM தெருவில் இரு வழி சாலை தொடரவேண்டும் என்று கூற என்ன உரிமை உள்ளது?

(10) அருகில் உள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர் செல்ல ரத்தின புரிக்கு ஆட்டோவில் செல்ல கையாளர்கள் ஒன்றும் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை. அதேநேரம் பிரியான நேரத்தை சுருக்கதான் அனைவரும் விரும்புவார்கள்

(11) இறுதியாக காயல்பட்டினத்திர்க்கு பேருந்து வசதி தேவையே தவிர ரத்தினபுரி, ஓடக்கரைக்கு அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Cnash (Makkah ) [02 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15394

சதக்தம்பி காக்கா!! நாங்க பேசிகிட்டு இருக்கிறது இந்திய அரசாங்கத்தை பற்றியும் நம்ப ஊரு ரோடுகளை பற்றியும்.. ஒரு தெருவுக்கு ரோடு போடுவதுக்குள்ளே 5 வருஷம் ஆகி அடுத்த ஆட்சி வந்துவிடுகிறது.. நீங்க என்னன்னா 4 வழி பாதை, பூந்தோட்டம் வழியே புதுப்பாதை பற்றி எல்லாம் பேசிகிட்டு!! என்னமோ ஹாங்காங் ரேஞ்சிக்கு CAUSEWAY போடலாம் FLYOVER அமைக்கலாம், ECR வரும் அதை எதோட இணைக்கலாம் என்று பேசிட்டு இருக்கீங்க? விட்டா நெசவு தெருவிற்கு SAR அந்தஸ்த்தும் கொடுக்க சொல்லுவீங்கள் போல!

இரவு நேரங்களில் திருச்செந்தூர் அல்லது ஆறுமுகநேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?
அல்லது
ரத்தின்னாபுரியில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊர் வந்து சேர்வது எளிதா?

இதை எல்லாம்விட நெசவுதெரு வழியே ONE -WAY விடுவது ஈசியா என்று கொஞ்சம் நிதானமா யோசிச்சி சொல்லுங்க?

திரும்ப திரும்ப பூந்தோட்டம், மாந்தோட்டம் என்று நடக்காத விஷியத்தை பேசிட்டு இருக்க வேணாம்? வேணும்னா நீங்களும் ஒரு பூந்தோட்டவழி வரைபடம் போட்டு கொடுங்கள் REAL ESTATE காரங்க அதை காட்டி லேன்ட் விலைஏற்ற வசதியா இருக்கும்!!

இப்டியே நாங்களும் பேச ஆரம்பிச்சா கடலுக்கடியில் பாலம் போடலாம், திருசெந்தூரில் இருந்து TUNNEL போடலாம்னு ஐடியா கொடுத்துகிட்டு இருப்போம். நடக்குற விஷயம் எதுவோ நமது அரசுக்கும் நமக்கும் எது சாத்தியமோ அதை மட்டும் பேசுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [02 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15395

ஒரு வழிப்பாதை அவசியம்.....
எங்களது தெருவுக்கும் அந்த ஒருவழிப்பாதை அவசியம்.....

அன்பின் காயல் நகர மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒருவழிப்பாதை குறித்து தங்களின் ஆக்கப்புா்வமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இவ்வளவு நீண்ட விவாதத்திலும் சின்ன நெசவு தெரு என்று ஒன்று இருப்பதை அனைவருமே மறந்து விட்டீர்கள் போலும். தயவு செய்து, காயல் நகரில் ஒரு வழிப்பாதை அமல் செய்யப்பட்டால் எங்கள் தெருவும் ஒரு வழிப்பாதையாக உதவுமாறு அனைத்து சகோதரர்களையும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பல விபத்துகளை எங்கள் தெரு சந்தித்திருப்பது உங்களுக்கு தெரியும். குறைந்த பட்சம் ஒரு வழிப்பாதையாக இருந்தால் பஸ் எந்த பக்கமிருந்து வருகின்றது என்றாவது தெரியும்.. KTM தெரு சகோதரர்கள் சொல்வது உண்மைதான், எல்லா தெருவுக்காரர்களும் தங்கள் தெருவிலே விளையாடியது போன்ற சிறுபிள்ளை பருவத்து அனுபங்களும் எங்களுக்கு இல்லை. பெரிய நெசவுத் தெருவுக்கோ அல்லது அலியார் தெருவுக்குதான் சென்று விளையாட வேண்டும்,

ஏனோ தெரியவில்லை இதுவரை எங்களுடைய சிரமங்கள் யாராலுமே பேசப்படவில்லை. எங்களுடைய சிரமங்கள் சொல்லி மாளாது, தயவு செய்து ஒரு வழிப்பாதை நம்மூருக்கு வந்தால் தயவு செய்து எங்க தெருவையும் ஒருவழிப்பதையாகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,

அன்புடன்
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Haddadh (Thrissur) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15396

அல்லாஹ்வின் சாந்தி சமாதனம் என்ற்றண்டும் உங்கள் எல்லோரின் மீதும் உண்டாகட்டுமாக ஆமீன் !

ஒரு வழி பாதை நெசவு தெரு வழியாகத்தான் போகணும் என்று கங்கணம் கெட்டிகொள்ளும் கே.டி.எம்.தெரு வாசிகளுக்கு என்ன நேர்ந்தது.

மாற்று வழி பாதையை நெசவு ஜமாத் தெளிஉள்ள வரைபடதுட்டன் கலெக்டரிடம் தெளிவு படுத்திவிட்டது இனி தீர்மானிப்பது அவரிடம் . நன்மை திண்மை அனைத்தும் அல்லாஹ் அறிந்தவன்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Kaleel Rahman (Chennai) [02 January 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 15403

சகோ. சதக் தம்பி அவர்கள் கூறியது போல் மாற்றுவழிசாலை முதலில் இருவழி போக்குவரத்தாக தொடங்கி அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்றார்போல நால்வழி போக்குவரத்து செல்லும் விதமாக அமைக்கப்பட வேண்டும். மாற்றுவழிசாலை ஏற்படுத்துவதன் மூலம் ECR தேசிய நெடுஞ்சாலையின் பயனை நாம் அனுபவிக்க முடியும்.

நாம் ECR ரோட்டை பெறுவதற்கு ஓடக்கரை-பூந்தோட்டம் -ரத்தினாபுரி பாதையை தேர்ந்து எடுப்பதை விட்டு விட்டு குருகிய வட்டதிற்குள் "கிணற்று தவளையை போல்" காயல் to ஆத்தூர் சென்று வர பத்து ரூபாய் வருது ஆட்டோக்கு முப்பது ரூபாய் வருது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் இருந்து வரும்போது திருச்சி மதுரை எல்லா ஊருக்கும் பஸ் போகாது. புறவழி சாலையை மட்டும் தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். அது போலதான் நமது ஊருக்கும். இதனால பயன்படுவது நாம்தான். நாம் தவறும் பட்சத்தில் தற்போது பயன்படுத்தும் அடைகலாபுரம் ரோட்டையே அவர்கள் பயன்படுத்துவார்கள்.

எல்லா பேருந்தும் KTM தெரு வழியாக தான் செல்கிறது என்பதற்காக எல்லோரும் அவர்கள் வீட்டு வாசலிலா பஸ் ஏறுகிறார்கள் ?? அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் நடந்தோ அல்லது ஆட்டோவிலோ பஸ் ஸ்டாப் சென்று தானே ஏறுகிறார்கள்??

அதை போலதான் ECR புறவழி சாலை என்பதனையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நெசவு தெரு அல்லாத ஒரு வழி பாதை வருவதின் மூலம் HAT தெரு , சின்ன நெசவு தெரு , KTM தெரு மக்களும் சற்று நிம்மதி அடைவார்கள் என்று இருக்க, ஒரு சிலர் மட்டும் ஏன் நெசவு தெரு வழியாகத்தான் ஒரு வழி பாதை வேண்டும் என்று சொல்வதை தான் சற்றும் ஏற்று கொள்ள முடியவில்லை.

எனக்கு தெரிந்தவரை மெயின் ரோட்டில் தான் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பும் , வாகங்களை நிறுத்தி வைப்பதுமே. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனை அகற்றுவதற்கு நமது நகராட்சியும் எந்த முயற்சியும் எடுப்பது போல் இல்லை.

"திருடனால் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by MAHMOOD HASAN (Mammaash) (QATAR) [02 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15404

சஹோ.. சுல்தான் ...எப்படியோ பெரிய நெசவு தெருவழியாக பஸ் போககூடாது என்பதற்காக புதிய யுக்தியில் இறங்கி இருக்கிறார். எங்க தெருவுக்கும் ஒருவழி பாதை வேனும் ஒரு வழிப்பாதை வேனும்

உங்கள் தெருவில் அசசிடேன்ட் நடந்தது அது யாரும் இல்லை என்று சொல்லவில்லை. அது கவனக்குறைவால் ஏற்பட்டது, அது மாதிரி எனது தெருவான நைனார் தெருவில் கூட ஏற்பட வாய்ப்புள்ளது, அதற்காக நானும் எனது தெருவில் ஒருவழிப்பாதை வேணும்னு சொல்ல முடியாது. எதாவது ஒன்னு சொல்லி நல்லது நடப்பதை தடுக்கணும்னு நேனைகாதீர்கள்.

மேலும் உங்கள தெருவில் வீடுகள் எல்லாம் தற்போது 50 ஆண்டுகளுக்குள் வந்தது அதனால் புதிய ஹை வே பிளானில் கட்ட பட்டது.. அதனால் அகலமான ரோடாக உள்ளதால் நெருக்கடி ktm தெருவில் ,மெயின் ரோடில் உள்ளது போல் இருக்காது.. ktm தெரு ,main ரோடுகள் 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் ஹய் வே வருவதற்கு முன்னாள் உள்ள பிளானில் உள்ள ரோடுகள் என்பதால் குறுகி உள்ளது நீங்கள் கூறுவது போல் ஆக்கிரமிப்பால் அல்ல. உண்மையான ஹய் வே ரோடு மாட்டு குலத்து அருகில் உள்ள ரோடுதான் சில காரனன்களுக்காக ஊர் நலனுக்காக ktm தெரு முன்னோர்கள் இப்படி விவாதம் பன்னாமல் விட்டு கொடுத்ததுதான் இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் ktm தெரு ரோடு. பரம்பரை காயலர்களுக்கு அது தெரியும்.

சஹோ சதக் தம்பி.... நண்பர் cnash, thaika shahib சரியாக சொன்னார்கள்.... நீங்கள் சொவது போல் சொல்லனும்னு நெனச்சா ஒடக்கரைலருந்து பஸ் ஸ்டாண்டுக்கு பாலம் போடலாம் இப்படி நடக்க போகாததை சொல்லிகிட்டே இருக்கலாம். நடப்பதை பத்தி பேசினால் நல்லது,.... think practically....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by அபூபக்கர் சித்திக் (Riyadh, KSA) [02 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15405

அன்பிற்கினிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்),

ஒருவழிபாதைக்காக பெரிய நெசவு தெரு அல்லாது மாற்று வழிப்பாதை இருக்கும் பட்சத்தில் அதற்கே முன்னுரிமை கொடுத்து செயல்முறை படுத்துவதே சகோதரத்துவத்தின் அடையாளமாகும்...

இந்த வலையதலத்தில் சிலர் ஆதால பாதாள சாக்கடை வார்த்தைகளால், வலைத்தளத்தையும், கண்ணியமிக்க பொதுநலமே தன் வாழ்க்கை நெறியாக கொண்டு செயல்படும் நெசவு ஜமாத்தினரையும் இழிவு படுத்தி கொண்டிருக்கிறார்கள் மேலும் ஊர் நன்மையை கருதாதவர்கள் என குற்றமும் சாற்றுகிறார்கள்.

ஊர் நன்மையை கருதுபவர்களாக இருந்ததால் தான் எங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட சின்ன நெசவு தெரு பெருவழிபாதையாக நடைமுறையில் உள்ளது. மேலும் எங்கள் தெரு பெரிதாக இருப்பதற்கு காரணம் அக்காலத்திலயே வீதி விசாலமாக இருப்பதற்கு சொந்த நிலங்களை தியாகம் செய்து உள்வாங்கி வீடுகளை கட்டியதால்தான்...

சகோதரர்களே, அன்பர்களே, நாம் ஏதேனும் ஒரு செயலை நம் சமுதாயத்திற்காக நம் ஊர் நலனுக்காக செய்ய நினைக்கும் போது, அதனால் ஏற்படும் விளைவுகளை முதலில் கவனத்தில் கொண்டு அது யாரையும் பாதிக்காது வகையில் செயல்படுத்துவதே நமது ஒற்றுமைக்கு நன்மையாக அமையும்...

எனவே யாருக்கும் பாதகமில்லாத மாற்று வழி (நெசவு தெரு அல்லாமல்) இருக்கும் பட்சத்தில் ஏன் நெசவு தெரு தான் ஒரு வழி பாதையாக வேண்டுமேன கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிரீகள் என்பது புரியவில்லை.

‘நீ விரும்பும் நல்லதையே மற்றவருக்கும் விரும்ப வேண்டும்’ என்றிருக்கும் போது, சிலர், நீங்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை ஏன் நாங்களும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்???

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 3:103)

நம் ஓற்றுமைக்கு பங்கம் வராத வகையில் நல்ல ஒரு மாற்று வழியை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தருவானாக...

அன்புடன்,
அபூபக்கர் சித்திக்,
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Cnash (Makkah ) [02 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15406

அஸ்ஸலாமு அலைக்கும் Haddaad !!

நீயும் தொருவோட சேருறது தானே நியாயம்!! உங்கள் தெருகாரர்கள் கையில் எடுத்திற்கும் முடிவை நீயும் ஆதரித்து ஏதாவது உன் பங்குக்கு சொல்லணும் இல்லையா !! ஆனா KMT தெருக்காரர்களுக்கு என்னாச்சி ஏன் கங்கணம் கட்டிக்கிட்டு வருகிறார்கள் என்று கேட்கும் முன் .....அதிகார தோரணையில் KMT தெருவில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து சீரமைக்க வேண்டும் எனது உங்கள் ஜமாத் காரர்கள் தீர்மானம் போட்டார்களே அவர்களிடம் போய் முதலில் என்ன நியாயம் என்று கேட்டு விட்டு கருத்து சொல்லு!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 January 2012]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15420

ECR Road, வரும் ஆனா வராது....

இப்ப Easy-யா போய்ட்டுவர ரோடு இருந்தா போதும்.

Hong Kong range-கும், சென்னை, திருச்சி, மதுரை, போன்ற மாநகராட்சி range-கும் காயலை Compare பண்ண வேண்டாம் சகோதரர் அவர்களே.

ஆட்டோ புடிச்சு போவதையோ, இரண்டு பேருந்து மாறி போவதையோ, யாரும் விரும்ப மாட்டார்கள், (குறிப்பாக நமது தாய்மார்களும், நம் சகோதரிகளும்) பேருந்து என்பது நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல இருக்கவேண்டும், நாம் பேருந்து வசதிக்கு ஏற்றார் போல மாறவேண்டும் என்பது நடைமுறை சாத்தியம் அற்றது.

Hong Kong-இல் இருந்து கருத்து தருவிக்கும் சகோதருக்கு வேண்டுமென்றால் ஆட்டோவில் செலவு செய்து போகும் வசதியோ, சிற்றுந்திர்க்கு காத்துக்கிடக்கும் அளவிற்கு அதிக நேரமோ இருக்கலாம், ஆனால் எம்மை போன்றவர்களுக்கு அது நடைமுறை சாத்தியம் அல்ல.

ஆத்தூர்/ஆறுமுகநேரி செல்ல 200 ரூபாய் செலவு செய்ய நாங்கள் ஒன்றும் மன்னர் பரம்பரை இல்லை, மேலும் சிற்றுந்துக்காக காத்து கிடந்தது நேரத்தை வீன் செய்ய நாங்கள் ஒன்றும் வெட்டியாக இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. எட்டத்தெரியும் பலாக்காயைவிட கிட்ட இருக்கும் களாக்காய் மேல்!
posted by Firdous (Colombo) [03 January 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15426

சகோ. சதக் தம்பி அவர்களே!

ECR திட்டம் வரைபடத்திற்கு நன்றாக இருக்கும். நடைமுறையில் சாத்தியம் எப்போது?

2 or 3 பேருக்கு பயன்படக்கூடிய ECR பாதையைவிட 70, 80 பேருக்கு மேல் பயன்படுத்தும் ஒருவழி பாதையே சிறந்தது. அதுவும் நமதூர் மக்கள் அனைவருக்கும் எளிதாக பயன்படக்கூடிய வகையில்!
----------------------------------------------
சி.நெசவு தெரு சகோதரின் ஆதங்கம் நியாமானதே! KTM தெருவை ஒப்பிடும்பொழுது உங்கள் தெரு அகலமானதே! தேவையான இடைவெளியில் வேகத்தடை அமைப்பது மூலம் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்தலாம். அதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.

விரைவில் ஊருக்கு நலன் ஏற்படும் வகையில் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒருவழி பாதை திட்டம் நடந்தேற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by Javed Nazeem (Chennai) [03 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15466

Dear Brother, Ameer Sulthan (Comment: 15395),

Your wish is granted. Lets have ONE WAY through Chinna Nesavu Street and the routes will be as below: One way: Chinna Nesavu Street – Periya Nesavu Street – Koolakadai Bazaar – Bus stand

The other way would be the one suggested by your Jama-ath: linking KMT to the Bus Stand. (I am not sure of the names of the streets there.) So no KTM Street. Thank you very much.

I think what was really a generous act from the Dhayim PaLLi Jama-ath is responsible for today’s state. The mosque and the KTM St. inhabitants - should NOT have offered the land to the Public. If only we had been firm, our town would have reaped the benefits of "one way" long back. Generosity pays and how?

My humble request to our Jama-ath is this – Let us learn from other Jama-aths and be pro-active and aggressive. The last statement was not meant to hurt or annoy anybody. But if it does, don't blame me; please go read the statements released by your own Jama-aths.

(The reason I have to take a slightly tougher stand is because of a mail I received. It does not qualify for a discussion here as the contents are clearly illogical. But the sender of the mail needs to understand that, such propaganda only makes people more stern. I am not posting here for fun or to fuel a fight, but I honestly believe that the Nesavu St. Jama-ath should be more accommodative considering the welfare of the town. To bring in the Chinna Nesavu street is clearly diversional and completely unwarranted)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [05 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15585

அன்பின் சகோதரர்களுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோதரர் ஒருவர் எனது கருத்தை மேற்கோள் காட்டும்பொழுது நான் புதிய யுக்தியில் இறங்கியுள்ளதாக எழுதியுள்ளார்.மேலும் சில சகோதரர்களின் கருத்துகளில் சில தவறான தகவல்களையும் அளித்துள்ளனர். நான் இங்கு எதிர்வாதம் புரிவதற்காக எழுதவில்லை. மிகுந்த வேலைபளுவுக்குமிடையில் தவறான கருத்துகள் பரப்ப்ப்படுகின்றனவே என்ற அடிப்படையில்தான் எழுதுகின்றேன்.

சகோதரரே நான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். மாற்றுவழிப்பாதை சின்ன நெசவுத் தெருவையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பது என்போன்றோரின் அவா.இது புது யுக்தியாக இருக்கலாம் நிச்சயமாக இது குயுக்தி இல்லை.

வாகன நெரிசல் மிகுந்துள்ள இக்காலத்தில் ஒருவழிப்பாதை அவசியம்தான். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்வதெல்லாம் நமது பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் (பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஒருவழிப்பாதைக்குமே இடைஞ்சல்தான்). ஆனால் விவாதங்கள் திசைமாறி செல்கின்றது. இதையே சாக்காக கொண்டு சிலர் தனிநபர்களையும், சமுகத்தையும் பழங்காலச் சொற்களால் தாக்கிக்கொள்ளும் அவலமும் நடைபெற்று வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. இது ஒற்றுமையுள்ள இரு ஜமாஅத்துகளிடையே கலகத்தை மூட்டும் செயலாக அமைகின்றது. இது உடனே தடுக்கப்பட வேண்டிய செயல். இரு ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் உடனே சந்திக்க வேண்டும், அவர்கள் தங்களுக்கிடையே உள்ள கருத்துகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் இரு ஜமாஅத்தின் நல்உறவுகள் முன்பு போன்றே தொடரவேண்டும்.

அடுத்ததாக பெரிய, சின்ன நெசவுத் தெருக்கள் புது குடியேற்றங்கள் என கருத்து பரப்ப்ப்படுகின்றது. காயல்பட்டின வரலாற்றை ஆராய்ந்தால் தெரியும் பழமையான தெருக்கள் எவை என்றும் புதிய குடிகள் எவை என்றும்.

உதாரணத்திற்கு நெசவுத் தெரு, கோமான் தெரு, பரிமார் தெரு, கிராம முனிசிபல் கச்சோரி தெரு (KMK Street) (கச்சேரி என்பது மக்கள்கூடும் இடம் நம்மில் சிலருக்கு பாட்டுகச்சேரிதான் ஞபாகம் வரும்). செக்கடி தெரு (அலியார் தெரு), சித்தன் தெரு, கருத்த தம்பி மரைக்காயர் தெரு (KTM Street) (இன்னும் சில) ….இப்படி சில தெருக்களே பழமை வாய்ந்தவை. இங்குள்ள திருமண முறைகள் இன்றும் நபிவழிப்படி பேணப்பட்டு வருகின்றது. (மஸாயிலுக்குள் நுழையவில்லை கருத்து வந்ததால் பதிவு செய்கிறேன்.). இதுதான் நடைமுறையில் இருந்தது பின்னர் காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டது. புதிய தெருக்களும் வந்தன. (நிற்க)

ஒருவழிப்பாதைக்காக தவறான புரிதல்களால் ஒருவரையெருவர் சாடிக் கொள்வது சிறந்த முன்னுதாரமாக தெரியவில்லை. நமதூர் மக்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களில் தியாகங்களை புரிந்துள்ளனர். தியாகங்கள் பற்றி விவாதிக்கும் தருணமே தளமே இதுவல்ல. மாறாக பொதுமக்கள் பாதிக்காவண்ணம் கலந்துபேசி சுமூகமான தீர்வு எடுக்கப்பட வேண்டும்.

தற்போது முஸ்லிம்கள், இந்திய அளவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். பாசிச சக்திகளும், ஊடகங்களும் முஸ்லிம்கள்மேல் பழிசுமத்தும் போக்கை கடைபிடித்து வருகின்றன. மேலும் ஒரு கூட்டம் முஸ்லிம்களை உயிராலும் பொருளாலும் மானத்தாலும் கறுவருக்க துடித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒருபுறம்.

மேலும் தமிழகத்தில் அணுஉலையை நிறுவ இந்திய அரசே முன்கை எடுக்கின்றது, அணுஉலை கூடங்குளத்திற்கு வந்தால் காயல்பட்டினத்தின் சுகாதரத்திற்கும் உலைதான், DCWவின் பாதிப்பிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை இதில் இதுவும் வேறு. நம்முடைய போராட்டங்களெல்லாம் மேற்கூறியவைகளை நோக்கி திரும்ப வேண்டுமே தவிர மாறக அற்பவிஷயங்களுக்காக போராட்டத்தை திசைதிருப்புவது சரியல்ல.

ஒருவழிப்பாதைக்கான அனைவர்களின் முறையீடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றுள்ளதாகவே நாம் அறிகின்றோம். நமது போராதரவு பெற்ற நகராட்சி தலைவர் திருமதி ஆபிதா அவர்களின் கூற்றுபடி இதுபற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் நமது மாவட்ட கலெக்டர், மற்றும் வட்டார வாகன அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே அவர்களின் இறுதி முடிவிற்காக நாம் பொறுத்திருக்போம்.

” யாஅல்லாஹ் எங்களின் ஊர் நலனுக்கு ஒருவழிபாதையில் எவ்வழி சிறந்தாக நீ நாடுகின்றாயே அவ்வழியையே நீ எங்களுக்குத் தந்தருள்வாயாக.”.

அன்புடன்
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு.
(கிழக்கு மாகாணம் சவுதி அரேபியா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2516; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved