Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:55:35 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8014
#KOTW8014
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 15, 2012
தேவை காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிய ஒப்பந்தகாரர்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3320 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றம் மூலம் அறிவிக்கப்படும் டெண்டர்களில் - நகர்மன்றத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்தகாரர்கள் (Registered Contractors) - பங்கேற்பது வழமை. நகர்மன்ற பணிகளின் மதிப்பு அடிப்படையில் - தகுதியான ஒப்பந்தகாரர்கள் - டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

தற்போது - காயல்பட்டினம் நகர்மன்றத்தில், Class 1 முதல் Class 4 வரையிலான பணிகளை செய்ய - 4 ஒப்பந்தகாரர்கள் பதிவுசெய்துள்ளனர். அவர்கள் -

(1) டி. தலவாணிமுத்து
(2) ஏ. அலக்ஸாண்டர்
(3) எஸ். ரம்போலா
(4) எஸ். சுதர்சன்

Class 5 மதிப்பு பணிகளை செய்ய 6 ஒப்பந்தகாரர்கள் பதிவுசெய்துள்ளனர்.

(1) டி. தங்கப்பூ
(2) எப். முனவர்ரா
(3) எஸ். குமரேசன்
(4) ஏ. முருகன்
(5) ஜெய சூரியா Construction (ஜே.முருகேசன்)
(6) எஸ்.பால்ராஜ்

பொதுவாக - போட்டிகள் இருக்கும் இடத்தில, தரமும் சிறந்ததாக இருக்கும் எனக்கூறப்படுவது உண்டு. காயல்பட்டினம் நகர்மன்றத்தினை பொறுத்தவரை 10 ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்திருந்தாலும், அங்கு நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து -

-- குறைவான தரம்,
-- காலம் தாழ்ந்து பணிகள் நிறைவு செய்யப்படுவது,
-- டெண்டர்களை எடுக்க பதிவுசெய்துள்ள ஒப்பந்தகாரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை

என சில அதிருப்திகள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக - தாயிம்பள்ளி அருகே பேரூந்து நிறுத்தம் (Bus Shelter) அமைக்க - 2 லட்ச ரூபாய் மதிப்பிலான டெண்டர் - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 6 முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகர்மன்றத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒப்பந்தக்காரரும் - அதனை எடுக்க - முன்வரவில்லை. 4 மாதத்தில் (கடந்த டிசம்பர் மாதத்திற்குள்) முடிக்கப்பட்டிருக்க வேண்டிய அப்பணி - இதுவரை துவக்கப்படவே இல்லை.



சமீப காலத்தில் - காயல்பட்டினம் நகர்மன்றம் மூலமாக நிறைவேற்றப்பட்ட பெரிய திட்டம் - சிறப்பு சாலைகள் திட்டம் கீழ் சிமெண்ட் சாலை அமைப்பது. சுமார் 2 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் - நகரின் 13 பகுதிகளில் 5.6 கிலோமீட்டர் நீளத்திற்கும், 3 - 4 மீட்டர் அகலத்திற்கும், சிமெண்ட் சாலை அமைக்கப்படவேண்டும். இதற்கான ஒப்புதல் தீர்மானம் - காயல்பட்டினம் நகர்மன்றம் மூலம் அக்டோபர் 20, 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.



மேலே குறிப்பிடப்பட்ட 13 பகுதிகள் இரு பாகங்களாக பிரிக்கப்பட்டு நவம்பர் 1 (2010) அன்று டெண்டர் விடப்பட்டது. முதல் 7 பகுதிகள் - பாகம் 1 (PACKAGE 1) என்றும், அடுத்த 6 பகுதிகள் பாகம் 2 (PACKAGE 2) என்றும் பிரிக்கப்பட்டன.

பாகம் 1 (PACKAGE 1)
1) கீழநெய்னார் தெரு
2) சித்தன் தெரு முதல் நெய்னார் தெரு வரை (வழி-சிறுபள்ளி)
3) விசாலாட்சிஅம்மன் கோவில் தெரு எதிர் (தெற்கு பகுதி)
4) காயிதே மில்லத் நகர் மெயின் ரோடு
5) மேலநெசவுத் தெரு முதல் வாணியகுடி தெரு வரை
6) பிரின்ஸ் தெரு
7) பைபாஸ் தெரு முதல் சிவன் கோவில் தெரு வரை (வழி அரசு மருத்துவமனை)

பாகம் 2 (PACKAGE 2)
1) இரத்தினாபுரி கிழக்கு தெரு தொலைபேசி நிலையத்திலிருந்து
2) சதுக்கை தெரு முதல் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு வரை (வழி ஜலாலியா மஹால்)
3) புதுக்கடை தெரு
4) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு முதல் கோமான்புதூர் வரை
5) சீதக்காதி நகர்
6) அலியார் தெரு

நவம்பர் 2010 இல் விடப்பட்ட டெண்டரில் - பாகம் 1 திட்டத்திற்கு, இரண்டு ஒப்பந்தகாரர்கள், ஒப்பந்த புள்ளியினை வழங்கியிருந்தனர். அவர்கள் டி.தலவாணிமுத்து மற்றும் எஸ்.ரம்போலா. இதில் தலவாணிமுத்துவின் ஒப்பந்தப்புள்ளி - காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நவம்பர் 19, 2010 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 793 மூலம் கீழ்க்காணும் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.

(1) திரு சு.தலவாணிமுத்து என்பவர் ஒப்பந்தகாரர் வகுப்பு-4 என்பதற்கான சான்றிதழை நாளது தேதிக்கு புதுப்பிக்கவில்லை
(2) தணிக்கை சான்றிதழ்களை கடந்த ஐந்து வருடங்களுக்கு (2006-07 - 2009-10) முழுமையாக சமர்ப்பிக்கவில்லை
(3) சான்றிதழ் அனைத்துக்கும் முழுமையாக நோட்டரி பப்ளிக்-ன் சான்றொப்பம் பெறப்படவில்லை
(4) அன்னாரிடம் உள்ள தளவாட கருவிகள் மற்றும் சாமான்கள் விபரத்திற்கு முழுமையாக சான்றொப்பம் செய்து தரப்படவில்லை


வந்த இரண்டு ஒப்பந்தபுள்ளிகளில் ஒன்று நிராகரிக்கப்பட்டதால் எஞ்சியிருந்த ஒப்பந்தகாரர் எஸ்.ரம்போலா - பாகம் 1 (PACKAGE 1) ஒப்பந்தத்தை வென்றார்.

பாகம் 2 (PACKAGE 2) திட்டத்திற்கு, இரண்டு ஒப்பந்தகாரர்கள், ஒப்பந்த புள்ளியினை வழங்கியிருந்தனர். அவர்கள் தூத்துக்குடி குருஸ்புரத்தினை சார்ந்த எஸ்.ரம்போலா மற்றும் அதே குருஸ்புரத்தினை சார்ந்த எஸ். சுதர்சன் ஆகியோர். இதில் குறைந்த தொகையினை குறிப்பிட்டிருந்த எஸ். ரம்போலா டெண்டரினை வென்றார்.

பணிகள் துவக்கப்பட்ட மூன்று மாதங்களில் 3 இல் 1 பங்கு வேலை முடிக்கப்படவேண்டும் என்றும், மீதி (3 இல் 2 பங்கு) பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனை. இவ்விரு காலக்கெடுவினையும் தாண்டினால் - எஞ்சியிலுள்ள பணியின் மதிப்பில் அபராதமாக 0.1% விதிக்கப்பட வேண்டும். மேலும் 6 மாத கெடு முடிந்து 45 நாட்களுக்கு பிறகும் பணி முடியவில்லை என்றால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, வைப்பு தொகை கையெகப்படுத்தப்பட்டு, ஒப்பந்ததாரர் - வருங்கால டெண்டர்களில் பங்கேற்க்கா வண்ணம் ஒதுக்கப்படவேண்டும் (Black List). இதுவும் நிபந்தனை. சிமெண்ட் சாலை பணி அதன் காலக்கெடுவான 6 மாதங்களை தாண்டி, பல மாதங்களாக முழுமையடையாமல் உள்ளது.

ஒப்பந்தகாரர் கையெழுத்திட்ட சிறப்பு சாலைகள் திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதி ...



இந்த சிமெண்ட் சாலைப்பணி குறித்த முழு ஒப்பந்த விபரங்களை காண இங்கு அழுத்தவும்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தில் புதிதாக ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்வது மிகவும் அவசியம். தகுதியான ஒப்பந்தகாரர்கள், நியாயமான போட்டியில் வெல்லும் டெண்டர் மூலம் தான் - பணிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட முடியும்.

காயல்பட்டினத்தில் பல அனுபவமுள்ள பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் - தங்களை, நகர்மன்றத்தில் பதிவு செய்துக்கொள்ள (Registered Contractors) ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் - டெண்டர் பெறவும், டெண்டர் பெற்றப்பிறகும் - பலருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கும் என்ற அச்சம்.

இது நியாயமான அச்சம் என்றாலும் - புதிதாக பதவியேற்றுள்ள நகர்மன்றம், வெளிப்படையான நிர்வாகத்தினை தருவதற்கு உறுதி அளித்துள்ள சூழலில், தகுதியான பொறியாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, காயல்பட்டினத்தில் - லஞ்சமற்ற , காலத்தில் நிறைவு பெரும், தரமான, நகர்மன்றப் பணிகள் மூலம் புதிய சகாப்தத்தினை துவக்கலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தேவை காயல்பட்டினம் நகர்மன...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [15 February 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 16946

அஸ்ஸலாமு அழைக்கும். இந்த ஒப்பந்தங்க்காரர்களில் நமதூரை சார்ந்த முஸ்லிம்கள் யாரும் இல்லையா? ஏன் அவர்கள் இதுபோன்ற காரியத்தில் இறங்கமறுக்கிறார்கள்? இந்த துறையில் தகுதியான அனைவரும் ஈடுபட்டு தனது திறமையை, திரமாக,நம்பிக்கையாக ,நாணயமாக ,லஞ்சம்,லாவண்யம், ஊழல் போன்ற இழிவான குணத்தை அகற்றி மார்க்கம் அனுமனித்த முறைப்படி மக்கள் பணியாற்ற வரவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தேவை காயல்பட்டினம் நகர்மன...
posted by A.Lukman (kayalpatnam) [15 February 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16953

அஸ்ஸலாமு அழைக்கும்.

நானும் பல பேரிடம் சொல்லிப்பார்த்துவிட்டேன்.யாரும் இது வரை ஒப்பந்தக்காரராக பதிவு செய்துகொள்ள முன்வரவில்லை . RS .1000 .நகரமன்றத்தில் செலுத்தி ஒப்பந்தப்படிவம் பெற்று பூர்த்தி செய்து நமதூர் ரிஜிஸ்டர் ஆபீசில் சால்வன்ஷி certificate எடுத்து சமர்பிக்கவேண்டும். நாம் குறை மட்டும் தான் சொல்லிக்கொன்றிக்கிறோம் அதை களைய யாரும் முன்வருவதில்லை .தயவு செய்து அனுபவம் உள்ளவர்கள் ஒப்பந்தக்காரர்களாக பதிவு செய்ய முன்வாருங்கள் .

A .லுக்மான்.
1 வது வார்டு உறுப்பினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..இத இதத்தாங்க நாங்க எதிபார்க்கின்றோம்
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16954

இது நியாயமான அச்சம் என்றாலும் - புதிதாக பதவியேற்றுள்ள நகர்மன்றம், வெளிப்படையான நிர்வாகத்தினை தருவதற்கு உறுதி அளித்துள்ள சூழலில், தகுதியான பொறியாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, காயல்பட்டினத்தில் - லஞ்சமற்ற , காலத்தில் நிறைவு பெரும், தரமான, நகர்மன்றப் பணிகள் மூலம் புதிய சகாப்தத்தினை துவக்கலாம்!

.இத இதத்தாங்க நாங்க எதிர்பார்க்கின்றோம்!

அப்படி என்றால் நிறைய பேருக்கு லா(இல்லை) போட வேண்டுமே!

எனக்குத் தெரிந்தது எல்லாம் இவர்களுக்கு லா போடுவதை விட லஞ்சம் கொடுக்கிறது மாதிரி கொடுத்து, லஞ்ச ஒழிப்பு போலிசார் மூலம் லாக்கப்பில் போடுங்கோ!

ஆனாலும் கொஞ்சம் கவனமா இருங்க.ஏனா அங்கேயும் போலி(சார்) இருக்க வாய்ப்புண்டு!

ஏனா பணம் பாதாளம் வரை பாயுமாம்!
நானும் எங்கோ படித்து இருக்கிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. :தேவை ஊழழற்ற காயல்பட்டினம நகர் மன்றமே
posted by V D SADAK THAMBY (KAYALPATNAM) [16 February 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 16967

ஒப்பந்தகாரர்களை முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர் என பிரித்து வகை படுத்த வேண்டாம்.

அவர் யாராக இருப்பினும், வருமான நோக்கமுடையவர்தான். எனவே வருமானத்தை எதிர்நோக்கித்தான் டெண்டரில் கலந்து கொள்கிறார்.

போதிய வருமானமின்மை காரணமாகவே அதிக அளவில் ஒப்பந்தகாரர்கள் நம் நகராட்சி பணிகளில் கலந்துகொள்ளவில்லை என்பது இந்த செய்தியின் வாயிலாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு ஒப்பந்தப்பணி பெறுவதற்கு நகராட்சி சார்ந்த நபர்களுக்கு கையூட்டு வழங்கும் வழக்கமும் நம் நகராட்சி பணிகளில் கடைபிடிக்கப்படுகிறது.எனவே ஒப்பந்தகாரர்களை மட்டுமே குறை சொல்ல வேண்டாம்.

ஒப்பந்தகாரர் அவர்தம் பணியினை நிறைவுசெய்த பிறகு,அவர் செய்த பணி குறித்து நற்சான்றிதல் வழங்கும் அரசு/நகராட்சி அதிகாரிதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு.

இவர்களை இயக்கும் நகர்மன்றமே ( தலைவி மற்றும் உறுப்பினர்கள் உட்பட ) அணைத்து பணிகளின் குறைபாடுகளுக்கும் முற்றிலும் பொறுப்பு.

இதில் நான் சுத்தம்/அவர் சுத்தமில்லை என ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தி தப்பித்துக்கொள்ள வழி தேடக்கூடாது .

ஊழலை ஒழிப்பேன் என்றுகூறிதான் எல்லோரும் ஆட்சியை பிடிப்பார்கள் .ஆட்சியை பிடித்த பிறகு ஊழலுக்கு நான் பொறுப்பில்லை என்று கூறி தன பொறுப்பை தட்டிகழிப்பார்கள்.

சிறந்த தலைவர் என்று சொல்லுபவர்கள் , ஊழழற்ற நிர்வாகம் செய்யவேண்டும்.இல்லையெனில் பதவி விலகுவதே நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தேவை காயல்பட்டினம் நகர்மன...
posted by Mohamed Ali (Kuwait) [16 February 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16975

சும்மா பொய் பேசிகிட்டு இருக்க கூடாது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு contractor ஆக பதியு பண்ண மனு கொடுத்து அவர்கள் கேட்ட எல்லா ஆவணங்களும் சமர்ப்பித்தும் மூன்று கூட்டங்களில் எனது மனுவை நிராகரித்தார்கள். ஏன் தெரியுமா ?

Member ஒவ்வருக்கும் Rs 1000/- கவரில் வைத்து கொடுங்கள் approve பண்ணி விடலாம் யன்று சொன்னார்கள். பதியு பண்ணவே Rs. 18000/- யன்றால். Contracts எடுத்தால் என்ன நிலைமையோ? இருந்தும் கொடுக்க ரெடி யன்று சொன்னோம். முதலில் approve பண்ணுங்கள் அடுத்த வினாடியே கொடுக்கிறோம் என்று. ஆனால் எனது மனு மீண்டும் meeting இல் வைக்கவே இந்த பணம் கொடுத்தால் தான் முடியும் யன்று சொல்லிவிட்டார்கள்.

அது போக பழைய contractor கள் எல்லாம் பெருநாள் மற்றும் பண்டிகை யன்றால் பெருநாள் சாமான்கள் என்று வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் அதையும் கவனித்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

இதுபோக அதிகாரிகள் எல்லாம் எங்களையும் கவனித்துகொள்ளுங்கள் என்று இது வேற. பழைய ஒப்பந்த காரர்கள் யாரும் புதியவரை அனுமதிப்பது இல்லை.

பொய் சொல்லவில்லை மனு திரும்பி கூட பெறப்படவில்லை. அவர்கள் மேசயில் பாருங்கள் தூசு தட்ட படாமல் கிடக்கும்.

நான் மட்டும் இல்லை 2, 3 contractors எல்லருக்கும் இதே நிலைதான். எனவேதான் யாரும் interest காட்டுவது இல்லை.

சரி அது முந்தைய நிலை தற்போது புதிய members வந்து விட்டார்கள் நிலைமை மாறிவிட்டது என்று நினைகிறீர்களா இல்லை அதே நிலைதான் அவர்களுக்கு போடோக்கு போஸ் கொடுக்கவே டைம் பத்தாமல் இருக்கிறது.

பொய் சொல்லவில்லை 5 மாதங்களுக்கு முன்னால் கொடுத்த இரண்டு பெயர் மாற்றல் மனுகள் இன்னும் தூசு தட்ட படாமல் கிடக்கிறது ஏன் யன்றால் லஞ்சம் கொடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று கொடுத்த மனு இன்று முடிந்து கொடுக்கிறாக்கள் ஏன் யன்றால் தற்போதும் லஞ்சம்.

Interest உள்ளவர்கள் போய் check பண்ணி பாருங்கள்.

நான் ஏன் 5 மாதங்கள் ஆகியும் முயற்சி எடுக்கவில்லை என்று நினைகாதிர்கள். பல முறை நானும் எனது வீட்டில் உள்ளவர்களும் போயும் நடக்கவில்லை. நான் லஞ்சம் கொடுக்க தயாராக இல்லை.

நான் இந்த முறை தீர்வை ரசீது வரும் வரை காத்து கொண்டு உள்ளேன். வந்த பின்னால். நான் சேகரித்து வைத்துள்ள ஆவனகளோடு collector இடம் புகார் கொடுக்க உள்ளேன்.

என்னதான் நடக்கிறது என்று பார்போம். அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தேவை காயல்பட்டினம் நகர்மன...
posted by OMER ANAS (DOHA QATAR.) [16 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16995

நான் ஏன் 5 மாதங்கள் ஆகியும் முயற்சி எடுக்கவில்லை என்று நினைகாதிர்கள். பல முறை நானும் எனது வீட்டில் உள்ளவர்களும் போயும் நடக்கவில்லை. நான் லஞ்சம் கொடுக்க தயாராக இல்லை. ஏன் தயாராகவில்லை முகம்மது அலி? கொடுங்கள். கொடுத்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் மாட்டி விடுங்கள்! அப்பத்தான் மக்கள் இப்பவும் லஞ்சம் இலஞ்சமாகவே இருக்குகிறது என்று புரிந்து கொள்வார்கள்! செய் செய்துவிட்டு சொல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved