Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:25:13 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6754
#KOTW6754
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 19, 2011
"பி.எஸ்.என்.எல். கோபுரங்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை“
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2597 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பி.எஸ்.என்.எல்., சார்பில் அதிகளவில் அமைக்கப்பட்டிருக்கும் டவர்களால் மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.

பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 120 பி.எஸ்.என்.எல்., டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது மற்ற நெட்வொர்க் டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகளவு இருந்தாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு.சர்வதேச அளவில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்படும். இதை "ஐ.டி.யூ.சி.,' சார்பில் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும்.

குறைந்தது 20 வாட்ஸ் முதல் அதிகபட்சம் 40 வாட்ஸ் வரைதான் பயன்படுத்தபட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், இந்த அளவிலான வாட்ஸ் பயன்படுத்தும்போது குறைந்த தொலைவில் தான் "சிக்னல்' கிடைக்கிறது. "சிக்னல்' அதிகளவில் கிடைப்பதற்காக மொபைல்போன் டவர்கள் அதிகளவில் அமைக்க வேண்டும். இல்லையேல் "ஐ.டி.யூ.சி.,' சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாட்ஸை காட்டிலும் அதிகளவிலான வாட்ஸ் அமைக்கப்பட வேண்டும். ஆனால், 40 வாட்ஸ் காட்டிலும் அதிகளவிலான வாட்ஸ் பயன்படுத்தினால், மனிதர்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.அதனால், பி.எஸ்.என்.எல்., சார்பில் வாட்ஸை உயர்த்தாமல், அதிகளவில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவாக உள்ளது
என்றனர்.

நன்றி:
தினமலர் (17.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பி.எஸ்.என்.எல். கோபுரங்கள்
posted by சாளை நவாஸ் (sg) [19 July 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6150

அப்படீன்னா, மற்ற கோபுரங்களால் ஆபத்து இருக்கிறது என்று அர்த்தமா? அன்று அலைபேசி கோபுரங்களால் ஆபத்தில்லை என்று சொன்னவர்கள் இன்று பி.எஸ்.என்.எல். கோபுரங்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்று சொல்லி அதுவும் 20 to 40 வாட்ஸ் இடையில் இருந்தால் பாதிப்பில்லை என்று சொல்கிறார்கள்.

நம்ம ஊரில் எப்படியும் 80 வாட்ஸ்க்கும் 120 வாட்ஸ்க்கும் இடையில் இருக்கும், ஆறுமுகநேரி வீரபாண்டியபட்டினம் ஊரிலும் கூட நம்ம ஊர் சிக்னல் வருகிறதே?

இந்த பெரும் ஆபத்தை உணராமல் வீடுகளிலும் மண்டபங்களிலும் சொற்ப தொகை வருமானமாக வந்தால் போதும் அடுத்தவர்களின் உடல் நிலைகளை பற்றியெல்லாம் கோபுரம் வைக்க கொடுத்து இருக்கிறீர்களே!!! கோபுரங்களில் இருந்து 600 மீட்டர் வரை கதிரியக்க பாதிப்பு இருக்குமே என்று கூட தெரிந்து வைத்து கொள்ளகூடிய அளவு அறிவு இல்லையே? மெத்த படித்த அறிவு கண்ணை மறைக்கிறதா அல்லது வருமானம் கண்ணை மறைக்கிறதா அல்லது சுயநலம் கண்ணை மறைக்கிறதா என்று தெரியவில்லை.

ஊர் ஒற்றுமை எங்கே போயிற்று? ஊர் பெரியவர்கள் எங்கே போனார்கள்? யாருமே எதுவும் நடக்காத மாதிரியல்லவா இருகிறீர்கள். எவ்வளவு விழிப்புணர்வு முகாம் நடத்தியாச்சு, ஒரு பயனும் இல்லை போலிருக்கிறதே!!

ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம், நாம் தோண்டிய குழியில் நாமே கூட விழலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மனிதர்களால் தான் இந்த கோபுரங்களுக்கு பாதிப்பாம்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [19 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6153

இந்த மொபைல் போன் கோபுரங்களால் அதிக பாதிப்பு உண்டு என்று மனிதனை விட, அறிவு குறைந்த பறவைகளுக்கு நன்கு தெரிகின்றது.

அதிக மின் அழுத்த கோபுரங்களில்( கரண்ட் போஸ்ட்), கூடு கட்டும் பறவைகள், ஏன் இந்த மொபைல் கோபுரங்களில் கூடு கட்டுவது இல்லை. என்றாவது குருவிகளோ, சிறு பறவைகளோ இந்த கோபுரங்களில் நிற்பதையோ, ஒய்வு எடுப்பதையோ பார்த்தது உண்டா... அதற்க்கு தெரிகிறது, நமக்கு..ஊஹூம்..

மொட்டை மாடியில் கோபுரங்களை வைத்து, நாம் கீழே உறங்கிக்கொண்டு இருக்கிறோம்... இப்போ சொல்லுங்க..அறிவு குறைந்தது பறவைகளா அல்லது மனிதர்களா?

இன்னும் ஒரு செய்தி தெரியுங்களா? இந்த கோபுரங்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லையாம், மனிதர்களால்தான் இந்த கோபுரங்களுக்கு பாதிப்பாம்- அடிக்கடி இதில் உள்ள பாட்டரி, வயர் எல்லாவற்றையும் மனிதன் லவட்டிக்கொண்டு சென்றுவிடுகிறானாம்.( லவட்டி என்றால் திருடி).

தம்பி நவாஸு, தூங்குகிற மாதிரி நடிப்பவனை ஏன் நீ எழுப்புகிறாய். நடிக்கட்டும்.. நடிக்கட்டும்..

சரிங்க, அப்போ இந்த மாதிரி அறிவியல் கண்டுபிடிப்புகளை எப்படி செயல்படுத்துவது? அதையும் சிந்திக்கணும் அல்லவா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நாம் தோண்டிய குழியில் நாமே கூட விழலாம்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [19 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6164

ஊரில் எவ்வளவோ விழிப்புணர்வு முகாம் நடத்தியாச்சு, ஒரு பயனும் இல்லை போலிருக்கிறதே!! என்று சாலை நவாஸ் அவருடைய மண உளைச்சலை வெளிபடுத்தி உள்ளார் புற்று நோய் (புற்று நோய் பரவும் முன்) தடுப்புக்காக அவர் அரும் பாடுபட்டவர் - சாலை நவாஸ் சொல்வது போல் கண்டிப்பாக ஒரு நாள் நாம் தோண்டிய குழியில் நாமே கூட விழலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re: wake up call
posted by Moosa (Dubai) [19 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6167

Hats off to Salai Nawas kaka. I am happy that the message which i posted to one of such news published on 11.11.2010 has been reflected in his message under this article.

My message was:
QUOTE:
My Title: Alarming Level of Cancer at Kayalpattinam

Nowadays, it is very sad and alarming to all of us that there is a dramatic increase of cancer diseases at our home town. It could have been one of the cases from their family heredity. At the other hand, we ourselves giving room to our own people the chance of injecting these deadly diseases by letting the Cell Phone Towers just close by Schools and residential areas. There are numerous studies and evidence shows on the radiation effect from these towers to area closer to them. Though we have been listening and knowing from news channels, websites and news paper we ourselves are going behind attractive monetary offer being made by the Cell Phone companies and making grave yard for our own people.

We need to change and look for some kind regulation for these issues prevailing at our home town

UNQUOTE:
Hope some thing would return up in the minds of our people towards building healthy kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:TOWER , POWER ,NEVER ,REMOVER .SUFFER
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [19 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6168

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ நமது செல்டவர் வாழ்கையை நினைக்கும்போது நினைவுக்கு வருகிறது கீழ்கண்ட ஆடயத்துகள்தான். 20:124 وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ 20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا 20:126 قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنسَىٰ 20127 َكَذَٰلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ ۚ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰ 20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான் 20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான் 20:126. (அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். 20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
தகவல். தை,மு.ஹ்மத்துல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அறிவியலும் ... அழிவும்...
posted by Zubair Rahman (Bengaluru) [19 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6179

அறிவியல் தொழில் நுட்பத்தின் வசதிகளை அனுபவிக்கவும் ஆசை, அதனால் வரும் கொடிய பாதிப்பிற்கும் பயம் என்ன செய்வது?.

அறிவியல் எனும் அழகிய அண்ணனை வரவேற்கும் நாம் , அழிவு எனும் அவன் தம்பி கொடுக்கும் கொடுமையான தீர்வுகளையும் ஏற்று தான் ஆகவேண்டும்.

(மனிதன் தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறான்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved