Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:39:44 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7807
#KOTW7807
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 4, 2012
கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியே கொண்டு வர முயற்சிக்குமாறு நகர்மன்றத்தினரிடம் நகர தேமுதிக கோரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3358 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) செயல்திட்டம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கடற்கரைப் பகுதியான காயல்பட்டினத்தை இணைக்காமல் வழித்தடம் அமையவுள்ளதென அறிவதாகவும், காயல்பட்டினம் வழியே இச்சாலையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம், நகர தேமுதிக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து, அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அஸ்ஸலாமு அலைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் நமதூர் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள, குறிப்பாக கடற்க்கரையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகும்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கன்னியாக்குமரி வரையுள்ள ECR ரோடு நமதூர் வழியாக இல்லாமல் அம்மன்புரம், அடைகலபுரம் வழியாக வரப் போகிறது என்ற ஒரு தகவல் வந்ததின் பேரில் நாங்கள் எந்த ஒரு அரசியல் ஆதாயமும் இன்றி ஊரின் நன்மையை கருதியும் அதனுடைய உண்மை நிலவரம் என்ன? என்பதனை பார்பதற்க்காக நாங்கள் கேள்விப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டப்போது அடைக்கலாபுரம் அருகிலுள்ள ராணிமகாராஜாபுரம் என்ற ஊரில் அதற்க்கான அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும், அருகில் வசிப்பவர்களிடம் விசாரிக்கையில் ECR ரோடு இந்த வழியாக வரப்போகிறது என்றும் சொன்னார்கள்.

நமதூரைப் புறக்கணித்து மறு வழியாக ECR ரோடு வந்தால் நம்மூர் ஒரு தீவு போல் ஆகிவிடும்.ECR ரோடின் முக்கியமான நோக்கமே ஆபத்தான காலங்களில் பயன் படுத்தவும், போர்காலங்களில் ராணுவ தளவாடங்கள் கடற்கரை வழியாக கொண்டு செல்வதர்க்காகத்தான். ஆனால் இப்பொழுது இவர்கள் தேர்ந்தேடுத்த பாதை கடற்கரயில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வழியாக செல்கிறது, நமதூரில் இருக்கும் வாகன நெரிசல் காரணமாக தொலை தூரப் பேரூந்துகளில் அநேகமும் அடைகலாபுரம் வழியாகத்தான் செல்கிறது.

ECR ரோடும் நமதூர் வழியாக இல்லாவிட்டால் நாம் ஆறுமுகநேரி,அம்மன்புரம் சென்றுதான் பஸ் ஏறவேண்டிவரும்.மட்டும் அல்லாமல் வெளியூர்களிலும்,வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வந்து, சென்றுக் கொண்டிருக்கின்ற நமதூர் மக்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பே.

இதையெல்லாம் மனதிற்கொண்டு ஐந்தாம் வார்டு கவுன்சிலர் ஜகாங்கீர் மூலமாக தலைவர், துணைதலைவர் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ஏற்கனவே ஐக்கியப் பேரவை மூலம் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கொடுத்த மனுவின் காப்பியையும் கொடுத்து, நகர்மன்றத்தின் தலைவரும் ஓட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து கலக்டருக்கும்,நெடுஞ்சாலை துறையினருக்கும் மனு கொடுக்கவேண்டும். நீங்கள் அனைவர்களும் சேர்ந்து மனு கொடுப்பது என்பது ஊர் மக்கள் அனைவர்களும் சேர்ந்து கொடுப்பதற்கு சமம் என்று சொன்னோம்.



இதனை அதில் கலந்துகொண்ட தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்.இதன் அடிப்படையில் அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் அவர்களை நம் நகர் மன்ற தலைவர்,துணைதலைவர் மற்றும் உறுப்பினர்களும் சந்தித்து மனு கொடுத்தனர்.இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்ட நம் நகர்மன்றத்தினரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக வாழ்த்துகிறோம். நன்றி!


இவ்வாறு நகர தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்:
M.ஜஹாங்கீர்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by nizam (ksa) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15469

விழிப்புணர்வு ஏற்படுத்திய தேமுதீகவினற்கு வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by velli muhaideen (chennai) [04 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15473

கிழக்கு கடற்கரை சாலை நமது ஊருக்கு அவசியம் வர வேண்டும். இதன் மூலம் நமது ஊருக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

நகரின் ஒரு வழி பாதை திட்டத்திற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தது போல் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும்.

இதனை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த தே மூ தி க, கட்சியினற்கும் அதனை செயல்படுத்த முயற்சிக்கும் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் தலைவருக்கும் வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15484

ஊரின் நன்மையை மனதில் கொண்டு செயல் பட்டு நகராட்சிக்கு எடுத்துரைத்த தே.மு.தி.க விற்கும் அதனை துரிதமாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த நகர் மன்ற தலைவர், மற்றும் உறுப்பினர்களுக்கும் கோடானு கோடி நன்றி.

மனு கொடுத்தோம் நிறைவேறும் என்று இருந்து விடாமல், தொடர் முயற்சிகள் செய்து இந்த ECR சாலை நமதூர் வழியே அமைய எல்லா நடவடிக்கை களிலும் ஈடு பட்டு, வெற்றி பெற அன்புடன் வேண்டுகிறேன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ECR in Kayal
posted by Mohamed Hussain (Chennai) [04 January 2012]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 15492

Assalamu Alaikum,

Thanks to DMDK for bringing out this important issue to the public notice and to municipal council. Unless we take effort , they will skip our town.It will be huge loss for us, again we fill face the same scenario as railway station.

As we all know every Government official will be glad to skip our town in important projects as e saw now.so we expect the same in this matter too.Unless we take effort ECR wont come to our town.

and One more important thing, even they sanction ECR via our kayal, how that road will come????? is any proposed plan there, if so share it else another confusion like the one which is going for the One Way will come , may ALLAH will save us from those.

Do we have broad and generous mentality to loss our own land if that road needs our own lands?????May ALLAH bring that ECR road to kayal with out any problem to any one of us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நாம் சில அளவு நிலங்களை ஊர் நன்மைக்காக நாம் இழந்தாலும்.. நமக்கு மிகவும் பயன் உள்ள ECR ரோடு கண்டிப்பாக தேவை தான்..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [04 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15512

ஊரின் நன்மையை மனதில் கொண்டு செயல்பட்ட நகராட்சிக்கும் அதனை எடுத்துரைத்த தே.மு.தி.க விற்கும் மிக்க நன்றிகள்..!

தூத்துக்குடியில் இருந்து கன்னியாக்குமரி வரையுள்ள ECR ரோடு நமதூர் வழியாக நாம் கொண்டு வரும் பட்சத்தில் ஊரின் புறநகரில் இருக்கும் நமது சில ஏக்கர் நிலங்களில் சில செண்டு அளவுகளை நாம் ஊரின் நன்மையை மனதில் கொண்டு நாம் இழக்க நேரிடும்...! அதில் சந்தேகம் இல்லை...!

நாம் சில அளவு நிலங்களை ஊர் நன்மைக்காக நாம் இழந்தாலும்.. நமக்கு மிகவும் பயன் உள்ள ECR ரோடு கண்டிப்பாக தேவை தான்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15518

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மறைந்த நூஹு லெப்பை (MNL TRAVELS SULAIMAN LEBBES FATHER) அவர்கள் சமூக சேவையாளர், தன் கை காசை பொது சேவைக்காக செலவழித்து ஓய்ந்து போனவர்.

நான் சிறுவனாக இருந்தபோது ரயில்வே அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் காஷ்மீர் முதல் திருசெந்தூர் வரை கடலோர ரயில் அறிமுகப்படுத்த வேண்டும். சென்னை, ராமேஸ்வரம் ஸ்ரீரங்கம் , மதுரை, தூத்துக்குடி , காயல்பட்டினம் வீரபாண்டியபட்டினம் திருசெந்தூர் வரை உள்ள எல்லா இஸ்லாமிய, ஹிந்து கிறிஸ்தவ சகோதரர்களின் வழிபாட்டு தளங்கள் உள்ள இடங்களில் அந்த ரயில் நின்று சென்றால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

ஸ்பிக், தாரங்கதார போன்ற தொழில் சாலைகளுக்கும் சரக்கு போக்கு வாரத்தில் நல்ல வருவாய் வரும் என்று யோசனை சொல்லி எழுதியிருந்தார். சுமார் 10 15 கோடி ரூபாய் செலவு வரும் என்று அரசு கூறி அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. இன்று ஊழல் பணமே பல ஆயிரம் கோடி தனி மனிதர்கள் கையில் இருக்கிறது. இப்போது இந்த அரசுகள் இதை கண்டுகொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல முயற்சிக்கு எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து குரல் கொடுத்தால், நமது கனவு நனவாகலாம்.

தேசிய திராவிட முற்போக்கு கழகத்துக்கு ஓர் சபாஷ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by SEYED ALI (ABUDHABI) [05 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15604

நிச்சயம் இது குறித்து நகர் மன்றம் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும். ஆனால் இங்கே ஒருவழி போக்குவரத்திர்க்கே மன்றாட்டமாக இருக்கிறதே. ஊருக்குள்ளேயே சுயநலமும் எங்கள் தெரு உங்கள் தெரு என்ற குறுகிய மனப்பான்மையும்; தலையை பிய்த்து கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கிழக்கு கடற்கரை சாலையை கா...
posted by ALS maama (Kayalpatnam) [06 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15664

அஸ்ஸலாமு அலைக்கும்,

விழிப்புணர்வு ஏற்படுத்திய தேமுதீகவினற்கு எனது வாழ்த்துக்களை தெருவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் குறித்து விளுப்புனர்வோடு நமது நகராட்சி தலைவர் ஆபிதா அவர்கள் செயல்பட வேண்டும்.

எழுத்தாளர், பொது சேவை, ஓவியர்,
ALS School Of Arts,
நூலகர் - அன்னை கதீஜா அறிவு நூலகம்,
ALS ஹவுஸ்,
KTM தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved