Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:33:05 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6755
#KOTW6755
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 19, 2011
சமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்க வகை செய்யும், சட்டத் திருத்தத்தையும் ஐகோர்ட் ரத்து செய்தது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு கடந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்து, கடந்த 5ஆம் தேதி, ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன் விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி சீனியர் வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், மனுதாரர்கள் தரப்பில் சீனியர் வழக்கறிஞர் விடுதலை, வழக்கறிஞர்கள் வி.செல்வராஜ், எஸ்.பிரபாகரன், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இவ்வழக்கில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இந்த ஆண்டில் கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்களிடம் ஒருமனதான கருத்து இல்லை. சில மாற்றங்கள், இணைப்புகளை ஒவ்வொரு உறுப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே கருத்தை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர். இதுதான் நிலை என்றால், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் அரசு முடிவு, பின்னோக்கி அடியெடுத்து வைப்பது என்பதில் சந்தேகமில்லை; இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கு செல்வது என்பது, ஐகோர்ட் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல், சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்தது போலாகி விடும். அரசின் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நலன்களுக்கு ஆபத்தாகி விடும். தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள சம உரிமையை மீறுவதாக உள்ளது. இது ரத்து செய்யப்படுகிறது. வகுப்புகளை ஆசிரியர்கள் துவங்க ஏதுவாக, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க வேண்டும்.

மூன்று மாதங்கள்: குழு உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகளின்படி, பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்யலாம். ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து, அவற்றை கூடுதல் தொகுப்பாக மூன்று மாதங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.

இன்றைய மாணவர்கள் தான், நமது நாட்டின் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு முயற்சிகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.


இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை தலைமை நீதிபதி வாசித்து முடித்த உடன், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளோம்' என அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆனால், அவர் கேட்ட கால அவகாசத்தை முதல் பெஞ்ச் ஏற்கவில்லை. தங்களுக்கு உத்தரவின் நகல் உடனடியாக வழங்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கோரினார். உத்தரவு நகல் வழங்க, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்பீல் செய்வதற்காக நேற்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், டில்லி புறப்பட்டு சென்றார். தற்போது சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, மேல் முறையீடு செய்தால், அதன் மீது உத்தரவு வர சில நாட்கள் ஆகும். அதுவரை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.

மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்குமா?

சமச்சீர் கல்வி வழக்கில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. 22ஆம் தேதிக்குள், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, மாணவர்களுக்கு இன்று முதல், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் 22ஆம் தேதிக்குள், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தான், ஐகோர்ட் கூறியுள்ளது. 19ஆம் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறவில்லை. எனவே, 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல் முறையீடு செய்ய உள்ளது. கடந்த முறை, விரைவாக தீர்ப்பு பெற்றதுபோல், இந்த முறையும் தமிழக அரசின் அப்பீல் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வலியுறுத்தப்படும்.

நாளையே (இன்று) அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகம் செய்ய ஒரு நாள் போதும். அதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், 22ஆம் தேதி வரை மாணவர்களுக்கு புத்தக வினியோகம் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை.

கல்வி அமைச்சர் டில்லி பயணம்:
சமச்சீர் கல்வி குறித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றனர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஷபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.

நன்றி:
தினமலர் (18.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஏற்பது இகழ்ச்சி அல்ல...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [19 July 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6152

இதுகுறித்த தினமணியின் இன்றைய தலையங்கத்தை http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=448520&SectionID=132&MainSectionID=132&SEO=&Title= என்ற இணைப்பில் காண்க!

Moderator:Comment edited! Pls avoid copy, paste all texts from other source. Giving its link only is enough!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [19 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6159

ஏன் இந்த வீண் பிடிவாதம்? இதனால் நமது அருமை மாணவ & மாணவிகளின் பொன் போன்ற காலநேரங்கள் தான் வீணாகின்றன.அவர்கள் அவர்களின் பாடங்களை எப்போது படிக்க ஆரம்பித்து, எப்போது அவர்களின் தேர்வுகளை எழுத போகிறார்களோ ? பெற்றோர்களாகிய நமக்கு தான் மிகுந்த கவலையாக உள்ளது. விரைவில் நல்ல முடிவு & விடிவு வர நாம் அனைவர்களும் துவா செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [19 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6162

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டும் அதிமுக அரசு எதிர்க்கவில்லை, எல்லா மாணவ கண்மணிகளின் எதிர்கால படிப்பையும் சேர்த்தல்லவா எதிர்க்கிறது. எவர் எக்கேடுகெட்டாலும் கவலை இல்லை எங்களுக்கு "ஈகோ" தான் முக்கியம்.இதில் எத்தனை மாதங்கள் படிப்பு கெட்டாலும் பரவாயில்லை தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டுக்கு போயே தீர்வோம். நாங்கள் சாதாரண ஓட்டையா வாங்கி இருக்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. என்று இந்த மாநிலம் முதன்மை மாநிலமாகுமோ?
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [19 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6163

உங்களோட இந்த அழுக்கு அரசியல், ஆணவப்போக்கு, அதிகார திமிர் உங்களை மட்டும் அல்ல எதிகால தமிழ் நாட்டையே சீரழிக்கும் ..... திருந்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள்... கடந்த காலம் கற்றுக்கொடுத்த அனுபவ பாடம் அதற்குள் மறந்து விட்டதா ? இதற்காகவா தமிழர்கள் இந்த புது அரசை தேர்ந்தெடுத்தார்கள்? இங்கே தான் இவரின் சறுக்கல் மீண்டும் ஆரம்பிக்கிறது! இது மக்கள் நல அரசா? இல்லை தன் நல அரசா? மக்களாகிய நாம் மறுபடியும் முட்டாள்களாகி விட்டோம்! என்று இந்த தமிழகம் இப்படிப்பட்ட அரசியல் கோமாளிகளிடமிருந்து மீளுமோ!! என்று இந்த மாநிலம் முதன்மை மாநிலமாகுமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re: சமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு!
posted by s.s.md meerasahib (riyadh) [19 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6166

அன்பு நண்பர்களே....

வெண்கல குவளைக்குள் தலையை விட்ட பூனையை போல...
மாட்டின்வாலில் கட்டப்பட சர வெடியை போல.........
கழுதையின் வாலில் கட்டப்பட்ட தகர டப்பாவை போல.......
ஆட்டின் வாலில் கட்டப்பட்ட கொழுந்திலையை போல......

அம்மாவின் அகங்காரம், பிடிவாதம் என்ற வாலில் கருணாநிதியால் கட்டப்பட்டு இருக்கிறது இந்த சமசீர் கல்வி திட்டம். இதனை துப்பவும் முடியாமல் விழுங்கவும் தவிக்கும் அம்மாவின் நிலையோ ஐயோ..... பறிதாவம்.

கோர்ட் தீர்ப்பை எதிர் பார்க்கும் அம்மா.!!!
எட்டாத முந்திரிக்கு கொட்டாயி விட்டது போல......
பட்டிக்காட்டான் முட்டாயை பார்த்தது போல......

கோர்ட் தீர்ப்பை எதிபார்க்கும் அம்மா..... இது தேவையாம்மா....? உங்கள் வாளை சுட்டி மடிசாருக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [19 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6170

சமச்சீர் கல்வி குறித்து AIADMK வுடன் தோழமை கட்சியும் சேர்ந்து தான் கும்மி அடித்தார்கள்.

கோர்ட் தீர்ப்பு வந்த பிறகாவது மடிசார் மாமியும் மடிசார் கட்ட உதவியாக இருந்த தோழமை கட்சி மடிசார் மாமாவும் திருந்துவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சமசீர் கல்வி!
posted by Niyaz (Riyadh) [19 July 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 6177

சுய நலம் இல்லாத ஒரு அரசியல் தலைவர் நமக்கு எப்ப கிடைப்பார்!எங்கே செல்லும் இந்த தமிழ் நாடு அதை யார் தான் அறிவரோ!அம்மா மாணவ கண்மணிகளின் கல்வியில் விளையாடதீர்கள்! COME ON DEAR JJ DON'T BE ADAMANT!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அம்மா இங்கே வா.. வா.. அழகிய ஆட்சி தா.. தா..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [19 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6178

அம்மாவின் அன்புப் பரிசுகள்.

இப்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவர்களைய்ம் இப்படி குழப்பத்தில் ஆழ்த்தி முதல் அன்புப்பரிசை அளித்துள்ளார்கள்.

அடுத்து, இன்னும் ஒரு அன்புப் பரிசு, 14 சதவீதம் வாட் வரி. இனி நீங்கள் 100 ரூபாய்க்கு என் மகனின் உள்ளங்கை அளவுள்ள புரோட்டோ, சுக்கா வாங்கினால் - 14 ரூபாய் வாட் வரி செலுத்தனும்.

அடுத்த அன்புப்பரிசு உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கின்றது.. அதாவது கரண்ட் பில் அதிகரிக்கப் போகிறது..

ஆகவே, மக்களே அம்மா கொடுக்கும் ஆடு, மாடுகளை மேய்த்து, பாலையும், இலவச அரிசியையும் வைத்து பால்சோறு சாப்பிட்டு, மின்சாரம் போடாமல் இருட்டில் வாழ பழகிக்கொள்ளுங்கள்.

அம்மா இங்கே வா.. வா.. அழகிய ஆட்சி தா.. தா.. என்று பாடியவர்களை கேட்டால், உடனே 18 மாதம் பொறுங்கள் என்ற பதில் வருகிறது.. என்னத்தை சொல்லுறது.. என்னத்தை எழுதுவது..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சிந்தித்து செயல்படுக!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [19 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6184

நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசியல் கருத்துக்களை எழுதாமல் ஒதுங்கி இருந்தாலும், நாம் சீண்டப்படும்போது பதில் அளித்துத்தானே ஆகவேண்டும். அதிக அளவு நேயர்கள் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுதுவதற்கு ஏற்றார்போல் எனது கருத்தை நான் விதைப்பதில்லை. எதையும் அறிந்தும், அறியாமலும் அரைகுறையாக எழுதுபவனும் நான் அல்ல.

சமச்சீர் கல்வியை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே ஒரே ஒரு கருத்தை, நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி எழுதாமல், இந்தப் பாடத்திட்டம் தரமானது இல்லை என்றும் அதற்காக புத்தகமே இல்லாமல் மாணவர்களின் காலநேரம் வீணாக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்ற ஒரே கருத்தைத்தான் வலியுறுத்தி வந்து இருக்கிறேன். இப்போது நீதிமன்றம் கூறி இருப்பதும் அதைத்தான்.

கால மற்றும் பண விரயம் தவிர்க்கப்பட வேண்டிய அதே நேரத்தில் கல்வியின் தரத்தை கூட்டுவதற்காக,பாடங்களை நீக்குவதற்கும் புதிதாக சேர்ப்பதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உண்டு. விஷயம் இவ்வளவுதான். எடுத்ததெற்கெல்லாம் சாட்டையை எடு, பிரம்பை எடு என்று எழுதிவிட்டு, மத்திய மாநில அரசின் திட்டங்களை, மாற்றி மாற்றி எழுதி மாட்டிக்கொள்ள மாட்டேன். ஒரு வரி யாக இருந்தாலும் ஒழுங்கான வரி யாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஒரு வரி யாக இருந்தாலும் ஒழுங்கான வரி யாக இருக்கும்.
posted by seyed mohamed salih.m.h. (Bangkok) [20 July 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 6199

தோழர் காதர் சொன்னது போல் ஒரு வரியாக இருந்தாலும் ஒழுஙகான வரியாக ஜெயா அரசு தமிழக மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறது.

தோழர் சாளை S.I..ஜியாவுதீன், (அல்கோபார்) அவர்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வருகிறது.

அம்மாவின் அன்புப் பரிசுகள்.
இப்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவர்களைய்ம் இப்படி குழப்பத்தில் ஆழ்த்தி முதல் அன்புப்பரிசை அளித்துள்ளார்கள்.

அடுத்து, இன்னும் ஒரு அன்புப் பரிசு, 14 சதவீதம் வாட் வரி. இனி நீங்கள் 100 ரூபாய்க்கு என் மகனின் உள்ளங்கை அளவுள்ள புரோட்டோ, சுக்கா வாங்கினால் - 14 ரூபாய் வாட் வரி செலுத்தனும்.

அடுத்த அன்புப்பரிசு உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கின்றது.. அதாவது கரண்ட் பில் அதிகரிக்கப் போகிறது..

ஆகவே, மக்களே அம்மா கொடுக்கும் ஆடு, மாடுகளை மேய்த்து, பாலையும், இலவச அரிசியையும் வைத்து பால்சோறு சாப்பிட்டு, மின்சாரம் போடாமல் இருட்டில் வாழ பழகிக்கொள்ளுங்கள்.

அம்மா இங்கே வா.. வா.. அழகிய ஆட்சி தா.. தா.. என்று பாடியவர்களை கேட்டால், உடனே 18 மாதம் பொறுங்கள் என்ற பதில் வருகிறது.. என்னத்தை சொல்லுறது.. என்னத்தை எழுதுவது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by MOHAMMED IKRAM (saudi arabia) [20 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6202

நண்பர் கவிமகன் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நீதி மன்றம் & நீதிபதிகலின் தீர்ப்புக்கும் ஜெயா செவி சாய்ப்பது முறைதானே ? நீதிக்கு தலை வணங்கு என்று அவர் தலைவன் சொன்னதையாவது ஜெயா கேட்க வேண்டாமா ? சோ சொல்வதை மட்டும் கேட்டால் போதுமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. குதிரை கிடைக்குற வரைக்கும் கழுதை..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [20 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6205

விஜய்காந்த் சொன்ன மாதிரி குதிரை கிடைக்குற வரைக்கும் கழுதை மேல ஏறி போக வேண்டியது தான்.

இந்த கருத்தை நான் FACEBOOK ல போட்டதற்கு என் நண்பர் மறுமொழி எழுதி இருந்தார் “ பாருடா விஜயகாந்த் எல்லாம் கருத்து சொல்ல வந்துட்டான் , அவன் மகனையே +2 ல 600 மார்க்கு மேல எடுக்க வைக்க முடியலே இவன் எல்லாம் பேச வந்துட்டான்னு “. அதற்கு நான் பதில் எழுதினேன் “ஆமாம் ஆமாம் நீங்க சொல்றது ரொம்ப சரி , கருணாநிதி தான் இதற்கு பதில் சொல்ல சரியான ஆளு ,ஏனா மகன் அழகிரிய IAS படிக்க வச்சிருக்காரு , ஸ்டாலின IPS படிக்க வச்சிருக்காரு அதுனால அவர் தான் கருத்து சொல்ல சரியான ஆளு இல்லையா ...? போங்க தம்பி பிள்ளை குட்டிகள படிக்க வைக்குற வேலைய போய் பாருங்க . கருத்து சொல்லுற ஆளை பார்க்காதீங்க கருத்து நல்ல இருக்கானு மட்டும் பாருங்க . சட்டி கோணல இருந்தாலும் கொலக்கட்டை வேவுதாணு மட்டும் பாருங்க.

அதுனால தமிழக அரசிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இனியும் காலம் கடந்ததால் நம் மாணவ கண்மணிகளின் எதிர்காலம் பாலகிவிடும். அதனால் நம் மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த ஆண்டு மட்டும் இந்த கல்வித் திட்டத்தை அமல்படுத்தி வருகின்ற ஆண்டு சிறந்த கல்வியை கொடுங்களேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நண்பர்களின் கவனத்திற்கு!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [21 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6225

அஸ்ஸலாமுஅலைக்கும்!

நண்பர் MH .ஸாலிஹ் : நான் இந்தப்பகுதியில் வரைந்துள்ள கருத்து தங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.காரணம்,நான் எழுதியமுறை அந்தமாதிரி. அது புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும். இதில் உங்கள் தவறு ஏதும் இல்லை.

VALUE ADDED TAX எனப்படும் VAT வரி ஜெயலலிதாவால் கொண்டு வரப் பட்டதல்ல. அது 14 % என்பது பொதுவானதும் அல்ல. இது உங்கள் மேலான கவனத்திற்கு மாத்திரம். மறுப்பு இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம்.

சகோதரர் IKRAM : உயர்நீதி மன்றத்தில் ஒருவரது தரப்பு நிராகரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது நீதிக்கு எதிரானதா? தயவுசெய்து விளக்கவும்.

சகோதரர் தைமியாஹ்: சமச்சீர் புத்தகத்தில் இருந்து கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்களது தாகம் என்ற கவிதை நீக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நாற்பதாண்டு காலம் சினிமா சாராத, சிறப்பான பல கவிதைகளைத் தந்த ஒரு சிறுபான்மைக் கவிஞனின்,அரசியல் சார்பற்ற கவிதையை குரோத மனப்பான்மையுடன் நீக்கி இருப்பது, காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன? அந்தக் கவிதையின் தரத்தைக் குறித்து மாறுபட்ட கருத்து இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம். அனைவருக்கும் நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அம்மையாரின் வீண் பிடி(வாதம்)
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6235

ஒன்றை மற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்..இந்த மேல் முறையீடு என்பது, இந்த அம்மையாரின் வீண் பிடிவாதத்தையும், இன்னும் தான் திருந்தவில்லை என்பதையும் தான் காட்டுகிறது.

உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில், எப்படி வகுப்பு 2 முதல் 5 வரை, 7 முதல் 10 வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமுல்படுத்துவது என்று அலசி அறியவே கமிட்டி அமைத்ததே தவிர, பாடப்புத்தகம் சரி இல்லை, தரம் இல்லை, பாடப்புத்தகங்கள் மோசம் என்று அறிய சொல்லவில்லை. சொல்லாத வேலையை இந்த பொம்மை கமிட்டி செய்து நன்றாக நீதி மன்றத்திடம் கொட்டு வாங்கியது.

அம்மையாரின் நோக்கமே இந்த சமச்சீர் கல்வியை நிரந்தரமாக மூடனும் என்பது தான்.

நன்றாக அவதானித்துப்பாருங்கள், மே 13 அன்று தேர்தல் முடிவுகள் வந்தது சரிங்களா, மே 16 அன்று அம்மாவின் புதிய அரசு பொறுப்பேற்றதா, முதல் கேபினெட் கூட்டம் 22 மே அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றதா, இந்த ஒருமணி நேரத்தில் சமச்சீர் கல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக மே 23 அன்று சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கைவிடுவதாக சட்ட திருத்தம் கொண்டுவந்து, சூட்டோடு சூடாக புதிய புத்தகங்கள் அச்சடிக்க ஆணை வழங்கப்படுள்ளது, இப்போது புரிந்து விட்டதா.

சமச்சீர் கல்விக்கு பதிலாக பழைய பாட திட்டத்தை பயன்படுத்தலாம் என்ற அரசின் முடிவு, எந்த நிபுணர் குழுவின் ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல், மறு ஆய்வு செய்யப்படாமல், ஒரு மணி நேர அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

இந்த அம்மையாரின் நோக்கம் சமச்சீர் கல்வியை தள்ளி வைப்பது என்ற போர்வையில், சமச்சீர் கல்வியை கைவிடுவது என்று தான். இப்படி தான் இவர்களின் நடவடிக்கைகள் காட்டுகிறது.

பயிரில், களை இருந்தால்,களையை பிடுங்கி, மருந்து அடித்து பாதுகாப்பதை விட்டு விட்டு....என்னத்தை எழுத..விரல் தான் வலிக்கிறது.

இன்னும் ஒன்றை பாருங்கள்,

இந்த செலவை எல்லாம் கூட்டிப்பாருங்கள்..

- அரசின் சார்பாக வாதாட திரு. பி.பி.ராவுக்கு ஒருமுறை வாதாட 5 லட்சம் ரூபாய் மொய் எழுதணும்.

- சென்னை வர விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்.

- அவர் கூட வரும் ஜூனியர்களுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்

- சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை

-தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அடங்கிய குழு தற்போது டெல்லி சென்றுள்ளதே,அதற்க்கு குறைந்தது 25 - 35 லட்சம் ரூபாய் செலவு..

-புதிய புத்தகம் அடிக்கும் செலவு

-பழைய புத்தகத்தில் ஸ்டிக்கர் ஓட்டுவது, கிழிப்பது போன்ற செலவு..

இவைகள் எல்லாம் நம்முடைய வரிப்பணம் தானே..

இந்த ஆதங்கத்தில் தான் எங்களின் கருத்துக்களை கொட்டுகிறோம். நல்லது செய்தால் பாராட்ட மனம் வருபவனுக்கு தான் தவறு செய்தால் கொட்டவும் மனம் வரும். ஒருத்தரை பிடித்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஜல்லி அடிக்கக் கூடாது.

சமச்சீர் பாடத்தில் தேவை இல்லாத பகுதிகள் இருந்தால் அந்த களையை புடுங்கி எறிய வேண்டியது தானே..

நிறைய டைப் அடித்து வைத்து உள்ளேன்.. தேவைப்பட்டால் கட் அண்ட் காப்பி பண்ணிவிடலாம்..

சாளை S.I. ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வாழ்க தமிழகம்..
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6238

ஆரோக்யா பால் அரை லிட்டர் நேற்று வரை 16 ரூபாய், இன்று முதல் 17 ரூபாய்.

நகரங்களில் 5 ரூபாய்க்கு விற்ற டீ, நாளை முதல் பால் விலை உயர்வால் 7 ரூபாயாம்..பாதி கப் நுரை ததும்ப டீ குடிக்க பழகணும்.

இன்று காலை நண்பனிடம் இருந்து போன் வந்தது..நண்பர்கள் சாப்பிட சென்றுள்ளார்கள். பில் வந்தது சாப்பிட்டது 780 ரூபாய், கூடுதலாக வாட் வரி,சர்வீஸ் சார்ஜ் சேர்த்து 160 ருபாய் வந்ததாம்...கொடுமை இல்லையா.

வரியே இல்லாத பொருளுக்கு எல்லாம், படிப்படியாக வரியை கூட்டாமல்,செவிட்டில் அறைந்த மாதிரி ஒரே அடியாக வரியை அதிகரித்து உள்ளார்கள்.

இதை எல்லாம் சொல்லக்கூடாது. கம்ன்னு இருக்கணும். OK அப்படியே பழகிக்கொள்கிறோம்..

வாழ்க தமிழகம்..

சாளை S.I. ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Zubair Rahman (Bengaluru) [21 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6239

ஆளுங்கட்சியைச்சார்ந்த ஆதரவாளர்கள் ( கூட்டணியும் சேர்த்து ) யாரும் தனது அரசு அல்லது தன் தலைவனோ, தலைவியோ செய்யும் மக்கள் விரோத கருத்துக்கு ஒரு காரணம் தயார் படுத்திக்கொண்டு தான் களத்தில் இறங்குவார்கள். அதானால் மக்களாகிய நாம் அந்த விசயங்களை பற்றி வாதாடினால் நம் நேரம் வீண்.

இவர்களில் ஒரு சிலருக்கு தான் சமுதாய "உணர்வு" "மக்கள் உரிமை" கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by vsm ali (kayalpatnam) [21 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6240

வீண் பிடிவாதம். இது இப்படியே நீடித்தால் , பரீட்சை எழுதாமலேயே , ' நீங்களெல்லாம் பாஸ் ஆகிவிட்டீர்கள் " என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. ( ஆட்சியின் ஆரம்பமே இப்படி உள்ளதே. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ ? )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பார்வை இடுங்கள்.. ப்ரீ ஆக இருந்தால்.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6241

தமிழக வாட் வரி பற்றிய விபரம்..(மத்திய அரசின் வட் வரியை அல்ல) ,இந்த சுட்டியை சொடுக்கவும்..

http://www.tnvat.gov.in/tamil/RATES_OF_TAX.pdf

மேலும், திரு S . கிருஷ்ணன்,தமிழக விற்பனை வரி கமிஷ்னர் அவர்கள் நேற்று வெளியிற்ற சுற்றறிக்கையையும் பார்வை இடுங்கள்.. ப்ரீ ஆக இருந்தால்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. முதலமைச்சர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும்
posted by salih (Bangkok) [21 July 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 6242

சமச்சீர் கல்வி வேண்டுமென்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பம்,வேண்டுகோள்,நம்பிக்கை இதற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு அரசுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைகால தடை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்ததோடு,ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கக்கூடியது மட்டுமின்றி மனநிறைவையும்,மகிழ்வையும் தருகிறது.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால்,அந்த விழாவுக்கு அவர் செல்லவில்லை.அதை மக்கள் யாரும் குறை சொல்லவில்லை.உண்மையில் முதல்வர் மிகுந்த சாதுரியமாக நடந்து கொண்டுள்ளார் என்றே பொதுவாக எல்லோரும் கூறினார்கள்.

அந்தச் சாதுரியம் சமச்சீர் கல்வியில் ஏன் இல்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு போன்றதொரு தீர்ப்பு கலைஞர் ஆட்சியில் வந்திருக்குமானால், முதலமைச்சர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாகக் கூறியிருப்பார். ஆனால் முதிர்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், இதில் வெற்றி தோல்வி பார்க்காமல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்களின் நன்மைக்காக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது திராவிடப் பராம்பரிய அரசியலில் நாகரீகத்தின் வெளிப்பாடாகும். இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் ஜெயா அரசு செயல்பட வேண்டும். இத்தோடு இன்னொரு செய்தியையும் சொல்லிக்கொள்கிறேன் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவில் திருப்பணிக்கு ரூ.18.50 லட்சம் நிதி. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவு.

சமச்சீர் கல்வி பற்றி மறுப்பு இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. பாசாங்கு!...
posted by kavimagan (dubai) [21 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6243

தூங்குபவர்களை எழுப்பி விடலாம்.பாசாங்கு செய்பவர்களை? எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஜெயாவுடைய திட்டமாக புரியாமல் எழுதியவர்கள்,தானாகவே மேலும் மேலும் தங்களது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்கள். VAT என்னும் வரி ஜெயாவினால் கொண்டு வரப்பட்டதல்ல. அது 14 % என்பது பொதுவானதும் அல்ல என்று நான் எழுதியதற்கு ஆதாரமாக அது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்கு,தேடிப்பிடித்து லின்க்கையும் தந்திருக்கின்றாகள்.அதிகம் படித்தால் அதன் விளைவு இதுதான்.

மத்திய அரசு ஒரு திட்டத்தை அமுல்படுத்தும்போது பாதிக்கப்படும் மாநில அரசுகள். கூடுதல் விற்பனை வரியை விதிக்கலாம் என்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பாமர மக்களும் அறிந்த ஒன்றை .ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்று கூறுவது அப்பட்டமான கருத்து மோசடியாகும்.

அப்படியானால் வாட் வரியை தளர்த்துவதாக மேற்கு வங்க அரசும்.மேகலாயா அதைத்தொடர்ந்து தமிழக அரசு அறிவித்து சிலிண்டர் விலையைக் குறைப்பதாக கூறியது எப்படி? நமது அறிவு மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய அளவில் சரியாக ஆய்வு செய்து எழுத வேண்டும்.நமது நேயர்கள் அறிவாளிகள்.வார்த்தை ஜாலங்களால் எதையும் சாதிக்கலாம் என்ற காலம் மலையேறிவிட்டது.நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் ஏனோதானோவென்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகவேண்டாம் என்பதை மட்டும்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [22 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6245

பரிதாபத்திற்குறிய “ தமிழகம் “

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்.

கழுதைக்கு வாக்கப்( போ )பட்டால் அப்படித்தான். முன்னாலே போனால் கடிக்கும். பின்னாலே போனால் உதைக்கும்.

இதையும் புகழ்வதற்கு இஸ்லாத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் பரிதாபத்திற்குறிய ” தமிழகம் ” என்றுதான் சொல்ல வேண்டும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. முதிர்ந்தவரின் இலட்சனம்
posted by kavimagan (dubai) [22 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6249

நிருபர்(டெல்லி) : ஐயா! தா.கிருட்டிணன் கொலையில் தங்கள் மகன் அழகிரிக்கு தொடர்பு இருக்கிறதாமே?

முதிர்ந்தவர் : நீதாண்டா கொலைகாரன்

..... .......................................................................................................................

18 வயது பெண் நிருபர்: காங்கிரஸ் கட்சியுடன் ஆன தங்களது உறவு எவ்வாறு இருக்கிறது?

முத்தமிழ் அறிஞர் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவைப்போல இனிப்பாக இருக்கிறது.

.......................................................................................................................

ஐந்தாண்டுகாலம் அடுக்கடுக்கடுக்காய் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாய் மக்கள் அடித்த ஆப்பு முத்தமிழ் அறிஞரை கொஞ்சம் பொறுப்பாக பேச வைத்திருக்கிறது. சமச்சீர் கல்வி பற்றி முந்தைய செய்திகளின்போது பக்கம் பக்கமாக விமர்சிக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள், இப்போது வாருங்கள் விவாதிப்போம் என்று வாய்ச்சவடால் அடிப்பதை எண்ணி சிரிப்புதான் வருகிறது.

சமச்சீர் கல்வி என்பது கருணாநிதியின் திட்டமும் அல்ல. ஜெயலலிதாவின் திட்டமும் அல்ல.ஏராளமான குறைகள் இருந்தாலும்,பணம் மற்றும் கால விரயத்தை தடுக்கும் விதமாக அது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும்,கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்களது கவிதை போன்ற நல்லபல பாடங்கள் நீக்கப்பட்டது கண்டனத்திற்குறியது என்பதையும் இதே பகுதியில் நான் பதிவு செய்து இருக்கிறேன்.அப்புறமும் சமச்சீர்கல்வி குறித்து விவாதிப்போம் என்று சொல்பவர்கள்,சமச்சீர்கல்வியின் எந்த அம்சம் குறித்து விவாதிக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இன்னொரு நேயர் என்னவென்றால் இஸ்லாம், கிருத்துவம் என்று கொஞ்சம்கூட சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறார்.சரியான காமடிதான் போங்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Javed Nazeem (Chennai) [22 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6252

அரசின் சில தவறான செயல்களுக்கு பின்னணியாக சில பேர் இருக்கக் கூடும் - அனைத்து அரசுகளிலும் இது உண்டு. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்று கீழே:

கடந்த ஆதிமுக ஆட்சியில், நண்பன் அன்வர் உதவியுடன், தலைமை செயலகத்திற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது கல்வி அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் . அதில் ஒரு பெண்மணி (முன்னால் MLA என எண்ணுகிறேன்), தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைகழக துணை வேந்தர் (அவரும் பெண் தான்), முதல்வரை பற்றி ஏதோ தவறுதலாக கூறி விட்டதாகவும் அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் விடாப்பிடியாக வலியுறுத்தினார். என்னை பொறுத்த வரை அவர் தன்னுடைய தனிப்பட்ட கணக்கை தீர்க்க விருபினார் அல்லது முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க விரும்பினார். இப்படிப் பட்டவர்களை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி விஷயத்தில் பிடிவாதம் யாருடையது என்று தெரியவில்லை - ஆனால் இது பெரும் அவப்பெயரை வாங்கித் தருவதை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Javed Nazeem (Chennai) [22 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6253

கவிமகன், full attack mode ல இருக்கீங்க போல. இங்கு பதிவிடும் பெரும்பாலானோர் செய்தியை சார்ந்து, அரசின் செயல்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்கிறார்கள். ஒரு அஜன்டாவோடு செயல் படுவதாக கருத வேண்டாம். சமச்சீர் கல்வி நல்லது போலத்தான் தெரிகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பற்றிய கவலை உண்மையானால் அவர்களை உடனடியாக கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும். அப்படியே மாற்ற வேண்டுமானாலும் அடுத்த கல்வியாண்டில் மாற்றலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by mohammed ikram (saudi arabia) [22 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6258

ஜெயா வின் தற்போதய ஆலோசகர் சோ தான்.அவர் என்ன சொல்கிரார்ரோ அதை தான் ஜெயா இப்போது கேட்பார்.நாம் வீணாக முட்டி மோதி கொள்வதில் அர்த்தம் இல்லை. எது எப்படியோ , நம் சமுதாயதிற்கு நல்லது நடந்தால் நமக்கு நல்லது . அதை தான் நாம் விரும்புகிறோம்.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. கசப்பு மருந்தை மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கும்முன்
posted by salih (Bangkok) [22 July 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 6270

தமிழக முதலமைச்சராக ராஜகோபாலாச்சாரியார் (ராஜaஜி) இருந்தபோது கல்வித்திட்டத்தில் குலக்கல்வி முறை என்ற கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தக் குலக்கல்வி முறையானது பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் மற்றும் திராவிட கட்சிகளால் வன்மையாக எதிர்க்கப்பட்டது. இந்துமதக் கோட்பாடுகளுள் ஒன்றான நால்வர்ண ஜாதிய முறையை அங்கீகரிக்கும் வகையில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் இருந்தால் பார்ப்பனர் அல்லாத அனைவருமே இதை எதிர்த்தனர்.

மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானதால் குலக்கல்வி முறைக்கு தொடக்கத்திலேயே சம்மட்டியடி கொடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. தற்போதைய அதிமுக அரசின் சமச்சீர் கல்வி முறைக்கு எதிரான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, குலக்கல்வி திட்டம் சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் தலைதூக்கியுள்ளதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது!முந்தைய திமுக தலைமையிலான அரசு கொண்டுவந்த திட்டம் என்பதைத் தவிர வேறு உருப்படியான காரணம் எதுவும் அரசிடம் இல்லாத நிலையில் இவ்விசயத்தில் கூட்டணி கட்சிகளும் வாய்மூடி நிற்கின்றன!

முதிர்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், இதில் வெற்றி தோல்வி பார்க்காமல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்களின் நன்மைக்காக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது திராவிடப் பராம்பரிய அரசியலில் நாகரீகத்தின் வெளிப்பாடாகும்.

சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் குலக்கல்வி முறையை புகுத்தாமலிருக்க வேண்டிய கசப்பு மருந்தை மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கும்முன்னதாக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜெயா அரசு செயல்பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved