Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:11:48 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7915
#KOTW7915
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 27, 2012
குடியரசு தினம் அன்று நகர்மன்றத்தில் கொடியேற்றவேண்டியது ஆணையரா, நகர்மன்றத் தலைவரா?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4181 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடியரசு தினமான ஜனவரி 26 அன்றும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்றும் - அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் தேசிய கொடியேற்றப்படுவது வழமை. இதில் உள்ளாட்சி மன்றங்களும் அடங்கும்.

இரண்டாம் நிலை நகராட்சியான கீழக்கரையில் நேற்று (ஜனவரி 26) காலை நடந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ராபியத்துல் காதரியா - தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல் நிலை நகராட்சியான கடையநல்லூரில், நகராட்சித் தலைவி சைபுன்னிசா - தேசியக் கொடியை ஏற்றினார்.

புகைப்படம்:
www.kadayanallur.org

மாநகராட்சியான தூத்துக்குடியில், மாநகர் மேயர் சசிகலா புஷ்பா - தேசியக் கொடியை ஏற்றினார்.


புகைப்படம்:
www.tutyonline.net

ஆனால் - இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகர்மன்ற வளாகத்தில் கொடியேற்றியது ஆணையர் பொறுப்பில் இருக்கும் வீ.கண்ணையா.



இதுதான் காயல்பட்டினம் நகர்மன்ற வழமையா?

2010 ஆம் ஆண்டு குடியரசு தினம் அன்று அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு S. செய்யத் அப்துர்ரஹ்மான் கொடியேற்றிய காட்சி...



இவ்வாண்டு மட்டும் ஏன் இந்த மாற்றம்?

இது குறித்து - ஆணையர் பொறுப்பில் இருக்கும் வீ.கண்ணையாவிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. விதிமுறைகள் என்ன கூறுகின்றன என்று தனக்கு தெரியவில்லை என்றும், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் - இது அரசு விழா என்றும், இதில் ஆணையர் தான் கொடியேற்றவேண்டும் என்றும் தெரிவித்ததால் தான் கொடியேற்றியதாகவும் கூறினார்.

இது குறித்து விளக்கம் அளித்த நகர்மன்ற துணைத் தலைவர் - சென்னையில் நடக்கும் அரசு குடியரசு விழாவில் ஆளுநர் கொடியேற்றுவதால், நகர்மன்றங்களிலும் ஆணையர் தான் கொடியேற்றுவார் என தான் நினைத்ததாகவும் தெரிவித்தார்.

விதிமுறைகள் என்ன கூறுகின்றன என நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகனிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. விளக்கம் தந்த மண்டல இயக்குனர் - விதிமுறைகள்படி - நகர்மன்றத் தலைவரே, கொடியேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அரசு நியமன அதிகாரிகள் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்துகொள்வது - இதுபோன்ற நிகழ்ச்சிகளில் - வருங்காலங்களில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகாமல் இருக்க உதவியாக இருக்கும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இனி விதிமுறைகள் தெரியாமல் கண்டதுக்கும் காகிதத்தில் ஒப்பமிட்டு ஒப்புதல் கொடுக்கலாம்... நமது நகர்மன்றம் இனி விளங்குமா.. ?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16245

கொடி ஏற்றுவது நானா.. நீயா.. என்ற (பிரச்சனை) வாதம் அல்ல..

நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் கட்சி கொடி மாதிரி யாரு.. வேண்டுமானாலும் நகர்மன்றத்தில் ஏற்றலாம்னு நினைத்து இருக்கலாம்... அதான் ஆணையரை ஏற்றுபடி சொல்லி இருக்கலாம்...

விதிமுறைகள் கூட விபரம் தெரியாமல் நமது நகர்மன்றத்தில் ஆணையர் பொறுப்பில் வீ.கண்ணையாவும் துணை தலைவர் பொறுப்பில் எஸ்.எம்.மொஹிதீனும் இருக்கிறார்கள்... விபரத்தை எடுத்துரைக்க நகரமன்ற தலைவருக்கும் (அக்கறை) பொறுப்பில்லை... அல்லது தலைவருக்கும் விதிமுறைகள் விபரம் தெரியாமல் இருந்து இருக்கலாம்...

ஆணையர் பொறுப்பில் வீ.கண்ணையா இன்னும் என்ன... என்ன.. விதிமுறைகள் எல்லாம் தெரியாமல் இருக்கிறாரோ... ? இனி விதிமுறைகள் தெரியாமல் கண்டதுக்கும் காகிதத்தில் ஒப்பமிட்டு ஒப்புதல் கொடுக்கலாம்... நமது நகர்மன்றம் இனி விளங்குமா.. ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஏன் விளக்கம் கேட்கவில்லை?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [27 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16248

அது சரி, இது கூட தெரியாமலா இவர்களெல்லாம் இந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள்?

தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருப்பது ஆச்சரிய படுவதற்க்கில்லை.

ஆனால் ஆணையர் பொறுப்பில் இருக்கும் வீ.கண்ணையாவுக்குமா இது தெரியாமல் இருக்குது?

இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்த காயல்பட்டினம் டாட் காம் பாராட்டுக்கள். ஆணையர் வீ.கண்ணையாவையும், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீனையும் விளக்கம் கேட்ட நீங்கள் நகரமன்ற தலைவரை ஏன் விளக்கம் கேட்கவில்லை?

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by சம்சுதீன் (காயல்பட்டணம்) [27 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 16249

காந்தி வெள்ளயனுக்காக ஒத்துழையாமை இயக்கம் கண்டார். இவர்கள் ஊர் உருப்படமல்போக ஒத்துழையாமையை கடைபிடிக்கிறார்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by P.S.ABDUL KADER (jeddah) [27 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16255

குடியரசு தினம் அன்று நகர்மன்றத்தில் கொடியேற்றவேண்டியது ஆணையரா, நகர்மன்றத் தலைவரா? நகர மன்ற துணைதலைவர் ஆணையருக்கு இந்தமுறை கொடிஏற்ற உத்தரவு புதுபித்து இருப்பது,ஒருவேளை நகர தலைவி குடியரசுதினதன்று, சிறப்பு விருந்தினராக வெளியே போயி இருக்ககூடும். நகரமன்றதிற்கு வர காலதாமதம் கண்டு துணைதலைவருக்கு விழாவை நடத்த அனுமதிருக்க கூடும். உண்மைநிலை நகர தலைவியிடம் தீர விசாரிபதே நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by Ruknudeen Sahib (China) [27 January 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 16257

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் இணைய தளம் இந்த செய்தியே சுட்டி காட்டியதற்கு நன்றி. திரு கன்னையா அவர்கள் இந்த விசயத்தை அறியாமல் இருந்ததும் தவறு தான் இதற்காக ஏதோ சி ஐ டி லெவலில் நாம் விசாரிக்க சொல்வதும் குறை சொல்வதுமாக இருந்தால் நகருக்கு செய்து கொண்டிருக்க கூடிய நல்ல காரியங்களிலிருந்து கவன சிதறல்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவும் உண்டாகி விடும்

எனவே இந்த சின்ன விசயங்களில் குறை கூறுவதை தவிர்த்து அவர்கள் செய்து கொண்டும் செய்யபோகும் நகர்நல பணிகளை ஊக்குவிப்போமானால் நம் நகர் மென்மேலும் சிறப்படையும். நம் நகர் மன்றம் நம் நாட்டினுடைய முன் மாதிரி மன்றமாக அமைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தலைவி அவர்கள் கொடி ஏற்றவில்லை. !!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16260

சரி.. சரி.. நம் நகர்மன்றத்தில் கொடி ஏற்றினார்களே அதுவரை சந்தோசம்தான். யார் ஏற்றினால் என்ன..

இருந்தாலும், ஆணையர்(பொறுப்பு) திரு வீ.கண்ணையா அவர்கள், ஒரு நாளைக்கு முன்பாவது சரியாக விசாரித்து பொறுப்பாக நடந்து இருக்கனும். அவர் மேலும் அதிக தவறு இல்லை, ஏன் என்றால் அவர் பதவியே பிரேக்கட்-க்கு உள்ளே அல்லவா உள்ளது( அதாவது பொறுப்பு என்பது)

ஆக மொத்தம் மக்கள் தலைவி அவர்கள் எங்கும் கொடி ஏற்றவில்லை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by Zubair Rahman (Doha-State Of Qatar) [27 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16264

அஸ்ஸலாமு அலைக்கும்- சகோதரர் ஜியாவுதீன் அவர்களே நகரமன்ற தலைவி அவர்கள் எங்குமே கொடியேற்றவில்லை என்ற தங்களின் செய்தி தவறானது. தயவுசெய்து செய்தி எண் 7912 ஐ பார்க்கவும் ,

(அனைத்து சமுதாய குழுமத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் தான் சிறப்பு விருந்தினரும் கொடியேற்றியவரும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16265

தேசிய கொடிய எவனாவது ஏற்றிவிட்டு போறான்! இதல்லாமா குற்றம்? ஆனாலும்,ஒன்றாவது கருத்தும்,இரண்டாவது கருத்தும்,அதி முக்கியமே!

அரசியல்வாதிகளை முதலில் நம்புவதை மக்களே விடுங்கள்! புரிந்து கொண்ட புத்திசாலிகளே,நீங்கள்,உண்மையில் புண்ணியம் சுமந்து கொண்டீர்கள்!

நமக்கு கடமை நிறைய இருக்கு!
இதை பஞ்சாயத்தும்,தலைவியும் புரிந்தாலே போதும்!
கடமையினை செய்யுங்கள்!
பிரதி உபகாரம் எதிர் பாராதீர்!
தானாக பழுக்கும் பழமே இனிக்கும்!
கொட்டும் தேளைவிட கொடியது மீடியா!
வேண்டடாமே நமக்கு இது போன்ற வாதம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16275

இது ஒரு பிரச்சினையை இல்லை...கொடி நமது நாட்டின் அடையாள சின்னம்..அதை குறிப்பிட்ட நாளில் ஏற்றுவது சம்பிரதாயம்.. அவ்வளவு தான்.. யார் ஏற்றினாலும் அது பறக்கும்..முக்கியம் கொடி வணக்கம் என்று அதற்க்கு வணக்கம் தெரிவித்து, இணைவைக்கும் காரியத்தில் ஈடு படக்கூடாது..

1991 - 96 ADMK ஆட்சியில், மாவட்ட தலை நகரங்களில், ஆட்சியர்க்கு பதில்லாக , மந்திரிகள் கொடியேற்ற வேண்டும் என்று ஆணை இட்டு அப்போது மட்டூம், ., கலெக்டர் பதிலாக , அந்த மாவட்டத்தை சேர்ந்த மந்திரிகள் கொடியேற்றிய நினைவு இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. புரிந்து நடந்து கொண்டால் ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [27 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16278

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

குடியரசு தினமான ஜனவரி 26 அன்றும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்றும் அரசு அலுவலகங்களிலே கொடியேற்றுவதற்கு இன்னார்தான் என்று சட்டம் இல்லை, என்றாலும் மரபு என்று ஓன்று உண்டு அதை பின்பற்றுவது நன்று.

மரபுகள் மதிக்கப்பட வேண்டும் மறுக்கப்படக்கூடாது - மக்களால் உருவாக்கப்பட்ட மன்றம் மாசுப்படக்கூடாது.

மரபுப்படி நகராட்சி தலைவரே கொடிஏற்றவேண்டும் - அவரில்லாமலிருந்தால் துணைத் தலைவரோ அல்லது மூத்த உறுப்பினரோ கொடியேற்றலாம் அதுதான் மரபு.

---------------------------------------------------------
அவர் எப்படி மறக்க முடியும் :

இது அரசு விழா என்றும், இதில் ஆணையர் தான் கொடியேற்றவேண்டும் என்றும் துணைத் தலைவர் தெரிவித்ததால்தான், தான் கொடியேற்றியதாக கமிஷனர் கூறியிருப்பதும் ...

சென்னையில் நடக்கும் அரசு குடியரசு விழாவில் ஆளுநர் கொடியேற்றுவதால், நகர்மன்றங்களிலும் ஆணையர் தான் கொடியேற்றுவார் என, தான் நினைத்ததாக துணைத் தலைவர் கூறியிருப்பதும் நகைப்புக்குரியது.

துணைத் தலைவர் புதிதாக நகர் மன்றத்திற்கு வந்திருப்பவரா? கடந்த ஐந்து ஆண்டு காலமாக யார் , யார் கொடி ஏற்றினார்கள் என்பதைத் தெரியாதவரா ?

அது மட்டுமல்ல சென்ற வருடம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு S. செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் கொடியேற்றியபோது இந்த துணைத்தலைவர் அருகில்தானே நின்றுக்கொண்டு இருக்கிறார் - இதை அவர் எப்படி மறக்க முடியும் அல்லது மறைக்க முடியும் ?.

------------------------------------------------

கண்ணியப்படுத்துங்கள் :

கொடி ஏற்றும்போது அந்த ஒருமணி நேர விழாவுக்கு அனைத்து உறுப்பினர்களும் மற்றும் அனைத்து ஊழியர்களும் வந்து கலந்து கொள்ள முடியாதா? நகர் மன்றத்திலே நடத்தக்கூடிய விழாவுக்குகூட மாணவர்களின் கூட்டம் தான் வரவேண்டுமா?

நகர்மன்ற அங்கத்தினர்களே! , நகராட்சி ஊழியர்களே!! இனிமேலாவது சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களை கண்ணியப்படுத்துங்கள்.

நகர்மன்ற செயல்பாடுகள் நன்றாக இருந்தால் இந்த மாதிரியான அரசு விழாக்களுக்கு மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வரும் அவர்களை நீங்கள் அழைக்க வேண்டிய அவசியமில்லை - உங்கள் செயல்பாடுகளே மக்களை தானாக வரவழைக்கும்.

-------------------------------------------------

கசப்பான உண்மை :

கொடியேற்றிய இந்த விசயம் சாதாரணமானதுதானே இதை ஏன் பெரிதுப் படுத்தனும் என்று பலர் எண்ணலாம் - இருந்தாலும் சில நேரம் அப்படி இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை - காரணம் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

பொதுவாக நகராட்சி விதிகளை நகர்மன்ற அங்கத்தினர்களும் , அதிகாரிகளும் , ஊழியர்களும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

விதிகளை தெரியாமல் இருப்பதினால்தான் பல குளறுபடிகள் நிர்வாகத்திலே ஏற்படுகிறது - மேலும் இது போன்ற சாதாரண விசயங்களும் வீதிக்கு வருகிறது.

இன்றளவிலும் நம் நகராட்சி ஊழியர்களுக்கும் , அங்கத்தினர்களுக்கும் நகர் மன்றத்தின் விதி முறைகள் , அதன் ஒழுக்கங்கள் சரியாக தெரியவில்லை என்பதே கசப்பான உண்மை.

எனவே இனிமேலாவது நகராட்சி அங்கத்தினர்களும் , ஊழியர்களும் புரிந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கும் நல்லது இந்த ஊர் மக்களுக்கும் நன்மையாக அமையும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by Salai. Mohamed Mohideen (USA) [27 January 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16282

இது ஒரு சப்பை மேட்டரா அல்லது சீறி சீரியசான மேட்டரா னு தெரியலே. நகர்மன்ற உள் பாலிடிக்ஸ் மறைமுகமாக சொல்ல படுகிறது என்றால் கண்டுக்காம இருக்க முடியாது. ஏனென்றால் உற் கோஷ்டி பூசல்/அரசியல் , ஈகோ மற்றும் பணபலம் கொண்டு நகர்மன்றத்தை ஆட்டி படைக்க நினைக்கும் ஆதிக்க சக்தி(கள்) எல்லாம் உள்ளே புகுந்து விட்டால் நகர்மன்றம் விளங்காமல் போய்விடும்.

'ஆணையர்' தலைவியிடமே கேட்டு இருக்கலாம்.போனமுறை 'நகர்மன்ற தலைவர்' தான் கொடி ஏற்றினார் என்பதனை பழைய போட்டோவில் அருகில் நிற்க்கும் துணை தலைவர் மறந்து விட்டாரோ என்னவோ. தலைவிக்கு வேறு இடத்தில் கொடி ஏற்ற வேண்டியது இருந்திருந்தால், இந்நிகழ்ச்சிக்கு அவர் கலந்திருக்க வாய்ப்பு இல்லை .

ஒரு வேளை, எவருக்கும் தீங்கிழைக்காத... இது போன்று சிறு கவனக்குறைவு /அறியாமையையில் நடப்பவைகளை, செய்தியாக ஊடகங்களில் வராமல் தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் சம்பந்த பட்டவர்களிடம் இக்கவனக்குறைவு /அறியாமையை ஏற்க்கனவே இந்நிகழ்வில் நீங்கள் தெரியபடுத்தியது போல் இருந்து விட்டால், அவர்களும் அடுத்த முறை கவனமாக இருப்பார்கள். இது போன்ற செய்திகள் தேவை இல்லாமல் குழப்பத்தையும் மேலும் ஊடகம் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by fathimas (kayalpatnam) [28 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 16290

அஸ்ஸலாமு அழைக்கும்

என்னபா இது இப்படி பாடாபடுது நகர்மன்றம் உயர்வான பொறுப்பில் இருக்கும் இவருக்கா யார் கோடி ஏற்றுவது என்று சந்தேகம் அட இந்த சின்ன விசயத்துக்கே இப்படி...... தலைவியோ இப்பொது வந்தவர்கள் ஆனால் மற்றவர்கள் இதற்க்கு முன்னாள் இருந்தவர்கள்தானே? இத்தனை காலம் இருந்துமா யார் கோடி ஏற்ற வேண்டும் இதற்க்கு முன்னாள் இருந்தவர்களில் யார் கோடி ஏற்றினார்கள் என்று கூட மறந்து விட்டார்களா இல்லை..........

சரி காயல்பட்டணம் டாட் காம் கேட்கும் இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே... விரைவில் எதிர்பார்க்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வெளஞ்சி பழுத்ததுக்கும்.... வெம்பி பழுத்ததுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ.....
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [28 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16309

அன்பு நண்பர்களே..... இதானுங்கோ பெரியவர்கள் துணை (அனுபவசாலிகள்) இருக்கணும் என்பது. படிப்பு என்பது வேறு.... அனுபவம் என்பது வேரதானுங்கோ... கொடி யாரு ஏற்றினாலும் ஏறிடும் என்றாலும்..... நம் காயலரின் மாணம் கப்பலேரிட கூடாதுங்கோ... எல்லாத்துக்கும் முறைகள் இருக்குது. இல்லை என்றால் இது தானுங்கோ நடக்கும். இனியாவது திருத்தி கொண்டு சட்டப்படியும், அனுபவம் உள்ளவர்களிடம் கலந்தும் காரியத்தை நடத்தவும். உரிமையை விட்டுக்கொடுப்பதும், உரிமையை பிடித்தேடுப்பதும் சரியில்லைங்கோ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by Vilack SMA (kayalpatnam) [28 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16320

" விதி " தெரியாமல் , தலைவி இந்த " கொடியேற்றும் " வாய்ப்பை " கோட்டை " விட்டுவிட்டார் . பரவாயில்லை , அடுத்த 4 வருடத்துக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தட்டும் . ( அதற்குள் " விதிகள் " மாறிவிடக்கூடாதே ! )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:குடியரசு தினம் அன்று நகர்...
posted by hasbullah (Dubai) [29 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16345

உறுப்பினர்கள் எல்லாரும் கலந்து கொள்ளவில்லை தானே....

அப்போ இன்னொரு நாள் எல்லா உர்ப்பினர்களையும் அழைத்து நகரமன்ற தலைவர் கொடியேற்றி இந்த subject இல் உள்ள பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கட்டும்....

இது ஒரு தேவை இல்லாத subject....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved