Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:59:47 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8011
#KOTW8011
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 14, 2012
இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6072 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று (பிப்ரவரி 14) - தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து - தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.

அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலைவாய்ப்புக்களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா? கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுவது ஏன்? ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல்,சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்? இதை மாற்றி அமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா அல்லது இல்லையா? இந்த அவல நிலைகளை சச்சார் மற்றும் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். முன்னர் பெற்று வந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித ஒதுக்கீடு என்பதை வாபஸ் பெற்று, முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் போதுமானதல்ல என்று திமுக மற்றும் அதிமுக ஆகியன ஒப்புக் கொண்டுள்ளதால், ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்ததை நினைவூட்டும் வகையில் தமிழக ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினரை டி.என்.டி.ஜே அழைக்கிறது.

தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னைக் காட்டி விலை பேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய். இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமால் தடுத்து நிறுத்திட நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.

அன்புடன் அழைக்கிறது!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு, சென்னை 600001.
போன்: 044 25215226.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [14 February 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 16806

வாழ்கையே போராட்டமாகத்தான் உள்ளது . ரோட்டை காப்பாற்ற போராட்டம், ரயில் நின்று செல்ல போராட்டம் . மின்சாரத்திற்கும் , தண்ணீருக்கும் போராட்டம்.

இந்த போராட்டக்காரர்களின் குறிக்கோளில் நியாயம் இருப்பின் அது நிச்சயம் வெற்றி பெரும் . வாழ்த்துக்கள் .

( ஆனால் எனக்கோ மனப்போராட்டம் . நான் எழுதும் கருத்துக்களை S .K . Salih காக்கா " கத்திரி " பண்ணாமல் முழுசா போடுவாங்களா என்ற மனப்போராட்டம் )

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re: இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில்
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [14 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16815

அட்மின் அவர்களே,

உங்களுக்கு தேவைன்னா ஒரு செய்தியை போடுகிறீர்கள். இல்லைன்னா நாமே மக்களுக்கும் "சமுதாயத்துக்கும் இது உபகாரமாக இருக்குமுங்கோ" என்று சில செய்திகளை சுட்டி காட்டினால் கூட இது போலுள்ள செய்திகளை கண்டு கொள்ளவே மாட்டீர்கள்? இப்ப மட்டும் என்ன தேவையோ இந்த செய்தியை வெளியிட??

இதுக்கு தான் மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்: "வேனமெங்கில் சக்க வேரிலும் காய்க்கும்" அதாவது தேவையின்னா பலாப்பழம் வேரில் கூட காய்க்குமாம்.

முடிந்தது போகட்டும், இனியாவது சமுதாயத்துக்கு பிரயோசனமான எல்லா தரப்பினரின் செய்திகளையும் யாரையும் பயப்படாமல் பிரசுரியுங்கள். பிரச்சினை வருமுன்கிற பயம் உங்களுக்கு இருக்குமானால் கந்தூரி,மவ்லூது செய்திகளுக்கு கருத்து பகுதியை மறுப்பது போல அந்த செய்திகளுக்கும் கருத்து பகுதியை மறுத்து விடுங்கள். (ஆனால் அப்படி செய்திகளுக்கு கருத்து பகுதியை மறுக்க கூடாது என்பதே என்னுடைய கருத்து ஆகும்.)

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [15 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16908

சுயநலமற்ற ஜமாத்தின், சமுதாய நலம் ஒன்றே கருத்தில் கொண்டு , ஆனாலும் குரான் ஹதீதில் இருந்தும் சற்றும் பிறழாமல் , நடந்த போராட்டம் இது..

இவர்களின் பல வருட போராட்டத்தின் பலனை தான் நம் சமுதாயம், இன்று மூன்றை சதவிகித இடவொதுக்கீட்டில் அனுபவித்து வருகிறது..இதற்க்கு முன் பல MLA , MP ,MLC களை நம் சமுதாயம் பெயரால் பெற்ற, முஸ்லிம் கட்சிகள், கடந்த ஐம்பது வருடத்தில்,இந்த இட வோடுக்கீடிர்க்காக போராடியதே இல்லை. ஒரு சில அறிக்கைகளோடு சரி..

ஆனால் என்றுமே, தேர்தலில் போட்டியிடாது என்ற கொள்கையோடு, இந்த போராட்டங்களை அறிவிக்கும், நடத்தும் TNTJ க்கு கட்டாயம், அரசியல் லாபம் கிஞ்சித்தும் கூட இதில் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16945

தம்பி விளக்கு அவர்களின் மனப்போராட்டம் உண்மைதான் நீங்கள் அதை M S ஸாலிஹ் இடம் கேளுங்கள்!(அவர்தானாம் இப்ப கத்தரி வைத்து இருப்பது!)

கோழிக்கோடு ஆதில் அவர்களின் ஆதங்கம் அருமைதான்! காரணம்,என்ன என்றால் மார்க்க விசயங்களில் வலைத்தளம் முன்பு போல் இல்லாமல் வீண் விவாதங்களை தவிர்க்கும் முகமாக கருத்துப் பகுதியை தவிர்த்து விடுகிறார்கள் என்று நினைகின்றேன்! போராட்ட விஷயம் அதுபோன்றதல்ல. இங்கு நல்ல கருத்துக்கள் பதியப்படுகிறது. விவாதம் தவிர்க்கப் படுகிறது.

அப்படித்தான் என்றாலும்,இல்லை என்றாலும், இதற்க்கு S K சாலிஹ்தான் எங்களுக்கு விளக்கம் தரவேண்டும்! காரணம் செய்தியை தருவது அவரே!

உண்மையில் கந்தூரி,மீலாது விழா மார்க்க விழா போன்ற நல்ல நிகழ்ச்சிகளை பாராட்ட முடியவில்லையே என்று எங்களுக்கும் கஷ்டமாகவே உள்ளது! தருவாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by Salai. Mohamed Mohideen (USA) [15 February 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16956

இவர்களின் இந்த 'வாழ்வுரிமைப் போராட்டம்' ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கான போராட்டம்...அவர்கள்' தௌஹீத் ஜமாஅத்' மக்களுக்காக மட்டும் போராடியது போல் தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்கள் 'ஜமாஅத்/கொள்கை' மக்களுக்காக மட்டும் போராடியிருந்தால், அச்செய்தியை இங்கு பிரசுரித்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது அல்லது குறைந்த பட்சம் கருத்து பதிவை தவிர்த்து விடுவதில் எவ்வித தவறும் இல்லை. இதே அணுகுமுறை, ஒரு வேளை மற்ற ஜமாத்தினர்/கொள்கையினர் அனைத்து முஸ்லிம்களுக்காக போராடியிருந்தாலும் பொருந்தும்.

மற்றவர்கள் செய்யாத ஒன்றை இவர்கள் துணிவாக செய்கிறார்கள் என்று 'மனதார' பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை நாம் பூண்ட மார்க்க கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதற்க்காக அவர்களுடைய இது போன்ற நற்செயல்களை/போராட்டங்களை குறைந்த பட்சம் விமர்சனம்...குறை கூறாமல் இருப்பது மிகவும் நல்லது.

எந்த ஒரு மார்க்க விசயங்களுக்கு (குறிப்பாக கந்தூரி, மீலாது விழா, மவ்லித், TNTJ மார்கஸ்/மார்க்க பயான்கள், கொள்கை விளக்க கூட்டங்கள், ஒன்றை செய்வது கூடுமா கூடாதா என்று விவாதத்திற்கு வழிவகுப்பவைகள்) நமது வலைத்தளம் வீண் விவாதங்களை தவிர்க்கும் பொருட்டு, கருத்துப் பகுதியை தவிர்த்து விடுவதில் எவ்வித தவறும் இல்லை. ஏனென்றால் இது விஷயங்களில் கருத்து விவாதங்கள் நமக்குள் வெறும் மனக்கசப்பைதான் ஏற்படுத்துகின்றது என்பதனை கடந்த காலத்தில் நாம் அனைவரும் கண்டறிந்த உண்மை.

இது போன்ற செய்திகளுக்கு/கத்திரிகளுக்கு இணைய தளத்தின் அளவுகோல் (Stand point) என்ன என்பதனை இணையதளத்தின் விதிமுறைகள் பக்கத்தில் இடம் பெற செய்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது என்று நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பிடித்ததைப் பாருங்கள்!
posted by SKS, Daruttibyan Network (Kayalpatnam) [15 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16958

காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் நாம் வெளியிடும் செய்திகள் அனைத்திலும் வாசகர்களின் கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்த முனைந்தாலும், பலரும் நல்ல முறையில் பயன்படுத்தவே நாடுகின்றனர்.

நம் சமுதாயத்தில் ஒரு சாரார் சரி என்றும், மறு சாரார் தவறு என்றும் விமர்சிக்கும் அம்சங்கள் குறித்தவை (தவிர்க்க இயலாத நிலையில்) செய்திகளாக வெளியிடப்படும்போது மட்டும் பெரும்பாலும் வாசகர் கருத்து வெளியிடும் வசதி தரப்படுவதில்லை.

இதுபோன்ற செய்திகளில், அக்கருத்தை ஒத்தவர்கள் வாழ்த்த நினைக்கும் அதே நேரத்தில் விமர்சிப்பவரும் வாய்ப்பு கேட்கும் நிலை உள்ளது. பொது விஷயங்களானால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளலாம். அதற்கு நாமும் விளக்கத்தைக் கொடுக்க இயலும். ஆனால், மார்க்கம் என்று வருகையில் அது அவர்களின் மார்க்க உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதோடு மட்டுமின்றி, அவற்றுக்குத் தீர்வு சொல்ல - செய்தி வெளியிடுவோர் மார்க்க அறிஞர்கள் அல்ல என்பதால்தான் கருத்துப்பகுதி தவிர்க்கப்படுகிறது.

உமர் அனஸ் காக்காவுக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by VSM.HASSAN (DUBAI) [16 February 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16965

போராட்டம் நியாயமானதே.ஆனால் பெண்களை அழைக்க தேவையில்லை .எதாவது அசம்பவம் நடந்தால் என்ன ஆகும்.தயவு செய்து பெண்களை போராட்டத்திற்கு அழைக்காதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அட்மினும்........ அற்ப்புத ஊசியும்......!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [16 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16977

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு சகோதரர்களே...... நமது அட்மின் அவர்கள் ரெம்பவும் திறமை சாலி என்பதை இந்த செய்தியின் கமாண்ட் பகுதியை அனுமதித்ததின் காரணத்தால் உணர முடிகிறது. நமது அட்மின்........ அற்ப்புத கத்திரித்தான் வைத்து இருந்தார்....... ஆனால் கையில் அற்ப்புத ஊசியும் மறைத்து வைத்து இருப்பது இந்த செய்தியின் வாயிலாக தெரிய முடிகிறது.

என்னை பொறுத்தவரையில் கமாண்டு பகுதி இதுக்கு தேவை இல்லாதது. இது தாங்களின் உள்நோக்கம் கொண்டது. ஏனெனில் இந்த செய்தி எல்லோருமே.... பாராட்டக்கூடிய இட ஒதுக்கீடு பிரச்சனை. இதில் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் எதிர்த்து நிற்க போவதில்லை. எதிர்த்து நிற்கவும் மாட்டார்கள். என்றாலும்..... நம் சமுதாய தாய்மார்கள், பிள்ளைகளையும் தெருவுக்கு போராட அழைப்பது என்பது ஜீரணிக்க முடியாத மன வருத்தத்திற்கு உட்பட்ட செயல். என்றாலும் இந்த போராட்டம்........ பொது நலத்தில்....... சுயநலம். மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்..... "வேணுமெங்கில் சக்க வேரிலும் காய்க்கும்." அதாவது.... எங்கள் சுய நலத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்.

நம் நாடி நரம்பில் ஒழிந்து கிடக்கும் சைத்தான் நல்லடியார்களை வழி கெடுக்க அவர்களின் நல் அமல்களிலேயே..... உபதேசம் செய்வதை போல சொல்லி வழி கெடுப்பது...... என்பது சைய்தானின் உச்சகட்ட தந்திரம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. விளக்கம் கிடைக்குமா?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா. ) [16 February 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 16979

"""""""நம் சமுதாயத்தில் ஒரு சாரார் சரி என்றும், மறு சாரார் தவறு என்றும் விமர்சிக்கும் அம்சங்கள் குறித்தவை (தவிர்க்க இயலாத நிலையில்) செய்திகளாக வெளியிடப்படும்போது மட்டும் பெரும்பாலும் வாசகர் கருத்து வெளியிடும் வசதி தரப்படுவதில்லை.""""""""

ரொம்பவும் அருமையாக சொல்லியுள்ளார்கள் SKS. அப்படி அவர் குறிப்பிட்டுள்ள அந்த ""தவிர்க்க இயலாத நிலையில்"" அப்படி என்ன தவிர்க்க இயலாத நிலையோ? அப்படி அந்த செய்தியை போட வில்லை என்றால் யார் சண்டைக்கு வரபோகிரார்கள்?

மேலும் SKS சொல்கிறார்:-
"""""இதுபோன்ற செய்திகளில், அக்கருத்தை ஒத்தவர்கள் வாழ்த்த நினைக்கும் அதே நேரத்தில் விமர்சிப்பவரும் வாய்ப்பு கேட்கும் நிலை உள்ளது. பொது விஷயங்களானால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளலாம். அதற்கு நாமும் விளக்கத்தைக் கொடுக்க இயலும். """"" என்று.

வாசர்கர்களின் விமர்சனத்திற்கு விளக்கம் கொடுப்பது இருக்கட்டும், நாம் இந்த செய்தி பிரசுரித்ததின் நோக்கத்தையே விமர்சித்து இருக்கிறோமே அதக்கு இது வரை விளக்கம் தரவில்லையே?

""""இது போன்ற செய்திகளுக்கு/கத்திரிகளுக்கு இணைய தளத்தின் அளவுகோல் (Stand point) என்ன என்பதனை இணையதளத்தின் விதிமுறைகள் பக்கத்தில் இடம் பெற செய்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது என்று நினைக்கிறேன்"""" என்று Salai. Mohamed Mohideen (USA) அவர்கள் அவர்களின் கருத்தின் இறுதியில் சொல்லுகிறார்கள். இது ரொம்பவும் வரவேற்க தக்கது. அப்படி செய்யட்டுமே. நாங்கள் இந்த இந்த செய்தியை தான் போடுவோம் இவைகளை போட மாட்டோம் என்று அறிவிக்கட்டுமே. தங்களுக்கு இஷ்ட்டபட்டால் தோணும்போது ஒரு செய்தியை போடுவது, சில நேரங்களில் கண்டு கொள்ளாமல் இருப்பது இதற்க்கு தானே நாம் விளக்கம் கேட்டுள்ளோம். இனியாவது விளக்கம் கிடைக்குமான்னு பார்ப்போம்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by Administrator (Chennai) [16 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16983

செய்திகள் தேர்வு குறித்து இணையதளம் சில வழிமுறைகளை பின்பற்றுகிறது.

1) நகரில் நடக்கும் அனைத்து செய்திகளும் வெளியிடப்படும்

2) வெளியூர்/வெளிநாடுகளில் நடக்கும் - காயலர்கள் சம்பந்தப்பட்ட (முழு மார்க்க வண்ணம் தவிர்த்த) அனைத்து செய்திகளும் வெளியிடப்படும்

3) சமுதாய இயக்கங்களால் வெளியூர்களில் நடத்தப்படும் (முழு மார்க்க வண்ணம் தவிர்த்த) நிகழ்சிகளில் - காயலர்களுக்கும் அச்செய்தியில் தகவல் உண்டு - என்ற அடிப்படையில் வெளியிடப்படும்

4) இதர செய்திகள் - இணையதள வாசகர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்ற அடிப்படையில் வெளியிடப்படும்

அனைத்து செய்திகளையும் - இணையதளத்தின் செய்தியாளர்கள் - நேரடியாக பதிவு செய்வார்கள். மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்படாத/ அல்லது சந்தேகத்திற்குரிய செய்திகள் மட்டும் ஆசிரியர் குழுவின் கலந்தாலோசனைக்கு பிறகு வெளியிடப்படுகிறது.

கருத்துக்கள் பகுதியினை பொறுத்தவரை - பொதுவாக அனைத்து செய்திகளுக்கும் கருத்துக்கள் அனுமதிக்கப்படுகின்றன. சிலர் செய்திகளை தரும்போதே - கருத்துக்களை அனுமதிக்காதீர்கள் என்ற வேண்டுகோளுடன் செய்தியினை தருகின்றனர்.சில செய்திகளுக்கு - கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் - இணையதளமே கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

இணையதளத்தினை பொறுத்தவரை - ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அவசியம் என்றே நம்புகிறது. இருப்பினும் - கருத்துக்கள் பகுதி வேண்டாம் என்று சிலரும், தணிக்கை செய்து வெளியிடப்பட வேண்டும் என்று வேறு சிலரும், தணிக்கை செய்யாமல் வெளியிடப்பட வேண்டும் என்று வேறு சிலரும் கூறுகின்றனர்.

இணையதளத்தினை பொறுத்த வரை தணிக்கை செய்யாமல் அனைத்து கருத்துக்களையும் வெளியிட விரும்புகிறது. இருப்பினும் - பல கருத்துக்கள், இணையதள கருத்துக்குள் பகுதி கோட்பாடுகளை மீறுவதால், தணிக்கை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

விதிமுறைகளை உணர்ந்து - அனைவரும் தங்கள் கருத்தினை பதிவு செய்தால் எந்த பிரச்சனையும் வராது. கருத்துக்கள் பகுதி - விவாதப்பகுதி அல்ல என்பதனையும் அனைவரும் உணர வேண்டும். கருத்துக்கள் பகுதியில் - செய்தி குறித்த ஒருவரின் கருத்தே எதிர்பார்க்கப்படுகிறது. இது Discussion Board அல்ல. இருப்பினும் பலர் - ஒரு வாசகரின் கருத்துக்கு மறு கருத்து பதிக்க ஆர்வம் கட்டுகின்றனர்.

உதாரணமாக இந்த செய்தியை எடுத்துக்கொள்ளுங்கள். சகோதரர் ஹைதுரூஸ் - கருத்தினை அனுமதிக்க கோருகிறார். சகோதரர் மீராசாஹிப் - கருத்துக்களை அனுமதித்ததை ஊசிப்போடும் செயல் என்கிறார். இணையதளத்தினை பொறுத்துவரை ஒரு செய்தியில்/பிரச்சனையில் அனைத்து தரப்பு கருத்தும் வெளிவர வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்படும் போது, அக்கருத்தினை பதிந்தவர், அவர் சார்பு கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யபப்படுகிறது என நினைக்கிறார். ஆனால் - அவருக்கு மாற்றுக்கருத்து கொண்டுள்ள பலரின் கருத்துக்களும் - விதிமுறைகளை மீறும் போது - தணிக்கை செய்யப்படுவது அவருக்கு தெரிவதில்லை.

ஆகவே கருத்துக்கள் பகுதி குறித்து விமர்சனம் செய்வோர், தங்கள் கருத்து நிராகரிக்கப்பட்டது/தணிக்கை செய்யப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அந்த செய்தி குறித்த பல வகையான கருத்துக்கள் - உங்கள் மூலம் இல்லாவிட்டாலும், பிறர் மூலமாக பதிவாகியுள்ளதா என்பதனை - ஒரு தலைப்பட்சம் என குற்றம்சாட்ட முனைவதற்கு முன்னர் - கருத்தில் கொள்ளவும்.

இறுதியாக இரு விஷயங்கள்:

ஒன்று சகோதரர் மீராசாஹிப் -க்கு:
இது போன்ற (ஆர்ப்பாட்டம், மாநாடு) அனைத்து இயக்க செய்திகளுக்கும் இதற்கு முன்னர் கருத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது புது விஷயம் அல்ல. பார்க்கவும் செய்தி எண்கள் 5196 (TMMK), 5220 (Muslim League) 5553, (TNTJ).

சகோதரர் ஹைதுரூஸ்-க்கு:
இணையதளத்திற்கு வேண்டப்பட்ட செய்தி, வேண்டப்படாத செய்தி என்று ஒன்றும் கிடையாது. வழிமுறைக்கு உட்பட்ட செய்தி, வழிமுறைக்கு உட்படாத செய்தி - அவ்வளவு தான். தாங்கள் இந்த கருத்தினை பதிவு செய்துள்ள காரணம் பலருக்கு புரியாது என நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் நடந்த முஸ்லிம் - கிருஸ்துவர் விவாதம் செய்தி நமது இணையதளத்தில் வெளியிடப்படாத காரணம் குறித்து தாங்கள் இணையதள நிர்வாகிகளிடம் வினவியிருந்தீர்கள். அதன் அடிப்படையிலேயே தாங்கள் இந்த செய்தி குறித்து தங்கள் கேள்வியினை எழுப்பியுள்ளீர்கள் என நம்புகிறோம். அப்போதே தங்களுக்கு இந்த பதிலின் சாராம்சம் வழங்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved