Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:44 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7920
#KOTW7920
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 27, 2012
மகுதூம் பள்ளி நீர்த்தேக்கத் தொட்டி குறித்து நகராட்சியின் நிலை என்ன? மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி நிர்வாகம் கேள்வி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3181 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குறித்த நகராட்சியின் நிலை குறித்து, 25.01.2012 அன்று காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து, அக்குறைகளைக் களைவதற்காக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் முன்வைத்த தீர்மான முன்வடிவின்படி, மக்கள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதனையடுத்து, முதற்கூட்டம் 25.01.2012 அன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் நகராட்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு செயல்திட்டங்களிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

அப்போது, காயல்பட்டினம் மகுதூம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், முஹம்மத் இப்றாஹீம் மற்றும் குழுவினர், மகுதூம் பள்ளி மையவாடியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைய - மக்கள் நலன் கருதியே இடமளித்துள்ளதாகவும், தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை அத்தொட்டி பயன்படுத்தப்படாதது ஏன் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் கேட்டனர்.



அவர் உடனடியாக, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் நிஸார், உதவி அலுவலர் பாஸ்கர் ஆகியோரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டார். அத்தொட்டியில் தண்ணீர் ஏற்ற இயலவில்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.



அடுத்து பேசிய பள்ளி நிர்வாகத்தினர், “எங்கள் பள்ளியில் தேவைக்கதிகமாக இடம் உள்ளது என்று கருதி இதற்கு இடம் தரவில்லை... மாறாக, மக்கள் நலனுக்காக கேட்கப்பட்டதையடுத்தே தரப்பட்டது... அவ்விடம், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக நாங்கள் வைத்திருந்தும், எங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு ஊர் நன்மைக்காக அளித்துள்ளோம்... ஒன்று, இத்தொட்டியைப் பயன்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யுங்கள்... வாய்ப்பில்லையெனில், தொட்டி தேவையில்லை என்று எழுதித் தாருங்கள்! நாங்கள் அதை அகற்றிவிட்டு, அவ்விடத்தைப் பயன்படுத்திக்கொள்கிறோம்...” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்த முறையீட்டைப் பதிவு செய்துகொண்ட நகர்மன்றத் தலைவர், உரிய அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருடன் கலந்தாலோசித்து, மேல் நடவடிக்கை குறித்து விரைவில் தெரிவிக்கப்படுமென தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by Mauroof (Dubai) [27 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16252

மகுதூம் பள்ளி நீர்த்தேக்கத் தொட்டி குறித்து நிர்வாகம் எழுப்பியுள்ள கேள்விக்கு நகர்மன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்த பகுதி நகர்மன்ற உறிப்பினர் தனது தேர்தல் பரப்புரையில் இந்த நீர் தேக்கத் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர பாடுபடுவேன் என்று உறுதி கூறியது நியாபகமிருக்கிறது. இது குறித்து அவர் நகர்மன்றத்தில் கோரிக்கை வைத்தாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by PS ABDUL KADER (JEDDAH) [27 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16253

வார்டு உறுப்பினர் தம்பி A .A அஜ்வத் அவர்கள், மகுதூம் பள்ளி நீர்த்தேக்கத் தொட்டி குறித்து நகராட்சியில் அவரது வார்டு மக்களுக்காக என்ன வாதாடி குறைதீர்க்க போகிறார் பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by Zubair Rahman (Doha-State Of Qatar) [27 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16268

மக்கள் நலனை மனத்திற்கொண்டு மகுதூம் பள்ளி நிர்வாகம் இடத்தை ஒதுக்கி தந்தது, அதில் நகராட்சி நிர்வாகம் லட்சங்களை செலவுசெய்து நீர்த்தேக்கத்தொட்டி கட்டியது. எதற்கு ???

நகராட்சி நிர்வாகத்தில் பணி புரியும் ஊழியர்களோ ஒரே வரியில் பதிலைக்கொடுத்துவிட்டார்கள்.

,,,,,, அதில் நீர் ஏற்ற முடியவில்லை ?????????

இத்தொட்டிக்கு வடிவம் கொடுத்த பொறியாளர் தவறு செய்து விட்டாரா? இல்லை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதா ? தயவுசெய்து தலைவி அவர்கள் உறுப்பினருடன் கலந்தாய்வு செய்து இதற்க்கு நல்ல முடிவை ஏற்ப்படுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by mackie noohuthambi (nuwara eliya sri lanka ) [28 January 2012]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16315

மொகுதூம் பள்ளியில் நீர்தேக்கதொட்டியில் தண்ணீர் ஏறாது எனபது நகரமன்ற பொறியாளருக்கு தெரியாமல் இருந்தால், இப்படி தகுதியில்லாத பொறியாளர்கள் நமது நகர்மன்றதுக்கு தேவையா,இந்த இணையத்தளத்தில் இதை பதிவு செய்து உலகமே சிரிக்கும் அளவுக்கு நகர் மன்றம் கேவலப்பட வேண்டுமா,

மொக்தூம் பள்ளி நிர்வாகதினர்கள் அந்த தொட்டியை அகற்றுவதருக்கு செய்யும் செலவை பள்ளிவாசல் சொந்ததுக்கு தண்ணீர் தேவைக்கு மோட்டார் வைத்து ஏற்றிக்கொண்டால்,பள்ளியில் தொளுகவருபவர்களுக்கு உதவியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் நகாராட்சி அதை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிவாசல் பணத்தை அதற்காக செலவு செய்யக்கூடாது.

மக்கள் வரிப்பணத்தை நகர்மன்றம் செலவு செய்வது போல் மக்கள் பள்ளிவாசல் முன்னேற்றத்துக்காக தந்த பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது. நகர்மன்றத்தில் துணிச்சலுடன் கேள்விகள் கேட்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by hyder ali (nuwaraeliya,srilanka) [29 January 2012]
IP: 111.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16322

நூஹு தம்பி அவர்களின் யோசனை நல்லது. அது முடியாவிட்டால் தண்ணீர் தொட்டியில் காற்றை தேக்கி வைக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [29 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16324

பல மாதம் முன் கடந்த ஆட்சியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா கூட நடந்ததாக கேள்வி பட்டேன்..தண்ணீர் இல்லாத தொட்டிக்கு வண்ணம் பூசி அரசியல்வாதிகள் திறப்பு விழா கண்ட ஊரே நகர்மன்றம் நமது நகர்மன்றமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. :மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by hasbullah (dubai) [29 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16334

சில நபர்கள் வாக்குறுதி அளித்து ஒளிந்து கொள்ளுகிறார்கள்... தண்ணீர் தட்டுபாடு என்பது எல்லா காலத்திலும் இருக்கும்....

இந்த தொட்டியை உருவாக்க idea கொடுத்தவர்கள் யார் கேட்டதின் பேரில் உருவாகினார்கள்....என்ன செய்து தருவதாக வாக்களித்தார்கள் ..சம்பந்தப்பட்ட நபரிடம் இதை குறித்து கேட்கப்பட்டதா?>

அதில் இப்போது, பாம்பும், பள்ளியும் நடமாடும் இடமாகி விட்டது..

வெட்டியாக ஒரு முடிவை சொல்லிவிட்டார் அதிகாரி... தண்ணீரை ஏற்ற முடியவில்லையாம் ? அவர் வீட்டில் motor வைத்து தண்ணீர் உரிஞ்சப்படுகிறதா என்பதை கவனியுங்கள்.... அவர் வீட்டில் மற்றும் தண்ணீர் எப்படி ஏறுகிறது? வாயால் உறிஞ்சி விடுகிறாரா என்ன? அல்லது அந்த அதிகாரிக்கு முழுமையான commission கிடைத்திருக்காது... அதான்.. நல்ல பொறுப்பான அதிகாரி....வாழ்த்துக்கள் .....

நல்ல உருப்படும் இந்த மாதிரி பொறுப்பற்ற தன்மையிலே பதில் சொன்னா..... சின்னபுள்ள தனமாலோ இருக்குது...

தொட்டியில் உள்ள குழாயை திறந்தால் வெறும் காற்று தான் வரும்......

தண்ணீர் வரும் ஆனா வராது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16339

நான் பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, இந்த தொட்டி பெய்லியர் ஆக இருக்கலாம், தண்ணீர் நிறைத்தால் தண்ணீர் ஒழுக வாய்ப்பு இருக்கலாம். அதனால் பிரச்சனை வரலாம். யார் யார் எல்லாம் கமிசன் வாங்கினார்களோ அனைவர்களுக்கும் சிரமம் வரலாம். அதனால் தான் இந்த நாடகமாக இருக்கலாம்.

நான் பதிவு செய்த கருத்து ஒரு யூகம் தான், அதன் அனைத்திலும் லாம், லாம், என்று குறிப்பிட்டு உள்ளேன். அனைத்து யூகம்களும் பொய்யாக இருக்கட்டும். அனைத்தும் அறிந்தவன் வல்ல ரஹ்மான் தான்.
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மகுதூம் பள்ளி நீர்த்தேக்க...
posted by Muhammad Abubacker (Kayalpatnam) [29 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16342

இப்படி அவர் அவர் பேசுவதை விட்டு விட்டு தெரிந்தவர் சொல்வதை கேட்டு நடப்பதே அனைவருக்கும் நலன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நேற்று இன்று நாளை?..
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16347

இப்பதான் ஊர்தலைவி உண்மையை உணர்ந்து களம் இறங்கி செயல் பட ஆரம்பித்துள்ளார்! வாழ்த்துகிறேன்!

பல மாதம் முன் கடந்த ஆட்சியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா கூட நடந்ததாக கேள்வி பட்டேன்.. தண்ணீர் இல்லாத தொட்டிக்கு வண்ணம் பூசி அரசியல்வாதிகள் திறப்பு விழா கண்ட நகர்மன்றம் நமது நகர்மன்றமே.!

செய்தி தமிழர் முத்து இஸ்மாயில்!
உண்மை விரைவில் வீரு கொண்டு வெளிவரும்!
பொருத்து இருப்போம் தமிழர் முத்து இஸ்மாயில் நீரும் நானும்! உண்மையினை நாம் ஒருபோதும் யாருக்காகவும் எதற்காகவும் தயக்கமின்றி பாராட்ட வேண்டும்! அதில்தான் நம் காயல் நலன் பொருந்தி உள்ளது!

நேற்று நெய்னார் தெருவில்.
இன்று மொகுதும் பள்ளியில்.
நாளை?

பொட்டு வெடிகளுக்கு மதிமயங்காமல், எந்த ஒரு தலைவர் புறப்படுகிராரோ, அவரே தலைவராக தகுதியானவர்! பார்ப்போம் இவர் அவரா என்று!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நீங்க கோடு போடுங்க..... நாங்க ரோடு போட்டு தாறோம்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [01 February 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16409

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நகர்மன்ற தலைவர்,உறுப்பினர்,மற்றும் பொறியாளர் அவர்களுக்கு.... ஒரே வார்த்தையில் தண்ணீர் ஏறவில்லை என்று சொல்லி முடித்து விட்டீர்கள். ஏன் என்ற காரணத்தை வலைதள பொறுப்பாளர் களிடம் சொன்னால் உங்களால் முடியாத்த காரியத்தை நம் கமாண்டு தரும் மக்கள் தீர்த்து தரலாம். ஊருக்குள் ஓவர் டேங்களுக்கு எப்படி தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது, மோட்டர் மூலமா...? எத்தனை HP .....? அல்லது அதன் விவரம் தரவும். தந்தாள் தாங்களுக்கும் சுலபமாக இருக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved