Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:34:28 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7774
#KOTW7774
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 27, 2011
தல கால் புரியல... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7096 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் தற்போது கல்யாண சீசன். பொதுவாக டிசம்பர் மாதங்களில், குழந்தைகளின் அரையாண்டு விடுமுறையைக் கருத்திற்கொண்டும், ஏப்ரல் - மே மாதங்களில் கோடை விடுமுறையைக் கருத்திற்கொண்டும், நகரிலுள்ள இல்லங்களில் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வழமை உள்ளது.

இந்நிகழ்ச்சிகளின்போது விருந்துகள் தடபுடலாக நடைபெறும். அவ்விருந்துகளுக்காக பல நூற்றுக்கணக்கில் ஆடுகள் அறுக்கப்படும். அவ்வாறு அறுக்கப்படும் ஆடுகளின் இறைச்சி மட்டும் எடை கணக்கில், நிகழ்ச்சி நடத்தும் குடும்பத்திற்கு விற்பனை செய்யப்படும். அதன் தலை, கால், குடல் ஆகியவற்றை மொத்த விலை நிர்ணயித்து சிலர் எடுத்துச் செல்வர்.

அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் தலை, கால்களிலுள்ள முடிகள் வெந்நீரில் வக்கியெடுப்பதன் மூலம் நீக்கப்படும். பின்னர், காயல்பட்டினம் ஆஸாத் தெரு முனையில் அவை மொத்தமாக விற்பனைக்கு வைக்கப்படும்.

பொதுவாக இறைச்சிக் கடைகளில் இவற்றை வாங்கும் பொழுது விற்கப்படும் விலையை விட இது சற்று மலிவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்லும் வழமை உள்ளது.





பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இவ்வாறு தலை, கால், குடல்கள் தனி வணிகர்களால் விற்கப்படும் வழமையில்லை. அந்தந்த திருமண வீடுகளைச் சுற்றிய குடும்பத்தினரே அவற்றை மிகவும் மலிவாக வாங்கிச் செல்வர். ஆனால், தற்போது அவற்றை தனி வணிகர்கள் விற்பதால் விலையில் பெரியளவில் மலிவு என்று சொல்லிவிட இயலாது.

கடைகளில் 50 ரூபாய் அளவில் விற்கப்படும் தலை இங்கும் அதே விலையிலோ அல்லது அதை விட சற்று குறைந்த விலையிலோ விற்கப்படுகிறது. அதுபோல, 4 கால்கள் கொண்ட ஒரு கால் செட் கடையிலும் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே விலையிலேயே இங்கும் விற்கப்படுகிறது. தற்காலங்களில், மிகச் சிறிய குட்டி ஆடுகளே அறுக்கப்படுவதால் தலை, கால், குடல்கள் (விலையைத் தவிர) மிகச் சிறியதாகவே உள்ளன. குடல் 20 முதல் 25 ரூபாய்க்கு இந்த நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம், சாதாரணமாக ஹஜ் பெருநாள் காலங்களில் ஒரு செட் தலை, காலை வெந்நீரில் வக்கியெடுப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றிருக்க, இந்த நடைபாதைக் கடைகளிலுள்ள தலை - கால்கள் சில மணித்துளிகளில் வக்கியெடுத்து வரப்படுகிறது.

இதுகுறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், இவை ப்ளேடு கத்தி கொண்டு மயிரிறக்கப்படுவதில்லை என்றும், சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி மொத்த மயிர்களையும் வழித்தெடுத்து விடுவதாகவும் கூறுகின்றனர். ப்ளேடு கத்தி கொண்டு மயிரறக்கப்படும் தலை - கால்களில் அடிமயிரை உணரும் வகையில் சொறசொறப்பு காணப்படும் என்றும், ஆனால் இதுபோன்ற நடைபாதைக் கடைகளிலும் - இறைச்சிக்கடைகளிலும் தற்காலங்களில் விற்கப்படும் தலை - கால்கள் முழுமையாக வழுவழுப்பாகவே இருக்கும் என்றும், இந்த வேறுபாடுகளைக் கொண்டு ஏதோ சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே இவை வக்கியெடுக்கப்படுகின்றன என்றும் அறியலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இனம்புரியாத பல நோய்கள் உலாவரும் இக்காலகட்டத்தில், இதுபோன்று நடைபெறுகிறதா என ஆய்ந்தறிவது அத்துறை சார்ந்த பொறுப்பாளர்களின் கடமையாக உள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தல கால் புரியல... (?!)...
posted by HAMZA (RIYADH) [27 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15117

மச்சான் ஒரு தொழில்நுட்பமும் இல்லை...

வெந்நீரில் சோடாஉப்பு போட்டு கழுவி பார் தெரியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வந்து விடும்...வெந்து விடும்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15122

அப்படி ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை.

தம்பி ஹம்ஜா சொன்னது போல, சுண்ணாம்பில் கொஞ்ச நேரம் பூசி வைத்துவிட்டு ஒரு இழுப்பு இழுத்து விட்டால் அவ்வளவு முடியும் வந்து விடும்.. குடலை கழுவுவதும் இப்படிதான். அவ்வளவு பூவும் ஒரு இழுப்பில் பூ மாதிரி வந்து விடும். குடலும் சீக்கிரம் அடுப்பில் வெந்து விடும்.

எப்படிதான் இதை கண்டு பிடிப்பது. .? அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. மஞ்சள் தூளில் ஒரு துண்டை (தோல் பகுதி துண்டை) ஒரு பிரட்டு பிரட்டி சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் சிகப்பு கலராக மாறி இருக்கும்.

-வேறு டெக்னிக் இருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்ளலாம்.

இது உடல் நலத்திற்கு கெடுதலா?

என்ன சந்தேகம்.. கண்டிப்பாக.. கெடுதல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சாப்பாடு போச்சே
posted by velli muhaideen (chennai) [27 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15126

ச்சே இந்த தடவை ஊர்ல கல்யாண சாப்பாடு மிஸ் ஆகிட்டே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தல கால் புரியல... (?!)...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [27 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15134

அன்புள்ள வெள்ளி முஹ்யிதீன் அவர்களே...

அதுக்கு என்ன பண்றது... வேனும்ன கல்யாண சாப்பட இங்க நடத்த சொல்லுவோமா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தல கால் புரியல... (?!)...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [27 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15135

"ஆட்டு குடலில்" வாருவகுச்சியை வைத்து குத்தி வைட்டமின் "P" யை வெளியில் எடுத்து காலை முதல் லுஹர் பாங்கு வரை "குடலை" கழுவி நம் தாய்மார்கள் ஆக்கிதரும் "குடல் கறி" டேஸ்ட்டுக்கு ஈடு இணையில்லை..

சிலர்
பறப்பதில் "ப்ளைட்டயும்",
நீந்துவதில் "கப்பலயும்"
நடப்பதில் "அதையும்" மட்டுமே விட்டுவைக்கிறார்கள்....

அனேகமாக "கடாவில்" தோலும், கொம்பும் மட்டுமே மிஞ்சும் என்று நினைக்கிறேன், ஆசைதீர திங்க ஆசைபடும் நாம் கொஞ்சம் சிரமப்பட்டு நாமே கழுவிகொள்ளலாம் இல்லை நாம் உதவலாம்......

இது மாங்காயை பழுக்க வைக்கும் "கார்பைடுகல்" டெக்னிக்கு போல உள்ளது...

Anyhow
Municipality should take a serious action against the violator who is playing with public health by using bad chemicals....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தல கால் புரியல... (?!)...
posted by Seyna (Bangkok - Thailand ) [27 December 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 15138

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆகா மொத்ததுல விடியற் காலைல அறுத்த கடா வின் தலை , காலு எல்லாம் உடனே வக்கமா ரத்தத்தோட காலைல எட்டு மணி வரை ஓரமா குமிச்சி வச்சிட்டு எட்டு மணிக்கி அப்றம் அதை வக்கி , முக்கு கடைக்கு எட்டு மணிக்கு வந்து அதை பத்து மணி முதல் பணி ரண்டு மணிவரை வீட்டில் கொண்டு வைத்து , வேலை கரி வந்து அதை கழுவி ஆக்கும் பொது மணி சரியாய் பண்ணி ரண்டு ஆகி விடும் ,

இப்படி விலை குறைச்சல்ன்னு வங்கி திண்ட ஏங்க கான்செர் வராது, கொலஸ்ட்ரால் வரது , மட்டற்ற புதிய நோய் வராது

அதுலயும் கொடுமை அந்த காட அறுத்த அப்றம் , தலை ஒரு ஓரமா குமிச்சி வச்சி இருபங்க பாருங்க அந்த ஒரு சில தலைல இருந்து மூக்கு பகுதில இருந்து புளுகு வரும் பாருங்க கொடுமை பா நான் அதை பார்த்த தில் இருந்து தலை தின்பதை நிறுத்தி விட்டேன்.

நீங்களும் நன்றாக யாசித்து பார்த்து செயல் படுங்கள்.

படிக்கச் கொஞ்சம் அருவருப்ப இருக்கும் சமாளிச்சி கிறுங்கா உண்மையை சொன்னால் இப்படிதான் இருக்கும். மாசலம்

இப்படிக்கு
Seyed Mohamed Seyna
Kayal Ikiya Mandaram Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தலயும் சரியில்லெ... காலும் சரியில்லெ...விபரமும் புரியல... (?!)...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், (காயல்பட்டணம்) [27 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15142

முன்பெல்லாம் வீட்லெ தலக்கறின்னா வீடே கம கமக்கும். இப்ப என்ன எழவெப் போட்டு மழிக்கிறாங்களோ? வாசமும் இல்லெ...! வழுவழுப்புமில்லெ...!

குசும்பு:

தலை, கால், தக்கடின்னு ஒரு கட்டு கட்டிட்டு கையிலெ வழுவழுப்பு (பிசு பிசுப்பு) போற வரைக்கும் கையக் கழுவிக்கிட்டே இருக்கிறதுலெ இருக்கிற சுகமேத் தனி...!!! அதுவும் குடல் பூவை வறட்டி கொரிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அருமையும் பெருமையும்.

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:தல கால் புரியல... (?!)...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [27 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15143

இந்த கால மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியல்லே! நான் கேள்விபட்டது. வாய்மொழி வரலாறுதான்.

அந்தக் காலங்களில் அதாவது இருநுறு வருடங்களுக்கு முன்பெல்லாம் தலை ,கால் ,குடல், எல்லாம் நம்ம ஊரிலும், நம் நாட்டிலும் கூட ,சாப்பிட மாட்டாங்களாம். அவைகளை தோண்டி புதைத்து விடுவார்களாம். அது ஒரு அனுபவம் வாய்ந்த முதியோர்களின் அறிவு,..

வாய்க்கு ருஷி, மனதுக்கு குஷி, உடலுக்கு கேடு' ஏனெனில் இது அவ்வளவும் ஹய் குளோஸ்ட்றோல் என அவர்களுக்கு தெரிந்த ஞான திருஷ்ட்டியே ஆகும். அனால் சீனன்களுக்கு முடியை தவிர எல்லாம் திண்பார்கள் அதற்குத்தக்கவாறு நோய் எதிர்ப்பு மருந்துகளும் அத்துடனெ சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

மேலும் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் ஹாங்காங் லைப்ரேரியில் அமெரிக்கன் கைட் புக் ஃபார் பிரிவென்ஷன் ஒஃப் ஹார்ட் டிஸீஸ் புத்தகத்தில் இவைகளை தவிர்த்துக் கொள்ளவே சொல்லப்பட்டது என வாசித்து அறிவேன். இதில் குறிப்பிட்டு இருந்த செய்திகளில் க்ளோஸ்ற்றல் அளவுகளை குறிப்பிடும்போது ஆடு ,மாடு, மற்றும் இது போன்ற -கல் அன் ஆம்-விஷயங்களில் இறைச்சிக்கு எழுபது -நுறு பாய்ன்ட் , தலை, கால், குடல் வகைகளுக்கு நூற்றி இருபது முதல் நூற்றி ஐம்பது பாய்ன்ட் , அனால் மூளைக்கு இருநூறு பாய்ன்ட் என்றும் படித்துள்ளேன். டாக்டர் மார்களிடம் கேட்டுப்பாருங்கள் எது உண்மை என்று விளங்கும்.

இனி தலை வாங்கி வரும்போது மூளையோடு வாங்கி மூளையோடு ஆக்கி மூளையோடு திண்பீர்களோ, மூளை இல்லாமல் தின்பீர்களோ. அல்லாஹு அஃலம். நான் எப்ப திண்டேன் என ஞாபகம் இல்லே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தல கால் புரியல... (?!)...
posted by K S MUHAMED SHUAIB (Kayalpatinam) [27 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15144

இதில் மட்டும்தானா சுத்தக்குறைவு..? நமதூர் ஹோட்டல்கலீல் விற்கப்படும் பரோட்டாக்களை வாங்கிப்பாருங்கள். உள்ளே மாவு சரியாக வெந்திருக்காது. அப்படியே பச்சையாக இருக்கும். கேட்டால் சொல்வார்கள் .ஒரு நாளைக்கு ஆயிரம் பரோட்டாக்கள் போடுகிறோம். ஒவ்வொன்றையும் வெந்துவிட்டதா.. என்று எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்க்கு தொட்டுக்கொள்ள தரும் சால்னா அதை விட மோசம்.

பொதுவாக ஒரே நாளில் விற்றே தீர்க்க வேண்டிய இதுபோன்ற பொருட்களை என்ன செய்தேனும் அதை விலையாக்கவே பார்கிறார்கள். துளி அளவு மனசாட்சி இருந்தால் கூட இப்படி செய்ய மாட்டார்கள்.

மக்கள்தான் கவனத்துடன் இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தல கால் புரியல... (?!)...
posted by nowshad (yercaud(salem)) [27 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15147

முத்தையாபுரம் அருகில் திருவான்கூர் கெமிக்கல் ஒரு (buyproduct) ஒருவகை சுண்ணாம்பு தோல் சுத்திகரிப்புக்கு தயாரிகிறார்கள் அந்த சுன்னம்பை பயன்படுத்துவார்கள் என நான் சந்தேகபடுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தல கால் புரியல... (?!)...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [27 December 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 15148

தலைப்பை பார்த்ததும் , யார் அது , " தல கால் " புரியாம நடக்குரதுன்னு நினைத்தால் , இது " தலை கால் " மேட்டர் .

ஹம்சா மற்றும் சாளை ஜியா பாய் சொன்ன இரண்டு தொழில் நுட்பமும் சேர்ந்தால் " தல கால் " முடியை எடுத்து விடலாம் . பெரிய அளவில் ஆபத்து இல்லை. ஆனால் sulphide and detergent liquid இருந்தால் பாதிப்பு. இவையும் தோலில் முடியை சுத்தமாக வழித்தெடுக்க உதவும் பொருட்கள். இந்த இரண்டும் பயன்படுத்தாத வரையில் பெரிய பாதிப்பு இல்லை.

" தல கால் " இலேசான மஞ்சள் நிறம் , இலேசான பச்சை நிறம் இருந்தால் கண்டிப்பாக அதை தவிர்ப்பது நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re :நமக்குத்தான்,தல கால் புரியல... (?!)...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [27 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15153

நமக்குத்தானுங்க தலை கால் புரியலங்க!

பின்ன என்னங்க, நடுச்சாமம் இரண்டரை மணிக்கு அறுத்து, ஏழு மணிக்கு இந்த குலப்ஸ் ஐட்டங்கள், திறந்த வெளி தரையில் விற்கப் படுகிறது. (நம் நகராட்சி எப்படி அனுமதித்ததோ?) விலை குறைவாக கிடைக்கின்றது என்பதற்காக பல பல என்று மின்னும் இந்த கெமிக்கல் கலவையால் கலந்த குலப்ச்களை நாம் நோய்க்கிருமிகள் உள்ளதா, இல்லையா என்று அறிந்தோ, அறியாமலோ வாங்கிச் செல்கிறோம். சாப்பிடவும் செய்கிறோம்!

நோய்கள் தாக்கும் போது மட்டும், பக்கத்தில் உள்ள DCW அல்லது வேறு காரணமும் சொல்கிறோம். DCW முக்கிய காரணம் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் நம் பலக்கவழக்கத்தில் உள்ள சாப்பாட்டிலும், குறிப்பாக தரமற்ற அல்லது சுத்தமற்ற இது போன்ற தர அனுமதி இன்றி விற்கப்படும் பொருட்களை நாம் தவிர்த்தாலே நாம் நோயின்றி ஓரளவிற்கு வாழலாம். மக்களே உஷார்!

அதுபோல் நகராட்ச்சியே உங்கள் நிர்வாகம் ரோட்டைத்தான் பெருக்குவதில்லை. மக்களின் சுகாதாரத்திலாவது கவனம் செலுத்தி இது போன்ற விசயத்தில் நல்ல முடிவு எடுங்களேன்! இது உங்கள் நிர்வாக கடமையல்லவா? பார்ப்போம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தல கால் புரியல... (?!)...
posted by saburudeen (dubai) [27 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15157

இச்செய்தியை படிக்கும் போது முதலில் வேடிக்கையாக இருந்தது கடைசி வரியை படிக்கும் போது பகிர் என்றது இது மக்கள் உடல் நலம் சம்பந்தபட்ட முக்கியமான தகவல் அல்லவா.

நான் உடன் [தலை - கால்கள் வக்குதல்] சம்பந்தப்பட்டவர்கள் ஒரு சிலரை தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் உண்மையில் அதிகமாக கொதிக்க வைக்க பட்ட வென்னீரில் முக்கி எடுத்தல், ப்ளேடு கத்தி கொண்டு மயிரறக்கப்படும் முறையை தவிர வேறு எந்தவிதமான வேதி பொருட்களும் உபோயோக படுத்துவது இல்லை என விளக்கம் அளித்தனர்.

இருந்தாலும் நாம் அதில் கவனம் செலுத்துவது நல்லது தான். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்திய காயல்பட்டணம்.காம்க்கு நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:தல கால் புரியல... (?!)...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15158

அஸ்ஸலாமு அலைக்கும்.

அம்மாடி இன்னுமா நம் ஊரில் இந்த கல்யாண சீசனில் ....... தலை / கால் / குடல் . வியாபாரம் இப்படி நடக்கிறது ...... நாம் இவைகளை சாப்பிடுவதை நிறுத்தினால் நல்லது தானே . நாம் கொஞ்சம் சிந்திபோமாக. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:தல கால் புரியல... (?!)...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [27 December 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 15163

நல்ல புரிஞ்சுது... யப்பா.

Eat Healthy. Think Better. Tin Tin Didin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:தல கால் புரியல... (?!)...
posted by Ruknudeen Sahib (China) [28 December 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 15168

அஸ்ஸலாமு அலைக்கும் விளக்கு எஸ்.எம்.எ அலி அவர்கள் ஒரு லெதர் டெச்நீசியன் ஆக இருப்பதால் அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் போதுமானவன். அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:தல கால் புரியல... (?!)...
posted by SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI) [28 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15173

தலை காலுக்கே இவ்வளவு கருத்து பறிமாட்டமா... அருமை

மொத்தத்தில் குடல் உடலுக்கு நல்லது அல்ல... என்பது புரிகிறது. உணவு பழக்கவழக்ககளை மாத்தினாலே நெறைய நோய்களிலிருந்து நம்மை காப்பாத்தி கொள்ள முடியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வண்ணான் தல காலுக்கு பறந்த மாதிரி...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [28 December 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15174

நானும் ஊர்ல இருக்கும் பொழுது காலங்காத்தால எழும்பி வயித்திற்கு ஒன்னும் திங்காம குடல காய போட்டுட்டு கால் வலிக்க தலை தெரிச்சு ஓடி போனாலும் இந்த தல, கால், குடல் கிடைக்கிறது இல்ல்லைங்க அதுக்கு அவ்வளவு கிராக்கி.

முன்னாடி எல்லாம் திருநெல்வேலி மார்க்கெட்ல குடல எல்லாம் குப்பையில போடுவாங்க.. எப்பம் நம்ம ஆளுங்க ராஜம்மாள் ஆஸ்பித்திரிக்கு போக ஆரம்பிச்சாங்களோ அதோட சரி... அங்கயும் விலைய ஏத்தி விட்டுடாங்க....

காடை ,கவுதாரிய ஆறுமுகநேரி வரைக்கும் ஒரு விலைக்கு வித்துட்டு வர குறவன் கூட நம்மள பார்த்ததும் உசாராகிடுறான்..

நம்மதான் என்ன விலை சொன்னாலும் வாங்குவோமே.... இப்படி நம்ம தல, கால், குடல் அப்படின்னு எல்லாதிற்கும் பறந்துட்டு கடைசில பேரு மட்டும் வண்ணானுக்கு .... " வண்ணான் தல காலுக்கு பறந்த மாதிரின்னு ..." என்னங்க நியாயம் இது ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. புரியாத்தது தல,கால் மட்டும்தானா....?
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [28 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15176

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் சகோதரர்களே...... தல, கால் மட்டும்தானா நமக்கு புரியாத்தது.........? கறி பஸ்ப்பமா வேகுதே.... இதில் என்ன மர்மம்....? இல்லை, இல்லை. நமக்கு புரியாத்தது பலதும் உண்டு.

நம் ஊரில் கலரி சாப்பாடுகளில் இறைச்சியை சரியான முறையில் கழுகாமல் அரை குறை இரத்தத்தோடு போடும் புகாரும் நீண்ட நாட்களாக உள்ளதுதானே....! இதை அவரவர் வீட்டு விசேஷம்களில் இந்த பொறுப்பில் உள்ளவர்கள் நன்கு கவனிக்கவும், கூடவே..... அஜினமோட்டோ போடுவதையும் கண்காணிக்கவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. குளம் ஸுஐபு காக்காவின் இந்த பரோட்டா,சால்னா சம்பந்தமான் கருத்து அருமையானது மிக நிதர்சனமானது..கண் கூடானது ...
posted by சட்னி ,செய்யது மீரான் (ஜித்தா,சவுதி அரேபியா...) [28 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15203

அஸ்ஸலாமு அலைக்கும்...

இதில் கருத்து எழுதி உள்ள குளம் ஸுஐபு காக்காவின் இந்த பரோட்டா, சால்னா சம்பந்தமான் கருத்து அருமையானது மிக நிதர்சனமானது.. கண் கூடானது ...
இதனை நமது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டால் மிக நல்லது ..மிக . மிக நல்லது

நண்பர்.விளக்கு எஸ்.எம்.எ.அலி அவர் ஒரு தோல் பதனிடுதல் சம்பந்தமான துறையில் நீண்ட கால அனுபவமும், சிறந்த வல்லுனரும் ஆவார்.. அவர்களுடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் ....

ஏதோ ஒரு நாள் நடக்கும் தலை ,கால் ,குடல், மொத்த வியாபாரத்தை வேடிக்கையாக,வேதனையாக நாம் விவாதிப்பது போல்,, தினமும் நடந்து கொண்டு இருக்கும் இந்த பரோட்டா, சால்னா வியாபாரத்தை புற்று நோய் ஒழிப்பில் மிக ஈடுபாடு கொண்டுள்ள நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. செயல் படுவோம் ...

இறைவன் சீராக்கி,சிறப்பாக்கி தருவானாக ஆமீன்....

என்றும் மாறாத அன்புடன்
சட்னி ,செய்யது மீரான்
ஜித்தா.....சவுதி அரேபியா.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:தல கால் புரியல... (?!)...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [29 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15232

இந்த மாதம் 25 முதல் 28 தேதி வரை ஊரில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஒட்டு மொத்தமாக கலரி சோறு ஒரு பிடி பிடிச்சாச்சி...

ஒரு அமர்வில் நம் அட்மின் கூட உக்கார்ந்து சப்புடச்சு.. தவறாமல், cholesterol மாத்திரை போட்டு, அல்லா உதவியால் இந்த சாப்பாட்டின் மூலம் பரகத் மட்டுமே வேண்டும் என்று இறைஞ்சசு.. இந்தஸ் முறை மாதிரி எந்த முறையும் இப்படி வெட்டியதில்லை..

ஆனால் தலை கால் குடல், ஆசாத் தெருவில் கண்ணில் பட்டது.. ஆனால் இந்த சாப்பாடு முன் அதுவெல்லாம் பெரிதாக தெரிய வில்லை... அதில் இவ்வளவு விஷயம் இருக்கும் என்று இப்போது தான் தெரிகிறது..

இனி kayal .com , தலை கால் களை, காங்ற்றச்ட் எடுத்து, online மூலம், வெளிநாட்டு சகோதர்களுக்கு விற்றாலும் ஆசிரியம் படுவதற்கு ஒன்றும் இல்லை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:தல கால் புரியல... (?!)...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [30 December 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 15252

டாக்டர் kizaar காக்கா , அப்போ , பாதி கிடா உங்க வயத்துல இருக்குன்னு சொல்லுங்க . அப்படித்தானே ?

" தல கால் " இப்படி தெருவில் போட்டு salih காக்காவோட காமிராவில் பட்டு , இப்படி பலபேரின் விமர்சனத்துக்கு ஆளாவதைவிட , கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த அய்ட்டங்களை ஏதாவது அநாதை இல்லத்திற்கு கொடுத்தால் , நாம் கல்யாண விருந்து சாப்பிடும் அந்த நேரத்தில் , இங்குள்ள குழந்தைகளும் ஒரு வேளை வயிறார சாப்பிட்டு , திருமண தம்பதிகளுக்காக துஆ செய்வார்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:தல கால் புரியல... (?!)...
posted by Siddiq (Chennai) [30 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15254

சகோ.Vilack SMA சொன்னது போல் அநாதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்மை சேருமே. திருமணத்தின்போது அநாதை மற்றும் புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களுக்கும் வலிமா விருந்து கொடுப்பதை வழமையாக்கி கொள்ளலாமே. "உண்ணுங்கள் பருஹுங்கள் ஆனால் வீண் விரையம் செய்யாதிர்கள். வீண் விரையம் செய்பவரை அல்லாஹு நேசிப்பதில்லை."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:தல கால் புரியல... (?!)...
posted by Rayyan's Dad!! (USA) [30 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15260

தல கால் விஷயத்துலே கமன்ட் எழுதுறதுக்கு என்ன இருக்க போதுன்னு யோசிக்கிறதுக்குள்ள, அடேங்கப்பா! எத்தனை கமெண்ட்ஸ் இங்கே. ஒருத்தர் என்னா னா 'கலரி சோறு ஒரு பிடி பிடிச்சாச்சி...' னு சொல்லுறார். இன்னொருவர் 'குடல் பூவை வறட்டி கொரிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அருமையும் பெருமையும்' னு சொல்லுறார். என்னாமா ரசிச்சு எழுதி, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற எங்களை... ஏன் இப்படி உசுப்பி விடுறீங்க!! நீங்க எழுதுறதை பார்த்தா நாளைக்கே மூட்டையை கட்டிட்டு கிளம்பிவிடலாம் போல இருக்கு.

போன தடவை ஊர் வந்தப்ப ஒரு கல்யாணமும் இல்லைங்கோ... மாப்பிள்ளைமார்கள் எதுவும் ஸ்ட்ரைக் பண்ணிட்டாங்களோ என்னவோ. ஒரு கலரி சோறு வாயிலே படாம போச்சு.

அமெரிக்காவிலும் ஒரு சில கடைகளில் (அதான் நம்ப இந்தியா பாகிஸ்தானி அதிகமாக வசிக்கும் இடங்களில்) இந்த குடல் விற்பனை செய்வது உண்டு. உள்ளே இருக்கிற அத்தனை குடலையும் கீழே போட்டுருவானுங்க. வெளியே இருக்கிற பெரிய குடல் மட்டும் வெள்ளை வெளேர்னு நம்ப வெள்ளைகாரன் மாதிரி இருக்கும். இவனுக எதை வைச்சு கழுவுவானு வோன்னு தெரியலை. ஒரு வேலை கெமிக்கல்ஸ் யூஸ் பன்னுவானுவளோ என்னவோ தெரியலே. சோப்பு போட்டு கழுவிய மாதிரி லைட்டா வாடை அடிக்கும்.

டேஸ்டே இருக்காது. தலை... காலும் இதே மாதிரி தான். வக்குற கான்செப்ட்லாம் கிடையாது. மேலே உள்ள ஸ்கின்னை அப்படியே உரிச்சி எடுத்து வெறும் எலும்ப்போட கொடுப்பானுகோ. இந்த தலை, குடல், கால் லாம் மறந்து பல வருடங்கள் ஆயிருச்சு. ஊருக்கு வந்தா தான் இந்த உணவுகள்.

இந்த அமெரிக்காவில் எத்தனையோ நாட்டு உணவுகளை ஒரு கைபார்த்து இருந்தாலும், நமதூரின் கலரி (கலோரீஸ் பார்த்து சாப்பிடுங்க!!) சாப்பாடும் இந்த குடல் தலை சமாச்சாரங்கள்... தனி ருசிதான்.

எதையும் அளவுடனும், அதுவும் குறிப்பாக நமது ஆரோக்கியத்துக்கு ஏற்றாப்போல் சாப்பிட்டு கண்ட்ரோலில் இருக்கும் வரை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. உபயோகப்படுத்திய பிளேடு / சோடா ஆஷ்
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [31 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15272

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கல்யாண விழாக்காலங்களில் ஆடுகளின் தலை , கால்கள் மற்றும் குடல் மலிவான விலையில் ரோட்டோரங்களில் விற்கப்படுவதை பற்றி இந்த செய்தியிலும் நம் மக்களின் கருத்துக்களிலும் விவரிக்கப்பட்டு விட்டதால் அதைபற்றி மேலும் விளக்க விரும்பவில்லை - ஆனால் அதன் விபரீதத்தை, அதன் ஆபத்தை விளக்க விரும்புகிறேன்.
---------------------------------------------
தலை , கால்கள் சுத்தம் செய்தல் :

ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் தலை, கால்களை அப்படியே வாங்கி வந்து வீட்டில்தான் சுத்தம் செய்வார்கள் - அதன் பிறகு சுத்தம் செய்வதற்கென்றே சிலர் இருந்தனர், அவர்களிடம் அதற்குண்டான கூலியை கொடுத்து சுத்தம் செய்து வாங்கி வந்தனர்.

அவர்கள் சுத்தம் செய்வது முறையாக இருந்தது - தலை, கால்களை வெந்நீரில் முக்கி எடுத்து , கத்தியினால் முடிகளை அகற்றி சுத்தம் செய்தார்கள், அதுதான் அன்று தொட்டு இன்றுவரை வழக்கமாக இருந்தது.

முடிகள் அத்தனையும் சுத்தமாகும்வரை பல முறை வெந்நீரில் முக்கி , கத்தியால் சுத்தம் செய்வார்கள் - அப்படி செய்தாலும் கூட முடிகள் அங்கொன்றும் , இங்கொன்றுமாக - கண்களை சுற்றிலும், காதுகளுக்கு அருகிலும் இருக்கத்தான் செய்யும்.

இப்படி சுத்தப்படுத்தப்படாமல் விடுபட்ட முடிகள் , சுத்தம் , சுகாதாரம் பேணும் நம் வீட்டு பெண்களின் கழுகு கண்களுக்கு தென்படும் அதை அவர்கள் அடுப்பில் காட்டி, முடிகளை பொசுக்கி சுத்தம் செய்துவிட்டுதான் சமைப்பார்கள் - அதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லாமல் இருந்தது.
----------------------------------------------
மக்களின் சோம்பல்தனம் :

சமீப காலமாக தலை, கால்கள் விற்பனையாவதில்லை - காரணம் நமது மக்களின் சோம்பல்தனம்.

வீட்டிலே சுத்தம் செய்வதற்கு பெண்களுக்கு இயலா நிலை - வெளியிலே கூலியைக் கொடுத்து சுத்தம் செய்து வாங்கி போக ஆண்களுக்கு பொறுமையில்லா நிலை அதனால் விற்பனைக் குறைந்தது.

இதன் காரணமாக கறிக்கடைக்காரர்களே தலை, கால்களை சுத்தம் , செய்து விற்க தொடங்கினர்.

கடைக்காரகள் வாடிக்கையாக அல்லது மொத்தமாக கூலியை காண்ட்ராக்டில் கொடுத்து செய்வதாலும் - விழாக்காலங்களில் அதிகமான ஆடுகள் அறுக்கப்படுவதாலும் - சுத்தம் செய்பவர்கள் வேலையை துரிதமாக செய்யவும் அதே நேரத்தில் , செலவை மிச்சப்படுத்தவும் கையாண்டதுதான் இந்த மோசமான செயல் முறை.
-------------------------------------------------
துன்பம் தரும் துரிதமான முறை:

சுத்தம் செய்யும் சுத்தமான முறை போய் - துன்பம் தரும் துரிதமான முறை உருவாகியது.

இரண்டு முறைகளில் சுத்தம் செய்வதாக பரவலாக அறியப்படுகிறது.

முதல் முறையானது வெந்நீரில் முக்கி எடுத்து, பிளேடுகளால் முடிகளை அகற்றி சுத்தப்படுத்துவது.

இரண்டாவது முறையானது : வெந்நீரில் ஒருவித சோடாவை போட்டு அதில் தலை கால்களை முக்கி எடுத்து துணியால் முடிகளை வழித்து அகற்றுவது.
--------------------------------------------------
சலூன்களில் உபயோகப்படுத்திய பிளேடு :

இந்த இரண்டு முறைகளிலும் சுத்தம் செய்வது ஆபத்தாகவே அமைகிறது - காரணம் பிளேடுகளால் சுத்தம் செய்பவர்கள், உபயோகப்படுத்தாத புதிய பிளேடுகளைக் கொண்டு சுத்தம் செய்வதில்லை.

சலூன்களில் உபயோகித்துவிட்டு குப்பையில் போடுவதற்காக வைத்திருக்கும் பழைய பிளேடுகளையே உபயோகிக்கின்றனர் - இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்.

உபயோகப்படுத்திய அதுவும் சலூன்களில் உபயோகப்படுத்திய பிளேடு என்றால் எய்ட்ஸ் நோயாளி, குஷ்டம் உள்ளோர் , சொறி சிரங்கு பிடித்தோர் மற்றும் பல வகையான கொடூரமான நோய்கள் உள்ளவர்களுக்கும் உபயோகப்படுத்திய பிளேடுகள் அல்லவா.

அவைகளை கொண்டு தலை, கால்களை சுத்தம் செய்தால் கிருமிகள் தாக்கி , உலகில் உள்ள அத்தனை வகையான நோய்களும் அதை சாப்பிடுபவர்களை அல்லவா பாதிக்கும்.
-------------------------------------------------
நீரில் " சோடா ஆஷ் " கலந்து :

இரண்டாவது முறையானது : வெந்நீரில் ஒரு வகையான சோடாவை ( ஆப்பம்,இட்லி , தோசைக்கு போடும் சோடா அல்ல ) கலந்து, அதன் பின் அதில் தலை, கால்களை போட்டு முக்கி எடுத்து அதை துணியை கொண்டு அழுத்தி துடைப்பார்களாம் அத்தனை முடிகளும் வந்து விடுமாம்.

இதை பற்றி சில பொது மக்களிடம் விசாரித்தபோது , ஆம் கொதிக்கும் நீரில் " சோடா ஆஷ் " கலந்து சுத்தம் செய்வதாக அறிகிறோம் என்றார்கள்.

எனவே வெந்நீரில் சோடா ஆஷ் கலந்துதான் சுத்தம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது - மேலும் ஒரு சிறு முடியுமில்லாது மிகவும் சுத்தமாக வழு, வழு என்று பள, பளப்பாக இருக்கும்போதே இது ஏதோ ஒரு கெமிக்கல் கலந்ததுதான் சுத்தம் செய்கிறார்கள் என்பதை என்று உணர முடிகிறது.

சோடா ஆஷ் எவ்வளவு கொடூரமான கெமிக்கல் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
--------------------------------------------------
மனித நேயமில்லாத வியாபாரிகள் :

இப்படி கெமிக்கல் கலந்தால் உயிருக்கு ஆபத்தல்லவா ?

இதை சில பொதுமக்களிடம் எடுத்து சொன்னபோது அவர்கள் வருத்தப்பட்டாலும் , வேதனை பட்டாலும் சில மக்கள் அதை பொருட்படுத்துவது இல்லை.

சமைக்கும்போது எல்லாம் சரியாகிவிடும் - வயலில் ' கெமிக்கல் கலந்த உரம்தானே போடுகிறோம் ' என்ற பொறுப்பற்ற பதில்தான் அவர்களிடமிருந்து வருகிறது.

இந்த மாதிரியான பொறுப்பற்றவர்களாக சில மக்கள் இருப்பதால்தான் - மனித நேயமில்லாத வியாபாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்.
----------------------------------------------------
மக்களுக்கு எச்சரிக்கை / வேண்டுகோள் :

அன்பான மக்களே!

இன்றைய கால சூழலில் நாம் பல, பல கொடூரமான நோய்களை சந்தித்து துன்புற்று வருகிறோம் - புற்று நோய் வர காரணம் தெரியவில்லை என்கிறோம்.

ஆனால் அந்த காரணங்கள் நமக்கு நேரிடையாக தெரியவில்லையே தவிர - இது போன்ற மறைமுகமான உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

நாம் ஹலாலான உணவை மட்டும் சாப்பிட்டால் போதாது - அது தூய்மையான உணவாகவும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, தலை , கால்களை வாங்கி சாப்பிட விரும்போவோர் , அவைகளை சுத்தம் செய்திருக்கும் முறையை தெளிவாக நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே வாங்கி செல்லுங்கள்.

அல்லது சுத்தம் செய்யப்படாத தலை, கால்களையே வாங்கி சென்று வீட்டில் சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுங்கள் இதுதான் நமக்கு சுகாதாரம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்களுக்கு தூய்மையான உணவை சாப்பிடக்கூடிய விழிப்புணர்வை தந்து சுகாதாரமாக வாழ கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:தல கால் புரியல... (?!)...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [31 December 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 15278

தல கால் புரியல.....? இப்ப நல்லா புரியுது ....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:தல கால் புரியல... (?!)...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15349

அன்பரே.. (சட்னி ) செய்து மீரான் அவர்களே... நீங்கள் எங்கே போனீர்கள்? நீண்ட காலமாக உங்களை காணவில்லையே... உங்கள் "கமெண்ட்ஸ்" எதுவும் இல்லாததால் நீங்கள் ஊரில் இல்லை போலும் என நினைத்துக்கொண்டேன்.

என்றாலும் ஒருவேளை நீங்கள் இலங்கை சென்றிருக்கக்கூடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராவிதமாக ஜித்தாவில் இருந்து உங்கள் கமெண்ட்ஸ் வருகிறது. எப்போது ஜித்தா சென்றீர்கள்?

என்கிருந்தபோதும் இணைய தொடர்பில் இருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2518; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved